கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் : சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை.

வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, 'அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு' எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியரான ஹரோல்ட் பின்ரர்.

படைப்பாளிகள், கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். 'வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது' என்று நிரூபித்தவர்கள்.

சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள சிங்கள, தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தமது உயிராபத்துக் கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினைப் பயங்கரவாதமாகச் சித்திரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலைசெய்தும், பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும், சரணடைந்தவர்களைச் சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்களப் பயங்கரவாத அரசு. யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது.

சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பெற்ற போர்க்குற்றங்களும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை அமைப்புக்கள், டப்ளின் தீர்ப்பாயம் போன்ற நீதியமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பிவருகிறன.

தமிழர்களின் குருதியில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறிச் சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தரச் செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியல் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில் கலை, இலக்கியம், விளையாட்டு, கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியைச் சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாகக் கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களைக் கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மாநாட்டை, அதுவும் உலகெங்கிலுமிருந்து திரட்டப்பட்ட சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைக் கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால், சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.

2011 ஜனவரியில் கொழும்பு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்துவதற்கான அதனது ஏற்பாட்டாளர்களின் ஜனநாயக உரிமையை, மனித உரிமைகளில் நம்பிக்கையுள்ள எழுத்தாளர்கள் கலைஞர்கள் எனும் வகையில் நாங்கள் மதிக்கிறோம் என்றாலும், இன்றைய நிலையில் சிறிலங்கா பயங்கரவாத அரசினால், தன் நலன் சார்ந்து உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கும் அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை என்றும் நாங்கள் கருதுகிறோம். சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களை மாநாட்டில் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள் அனைவரும் தனது பக்கமே எனும் தோற்றப்பாட்டினை சிறிலங்கா அரசு தனக்கான அரசியல் ஆதாயத்திற்காக உருவாக்க முனையலாம். இதற்கு நாம் எவரும் பலியாகிவிடக்கூடாது.

இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் குருதிச் சுவடுகளின் மீதும், எமது பெண்களதும் எமது பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீதும் நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகக் கூடிய வகையில், நடைபெற்ற மனிதப் பேரழிவுக்குக் காரணமான சிறிலங்கா கொடுங்கோல் அரசு குறித்த எந்த நிலைப்பாட்டையும் முன்வைக்காத, இந்தச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகளாக, கலைஞர்களாக உள்ளவர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.

நீதியின்மேல் பசி தாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.


கோவை ஞானி கோட்பாட்டாளர், இந்தியா எஸ். வி. ராஜதுரை கோட்பாட்டாளர், இந்தியா ஏ. ரகுநாதன், திரைப்படக் கலைஞர், பிரான்ஸ் தமிழவன் கோட்பாட்டாளர், இந்தியா நா. முத்துமோகன் கோட்பாட்டாளர், இந்தியா நாஞ்சில்நாடன் நாவலாசிரியர், இந்தியா பொன்னீலன் நாவலாசிரியர், இந்தியா இன்குலாப் கவிஞர், இந்தியா சிற்பி பாலசுப்ரமணியம் கவிஞர், இந்தியா புவியரசு கவிஞர், இந்தியா பா. செயப்பிரகாசம் சிறுகதையாசிரியர், இந்தியா கலாப்ரியா கவிஞர், இந்தியா பழமலய் கவிஞர், இந்தியா சேரன் கவிஞர், கனடா மாலதி மைத்ரி கவிஞர், இந்தியா மகேந்திரன் கோட்பாட்டாளர், இந்தியா கவிதாசரண் பதிப்பாளர், இந்தியா தேவிபாரதி எழுத்தாளர், இந்தியா புனித பாண்டியன் இதழாளர், இந்தியா காமராசன் பொதுச்செயலாளர்,கலை இலக்கியப் பெருமன்றம், இந்தியா கௌதம சித்தார்த்தன் பதிப்பாளர், இந்தியா அசோக் யோகன் பதிப்பாளர், அசை, பிரான்ஸ் காலம் செல்வம் கவிஞர், பதிப்பாளர், கனடா க. முகுந்தன் இதழாசிரியர், மௌனம், பிரான்ஸ் சுகிர்தராணி கவிஞர், இந்தியா அரசெழிலன் இதழாளர், நாளை விடியும், இந்தியா க. விஜயகுமார் பதிப்பாளர், இந்தியா நிழல் திருநாவுக்கரசு பதிப்பாளர், இந்தியா அ. விஸ்வநாதன் பதிப்பாளர், பதிவுகள், இந்தியா கே. வி. ஷைலஜா பதிப்பாளர், இந்தியா வேனில் கிருஷ்ணமூர்த்தி பதிப்பாளர், இந்தியா அய்யநாதன் ஊடகவியலாளர், இந்தியா புகழேந்தி ஓவியர், இந்தியா பொள்ளாச்சி நசன் ஆவணக்காப்பாளர், இந்தியா கி. பி. அரவிந்தன் கவிஞர், பிரான்ஸ் தமிழ்நாடன் கவிஞர், இந்தியா கண. குறிஞ்சி பதிப்பாளர், இந்தியா பொதியவெற்பன் பதிப்பாளர், இந்தியா எ. நாராயணன் இதழாளர், இந்தியா ம. செந்தமிழன் ஊடகவியலாளர், இந்தியா அமரந்தா மொழிபெயர்ப்பாளர், இந்தியா க. வாசுதேவன் கவிஞர், பிரான்ஸ் மே. து. ராசுகுமார் ஆய்வாளர், இந்தியா செழியன் திரைப்பட ஒளிப்பதிவாளர், இந்தியா தளவாய் சுந்தரம் ஊடகவியலாளர், இந்தியா பாலா கார்டூனிஸ்ட், இந்தியா பாஸ்கர் சக்தி எழுத்தாளர், இந்தியா ஜனநாதன் திரைப்பட இயக்குநர்,இந்தியா அழகிய பெரியவன் சிறுகதையாசிரியர், இந்தியா எஸ். சிறிதரன் சிறுகதையாசிரியர், ஐக்கிய அமெரிக்கா ராஜுமுருகன் திரைப்பட இயக்குநர், இந்தியா யுகபாரதி திரைப்பட பாடலாசிரியர், இந்தியா ஏக்நாத் ஊடகவியலாளர், இந்தியா பிரேமா ரேவதி ஊடகவியாலாளர், இந்தியா லெனின் ஊடகவியலாளர், இந்தியா மு.சந்திரகுமார் விமர்சகர், இந்தியா முனைவர் பஞ்சாங்கம் விமர்சகர், இந்தியா தமிழியம் சுபாஷ் திரைப்பட இயக்குநர், நோர்வே ஆ. சிவசுப்ரமணியன் ஆய்வாளர், இந்தியா டானியல் ஜீவா சிறுகதையாசிரியர், கனடா ச. பாலமுருகன் நாவலாசிரியர், இந்தியா நிழல்வண்ணன் மொழிபெயர்ப்பாளர், இந்தியா பேராசிரியர் கோச்சடை மொழிபெயர்ப்பாளர், இந்தியா எஸ். வேலு விமர்சகர், இங்கிலாந்து சன். தவராசா விமர்சகர், ஸ்விட்சர்லாந்து டி. எஸ். எஸ். மணி பத்திரிக்கையாளர், இந்தியா இரா. முருகவேள் மொழிபெயர்ப்பாளர், இந்தியா குட்டி ரேவதி கவிஞர், இந்தியா லெனின் சிவம் திரைப்பட இயக்குநர், கனடா அருள் எழிலன் பத்திரிக்கையாளர், இந்தியா ஆர். ஆர். சீனிவாசன் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வளர்மதி நாடகாசிரியர், இந்தியா அறிவன் விமர்சகர்,இந்தியா நடராஜா முரளிதரன் பதிப்பாளர், கனடா ஜமாலன் கோட்பாட்டாளர், சவூதி அரேபியா ஹெச். பீர் முகமது கோட்பாட்டாளர், இந்தியா சுப்ரபாரதி மணியன் நாவலாசிரியர், இந்தியா மெலிஞ்சிமுத்தன் கவிஞர், கனடா பெருமாள் முருகன் நாவலாசிரியர், இந்தியா ரோஸா வசந்த் விமர்சகர், இந்தியா ரூபன் சிவராஜா வில்லிசைக் கலைஞர், நோர்வே வி. உதயகுமார் மொழிபெயர்ப்பாளர், இந்தியா ஆர். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பரளர், இந்தியா லிங்கராஜா வெங்கடேஷ் விமர்சகர், இந்தியா பாமரன் விமர்சகர், இந்தியா அருள்மொழிவர்மன் விமர்சகர், கனடா ரஃபேல் கோட்பாட்டாளர், கனடா சிவதாசன் இதழாளர், கனடா இரவி அருணாசலம் சிறுகதையாசிரியர், இங்கிலாந்து எம். சி. லோகநாதன் கவிஞர், டென்மார்க் பா. சிறிஸ்கந்தன் விமர்சகர், கனடா டி. தயாநிதி நாடகக் கலைஞர், பிரான்ஸ் அ. முருகையன் கல்வெட்டாய்வாளர், பிரான்ஸ் நாச்சிமார்கோவிலடி ராஜன் வில்லிசைக் கலைஞர், எழுத்தாளர், யேர்மனி சாந்தினி வரதராஜன் எழுத்தாளர், யேர்மனி முல்லை அமுதன் கவிஞர், இங்கிலாந்து அய்யனார் விஸ்வநாத் சிறுகதையாசிரியர், இந்தியா கவிமதி கவிஞர், துபாய் பொன்.சந்திரன் விமர்சகர், துபாய் பாரதி தம்பி ஊடகவியலாளர், இந்தியா ஜென்ராம் ஊடகவியலாளர்,இந்தியா அன்பாதவன் கவிஞர், இந்திய அடூர் ஷா நவாஸ் ஆவணப்பட இயக்குநர், இந்தியா சச்சிதானந்தன் சுகிர்தராஜா ஆய்வாளர், எழுத்தாளர், இங்கிலாந்து கௌதமன் திரைப்பட இயக்குர், இந்தியா ஜெயபாஸ்கரன் விமர்சகர், இந்தியா குணா திரைப்பட இயக்குநர், பிரான்ஸ், கஜேந்திரன் ஊடகவியலாளர், இந்தியா கழனியூரான் நாட்டுப்புறவியலாளர், இந்தியா ஈரோடு தமிழன்பன் கவிஞர், இந்தியா அ. முத்துக்கிருஷ்ணன் விமர்சகர், இந்தியா தொ. பரமசிவம் ஆய்வாளர், இந்தியா சேரன் திரைப்பட இயக்குநர், இந்தியா தங்கர்பச்சான் திரைப்பட இயக்குநர், இந்தியா ஓவியா விமர்சகர், இந்தியா தமிழ்நதி கவிஞர், கனடா ராம் திரைப்பட இயக்குநர், இந்தியா இராஜேந்திர சோழன் சிறுகதையாசிரியர், இந்தியா மா. மதிவண்ணன் கவிஞர், இந்தியா என். டி. ராஜ்குமார் கவிஞர், இந்தியா பாரதி கிருஷ்ணகுமார் ஆவணப்பட இயக்குநர், இந்தியா வீ. அரசு ஆய்வாளர், இந்தியா அ. மங்கை நாடகாசிரியர், இந்தியா சிபிச்செல்வன் கவிஞர், இந்தியா தா. பாலகணேசன் கவிஞர், பிரான்ஸ் அஜயன் பாலா சிறுகதையாசிரியர், நடிகர், இந்தியா தேடகம் தோழர்கள், தேடகம், கனடா கீற்று நந்தன் பதிப்பாளர், இந்தியா நேமிநாதன் எழுத்தாளர், இங்கிலாந்து மு. புஷ்பராஜன் கவிஞர், இங்கிலாந்து யமுனா ராஜேந்திரன் கோட்பாட்டாளர், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர் பதிப்பாளர், தமிழியல், இங்கிலாந்து.
கூட்டறிக்கை ஒருங்கிணைப்பாளர்கள் மு. புஷ்பராஜன், இங்கிலாந்து காலம் செல்வம், கனடா கி. பி. அரவிந்தன், பிரான்ஸ் யமுனா ராஜேந்திரன், இங்கிலாந்து இ. பத்மநாப ஐயர், இங்கிலாந்து கண. குறிஞ்சி, இந்தியா அருள் எழிலன், இந்தியா கீற்று நந்தன், இந்தியா.

இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைவாழ் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்களை இவ்வறிக்கையில் இணைத்துக்கொள்ள நாங்கள் முனையவில்லை என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

சென்னைக்கு வயது -372....கபாலிக்கு?



தமிழகத்தின் வேறெந்த நகரங்களையும் விட எனக்குப் பிடித்த நகரம் சென்னை. இந்த சுதந்திரமும் புதிய முகங்களும் ஊரில் கிடைக்க வாய்ப்பில்லை. திருமணமான 2006- ல் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வளசரவாக்கம் போனேன். இரண்டாயிரம் வாடகையில் ஒரு வீட்டைப் பேசி டோக்கன் அட்வான்ஸ் கொடுத்து விட்டேன். நீலாவும் பார்த்து விடட்டும் என்று அவளை அழைத்து வந்து ஓனருடன் பேசிக் கொண்டிருந்த போது..........எதுக்கோ நீலா என்னிடம் ..... இயேசுவே.........என்றாள். அடிக்கடி இப்படித்தான் இயேசுவே.....கர்த்தாவே.... என்று நீலா சொல்வார். இவர் இயேசுவே என்றதும்......ஓனர் ஓடி வந்து ''சார் நீங்க கிறிஸ்டியனா? என்றார். நான் ஆமா என்றேன். சாரி சார் நாங்க கிறிஸ்டியன்சுக்கோ, முஸ்லீம்சுக்கோ வீடு கொடுக்கமாட்டோம் என்றார்.......எனக்கும் நீலாவுக்கும் ஒரே சண்டை ஏண்டி வாயை வெச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா? அங்க வந்து இயேசுவோ....அல்லாவே... ண்ணுக்கிட்டு இப்போ இயேசு வந்தா? வீடு பார்த்துக் கொடுப்பார் என்று சண்டை போட்டு ஒரு டப்பா வீட்டில் குடியேறினோம். அந்த வீட்டில் நான்குமாதம் இருவரும் வாழ்ந்தோம். மழைக்காலத்தில் வெள்ளம் வந்ததும் அங்கிருந்து வெளியேறி எர்ணாவூர் சென்றோம்............சுமார் இரண்டரை வருடம் என்னால் சென்னைக்குள் பொருளாதாரம் காரணமாக எட்டிப்பார்க்கக் கூட முடியவில்லை.

இப்போ ஒப்பீட்டளவில் ஒரு சின்ன ஆனால் நல்ல வீட்டில் இருக்கிறோம். பொன்னிலா பள்ளிக்குப் போகிறாள். இன்னும் எத்தனை பேர் வந்தாலும் அத்தனை பேரையும் உண்டு செரித்து விட்டு எதுவுமே தெரியாதது போல இருக்கிறது சென்னை. திருமணத்திற்கு முன்னர் என் அறை ஒரு குட்டி திரையரங்கு மாதிரி இருக்கும் சுமார் 300 உலக சினிமாக்கள் என்னிடம் இருந்தது. இருக்கிறது. அஜயன்பாலா, பாண்டியராஜன். செழியன், ராஜுமுருகன். இன்னும் நிறைய நண்பர்கள் (நினைவில் இல்லை) எல்லோரும் சினிமா பார்க்க வருவார்கள், நான் கேட்டால் கொடுக்க மாட்டேன் என்று எடுத்துச் செல்கிறவர்களும் உண்டு. ஒரு நாள் விகடன் அலுவலகத்தில் லேட்டாகி விட்டது. இரவு 12 மணிக்கு வருகிறேன். ஹவுசிங் போர்டில் நுழையும் போதே எங்கும் கரண்ட் இல்லை.எங்கும் தண்ணீர் தேங்கிக் கிடந்தது. மிக வேகமாக அறைக்கு வந்தால் கதவு பாதி திறந்திருந்தது. உள்ளே வெளிச்சம், அந்த வெளிச்சம் வருவதற்கான எந்த நியாயங்களும் இல்லை மெழுகுவர்த்தியோ, விளக்குகளோக் கூட அறையில் இல்லை. ராஜுமுருகன் அப்படி எல்லாம் வாங்கி ஏற்றுகிற அளவுக்கான உழைப்பாளி இல்லை. உள்ளே சென்றேன் வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று பார்த்தேன்............அறையெங்கும் பரவியிருந்த பாதி வெளிச்சத்தில் இரண்டு உருவங்கள் நடு வீடாய் சம்மணமிட்டிருந்தது. ராஜுமுருகன், ராகேஷ், அந்தப் பாவிகள் இரண்டு பேரும் கேஸ் அடுப்பின் இரண்டு ஸ்டீம்களையும் எரியவிட்டு அந்த வெளிச்சத்தில் காரியத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். "ஏண்டா நாயே ஸ்டவ் வெடிச்சா என்னடா பண்ணுவே...என்றால் சாரி சாரி மச்சான்........நீயும் வாடா என்று அழைக்கிறான்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்................... சென்னையில் துன்பமாகவும், இன்பாகவும் எத்தனையோ அனுபவங்கள் பசித்தால் ஏதோ ஒரு திருமண மண்டபத்தில் சென்று உண்டு விட முடியும்.....இப்போ முடியுமா? என்று தெரியவில்லை.

சென்னைக்கு 372 வயதாகி விட்டதாக அரசு சொல்கிறது. கேசவநாயக்கர் கொடுத்த இடத்தில் உருவான சென்னைப்பட்டினம் என்று அரசு சொல்லி அதிலிருந்து சென்னை வரலாற்றை மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, எழும்பூர் என்று அடையாளப்படுத்தி ஒரு வார விழாவாக கொண்டாட இருக்கிறது. இன்றைய சென்னையின் முகம் நாம் அல்ல. இப்போதுள்ள சென்னைக்கு நானும் நீங்களும் தேவையும் இல்லை. பத்து அருள் எழிலன் வெளியேறிச் செல்வதையோ, ஒரு பதினைந்து ரா,கண்ணனும், ராஜுமுருகனும், அஜயனும், பாரதியும், வருவது பற்றியோ போவது பற்றியோ எந்தக் கவலைகளும் அச்சங்களும் இல்லை.ஏனென்றால் நகரம் என்னவோ இவர்களுடையதுதான் ஆனால் ஆட்சி இவர்களிடம் இல்லையே.... இந்த இடத்தில் சென்னைக்கு ஏன் வந்தோம் என்று சிந்திக்கத் துவங்கினால் அதை யாராவது தனியாக எழுதாலாம். விரிவாக யோசித்தீர்கள் என்றால் ஊருக்கே திரும்பிப் போகும் முடிவை எடுக்கத் தோன்றும் ஆனால் சென்னைக்கு முன்னால் காயடிக்கப்பட்டது நமது கிராமங்கள் என்பால் சென்னையே எல்லாவிதத்திலும் பெட்டர் என்ற முடிவுக்கு வரலாம்.

இந்தியாவின் நான்காவது பெரிய நகரான டெட்ராய்ட் சென்னை கோடீஸ்வரர்களுடைய நகரமாக மாற்றியமைக்கப்பட்டு விட்டது. வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்கள் மயிலாப்பூர் பார்ப்பனர்கள், எழும்பூர் பார்ப்பனர்கள் என்று இரண்டு பிரிவாக செயல்பட்டதாகச் சொல்வார்கள். பின்னர் நீதிக்கட்சி வந்த பின் பார்ப்பனரல்லாத உயர் சாதிகளின் அதிகாரம் பலப்படுகிறது. இன்று வரை அதன் படிப்படியான வளர்ச்சியை நாம் சென்னையில் காண முடியும். ஆனால் சென்னை ஒரு மீனவப்பட்டினம். கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கூலிகள் வந்து குவிந்த இடம். துறைமுகம் உருவாக்கப்பட்ட பின்னர் வட சென்னை உதிரிகளின் இடமாக உருவானது. புவியியல் ரீதியாகவே வட சென்னை கடுமையாகப் பாதிக்கப்பட்டது, 100 ஆண்டுகளுக்கு முன்னர் மெரீனா பீச் என்ற ஒன்றே இல்லை. மிக நீண்ட மெரீனா மணற்பரப்பு உருவானது இந்த 100 ஆண்டுகளில்தான். ஆனால் மெரீனா உருவாக உருவாக காசிமேடு, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் கடற்பகுதிகளில் உள்ள பூர்வகுடி மீனவர்கள் கடல் அரிப்பு காரணமாக வெளியேற வேண்டிய நிலை எண்ணூரில் இரு கிராமமே கடலுக்குள் சென்று விட்டது. அன்றிலிருந்துதான் சென்னை பூர்வகுடிகள் அழிப்புத் தொடங்கி இன்று அது முடியும் தருவாயில் இருக்கிறது.

புவியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சென்னையின் பூர்வகுடிகள் பாதிக்கப்பட்டார்கள் வளர்ச்சியில் பெயரால், சுத்தத்தின் பெயரால், எழில் மிகு சென்னையின் பெயரால் நவீன அடுக்குமாடி குடியிருப்புகளின் பெயரால் இது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சென்னைண்ணா என்ன? என்றால் ''இஸ்கூலீ......அப்பாலிக்கா.......நாஸ்டா....""இப்படியான எளிய மக்களின் வழக்குதான் நினைவுக்கு வரும் இல்லையா? ஆனால் சென்னை என்றால் இப்போது இந்த மொழி அடையாளாங்களைச் சொல்வார்களா? கபாலி இன்று நகைச்சுவை ஜோக் எழுத்தாளர்களுக்கு மட்டுமே பயன்படுகிறான். இவர்களின் நகைச்சுவையில் கபாலி ரௌடி, பிக்பாக்கெட்,சாராய வியாபாரி, கஞ்சா விற்பவன், இதுதான் இவர்கள் அறிந்த கபாலி............நான் அறிந்த கபாலிகள் வேறு................

எம்.ஜீ.ஆர் சமாதி, அண்ணா சமாதி, தலைமைச் செயலகம் என்றாகிப் போனது. எம்.ஜீ.ஆர் மெரீனாவில் அழகு கெடுகிறது என்று நான்கு மீனவர்களைச் சுட்டுக் கொன்றார். அன்றைக்கு அந்த நான்கு மீனவர்களின் பிணங்களையும் வைத்து சரியான எம்ஜீஆருக்கு எதிராக ஆட்டம் காட்டினார் கருணாநிதி. ''ஆழ்பவரே உங்கள் ஆட்சி முறைகளோ அதிலும் மோசமாய் நாறும்" என்று பாடினார் இன்குலாப். என்ன நடந்தது? இன்றைக்கு கருணாநிதி ஆட்சியில் சுமார் முப்பதாயிரம் மக்கள் சென்னையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் பார்த்த குடிசைப் பகுதிகளை நினைவுபடுத்தி இப்போது சென்று பாருங்கள் அது எதுவுமே இருக்காது. அரசு நிறுவனங்களோ அரசுக் கட்டிடமோ அங்கு இல்லை. எல்லாம் அரசியல் வாரிசுகள், ஊரில் இருந்து வந்த ராஜராஜசோழன்களும், ராஜேந்திர சோழன்களும் எடுத்துக் கொண்டார்கள். ஊரில் இவன் என்ன மதிப்பீடுகளோடு வாழ்ந்தானோ அதே நிலபுரபுத்துவ மதிப்பீடுகளை சென்னைக்குப் பொறுத்தினான். அந்த மதிப்பீடுகள்தான் முஸ்லீம்களுக்கு, தலித்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கிறது. சென்னை மாறியிருக்கிறதே தவிற குடியேறியவர்களின் பூர்ஷுவாத்தனங்கள் மாறவில்லை. இந்த மாற்றங்கள் அடித்தட்டு மக்களின் ரத்தங்களின் மீது நடந்தேறியுள்ளது. அந்த மாற்றங்களுக்கு ஏற்பவே நகரம் தன் நெகிழ்ச்சியான தன்மையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது.
பிச்சைக்காரர்கள். வீடற்றவர்கள், ஓட்டுரிமை இல்லாதவர்களை எளிதில் கையாளவும் ஓட்டுரிமை உள்ளவர்களைத் தந்திரமாகக் கையாளவும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் நமது ஆட்சியாளர்கள். ஆக மொத்தம் பச்சைத் தமிழர்கள் சென்னையை ஒரு அழகான பண்ணைக் கிராமமாக மாற்றி விட்டார்கள். டூ வீலரே இல்லாமல் இருந்த போது நினைத்த இடத்திற்கு சென்று வந்த வசதி இரு சக்கர வாகன வசதி வந்து விட்ட இன்று வாய்க்கவில்லை. நெடும்பாலங்கள், அல்லது சிறுபாலங்கள் சென்னை டிராபிக்கை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றி விட்டிருக்கிறது.

கபாலிகளின் வரலாறு சென்னையிலும் இல்லை அவர்கள் தூக்கி வீசப்பட்ட செம்மஞ்சேரியிலும் இல்லை..........ஆக சென்னை மாறிக் கொண்டிருக்கிறது நமக்குப் பிடித்த எளிய சென்னை மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மவுண்ட்ரோட்டில் ஏர்டெல் நிறுவனம் சிங்கங்களைக் காப்பாற்றக் கோரி பிரமாண்ட பிளெக்ஸ் போர்டுகளை வைத்துள்ளது...... பாதிரியார் ஜெகத் கஸ்பர் ராஜின் தமிழ் மையமோ 'நீங்கள் ஓடினால் இவர்களின் வாழ்வில் ஒழியேற்றப்படும்" என்று ஒரு ஏழையின் படத்தை நம் முகத்தின் முன்னே கொண்டு வந்து கொண்டு வந்து காட்டுகிறார். பிளெக்ஸ் போர்டுகளிலும், ஆளுயர விளம்பரங்களிலும் நமது ஆண்டைகள் நமக்கு இரக்கத்தையும் கருணையையும் கற்றுக் கொடுக்கிறார்கள். ஏழைகளைக் கண்டு இரக்கம் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள்.சென்னைக்கு வெளியே கபாலி உழைக்க வழியில்லாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறான். தண்ணீர் வாழ வேண்டிய மீனை நிலத்திலும், நிலத்தில் வாழ வேண்டிய முயலை தண்ணீரிலும் வளர்க்கிறார்கள் நமது எஜமானர்கள்.