tag:blogger.com,1999:blog-88824805242685454482024-03-19T08:37:07.586+05:30வன்மம்”கால்கள்தான் எனது உலகம்”- சே.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-78932827251377103032012-10-03T22:56:00.002+05:302012-10-03T22:59:40.212+05:30www.arulezhilan.com<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நண்பர்களே புதிய இணையதளம் ஒன்றை துவங்கியிருகிறேன்.<br />
<br />
<br />
<a href="http://arulezhilan.com/"><b>http://arulezhilan.com/</b></a></div>
டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-51450311663669099182012-07-09T16:33:00.000+05:302012-07-09T17:04:15.204+05:30தமிழகத்தையும் ஈழத்தையும் இணைப்பது எது எனக் கேட்டால்..? -தீராநதி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<em style="color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; text-align: -webkit-auto;"><b>சந்திப்பு: டி.அருள் எழிலன்</b></em>
<br />
<br />
<h1 class="entry-title" style="background-color: white; color: #333333; font-family: Play, arial, serif; font-size: 18px; line-height: 36px; margin: 0px 0px 5px; padding: 0px; text-align: -webkit-auto;">
<span style="background-color: whitesmoke; color: #666666; font-family: Georgia, Times, 'Times New Roman', serif; font-size: 11px; font-style: italic; font-weight: normal; line-height: 19px;">போருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சாத்தியாமான எல்லா எல்லைகளையும் தொட்டு விடும் துடிப்பு அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தனது ‘ஆறாவடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகமாகியிருப்பவர் சயந்தன். நாவல் வெளி வந்த மிகக்குறுகிய காலத்திலேயே புகலிடத்திலும், இலங்கையிலும் விவாதிக்கப்படும் முன்னணி படைப்பாளியாகியிருக்கிறார். “கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன.” என்று சொல்லும் சயந்தன் இப்போது சுவிஸ்சில் வாழ்கிறார். மனதுக்குப் பட்டதை பளிச்சென்று பேசிவிடும் சயந்தனின் நேர்காணல்……</span>
</h1>
<div>
<span style="background-color: whitesmoke; color: #666666; font-family: Georgia, Times, 'Times New Roman', serif; font-size: 11px; font-style: italic; font-weight: normal; line-height: 19px;"><br /></span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2BFku-nCkIcdjniP5lsQpSUuDu1JhYYXhd-wF6f7nikosjN6oOYGCzfVmustcTIFo8vJCfCbcZ-69T_pWagT-qrJUvhDlrJ94-QcUomyHGyZTqAsbNRPcuDzAxTKeB-yNxBvVhsnswVc/s1600/saynthen.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj2BFku-nCkIcdjniP5lsQpSUuDu1JhYYXhd-wF6f7nikosjN6oOYGCzfVmustcTIFo8vJCfCbcZ-69T_pWagT-qrJUvhDlrJ94-QcUomyHGyZTqAsbNRPcuDzAxTKeB-yNxBvVhsnswVc/s320/saynthen.jpg" width="214" /></a></div>
<div>
<span style="background-color: whitesmoke; color: #666666; font-family: Georgia, Times, 'Times New Roman', serif; font-size: 11px; font-style: italic; font-weight: normal; line-height: 19px;"><br /></span></div>
<div>
<span style="background-color: whitesmoke; color: #666666; font-family: Georgia, Times, 'Times New Roman', serif; font-size: 11px; font-style: italic; line-height: 19px;"><br /></span></div>
<div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<em><strong>தீராநதி: உங்களுடைய ஆறாவடு நாவலுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது?</strong></em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<strong>சயந்தன்:</strong> நாவல் வெளியான நாளிலிருந்து, அங்கீகாரமும் நிராகரிப்பும் மாறி மாறி வந்தபடியிருந்தன. ஆறாவடு எனது முதல் படைப்பு, முதற் படைப்பொன்றின் படைப்பாளி என்ற வகையில் அங்கீகாரங்களும் எனக்கு நெருக்கமான எழுத்துக்களைப் படைத்த எழுத்தாளர்களது பாராட்டுக்களும் ஒரு வித கிளர்ச்சியைத் தந்தன என்பதை மறைக்க முடியாது. விமர்சனங்கள் என்ற வகையில், அது விமர்சகர்களது இலக்கிய அழகியல் கொள்கைகள், அவர்களது வாசிப்புச் சார்ந்த எதிர்பார்ப்புக்கள், வாசிப்புச் சார்ந்த அனுபவங்கள், படைப்பாக்கம் மீதான தேடல்கள் மேலும் அவர்களது அரசியல் பார்வைகள் கூட தீர்மானிக்கின்றன என்பதை அறிந்தேயிருந்தேன். என்னுடையதற்கு மாற்றாக முற்றிலும் மாறுபட்ட எதிர்நிலைப் பார்வையொன்றை ஒருவர் கொண்டிருக்க முடியும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதோடு விமர்சனத்திற்கும் எனக்குமான உறவு முடிந்து விடவேண்டுமென்பதே எனது விருப்பம். மட்டுமல்லாது நாவல் மீதான எதிர் நிலைப் பார்வைகளை ஒளித்தும் மறைத்தும் வைக்காதிருத்தல், அவற்றிற்கான வெளிகளை உருவாக்குதல் என்பவற்றிலும் ஆர்வம் கொண்டிருக்கிறேன்.இன்னொரு நிலையில் நாவல் மீதான அங்கீகாரங்களும் நிராகரிப்புக்களும் தமக்குள் உரையாட ஆரம்பித்தன. அவற்றைக் கூர்மையாக அவதானிக்கத்தொடங்கினேன். ஒரு படைப்பாளியாக பயன்தரு விடயமாக அவ்வுரையாடல்கள் அமைந்தன. அவ்வாறான உரையாடல்களிலிருந்தே கற்கவும் முடிந்தது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<em><strong>தீராநதி: ஆறாவடு என்பது யுத்தம் ஏற்படுத்திய வடுதான் இல்லையா? அது உங்களுக்குள் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது. நீங்கள் எப்போது இடம் பெயர்ந்தீர்கள்?</strong></em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<strong>சயந்தன்:</strong> இலங்கைத்தீவின் அனைத்து மனிதர்களையும் யுத்தம் ஏதோ ஒரு வகையில் பாதித்தே இருக்கிறது. அவர்களது இயல்பு வாழ்வினைக் குலைத்துப் போட்டிருக்கிறது. நினைத்தும் பார்த்திரா திருப்பங்களை ஒரு பயணத்தின் வழியிலிருக்கும் பாழும் கிணற்றினைப் போல உருவாக்கியிருக்கிறது. எல்லோரையும் மூடி யுத்தம் போர்த்திருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் வழியில், கோயிலுக்குச் செல்லும் பாதையில், சந்தையில் கூடி நிற்கையில், தெருவில் செல்கையில் விமானக்குண்டு வீச்சிலோ ஷெல் தாக்குதல்களிலோ அல்லது குண்டு வெடிப்புக்களிலோ உயிரிழந்தும் அங்கங்களை இழந்தும் ஆகிற வாய்ப்புக்கள் எல்லோருக்கும் இருந்தன. சாவுகள் பெரும்பாலும் இவ்வாறன சூழல்களிலேயே ஏற்பட்டன. இவ்வாறான பொதுவான அச்சுறுத்தல்களின் மத்தியிலேயே இருபது வயதுகள் வரை வாழ்ந்திருந்தேன். தவிரவும் யுத்தம் ஒவ்வொரு ஊராக நம்மை விரட்டியடித்தபடியிருந்தது. தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் நான் ஒரே பள்ளியில் படித்ததில்லை. புதிய ஊர்களையும் புதிய பள்ளிக் கூடங்களையும் யுத்தம் தந்து கொண்டேயிருந்தது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
இதனைத் தவிர்த்து, யுத்தம் தனது பிரதிநிதிகளுடாக குறித்த மனிதர்களின் பெயர்களையும் தேடி அலைந்தது. இந்திய இராணுவத்தோடு இணைந்திருந்தவர், புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர், புலிகளுக்கு சாப்பாடு கொடுத்தவர், புலிகளைக் காட்டிக் கொடுத்தவர், அரச பயங்கரவாதத்தை எதிர்த்து எழுதிய பத்திரிகையாளர்கள், புலிகளது செயற்பாடுகளை எதிர்த்தவர்கள் என எல்லோரையும் அது தேடித் தேடி அழித்தது.விரும்பியோ விரும்பாமலோ யுத்தத்தின் சாயலின்றி எந்த ஈழத் தமிழரும் வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளியது. இவ்வாறாக, பெயர்களைத் தேடி அலையும் அச்சுறுத்தல்களின்றி பொதுவான அல்லது வழமையான அச்சுறுத்தல்களையே நான் எதிர்கொண்டிருந்தேன்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
ஆயினும் எனது சிறிய வயதில் அது பெரும் மனப்பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. பத்துப் பன்னிரெண்டு வயதுகளில் கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன. பத்திரிகைகளில் முதல்நாளில் நடந்த விமானக் குண்டுவீச்சில் செத்தவர்களின் விபரமும் படங்களும் வரும்போது, நேற்று இதே நேரம், அவர்கள் சாகப்போவது தெரியாமல் உயிரோடிருந்தார்கள். நாளைக்கு எனக்கும் நிகழுமோ என்ற வெப்பியாரம் மிகுந்த உணர்வுகள் எனக்குள் ஓடிப்படர்ந்திருக்கின்றன. இன்றைக்கும் சடுதியாக விமான இரைச்சல்களைக் கேட்க நேர்கையில் திடுக்கிட்டு விடுகின்றேன்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
இறுதி யுத்த நாட்களின் கொடூரம் போலொன்றை நான் அனுபவித்ததில்லை. அந்தச் சுழலுக்குள் உறவுகளையும் அவயங்களையும் உடமைகளையும் இழந்து திரும்பிய மனிதர்களதும் சிறுவர்களதும் மனநிலை எதிர்காலத்தில் என்னவாயிருக்குமோ என்பது அச்சமாயிருக்கிறது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<em><strong>தீராநதி: ஆறாவடு அரசியலை நீக்கி விட்டு நிகழ்வுகளைக் கொண்டு உரையாடுகிறது என்று ஒரு சாரார் சொல்கிறார்களே?</strong></em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<strong>சயந்தன்:</strong> ஆம். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதி என்றும், எதிர்ப்பரசியலை ஆழமாக முன்னிறுத்தாத நாவல் என்றும் விமர்சனங்கள் வெளியாகின. அண்மையில் நண்பர் சசீவன், ஆறாவடு குறித்து ஒரு விமர்சனக்குறிப்பினை எழுதியிருந்தார். அதில் இவ் அரசியல் நீக்கம் குறித்துப் பேசியிருந்தார். அதனை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்..</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
இருவேறு அதிகார மையங்களுக்குள் வாழச்சபிக்கப்பட்ட தலைமுறையொன்றின் – ‘எஞ்சியுள்ள வாழ்வைத் தக்கவைக்கும்’ தலைமுறையொன்றின் அலைக்கழிவான வாழ்க்கை அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அரசியல் அதிகாரங்களுக்குள்ளே சென்றவர்கள் கூட அரசியல் நீக்கம் செய்யப்பட்டிருந்தததைக் கண்டும் கேட்டும் இருக்கின்றோம். தொன்னுாறுகளுக்குப் பிறகான தலைமுறையின் அரசியல் சார்ந்த சிறு கருத்துதிர்ப்பும் கூட, தீவிரமான அரசியற் செயற்பாடுதான் என்றே கூற வேண்டும். தமிழ்த்தேசியத்திற்கு எதிரான ஒரு சிறு வரியைக் கூட வாசித்திருக்காத , அறிந்தேயிருக்காத ஏராளமான இளைஞர்களை எங்களது தலைமுறையில் கண்டிருக்கின்றோம். அதிலிருந்து மாறுமட்டு, இந்தத் தலைமுறையின் உரையாடலுக்குத் தயாராயிருக்கும் பிரதி இது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
நாவலில் அதிகார மையங்களுக்குமெதிராக எங்கேயும் போர்க்கொடி தூக்கப்படவில்லை. எதிர்த்து வசனம் பேசப்படவில்லை. நாவலில் வரும் பாத்திரங்கள், யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு அப்பால் நகர்பவர்களாகவே நாவல் முழுவதும் வந்து செல்கின்றார்கள். அப்பால் சென்று, அதிகாரத்தை வைகின்றார்கள். தனியே இருந்து தலையிலடித்து கதறி, ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார்கள். அதிகாரத்தின் இருப்பை மறுதலிக்க முடியாத தமது இயலாமையை நோகாமல், அதிகாரத்தை ஓயாமல் நையாண்டி செய்கின்றார்கள். நையாண்டி மூலம் தமது உடன்பாடின்மையைத் தெரிவிக்கின்றார்கள். ஆயுதம் மூலமான, உயிரை எந்நேரமும் பறித்துவிடக்கூடிய அதிகாரத்தின் பலமான இருப்பைத் தம்மால் அசைத்துவிட முடியாது என்று தெரிந்தும், தமது நையாண்டிகளும் நக்கல்களும் அதிகாரத்தை எதுவும் செய்துவிடப்போவதில்லை என்பது தெரிந்தும் அதிகாரத்தைத் தொடர்ச்சியாக நையாண்டி செய்தபடியேயிருக்கின்றார்கள். அதிகாரத்தின் காதுகள் தம்மைச் சுற்றி உள்ள போதெல்லாம் மனதிற்குள் நையாண்டி செய்கின்றார்கள். அதிகாரத்தின் துப்பாக்கிகளின் முன்பு கைகட்டி வாய்பொத்தி மௌனியாகி நிற்கின்றார்கள். அதிகாரத்தின் கால்களை தடவிய மறுகணமே அப்பால் சென்று, அதிகாரத்தை நையாண்டி செய்கின்றார்கள். இங்கு, மனிதர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து தம்மைப் பழக்கப்படுத்தினார்கள்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<em><strong>தீராநதி: ஆறாவடுவில் புலிகள் சாதிப்பிரச்சனையைக் கையாண்ட விதம் தொடர்பாக ஒரு பகுதி வருகிறது. உண்மையில் தமிழர்களிடையேயான சாதி வழக்கத்தை புலிகள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்?</strong></em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<strong>சயந்தன்:</strong> சாதிக்கு எதிராகப் போராடுவதென்பது ஒரு பண்பாட்டுப் போராட்டம். நிலவும் பண்பாட்டை மாற்றி எழுதி ஒரு புதிய பண்பாட்டை நிறுவுவது. அந்த வகையில் புலிகளால் சாதியக் கருத்துருவை அழிக்க முடியவில்லை. சீதனமுறைமைக்கு எதிராக மேற்கொண்ட பரப்புரைகளோடு ஒப்பிடுகையில் சாதியத்திற்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஒரு செயற்பாடாக அவர்கள் மேற்கொள்ள வில்லை. ஆனால் தீண்டாமைக் கொடுமைகளை துப்பாக்கியின் துணை கொண்டு அவர்களால் ஒடுக்க முடிந்திருந்தது. புலிகளின் ஆளுகைக்கு வெளியில் அது ஒரு போராட்டக்குழுவாக பார்க்கப்பட்டாலும் 90 களுக்குப் பிறகு புலிகள் தம்மை ஒரு குறை நிலை அரசாக பாவனை செய்து கொண்டார்கள். சாதிய அடிப்படையிலான பாகுபாட்டினை ஒரு குற்றமாகக் கருதி, அதனை தாம் உருவாக்கிய சட்டக் கட்டமைப்பின் ஊடாக அணுகினார்கள். அது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான கொடுமைகளை ஓரளவுக்கேளும் நிறுத்தியிருந்தது. எப்படியென்றால் ஆதிக்க மனங்களில் கசடு அப்படியே நிலைத்திருக்க அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டிருந்தார்கள். எங்கேனும் அவ்வாறான கொடுமைகள் மேற்கொள்ளப்பட்டால் கடுமையான முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டிருந்தன. இது காரணமாக தமிழ் சமூகத்தில் முன்னர் தலைவிரித்தாடிய சாதிப்பாகுபாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட புறவயமான கொடுமைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவ்வளவே,<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1oN8eHn2xixINgcVNJtfCAKYmdyUllJbGPFQ3R-Zpf-o0jDLUsLCxtKx2uB0T1XE0VfkJ9YevNv2VAIgSPk8bd7wZJJk8XKd6glPbzsi5WaK5fwVvuuPbgTCakH1SHUl9p50uO2UvHl0/s1600/book_aaravadu.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1oN8eHn2xixINgcVNJtfCAKYmdyUllJbGPFQ3R-Zpf-o0jDLUsLCxtKx2uB0T1XE0VfkJ9YevNv2VAIgSPk8bd7wZJJk8XKd6glPbzsi5WaK5fwVvuuPbgTCakH1SHUl9p50uO2UvHl0/s320/book_aaravadu.jpg" width="207" /></a></div>
<br /></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
மற்றும்படி திருமணம், தொழில் என சாதி தனது கட்டமைப்பை தொடர்ச்சியாகப் பேணியபடியிருந்தது.ஒரு சம்பவம் சொல்கிறேன். தொன்னுாற்று இரண்டுகளாக இருக்க வேண்டும். மாவீரர்தின நிகழ்வுக் கலை நிகழ்வொன்றில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது வடபகுதியில் சவர்க்காரம் சீனி மண்ணெண்ணெய் உட்பட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு இலங்கை அரசால் தடை விதிக்கப்பட்டிருந்தது. வில்லுப்பாட்டில் ஏதோ ஒரு இடத்தில், <em>“ஏன் தெரியுமா.. யாழ்ப்பாணத்திற்கு சவர்க்காரத்தினை அனுப்புவதில்லை. பிரேமதாசா வண்ணான் தானே.. அதுதான் அவர் முழுச் சவர்க்காரங்களையும் எடுத்துவிட்டார்”</em> என்று கூறினார்கள். நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருந்த யோகி உடனடியாக மேடையேறி நிகழ்ச்சியை நிறுத்தச் சொன்னார். பிரேமதாசா நம்முடைய எதிரியாக இருக்கலாம். அதற்காக சாதியைச் சுட்டி கேலி செய்வதை ஏற்கமுடியாதென்றார். நிகழ்ச்சி இடைநடுவில் நிறுத்தப்பட்டது. இதே பிரேமதாசாவை அடுத்த மே தினத்தில் ஊர்வலமொன்றில் வைத்து சைக்கிளில் மோதிய புலிகளின் தற்கொலைக் குண்டுதாரியொருவர் கொலை செய்தார். இந்த இரண்டு சம்பவங்களுமே புலிகளும் சாதியும் என்ற பார்வையில் பதிவு செய்ய வேண்டிய முக்கிய சம்பவங்களாக எனக்குத் தோன்றுகிறது. ஒரு படைப்பாளி என்ற வகையில் இந்த இரண்டையும் நான் பதிவு செய்வேன். இவற்றில் ஒன்றை மட்டுமே பதிவு செய்பவர்களைக் குறித்தும் ஒன்றை மட்டுமே பதிவு செய் என ஆணையிடுபவர்கள் குறித்தும் எனக்கு அக்கறையில்லை.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<em><strong>தீராநதி: போருக்குப் பின்னர் இலங்கை எழுத்தாளர்களின் சிந்தனை முறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா? சுதந்திரமாக சிந்திக்கவும் பேசவும் முடிகிறது என்றொரு கருத்து பொதுவாகச் சொல்லப்படுகிறதே?</strong></em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<strong>சயந்தன்:</strong> நீங்கள் இந்தக் கேள்வியை போருக்குப் பின்னர் புலிகள் தொடர்பாக சுதந்திரமாக விமர்சிக்க முடிகிறதே என்ற அர்த்தத்தில் கேட்கிறீர்கள் என நம்புகின்றேன். உண்மையில் போருக்கு முன்னரும் புலிகள் இருந்த காலத்திலேயே புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து சுதந்திரமாக புலிகளையும் அரசினையும் விமர்சித்து எழுதிவருபவர்கள் இருக்கிறார்கள். இலங்கையில் போருக்கு முன்னர் புலிகள் தரப்புக் குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்க முடியாதிருந்தவர்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருந்தன. அவர்கள் புலிகளின் ஆளுகைக்குள் இருந்தார்கள். சிலர் புலிகளில் இணைந்திருந்தார்கள். சிலர் புலிகளுக்காக ஏதோரு ஒரு வகையில் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். சிலர் சிவனே என்று சும்மாயிருந்தார்கள். இவர்களுக்கு போரின் பின்னரான சூழல், இதுநாள் வரை தம்மால் வெளியிட முடியாதிருந்த புலிகள் மீதான விமர்சனங்களை அல்லது திடீரென ஞானம் பெற்று உய்த்த கருத்துக்களைச் சொல்வதற்கு வழியைத் திறந்து விட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
ஆனால் மறுவளமாக அரச பயங்கரவாதம் குறித்து ஒரு வார்த்தையேனும் கதைக்க முடியாத நிலைமை இப்பொழுது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.அதாவது புலிகளது சூழலில் அரச பயங்கரவாதத்திற்கு மட்டும் எதிராகவும் இராணுவச் சூழலில் புலிகளது அராஜகச் செயற்பாடுகளுக்கு மட்டும் எதிராகவும் எழுதவும் பேசவும் முடிகிற சுழலுக்குள் மாறி மாறி அகப்பட்டாக வேண்டியிருப்பது பெரும் துயரம். இருப்பினும் கிடைக்கின்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி பேசக் கூடியவற்றை பேச முடிவதென்பது முக்கியமானதுதான். எப்போதாவது இரண்டு பக்கங்கள் குறித்துப் பேசும் நாளொன்று அவர்களுக்கு வரும்போதே மனச் சாய்வுகள் குறித்து அறியக் கிடைக்கும்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
என்னளவில் ஒரு மூன்றாம் தரப்பாக நின்று புலிகளை விமர்சிக்க முடியவில்லை. அது ஒரு பெரும் குற்ற உணர்ச்சி. விவரணைகளுக்கு அப்பாலானது. எனது நாவலிலும் சிறுகதைகளிலும் வருகிற புலிகளைச் சுட்டுகிற பதிவுகள் முழுக்கவும் சுய விசாரணைக் குறிப்புக்கள்தான். நேற்றுவரை நான் நின்ற வட்டத்தின் உள்ளேயே நின்றவர்கள், இரவோடு இரவாக வெளியே பாய்ந்து காலையில் என்னைக் கை கொட்டிச் சிரிப்பதுவும் எள்ளி நகையாடுவதும் போல எனக்கும் ஓரிரவு அதிசயம் ஏதும் நடந்தால் பாழாய்ப்போன இந்த குற்ற உணர்ச்சியைக் கூட்டியள்ளி எறிந்து விட்டு ஜோதியில் கலந்து விடலாம். முடியவில்லை.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<em><strong>சயந்தன்: புகலிட தமிழ் அரசியல் சூழல் எப்படி இருக்கிறது?</strong></em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<strong>தீராநதி:</strong> எனது இருபதுகள் வரை மிகத் தட்டையான ஒற்றைப்பார்வையைக் கொண்டிருந்தேன். புலிகளின் ஆளுகைக்குள் நீண்ட காலம் வாழநேர்ந்த எனது தலைமுறைக்கு இப்படியான நிலையே வாய்த்திருக்கும். சுய வெட்கத்துடன் சொல்வதெனில் முஸ்லீம்களின் வெளியேற்றத்தை நான் விடுதலைப் பயணத்தில் ஒரு தடையை நீக்கியதாகவே அந்த வயதுகளில் நம்புகிற அளவிற்கு மனநிலை இருந்தது.அந்த சூழலில் இருந்து முற்றாக வெளியேறி புகலிடத்திற்கு வந்தபோது அங்கு நிலவியதாக கருதிய மாற்றுச் சூழல் முற்றிலும் புதியதாக இருந்தது. ஒருவகையில் எனது முன்னைய ஒற்றைப் பார்வை குறித்த வெட்கமும் உருவாகியது. ஆயினும் அவ்வாறான மாற்றுச் சூழலின் செயல் இயக்கம் ஒரு குட்டையில் தேங்கிய நீரைப்போலவே தேங்கி நின்றது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
ஒரு கட்டத்தில் அதிகார எதிர்ப்பு நிலையாளர்கள் என்றளவிலாவது அம் மாற்று அரசியல் மீதான மரியாதை நீடித்திருந்தது. அதாவது ஒரு இயக்கமாகச் செயற்படமுடியாத ஆனால் புலிகள், அரசு முதலான அதிகாரங்களுக்கு எதிரான மனநிலை கொண்டதாக அவ் அரசியலை அடையாளம் கண்டுகொண்டேன்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
இருப்பினும் புலிகளுடைய தோல்வியின் பிறகு, புகலிட மாற்றுச் சூழலின் அதிகாரங்கள் மீதான எதிர்ப்புணர்வு தன்னைத் தோலுரித்து உள்ளே பல்லிளித்தபடியிருந்த புலியெதிர்ப்பின் முகம் கோரமாக வெளித்தெரிந்தது. மாற்றுக்கருத்தாளர்கள் என அறியப்பட்ட சிலர் இலங்கை அரசோடு சமாந்தரமாகப் பயணித்ததை கண்டுகொள்ள முடிந்தது. அவர்களது அதிகாரங்களுக்கு எதிரான மனநிலை எங்கேயென்று தேடுகிற அளவிற்கு நிலைமையானது. பலர் யதார்த்தமென்பது இலங்கை அரசோடும் , அரசோடு இணைந்த தமிழ் கட்சிகளோடும் இணைந்தே மக்களுக்காக எதையேனும் செய்ய முடிகிறது என்கிறார்கள். இருக்கலாம். ஆனால் ஒரு விவாதத்திற்காக, போரின் மிகப்பெரும் அழிவுகளின் பின்னரும் ஒருவேளை புலிகளின் கை ஓங்கியிருந்தால் அப்பொழுது மக்களின் நலன் கருதி புலிகளோடு கை நனைத்துக் கொள்ள இவர்கள் தயாராக இருந்தார்களா என்று கேட்டால் பதில் என்னவாக இருக்கும்.. ?</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
உண்மை என்னவென்றால், <em>புலிகளது வெளியில் தமக்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள முடியாதிருந்ததே, சிலரது பிரச்சனையாக இருந்ததாக நான் உணர்கின்றேன்.</em> இன்றைய நிலையில் புலிகள் அற்ற மூன்று வருடங்களின் பின்னரும் புகலிடத்தில் புலி ஆதரவு அரசியலும், புலி எதிர்ப்பும் அரசியலும்தான் நிலவுகிறது.<br />
புகலிடச் சூழலில் பரவியிருந்த புலி ஆதரவு அரசியல் மட்டுமல்ல மேற்குறிப்பிட்ட புலி எதிர்ப்பு அரசியல் என்பதும் புலிகளது இருப்பு என்ற அச்சிலேயே திரண்டிருந்தது. புலிகளது அழிவின் பிறகு அது தன்னைத்தானே உதிர்த்துக்கொண்டிருக்கிறது.<em> புலிகள் என்ற இலக்கு அற்ற நிலையில் தோளில் மாட்டிய அம்புறாத்தோணிகளோடும், வில்லும் அம்புகளோடும் இனிமேல் என்ன செய்வதென்றே அவர்களும் திசைதெரியாது இருக்கின்றனர் என நான் நினைக்கிறேன்,</em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<em><strong>தீராநதி: போர் முடிந்து மூன்றாண்டுகள் ஆகி விட்ட நிலையில் இப்போது உங்கள் மன நிலை என்ன?</strong></em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<strong>சயந்தன்</strong>: ஒரு முட்டுச்சந்தில் நிற்பதைப் போன்றிருக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. தமிழர்களின் அரசியல் பிரச்சனைகள் அப்படியேதான் இருக்கின்றன. தமிழ் பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் இன்னமும் இருக்கிறது. இலங்கை அரசுகள் அரசியல் பிரச்சனை விவகாரத்தை அப்படியே தொடர்ந்தும் பேணுவார்கள். ஒரு தீர்வினை எட்டுவதற்கான முயற்சிகளில் அவர்கள் ஒருபோதும் இறங்கப்போவதில்லை. அவ்வாறான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கு தமிழர்களிடமும் இப்போதைக்கு வழியேதுமில்லை.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
சிலர் சொல்கிறார்கள், மீளவும் ஆயுதப்போர் வெடிக்கும், தமிழீழம் கிடைக்குமென்று. உண்மையில் தமிழர் பிரச்சனைக்கான தீர்வொன்றுக்கு எதுவிதமான வேறு வழிகளும் தெரியாதவிடத்து ஆயுதப்போர் வெடிக்கும் என்று கும்பலில் கோவிந்தா போட்டுவிட்டு இருக்கலாம்தான். ஆனால் அது என்னளவில் இயலுதில்லை.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
இறுதிப்போரின் அழிவுகளும், அக் குழந்தைகளும் சிறுவர்களும் முதியவர்களும் கருகிய நிலமும் புகை கலந்த காற்றும் இரத்தமும் எரிந்த சதைத்துணுக்குகளும் அவற்றிற்கு சற்றேனும் சம்பந்தமற்ற இடத்தில் நான் இயல்பான வாழ்வொன்றுக்குள் இருப்பதுவும் ஆயுதப்போரினை நான் நினைத்தும் பார்க்க முடியாத நிலையில் என்னை நிறுத்தியிருக்கின்றன.போர்க்குற்ற விவகாரங்களில் எனது ஈடுபாடெல்லாம் கூட மகிந்தவிற்கோ வேறு எவரிற்குமோ தண்டனை வாங்கிக் கொடுத்தலின் பாற்பட்டதல்ல. இவ்விவகாரங்கள் மூலமான அழுத்தம் தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் என்ற அளவிலேயே. அது நடந்துவிட வேண்டுமென விரும்புகிறேன்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<em><strong>தீராநதி: சிங்களர்களுடன் பகை மறுப்புத் தேவை? என்று தொடர்ந்து தமிழர்களுக்கு சிலர் சொல்கிறார்கள். உண்மையில் இந்த பகை மறுப்பு என்னும் விஷயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?</strong></em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<strong>சயந்தன்:</strong> ஆம். பகை மறப்பு குறித்து சிலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள். உண்மையில் பகை மறப்பென்பது இலங்கை அரசோடும் இராணுவ இயந்திரத்தோடுமா அல்லது சிங்கள மக்களோடா என்பது தெளிவுபடுத்தப்படவேண்டியது. சிங்கள அரசோடு இணங்கிப் போவதென்பதை பகை மறப்பு என எண்ண முடியவில்லை.சிங்கள மக்களைக் குறித்த சந்தேகங்களும் கோபங்களும் தமிழர்களிடத்தில் இருக்கிறது. மறுவளமாக சிங்கள மக்களிடத்திலும் அவ்வாறான சந்தேகங்கள் உள்ளன. 2003 இல் சமாதான காலத்தில் ஒருமுறை சிங்களப் பகுதிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இயற்கை அனர்த்தத்தில் வீடுகள் அழிந்தன. பல குடும்பங்கள் வீதிக்கு வந்தன. அப்பொழுது வன்னியில் திரட்டிய அத்தியாவசியப் பொருட்களோடு புலிகளின் அரசியல் அணியொன்று சிங்களப் பகுதிகளுக்குச் சென்றிருந்தது. அப்பொழுது சிங்களப் பெண்மணியொருவர் புலிகளின் உறுப்பினர் ஒருவரிடம் உண்மையாகவே நீங்கள் புலிகள்தானா.. என்று ஆச்சரியத்தோடு கேட்டதும் கைலாகு கொடுத்தபோது நம்பவே முடியவில்லை. புலிகள் என்பவர்களும் எம்மைப் போலவே மனிதர்களாக இருக்கிறார்கள் எனச் சொன்னதுமான சம்பவங்களை பின்னர் அவ் உறுப்பினர் நினைவு கூர்ந்திருந்தார்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
தமிழீழத்தினை பெற்ற பிறகு கூட சிங்களதேசமே நமது அயல்நாடாக இருக்கப் போகிறது என்றும் இரண்டுக்கும் இடையில் கால்வாய் வெட்டி கடலை உட்கொண்டு வரமுடியாது என்றும் அயல்தேசத்து மக்களாக சிங்கள மக்களே இருக்கப் போகிறார்கள் பொருளாதாரத் தொடர்புகளில் இரு நாடுகளும் பின்னியே இருக்குமென்றும் கருத்துக்களை பாலகுமாரன் போன்ற புலிகளின் முக்கியஸ்தர்கள் கொண்டிருந்தார்கள்.ஆக சிங்களமக்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பகைமறப்பு என்பது ஆரோக்கியமானதே.ஆனால் இறுதிப்போரில் இலங்கை அரசு வென்றபோது சிங்களமக்கள் வர்க்க பேதமற்று வெடி கொளுத்திக் கொண்டாடினார்கள். அந்த யுத்தத்தில் வெல்வதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட யுத்த மீறல்கள், அப்பாவிப் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைகள் அனைத்தையும் அங்கீகரித்தபடியே அந்தக் கொண்டாட்டங்கள் இருந்ததாக ஒரு தோல்வியுற்ற இனமாக தமிழர்களின் மனங்களில் ஆறாத காயமாக அந்த நிகழ்வுகள் இருக்கின்றன. அவற்றைத் தணிக்கும் பொறுப்பு சிங்கள மக்களிடமே உள்ளது.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
ஒரு பெரும் போருக்குப் பின்னதாக பகை மறப்பின் முதல் அடியினை வெற்றி கொண்ட தரப்பே மேற்கொள்ள முடியும். <em>பகை மறப்பென்பது எக்காளமும், குரூரமும், வென்ற திமிரும் அற்ற மனநிலையில் எதிர்காலம் என்ற நோக்கு நிலையில் மட்டுமே தோல்வியுற்ற மனதொன்றோடு செய்து கொள்ளக் கூடியது.</em> மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். அவ்வாறான பகை மறப்பிற்கான சமிக்கைகள் எதுவும், சிங்கள அரசிடமிருந்து வருகிறதா.. மாறாக போராளிகளின் கல்லறைகள் சிதைத்தல், கொலைகளைக் கொண்டாடுதல், கடத்தல் கொலை என்று அச்சம் தரும் சூழலைத் தொடர்ந்தும் பேணுதல், வழிபாட்டு இடங்களை மூடுதல் என மேலும் இடைவெளிகளை அதிகரிக்கும் செயல்களே நடக்கின்றன. தன் பிள்ளையின் உடல் துாங்கிய கல்லறையை புல்டோசரைக் கொண்டு கொத்திக் கிளறிய ஒரு தரப்போடு எந்தத் தாயால் எந்தத் தந்தையால் எந்த அண்ணனால் எந்த தம்பியால் பகை மறப்பு குறித்து யோசிக்க முடியும்..</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<em><strong>தீராநதி: ஈழ விவாகரத்தில் இந்தியாவைத் தவிர்க்க முடியுமா? இந்தியாவை எப்படி அணுகின்றீர்கள்?</strong></em></div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<strong>சயந்தன்:</strong> தெற்காசிய அரசியல் நகர்வுகளில் இந்தியாவைத் தவிர்த்து இலங்கையில் தமிழர்கள் தமக்கான தீர்வொன்றினைப் பெற்றுவிட முடியாது என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். ஆனால் இந்தியாவை அவ் விடயத்தில் தலையிடாதபடி இலங்கை மிகுந்த இராஜதந்திரத்தோடு காய்களை நகர்த்துவதோடு தனக்கு ஏற்றபடியும் பயன்படுத்திக் கொள்கிறது.நான் இந்தியாவை நம்பிக்கெட்ட ஒருவனின் கண்களுக்கூடாகவே பார்க்கிறேன். இனி என்னிடம் இந்தியா குறித்த எந்த எதிர்பார்ப்புக்களும் இல்லை. இந்தியா மட்டுமென்றல்ல. தமிழ்நாடு குறித்தும் அதுவே நிலைப்பாடு.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள், பிரமுகர்களின் தமிழீழம் குறித்த ஸ்டேட்மென்ட்களை ஒரு வித துயரம் சுமந்த ஏளனப் புன்னகையோடு பார்த்தபடியிருக்கிறேன்.இந்தியாவில் ஈழத்தமிழ் விவகாரமென்பது சிலருக்கு செய்தி, சிலருக்கு அரசியல், சிலருக்கு வியாபாரம், சிலருக்கு எரிச்சல், சிலருக்கு ஆற்ற முடியாத பெரும் துயரம். அப்படித் துயரம் கொள்வோரின் கண்ணீர் உண்மையானது. ஆனால் அதனை நாமே துடைத்து விட வேண்டியிருக்கிற யதார்த்தத்தை நான் உணர்ந்து நீண்ட நாட்களாகிவிட்டன.இப்பொழுது தமிழ்நாட்டினையும் ஈழத்தினையும் எதுவெல்லாம் இணைக்கின்றன எனக் கேட்டால் எதுவுமல்ல, பாக்குநீரிணை ஒன்றைத் தவிர என்பதுவே எனது பதில்.</div>
<div style="background-color: white; color: #333333; font-family: Arial, Helvetica, Tahoma, sans-serif; font-size: 11px; line-height: 19px; padding: 0px 0px 15px; text-align: -webkit-auto;">
<em>நேர்காணல்: குமுதம் தீராநதி யூலை 2012</em><br />
<br /></div>
</div>
</div>டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-74468636079390669112012-02-27T11:23:00.010+05:302012-02-28T11:16:38.978+05:30பேராசிரியர் அ.மார்க்ஸ்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMJUfMRVfrxWCqhQ_DRRdEs1Rs4mlg29zCznoji9GHCLZWmlKWBWH_Z9I6pu1kaFUpHn_8ONRHGgSkgxMf9SwNSBbhSDBdxBBqzDOTgvAUnf-oM66bazkhUZIogHz9j6BmD4T__MErKaI/s1600/A.+Marx.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 232px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMJUfMRVfrxWCqhQ_DRRdEs1Rs4mlg29zCznoji9GHCLZWmlKWBWH_Z9I6pu1kaFUpHn_8ONRHGgSkgxMf9SwNSBbhSDBdxBBqzDOTgvAUnf-oM66bazkhUZIogHz9j6BmD4T__MErKaI/s320/A.+Marx.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5713690089631206946" /></a><br /><br />சென்னை வேளச்சேரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று போலீசாராலும். போலீசார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஊடகங்களாலும் சொல்லப்பட்டு அறைக்குள் இருந்த ஐந்து இளைஞர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். போலீசாரின் இக்கருத்துக்கள் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் மக்களிடம் நிலவுகின்றன. பெரும்பலான மக்கள் இவர்களை இப்படித்தான் கொல்ல வேண்டும் என்கிறார்கள். அதே சமையம் கணிசமான மக்களிடம் இது முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட படுகொலைதான் இது. என்கிற சந்தேகமும் நிலவுகிறது. சில ஊடகங்கள் இந்த படுகொலை தொடர்பாக பல் வேறு கேள்விகளையும் எழுப்ப போலீசார் பொது மக்களை தூண்டி விட்டு மக்கள் இக்கொலைகளை ஆதரிப்பது போன்று ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் திருவல்லிக்கேணி வணிகர் சங்கம் சார்பில் மெகா சைஸ் பிளெக்ஸ் போர்டில் பொது மக்களின் கையொப்பங்களை வாங்கிக் கொண்டார்கள். சென்னை நகரைக் காக்கும் போலீசைப் பாராட்டுவோம் என்ற அறிவிப்போடு போர்ட் வைக்கப்படுவதற்கு முன்னால் வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையன் சென்னை கமிஷனரைச் சந்தித்து கொள்ளையர்களை வீழ்த்தியதற்காக பாராட்டு தெரிவித்ததாக தினத்தந்தியில் படித்தேன். இவர்களுக்கெல்லாம் ஈழப் பிரச்சனையில் மனிதப் படுகொலை பற்றி பேசும் யோக்கியதை உண்டா? உயிர்க்கொலையை சட்ட விரோதப் படுகொலையை நியாயப்படுத்தும் அளவுக்கு காட்டுமிராண்டித்தனமான போக்கு வளர்ந்து விட்ட நிலையில், இந்த அக்கிரமங்களை தட்டிக் கேட்கவும் இதற்காக குரல் கொடுக்கவும் இன்று யார் உள்ளார்கள். <br /><br />பேராசிரியர் அ.மார்க்ஸ் தனியொரு மனிதராக நீண்டகாலமாக மனித உரிமை போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு பயங்கரவாதம், இந்துத்துவ வெறியர்களின் படுகொலைகள், சாதி வெறிப் படுகொலைகள் என்று வெகு சிலரே இம்மாதிரியான விவாகரங்களில் உண்மை நிலையை வெளிக்கொண்டு வருகிறார்கள். அதில் மிக மிக முக்கியமான மனிதராக பேராசிரியர் அ.மார்க்ஸ் உள்ளார். அவரும் நண்பர்களும் சேர்ந்து சென்னை வேளச்சேரி போலீஸ் கொலை தொடர்பாக விசாரிக்கச் சென்ற இடத்தில் போலீசாரின் ஏற்பாட்டின் பேரில் அங்கு குழுமியிருந்த சில சமூக விரோத சக்திகள் அ.மார்க்ஸையும் உடன் சென்ற நண்பர்களையும் அசிங்கமாக திட்டியிருக்கின்றனர். அவர்களின் மனித உரிமைப் பணிகளைச் செய்ய விடாமல் தடுத்திருக்கின்றனர். தினத்தந்தி நாளிதழ் அதை மனித உரிமையாளர்கள் விரட்டியடிப்பு என்ற செய்தியை படித்த போது பதறி விட்டேன். நிம்மதியற்ற ஒரு மன நிலையில் இதை எழுதுகிறேன். பொது சனம் என்பவர்களை வெறும் பொதுப்புத்தியோடு செயல்படுகிறவர்கள் என்று எளிமையாக இன்றைய காலச்சூழலில் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு சிறந்த உதாரணமாக டைம்ஸ் ஆப் இந்தியாவின் இன்றைய நாளிதழில் முதல் பக்க செய்தி வந்துள்ளது .<br /><br />பேராசிர்யர் அ.மார்க்ஸ் மீது அளவற்ற அன்பு கொண்டவன் நான் என் திருமணத்தின் போது சினிமா நடிகர்களையோ பிரபலங்களை அழைப்பதிலோ நான் ஆர்வம் காட்டவில்லை. என்னை நேசித்த எல்லா என் நண்பர்களும் என் உடன் இருந்தனர். பேராசிர்யர் அ.மார்க்ஸ் திருமணத்திற்கு வரவில்லை மறு நாள் வீட்டிற்கு வந்து நீலாவையும் என்னையும் பார்த்தார். பொன்னிலா பிறந்த போது வீட்டிற்கே வந்து பார்த்தார். இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் நான் நேசிக்கும் மனிதர்களில் ஒருவராக எப்போதும் மார்க்ஸ் இருக்கிறார் என்பதைச் சொல்வதற்காக, வெவ்வேறு விஷயங்களில் அவரோடு ஒத்த கருத்தோடு நின்ற போதும் , ஈழப் பிரச்சனை வந்த போது நான் அவரோடு முரண்பட்டேன். இப்போதும் சொல்கிறேன் என் அன்பிற்குரிய அ.மார்க்ஸ்சின் ஈழம் தொடர்பான கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை. என் கருத்துக்களை நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் எந்த தேசியவாதப் போக்கையும் ஆதரித்ததும் இல்லை. அதே சமையம் ஈழம் தொடர்பான கருத்துக்கள் மாறுவதற்காக சூழல் இந்த பிராந்தியத்தில் மாறி விடவும். இல்லை. ஆனால் இந்த முரண்பாடுகள் ஒரு கட்டத்தின் மனகச்சப்புகளாகி மன வேறுபாடுகளை உருவாக்கி விட்டது.<br /><br />ஆனாலும் அவர் ஈழம் தொடர்பாக மட்டும் வேலை செய்கிறவர் அல்ல,. நானும் பல் வேறு சமூகச் செயற்பாடுகளை என் அளவிற்கு மேற்கொள்கிறேன். கோவை முஸ்லீம் படுகொலைகள், பரமக்குடி படுகொலைகள், தாமிரபரணி படுகொலைகள், என கடந்த இருபது ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த எல்லா மனித உரிமை மீறல்களை வெளிக் கொண்டு வந்ததில் பேராசியரின் பங்கு அளப்பரியது. சாதியைத் தாண்டாத நமது எழுத்தாளர்களுக்கு மத்தியில் அ.மார்க்ஸ் ஒரு உண்மையான போராளி. அவரது குழுவினரை சுற்றி வளைத்து போலீசார் ஏற்பாட்டில் வந்தவர்கள் தடுத்திருந்தாலும். பொது மக்கள் தடுத்திருந்தாலும் அது கேடு கெட்ட செயலாகும். மனித உரிமைகள் கொல்லப்பட்ட காலச்சூழலுக்குள் வாழும் நிலையில் இது போன்ற அநாகரீமான உயிர்க் கொலையை ஆதரிக்கும் போக்கை ஏற்றுக்கொள்ள இயலாது. பேராசியரின் மனித உரிமைச் செயற்பாடுகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும். போலீஸ் கொலையை ஆதரிக்கும் மனப் போக்குகள் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்க வேண்டும்.<br /><br />இறுதியாக,<br /><br />ஒரு சில ஊடகங்களும், போலீசும் இணைந்து உருவாக்கும் பொதுப்புத்தி என்பது அவ்வளவு எளிமையானதல்ல என்று துவக்கத்தில் சொல்லியிருந்தேன். சென்னை பள்ளிக்கரணையில் பாலாஜி நகர் என்ற இடத்தில் உள்ள குடிசைப்பகுதியில் வட மாநில இளைஞரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு இளைஞர் நடந்து சென்றிருக்கிறார். அவரை சிலர் பாலோ பண்ணியிருக்கிறார்கள். சிலர் தன்னை பாலோ பண்ணுவதை அறிந்த அந்த அப்பாவி இளைஞர் ஒரு கட்டத்தில் வேகமாக நடக்கத் துவங்கி, ஓடத் துவங்கியிருக்கிறார். துரத்தியவர்கள் அதற்குள் 15 பேர் வரை சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து கட்டைகளால் தாக்கியிருக்கிறார்கள். அந்தப் பகுதி மக்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் இதை வேடிக்கை பார்த்து அடித்தவர்களை உற்சாகப்படுத்தி ஆர்பரிக்க உற்சாகமடைந்தவர்கள் அடித்து நொறுக்கியதில் அந்த இளைஞர் நினைவிழந்திருக்கிறார், அந்தப் பகுதியில் சென்ற போலீசார் இதை வேடிக்கை பார்த்து விட்டுச் சென்று பின்னர் வந்து அந்த இளைஞரை வேனில் வாரிப் போட்டுச் சென்றுள்ளார்கள். தோற்றத்தில் வடமாநிலத்தவராக இருந்ததாலும் கொள்ளையர் போல இருந்ததாலும் அவரை இப்படித்தாக்கியதாக தாக்கியவர்கள் சொல்கிறார்கள். இதைப் படித்த போது அழுது விட்டேன். போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞர் ஆந்திராவைச் சார்ந்தவர் என்றும் சரிவர பேசக் கூட தெரியாத ஒரு அப்பாவியை இவர்கள் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். கடைசியில் அவரது கைரேகையை பதிவு செய்த போலீசார் அடித்தவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அந்த இளைஞரை விடுவித்திருக்கிறார்கள். என்ன ஒரு கொடுமை சுமார் மூன்று லட்சம் ஏழை வடமாநிலத் தொழிலாளர்கள்தான் இன்றைய தமிழக கேடுகளுக்குக் காரணமா? உங்கள் வீரத்தை இங்குள்ள ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் மார்வாடி பனியாவிடம் காட்ட முடியுமா? வலுவற்ற ஒரு ஏழையை பிடித்து கும்பலாக சேர்த்து அடித்து உதைக்கின்றீர்களே.. இதைச் செய்யச் சொன்னது யார்?<br /><br />நாம் வாழும் சமூகம் வெகு வேகமாக பாசிச மயப்படுகிறது. யூதர்களுக்கு எதிரான இனப்படுகொலையைச் செய்த ஹிட்லருக்கு இளம் வயதில் மேன்மை மிக்க தன் இனத்தின் வறுமைக்கு காரணம் யூதர்கள் என்ற போதை ஏற்றப்பட்டிருந்ததாக வாசித்திருந்தேன். 1930 களில் உருவாக கிரேட் டிப்ரஷன் என்னும் பொருளாத நெருக்கடியினால் இலங்கையின் தேயிலைத் தொழில் வீழ்ச்சியடைய வேலையிழந்த சிங்கள தொழிலாளர்களுக்கு தேசியவாத போதை ஊட்டப்பட்டது. சிங்களர்களின் இந்த நிலைக்கு மலையாளிகளே காரணம் என்று கற்பிக்கப்பட்டது விளைவு சுமார் 30,000 மலையாள வீட்டுப்பணியாளர்கள் இலங்கையிலிருந்து சிங்களர்களால் துரத்தப்பட்டார்கள். இலங்கை இனவரலாற்றில் முதல் துரத்தல் இது என்றுதான் நினைக்கிறேன், மலையாளிகள், இஸ்லாமியர்கள், பின்னர் தமிழர்கள் என்றுதான் அந்த இனவாத நெருப்பு வளர்ந்து சென்றது வரலாறு.<br /><br />தமிழகத்தில் உள்ள மின்வெட்டுக்கு கூடங்குளம் அணு உலை திறக்கப்படாததே காரணம் என்று சொல்லும் ஆளும் வர்க்கம். மக்களின் வேலையிழப்பு, கூலியின்மை, வறுமை, பசி உள்ளிட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் என் கவுண்டர்களை பரிசளித்து போதையில் ஆழ்த்துகிறது. இந்த போதை பெரும் பிரசாரமாக முன்னெடுக்கப்படும் போது ‘’ நாடு நல்லா இருக்க ஒரு கிராமம் அழிவதில் தவறென்ன” என்று பொது ஜனத்தை சிந்திக்க தூண்டுகிறது. நாம் தொடர்ந்து இடைவிடாது பொதுப் புத்திக்கு எதிராக அதன் மனங்களில் படிந்துள்ள ரத்த வாடைக்கு எதிராக பேசிக் கொண்டேயிருக்க வேண்டும். அந்த வகையில் தான் பேராசிரியர் அ.மார்க்ஸின் பணிகளை நான் பாராட்டுகிறேன். என் அன்பை அந்த மனித உரிமைக் குழுவினருக்குத் தெரிவிக்கின்றேன். நண்பர்களே குரல்கள் மங்கி தேசியவாத வெறி மேலெழுந்து வரும் நிலையில் நாளை நாமும் தாக்கப்படலாம் .டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-44475755725913701682012-02-24T10:19:00.007+05:302012-02-25T10:46:25.348+05:30"its a simple ethics, people expect" -commissioner Tripathi -டி.அருள் எழிலன்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAZxzkui2qNxIBXkP2aHXE4pXLrHocgwgtRvFz50r71lfYCh-aSgFVN0Z2CxuJvW_LrCewl2bPQo8zQQZHEgxYNZYuFGLU7g1DSYmRpDvC37hnN34xV0G2wd8567feLYj-R7GZsY0kphg/s1600/423286_156149754504150_100003273786955_198580_1759092794_n.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 391px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAZxzkui2qNxIBXkP2aHXE4pXLrHocgwgtRvFz50r71lfYCh-aSgFVN0Z2CxuJvW_LrCewl2bPQo8zQQZHEgxYNZYuFGLU7g1DSYmRpDvC37hnN34xV0G2wd8567feLYj-R7GZsY0kphg/s400/423286_156149754504150_100003273786955_198580_1759092794_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5712560039983431634" /></a><br /><br />தன் குழந்தை திருடனாகவோ, கொலைகாரராகவோ, ரௌடியாகவோ , அல்லது சமூகத்திற்கு பயனுள்ள மனிதனாகவோ உருவாவான் என்பதெல்லாம் குழந்தை பிறக்கும் போது தெரிவதில்லை. அழகாக பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் தாங்கள் விரும்பிய பெயர்களை இடுகிறார்கள். நாளை அவர்கள் கொலை வழக்கு ஒன்றிலோ, குற்றச் செயல்களிலோ ஈடுபட்டு போலீசாரால் கை விலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லும் போது கூட பெற்றவர்கள் பிள்ளைகளை மறுதலித்து விடுவதில்லை. திருடனே என்றாலும் அவன் குழந்தைதான்.<br /><br />சென்னையில் இரண்டு வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசாரால் சொல்லப்பட்டு எவ்வித சாட்சியங்களுமின்றி சந்திரிகா ரே, ஹரீஸ் குமார், வினய் பிரசாத், வினோத்குமார், அபய் குமார் ஆகிய ஐந்து திருமணமாகாத இளைஞர்கள் அநியாயமான முறையில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் அபய்குமார் ஒருவர் மேற்கு வங்கத்தைச் சார்ந்தவர் என்றும் ஏனைய நால்வரும் பீஹார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் நடைபெறும் கொலை கொள்ளைகளுக்கு வட மாநிலத்தவர்தான் காரணம் என்று சொல்கிறது ஊடகங்களும் போலீசும். ஒரு கொள்ளை நடந்தால் அதில் விசாரிக்கப்படுகிறவர்கள் வட மாநில ஏழைத் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள். திருப்பூரில் ஜாய் அலுக்காஸ் நகைக்கடையில் 14 கோடி ரூபாய் பெருமான முள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதில் நூற்றுக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்களை விசாரித்துக் கொண்டிருக்கிறது போலீஸ். தமிழகத்தில் நடைபெறும் கட்டுமானப்பணிகளுக்கு மிகக் குறைந்த கூலி கொடுக்கப்பட்டு தமிழகத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இந்த நவீன கொத்தடிமைகள். இது போன்ற வட மாநில மாணவர்கள். நேபாளிகள், என எண்ணற்றவர்கள் தமிழகத்தில் வந்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். காலம் காலமாக ஏழை மக்களின் ரத்தத்தைச் சுரண்டிப் பிழைத்து வரும் பனியா, மார்வாடிகளும் இவர்களும் ஒன்றல்ல அவர்கள் வேறு இவர்கள் வேறு.<br /><br />ஆனால் இந்த என் கவுண்டர்களை ஆதரிக்கும் சில காட்சி ஊடகங்கள் வட மாநிலத் தொழிலாளர்களை கண்காணிக்க வேண்டும் என்று சொல்கிறது. இக்கொலைகள் பற்றி ஊடகங்களுக்குப் பேசிய சென்னை கமிஷனர் திரிபாதி // ஜன்னல் வழியாக அவர்கள் சுட்டார்கள் பாதுகாப்புக்காக நாங்கள் சுட்டோம்// என்றும் இன்னொரு கேள்விக்கு "its a simple ethics, people expert" -commissioner Tripathi அதாவது மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்திருக்கிறோம் என்கிறார் கமிஷனர் திரிபாதி<br /><br />பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தீர்ப்பு வழங்கிய நீதிபதி இந்திய மக்களின் கூட்டு மனச்சாட்சிக்காக இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறேன் என்றார். அந்த தீர்ப்பை வழங்கக் கோரி டில்லி மத்யமரும், பிஜேபி, இந்துத்துவ அமைப்புகளும் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தின. ஆனால் தமிழகத்தில் நடைபெறும் கொள்ளைகள் பெரும்பலான மக்களிடம் அச்சத்தைத் தோற்று வித்ததே தவிற குற்றவாளிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்று எந்தமக்களும் உங்களிடம் கோரவில்லை. ஆனால் மின்வெட்டுக்கு எதிராக, விலைவாசி உயர்வுக்கு எதிராக, அணு உலைக்கு எதிராக, இழந்து விட்ட தங்களின் நிலங்களை மீட்க, நீர் உரிமைக்காக, உழைப்புக்காக, கூலி உயர்வுக்காக, உற்பத்தி செய்த உணவின் நல்ல விலைக்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதிருப்தியை மறைக்க இந்த ஐந்து பேரின் ரத்தத்தையும் மக்களுக்கு பரிசாகக் கொடுத்திருக்கிறது தமிழக போலீஸ்.<br /><br /> மிக நேர்மையாகச் சொன்னால் தொண்ணூறு சத வீத வழக்குகளில் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவதில்லை. கண்டு பிடிக்கப்படுகிறவர்கள் சட்ட நடவடிக்கை மூலம் தண்டிக்கப்படுவதில்லை. காரணம் போலீஸ், ரௌடி, அரசியல்வாதிகளின் கூட்டுடனேயே பெரும்பலான குற்றங்கள் நடைபெறுகின்றன. அரசியல் கிரிமினல் மயமாகி விட்டது என்று வோரா கமிஷன் குற்றம் சுமத்தியது. கிட்டத்தட்ட எல்லா அரசியல் வாதிகள் மீதும் அதிகாரிகள் மீதும் ஊழல் புகார்கள் உள்ளன. பத்து ரூபாய் பெருமானம் உள்ள ஒரு அரசு காரியத்திற்கு ஐம்பது ரூபாய் வரை லஞ்சம் அழுதால் மட்டுமே சாத்தியமாகும் அரசு இயந்திரம். <br />எந்த அரசியல்வாதி யோக்கியம் சொல்லுங்கள் போலீசின் துப்பாக்கிகள் இவர்களுக்கு எதிராகத் திரும்புமா? நவீன வசதிகள் பெருகிவிட்ட இந்த காலத்தில் இவர்கள் ஐந்து பேரையும் உயிரோடு போலீசாரால் பிடித்திருக்க முடியும். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் மனைவியின் தம்பி முருகன் என்பவர் வெளியில் கொடியில் காய்ந்து கொண்டிருந்த சட்டைத் துணியை கண்டு சந்தேகமடைந்து கிண்டி போலீசில் தொலைபேசி மூலம் புகார் கொடுத்திருக்கிறார். அவர்தான் தன் அக்காளிடம் அவர்களுக்கு அட்வான்சை திருப்பிக் கொடுக்காதே என்றும் சொல்லியிருக்கிறார். அவர் கொடுத்த தகவலின் பெயரில்தான் போலிசார் வந்து அண்டை வீட்டுக்காரர்களுக்குக் கூடத் தெரியாமல் சுட்டுக் கொன்று விட்டு கலர் கலராக கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இது போலீசும் , ஊடகங்களும், முதலாளிகளும் மக்கள் மீது சேர்ந்து நடத்துகிற யுத்தம். இன்று இவர்களைக் கொன்று நமக்கு வேடிக்கை காட்டுகிறார்கள். நாளை நம்மைக் கொன்று இன்னொரு கூட்டத்திற்கு வேடிக்கை காட்டுவார்கள்.<br /> <a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgy1HU4_8WdrlgGZ5MpwpHIj6QW9spwCtqwqiIsxpv6EsHhyWTPW5eLqsPAZN37gaxjZhPxgAb1LWn7RqoUusCjQa26wK8Ds9dqKTiOCguzWAMW0Kw8ckxJup0zEjVX9Sz674bMOQ8OqYc/s1600/423334_379681392061548_100000590723505_1464503_445460363_n.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 225px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgy1HU4_8WdrlgGZ5MpwpHIj6QW9spwCtqwqiIsxpv6EsHhyWTPW5eLqsPAZN37gaxjZhPxgAb1LWn7RqoUusCjQa26wK8Ds9dqKTiOCguzWAMW0Kw8ckxJup0zEjVX9Sz674bMOQ8OqYc/s320/423334_379681392061548_100000590723505_1464503_445460363_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5712560492658792738" /></a><br /><br />இவர்கள்தான் அந்த கொள்ளையர்கள் என்பதர்கு எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. ஐந்து பேரில் வினோத்குமார் என்பவர்தான் அந்த வீடியோவில் உள்ளவர் என்று போலீஸ் சொல்கிறது. அவர் போட்டிருந்த சட்டை ரத்தக் கரைகளோடு அங்கு கிடக்கிறது. ஆனால் ஏனைய நால்வரும் யார் அவர்களும் கொள்ளையர்கள் என்ற முடிவுக்கு போலீஸ் எப்படி வந்தது. உண்மையில் அவர்கள் நிராபராதிகளாக இருந்தால் போன உயிரை திரிபாதி திருப்பிக் கொடுப்பரா? அல்லது அந்த வீட்டு உரிமையாளர்தான் திருப்பிக் கொடுப்பாரா? கொல்லப்பட்டது உயிர்களப்பா.... ஒரு வேளை நாளை அதில் கொள்ளையடித்த அந்த இளைஞர் நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். கொள்ளையடித்தது தவறு என்று மனந்திருந்தி இனி என் வாழ்நாளில் மீதி காலங்களை நான் மக்களுக்காக வாழ்கிறேன் என்று மக்களுக்காக உழைக்கும் ஒரு மனிதனாக அந்த வினோத் குமார் மாற வாய்ப்பு இல்லையா? அந்த உரிமையை அவருக்கு வழங்க மறுத்து துப்பாக்கியைத் தூக்கி இப்படிச் சுட்டுக் கொன்றிருக்கீற்களே காவல்துறையினரே உங்கள் வாழ்வில் என்றாவது ஒரு நாள் மக்களுக்கு நீங்கள் நன்மை செய்ததுண்டா? வாழும் உரிமையை மறுக்கும் உரிமையை சென்னை கமிஷனர் திரிபாதிக்கு வழங்கியவர்கள் யார்.<br /><br />இப்போது அந்த பிணங்கள் அநாதைப் பிணங்காளாக ராயப்பேட்டை மருத்துவமனையில் உள்ளது. தன் பிள்ளைகளின் பிணங்களை வாங்கச் சென்றால் போலீசாரின் துன்புறுத்தலுக்கு ஆளாவோம் என்று பயந்து கூட அந்த பெற்றவர்கள் வராமல் இருக்கலாம்.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-7159905324242407222012-02-23T12:34:00.000+05:302012-02-23T12:35:15.465+05:30போலிஸ் கொலைகளும் பொதுப் புத்தியும்....<span style="font-weight:bold;">போலீசாரை நோக்கி சுடத் தொடங்கினார்களாம். அதில் ஒரு குண்டு அதிகாரி மீது பாய்ந்ததாம். ஆனால் குண்டு அவர் உடலுக்குள் இல்லையாம், அதனால் கட்டுப் போட்டிருக்கிறார்களாம், பொது மக்களை சுடுவோம் ( அதாவது கொள்ளையர்களை சுற்றி வளைத்தது இரவு ஒரு மணி, அதுவும் யாருக்கும் தெரியாமல்) என்று கொள்ளையர்கள் மிரட்ட கூடுதல் ஏற்பாடுகளோடு முன்னேறிய போலீசார் சரணடையச் சொன்னார்களாம். பதிலுக்கு அவர்கள் சுட போலீசார் ஐந்து பேரையும் சுட்டுக் கொன்றார்களாம்.... இது நேரடியாக போலீசார் சொன்ன தகவல் இல்லை. அறிவிக்கப்படாத போலீசாக செயல்படும் சில காட்சி ஊடகங்கள் சொன்ன தகவல்கள். </span><br /><br />கடந்த பத்து வருடங்களாக தமிழகமெங்கிலும் கொலை, கொள்ளை, வழிப்பறி திருட்டு, நகைக்கடை கொள்ளை, வங்கிக் கொள்ளை என பல குற்றங்கள் சிறியதும் பெரியதுமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் கொண்டு குவிக்கப்பட்ட தனியார் மூலதனங்கள் அதற்கு முன் நிபந்தனையாக மக்களின் நிலங்களை அபகரித்தது, பாரம்பரீய தொழில்களிலிருந்து மக்களை அந்நியப்படுத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு கூலிக்கு வேலை செய்யும் வாட்ச் மேன்களாக மாற்றியது,வறுமை, என மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 3,000- க்கும் மேல் ஆனால் இவைகள் வெறும் குடும்பப் பிரச்சனையாக பதியப்படுகின்றன. ஆனால் கடன் தொல்லைதான் இந்த மரணங்களுக்குக் காரணம். <br />கேடு கெட்ட பொருளாதார சுரண்டலுக்கு மக்கள் ஆட்படும் போது கொலையும் கொள்ளையும் மிகச் சாதாரணமான ஒன்றாக மாறும். ஆக மொத்தம் தனியார் தாராள மயத்தின் விளையாய் நாடு முன்னேறியிருப்பதன் கண்கூடான காட்சிகளே இந்த கொள்ளைகள். இதில் பல் வேறு விஷயங்கள் மறைந்துள்ளன. அவர்கள் பொறியியல் படித்த மாணவர்கள் என்பது உண்மையாக இருக்கும் என்றால் அவர்களை வெறும் கொள்ளையர்களாக மட்டுமே புரிந்து கொள்ள நான் தயாரில்லை. <br /><br />இந்த குற்றவாளிகளை உயிரோடு பிடிப்பதை போலீசார் விரும்பாத ஒரு நிலை இதில் தெரிகிறது. சமீபகாலமாக உங்களின் பிரச்சனைகளுக்கு நீங்களே காரணம் என்று மக்கள் மீதே பிரச்சனைகளுக்கான பழியை அரசு போடுவதை நாம் கண்டு வருகிறோம். மின் வெட்டா கூடங்குளத்தை திற, பெரும்பலான பொது மக்களும் மந்தைகளைப் போல ஊடகங்கள் சொல்வதையும் போலீசார் வாந்தி எடுப்பதைப் போன்ற மந்தைகளாக உருவாகி விட்டன. கோவையில் மோகன்ராஜை சுட்டுக் கொன்ற போலீசார் ஊடகங்களில் அவன் பெண் குழந்தையை பாலியல் வன்முறை செய்ததாக செய்திகளை கசிய விட்டு பின்னர் மோகன்ராஜை சுட்டுக் கொன்றனர். மக்களோ மோகன்ராஜின் கொலை வெடிக் கொளுத்தி கொண்டாடினார்கள். ஆனால் மோகன்ராஜால் கொல்லப்பட்ட குழந்தைகள் பாலியல் வன்முறைக்குள்ளானதற்கான சான்றுகள் எதுவும் இல்லை.<br /> <br />இதுதான் போலீஸ் புத்தி இப்போதும் இந்தக் குற்றத்தின் முழுப் பின்னணியும் போலீசார் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்றே தெரிகிறது, போலீசார் என்பவர் தீர்ப்பு வழங்குகிறவர்கள் அல்ல நீதிமன்றங்களே அந்த உரிமையைப் பெற்றுள்ளன. போலீசார் இங்கே தங்கள் மீது கவிந்துள்ள மக்கள் தங்கள் மீது கொண்டுள்ள வெறுப்பை போக்கிக் கொள்ள இம்மாதிரி கொலைகளை நடத்திக் கொண்டே செல்கின்றனர். கருணாநிதி ஆட்சியிலும் சகட்டு மேனிக்கு என்கவுண்டர்கள் நடந்தன. இன்றைக்கு ஜெயலலிதா சந்திக்கும் நெருக்கடிகளை பொது மக்கள் புத்தியில் மறக்கடிக்கும் வல்லமை இந்த என் கவுண்டர்களுக்கு உண்டு.<br /><br />“ இவனை எல்லாம் கேஸ் கோர்ட் என்று அழைத்துச் சென்று அரசு பணத்தை வீணடிப்பது வேஸ்ட்”<br /><br />‘இவனுங்களெல்லாம் இதுதாம்பா சரியான பனிஸ்மெண்ட்”<br /><br />’’கொன்னது சரிதான் தப்பே கிடையாது”<br /> <br />பொதுவாக போலீஸ் கொலைகளைக் கொண்டாடும் பொது மக்கள் குறிப்பாக மத்யமர் மன நிலைதான் இது. பெரும்பாலான பத்திரிகைத் துறை சார்ந்தவர்கள். தொலைக்காட்சியில் நியூஸ் ரிப்போர்ட்டர்சின் பார்வைகள் கூட இப்படித்தான் இருக்கின்றன. இங்கே அவர் ஒரு ஊட்கவியலாளர் என்பதை மறந்து தேசப்பற்றாளானாக அவரே தன்னை ஒரு போலீசாக நினைத்துக் கொண்டு செய்திகளை போலீசாரிடம் பெற்று உற்சாகமாக வெளியிடுகிறார். இந்த ஐந்து பேர் என் கவுண்டரில் தொடங்கி தமிரபரணி படுகொலைகள் 19 பேர், பரமக்குடி படுகொலை 7 பேர் என கொத்துக் கொத்தாக போலீஸ் கொடுமைகளுக்கு மக்கள் சாகும் போது கூட பொதுப்புத்தி கேடு கெட்ட போலீஸ் கொலைகளை கொண்டாடுவதாகவே இருக்கிறது. <br /><br /> போலீஸ் கொலைகளை கொண்டாடும் மனம் கொடூரமானது அந்த மனோபாவம் எந்த ஒரு கொலைகளிலும் நமக்கு இருக்கக் கூடாது குற்றங்கள் அதிகரிக்க காரணமான சமூகக் காரணிகள் களையப்பட வேண்டும், என் கவுன்டர் எனப்படும் போலீஸ் கொலைகளை மக்கள் வெடி வெடித்து எப்போது கொண்டாடுகிறார்களோ அப்போதே அந்த துப்பாக்கி அவர்களுக்கு எதிராகவும் திரும்பி குறி பார்த்திருக்கிறது என்பதை அறியாமல் அவர்கள் வெடிக் கொளுத்துகிறார்கள். பார்ப்போம் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து என்கவுண்டர்கள் என்பது இதே வடிவங்களோடு தொடராது என்றே நினைக்கிறேன்.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-71810026218655886032012-02-17T22:31:00.006+05:302012-02-18T09:20:33.523+05:30சந்திராவின் அழகம்மா சிறுகதை தொகுப்பு குறித்து.........<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfM8NCc-q3aFNaAdRGJpp-uB2vZuSPWapK0Edikfy9CSCCFdlBR51uKErxq9XPVg5lq5L7o_C4DY9FywO2v-vXMW39hFeprSdWNUCkE0KzQCg2G39e1o0Gzdu9ekR5Xo3n8aQXjTZbwbs/s1600/-+low+res.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 314px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgfM8NCc-q3aFNaAdRGJpp-uB2vZuSPWapK0Edikfy9CSCCFdlBR51uKErxq9XPVg5lq5L7o_C4DY9FywO2v-vXMW39hFeprSdWNUCkE0KzQCg2G39e1o0Gzdu9ekR5Xo3n8aQXjTZbwbs/s400/-+low+res.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5710151891725323874" /></a><br />பூமியோடு வானம் தொடுவது போன்ற தோற்றத்திலிருந்தாலும் அது எங்குமே ஒன்றை ஒன்று தொடுவதில்லை. எல்லா மூலைகளிலும் அது தொடாத வானம்தான். மனிதர்களும் அப்படித்தான் மேன்மையான உறவுகள் என்று சொல்லப்படும் எல்லா உறவுகளுமே ஒரு கட்டத்தில் தன் சமூகத்திலிரிந்து தன்னை தற்காத்துக் கொள்ளப் போராடுகின்றன. மோதி மடிகின்றன. பின்னர் பழி வாங்குகின்றன, ஆற்றாமையில் வாழ்வை சபித்துச் செல்கின்றன, எளிதாக காதல் வயப்படுகின்றன, ஒருவர் மீதான கோபத்தை இன்னொரு வலிமையற்றவர் மீது ஏவுகின்றன. இப்படித்தான் வாழ்வை நாம் கடந்து கொண்டிருக்கின்றோம்.<br /><br />சமீபத்தில் வெளிவந்த சந்திராவின் அழகம்மா சிறுகதைத் தொகுப்பை வாசித்து முடித்த போது எனக்கு ஏற்பட்ட உணர்வுகள் இவைகள்தான் . சந்திராவை எனக்கு ஏற்கனவே அறிமுகம் உண்டு. நண்பராக அல்ல சக ஊழியராக. நான் விகடன் ஆசிரியர் குழுவில் இருந்த போது அவர் அவள் விகடன் ஆசிரியர் குழுவில் இருந்தார் . இதைத்தாண்டி அவரைப் பற்றிய அறிமுகம் எதுவுமே எனக்கு இல்லை.ஆனால் அவர் ஒரு சிறந்த எழுத்தாள என்பதை அழகம்மாவை வாசித்து முடித்த போது தோன்றியது.<br /> <br />ஒரு கதையோடு என்னை நான் ஈடுபடுத்திக் கொள்வதென்பது. வாசிக்கிற கதையில் நான் என்னவாக இருக்கிறேன். அது எப்படி என்னை உள்வாங்கிக் கொள்கிறது என்பதைப் பொறுத்த விஷயம்தான்.எதிர்காலம் என்ற ஒன்றை இட்டுக் கட்டி கடந்த காலத்தில் கொலை செய்யப்பட்டவர்கள் நாம் . ஆகவே இறந்து போன அந்தக் காலத்தை நினைவில் மீட்டிக் கொண்டிருப்பதன் மூலமே நமது உலகை நாம் வசீகரப்படுத்திக் கொள்கிறோம். சிறந்த எதிர்காலம் என்ற ஒன்றுக்காகவே நமது குழந்தைகளின் பால்யத்தை நாமே இன்று பலியிடுகிறோம். இந்தக் கதைகளில் வரும் மனிதர்களும் எதிர்காலம் பற்றிய கனவுகளில் வாழ்வை தொலைத்தவர்களாக இருக்கிறார்கள். அல்லது தொலைந்து போன ஒன்றை தேடிக் கொண்டிருப்பவர்களாக இருக்கிறார்கள். <br /><br />அவரது அழகம்மா சிறுகதைத் தொகுப்பில் மொத்தமாக எட்டு கதைகள் உள்ளன. அதென்ன எட்டே எட்டு கதைகள் ஒன்பதாகவோ, பத்தாகவோ எழுதினால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறார்கள். இதிலுள்ள எட்டு கதைகளில் அறைக்குள் புகுந்த தனிமை, தொலைவதுதான் புனிதம், கட் சொன்ன பிறகும் கேமிரா ஓடிக்கொண்டிருக்கிறது என்ற மூன்று கதைகளைத் தவிற ஏனைய ஐந்து கதைகளும் நமக்குள் ஒரு நிலப்பரப்பை மனதில் நிறுத்துகிறது. அது மலையடிவார நிலப்பகுதியாக என்னுள் விரிந்து செல்கிறது. நிலத்தை விட கொஞ்சம் மேடான பகுதியாக அது ஒரு சித்திரத்தை நமக்குள் உருவாக்குகிறது. பொதுவாக தஞ்சை , மதுரை போன்ற பகுதிகளில் விவசாய நிலங்களை காடு, காட்டு வேலை என்பார்கள். எங்கள் ஊரில் கன்னியாகுமரி பகுதியில் வயலை வயல் என்பார்கள், கடலை கடல் என்பார்கள், சில இடங்களில் வயக்காடு என்பார்கள். ஆனால் எனக்கு காடு என்பது காடுதான்..... ஒன்றிலோ மரங்கள் அடர்ந்த காடு அல்லது கருவேலமரங்கள் வளர்ந்த காடு இதுதான் என் மனதின் சித்திரம். ஆனால் சந்திராவின் சிறுகதைகளிலும் வரும் நிலம் வெறும் காடல்ல, அதுவே அப்பகுதி விவசாயிகளுக்கு வாழ்வு தரும் நஞ்சை, புஞ்சை நிலமாகவும் இருக்கிறது. அதானால்தான் ஒரே நேரத்தில் காடாகவும், விவசாயக நிலமாகவும் இருக்கும் அந்த பாரம்பரீய வதிவிடத்தை காடு என்று அழைக்கிறார்கள் போல. இக்கதைகளைப் படிக்கும் போது மலையடிவார கிராமங்கள் , படுகை போன்ற வீட்டு அமைப்புகள், நினைவுக்கு வந்து போகிறது. ஒரு கதைக்கு அதன் நிலப்பரப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக நான் நினைக்கிறேன். ஏனெனில் எழுத்து என்பது சித்திரத்தை உருவாக்கினால் மட்டுமே அது முழுமையான ஒன்றாக நான் நினைகிறேன். <br /><br /><span style="font-weight:bold;">இனி கதைகளைப் பார்ப்போம்,<br /><br />வெகு நாட்களுக்குப் பின்னான மழை </span><br /><br />என்ற கதையில் , அவன் வெறுமையோடும், குற்றத்தோடும் ஊர் திரும்புவதாக துவங்குகிறார் சந்திரா. அந்த அவன் என்பவன் பஞ்சகால மொன்றில் முறுக்குச் சுட ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டவன். வாழ்க்கையின் திசைபோக்கில் சூறையாடப்பட்டு இப்போது சித்தியைக் கொன்று விட்டு கிழவின் முன்னால் நிற்கிறான் <span style="font-weight:bold;">‘’ எல்லாமே மாறிப்போச்சுடா நீயும் ஆம்பிளையா வந்து நிக்கிற.... உங்க அம்மா மகளை எல்லாம் கட்டிக்குடுத்திட்டாங்கடா....</span> என்ற கிழவி அவனது குடும்பம் சீரழிந்து போன அந்த சின்ன வரலாற்றைச் சொல்லி விட்டு அவனுக்கு சோறு போடுகிறார். தனது பால்யம் சித்தியால் சூறையாடப்பட்டது, தங்கைகள் தூக்கு மாட்டிக் கொண்டது, அப்பாவும் இறந்து போனது என பழிவாங்கும் வெறியோடு அவன் இப்போது சித்தியைக் கொன்று விட்டான்.கஞ்சா பயிரிட்டும் , காடு விளைந்தும் ஊர் வசதி பெற்று விட ஆம்பிளை என்பது இங்கே பரிதாபத்திற்குரியதாகி நிற்கிறது.அவன் தன் இளமைக்காலத்தை இதோ ஒரு கொலைக்குற்றவாளியாக சிறையில் கழிக்கப்போகிறான். அவன் கைது செய்யப்படுவதற்கு முன்னால் அந்த மழை பெய்யத் துவங்குகிறது என்று அதை காட்சிப் படுத்துகிறார் சிறுகதையாசிரியர்.<br /><br /><span style="font-weight:bold;">கட் சொன்ன பின்னும் கேமிரா ஓடிக் கொண்டிருக்கிறது.</span> <br /><br />இச்சிறுகதைத் தொகுப்பில் மிகச் சிறந்த கதைகளில் இதுவும் ஒன்று. அதில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தால் அதுவே பத்து சினிமாவுக்காக வாசலைத் திறக்கும், இன்றைக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருக்கும் 99.9 % பேரும் அரவமற்ற ஒரு அதிகாலையில் ஹீரோயினாகும் கனவோடு வந்தவர்களாகவே இருப்பார்கள். பீல்டிங்கில் நடக்க, கும்பலோடு சேர்ந்து நிற்க, திருவிழாக்கூட்டத்தில் கும்பல் காட்ட, கலவரக்காலத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஓட, என்று இவர்கள் பயன்படுவார்கள். மேக்கப்மேனில் தொடங்கி காஸ்ட்யூமர், ஜெனரேட்டர் ஆப்பரேட்டர் வரை இந்த பெண்களுக்கு கிடைக்கும் மரியாதை கொடுமையானது. அவர்கள் சினிமாவில் கைவிடப்பட்ட மனிதர்களே. ஜுனியர் ஆர்ட்டிஸ்டை விட கொஞ்சம் மேம்பட்டவர்கள் ரிச் கேர்ளஸ், பெரும்பாலும் ஜீன்ஸ் அணிந்திருப்பார்கள். அதிலும் பல வகை பெங்களூர் ரிச் கேர்ள்ஸ், மும்பை ரிச் கேர்ள்ஸ், என்று வரவழைப்பார்கள் அதுக்கு தனி ரேட், சென்னை கல்லூரி மாணவிகளும் ரிச் கேர்ள்சாக வருவார்கள். ஆனால் முகம் தெரிகிற மாதிரி ஷாட்டுகளில் மட்டுமே நடிப்பார்கள். டயலாக் பேசி நடிக்க வேண்டிய ஷாட்டுகளில் நடிக்க மாட்டார்கள். சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற கனவு இம்மாதிரி பெண்களுக்கு பெரும்பாலும் இருக்காது. ஒன்லி பாக்கெட் மணி. இவ்வகை ரிச் கேர்ள்சை விட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வரும் பெண்களின் நிலை பரிதாபகரமான கதைகளால் நிரம்பியிருக்கும். அப்படியோரு பெண்ணின் கதையை பதிவு செய்திருக்கிறார் சந்திரா. இத்தொகுப்பில் மிகவும் தரமான கதைகளில் இதுவும் ஒன்று. இக்கதையை படித்துக் கொண்டிருந்த போது மாதுர் பண்டார்கரின் ‘சாந்தினி பார் ‘ சினிமாதான் எனக்கு நினைவுக்கு வந்தது. <br /><br /><span style="font-weight:bold;">தொலைவதுதான் புனிதம்.</span><br /><br /> சினிமா ஒரு மாயப்புல்லாங்குழல் இனம் புரியாத அந்த இசை மயக்கம் இன்னும் நான் உள்ளிட்ட எல்லா நண்பர்களையுமே அலைக் கழித்துக் கொண்டிருக்கிறது. சென்னை வந்த புதிதில் எங்கு கிளம்பினாலும் பளிச்சென்று கிளம்புவோம். மணி ரதனம் சார் அலுவலகத்தில் அப்ளிகேஷன் கொடுக்க போன போது அங்கே ரிஷப்சனிஷ்டாக இருந்தவர் உமா ஷக்தி. நான் பயோடேட்டாவை கொடுத்ததும் அவரிடம்தான். அப்புறம்தான் ஒரு நண்பன் சொன்னான் ஏண்டா நீயே மணி ரத்னம் மாதிரி போகக் கூடாது டா... கொஞ்சம் தாடி வெச்சுட்டு பஞ்சகால பரதேசி மாதிரி போய் பி,சி சாரைப் பாரு அவரோட வீட்டு வாசல்ல போய் நிண்ணு என்றான். நான் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவரது இல்லத்தின் வாசலில் அதிகாலையே போய் நிற்பேன். ஒரு நாள் ஆபூர்வமாக அவரைப் பார்த்ததும் அழைத்துப் பேசியதெல்லாம் தனிக்கதை... உலகசினிமா விழாக்களில் அந்த இயக்குநரை அடிக்கடிப் பார்ப்பேன். அவர் படம் இயக்குகிறார் என்றவுடன் அவரைப் போய் பார்த்தேன். என்னை அமர வைத்து வறுத்தெடுத்து விட்டார். // நீங்களெல்லாம் பசி தாங்க மாட்டீங்க// என்று அட்வைஸ் பண்ணினார். எனக்கு சிரிப்பாகவும் அருவறுப்பாகவும் இருந்தது. கிட்டத்தட்ட மூன்றாயிரம் உதவி இயக்குநர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளுக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். வென்றவர்கள் மட்டுமே அவர்களின் அவமானங்களை பதிவு செய்திருக்கிறார்கள். வாய்ப்பில்லாமல் நிராகரிக்கப்பட்ட பலரின் கதைகள் இதுவரை தமிழில் பதிவாக வில்லை. வாய்ப்புகளைத் தேடும் உதவி இயக்குநர்களுள் அதில் சந்திராவும் ஒருவர் . இந்த மூன்றாயிரம் பேருக்கும் சேர்த்து மிக சுவராஸ்யமாக இக்கதையைச் சொல்லிச் செல்கிறார் சந்திரா...<br /><br /><span style="font-weight:bold;"><br />மஞ்சனாத்தி மாலை </span><br /><br />என்ற கதை அவரது இளம்பருவ தோழர்களுடனான அனுபவத்தை விரிகிறது... குழந்தைகள் ஒரு வயதுக்குப் பின் ஆண்களாகவும், பெண்களாகவும், மாறி விடுகிறார்கள். எல்லா ஏமாற்றங்களும் அங்கிருந்தே துவங்குகின்றன. குடும்பம், கலாசாரம், கிராமம், என யார் குழந்தைகளின் உலகைப் பற்றி கவலைப்பட்டார்கள். மஞ்சனத்தை மாலையை படிக்கும் போது அதுவே நாம் தொலைத்த பால்யமாக இருக்கிறது. <br /><br /><span style="font-weight:bold;">இந்த தொகுப்பிற்கு அவர் வைத்த பெயர் அழகம்மா.....</span><br /><br />அழகம்மா பெயருக்கேற்ற அழகு அதுதான் பிரச்சனையே பெண்கள் அழகாக இருப்பது ஆண்களை துன்புறுத்துகிறது. பல நேரங்களில் பெண்களுக்கான சிறையில் வாசிக்கப்படாத குற்றப்பத்திரிகையாக ஒழிந்திருப்பது அழகுதான். அழகம்மாவும் அழகுதான். ஆனால் அவள் கட்டிக் கொடுத்த மாமன் மேல் மூடத்தனமான அன்பைக் கொண்டிருக்கும் கிராமத்துப் பெண்...ஒரு வழியாக கணவன் குடும்பம் அவளை நிராகரிக்க அழகம்மா மாமனுடன் ஊரை வீட்டு ஓடி விடலாம் எனக் கேட்கிறாள் அவனுடன் ஓடிப்போக அவன் கிளம்புகிற இரவை இப்படிச் சித்தரிக்கிறார் எழுத்தாளர் // மேற்கு மலையும் கிழக்கு மலையும் கூட மடிந்த இரண்டு சவமாய்க் கிடந்தது.கூடடைந்த பட்சிகளும் சிலிர்ப்புக் காட்டவில்லை. ஆந்தையும் பாங்கிணத்துக்குள் பதுங்கிக் கிடந்தது. ஈரப்பனி உடம்பை குறுக்க சேலையால் இறுக்கப் போர்த்தி குறுக்கும் மறுக்குமாக ....கல்லு முறி வைத்தவளைப் போல ஊரைத் திரும்பிப் பார்க்காமல் போனாள்// என்று எழுதுகிறார் எழுத்தாளர். அழகம்மா எல்லையில் காத்திருக்கும் மாமனுடன் சேர்ந்து கிளம்பத்தயாரானாள். <span style="font-weight:bold;"> // அவிழ்ந்து கொண்டிருந்த கொண்டையை கலைத்து இறுக்கமாக கொண்டை போடுவதற்காக கூந்தலை விரித்தாள்.. அது இன்னொரு காட்டைப் போல் காட்டின் மேலே விரிவது போன்று இருந்தது//</span> என்று எழுதுகிறார். சந்திரா. அழகம்மாவை மாமனும் அவனது நண்பர்களும் கிணற்றில் தள்ளி கொலை செய்து விடுகிறார்கள். கொன்றவர்கள் எல்லோரும் வஞ்சிக்கப்பட்டு சாகிறார்கள். <span style="font-weight:bold;">// பேயுருகொண்ட அழகம்மா கிணற்றை தன் ஒற்றைக் காலில் மூடியபடி நிற்கிறாள் பனி கொண்ட இரவின் தனிமையில்// </span>என்று இக்கதையை அற்புதமாக முடிக்கிறார் சந்திரா. கண்ணகி மதுரையை எரித்தாள் என்பது பழமரபுக்கதை. ஆனால் பகுத்தாறிவாளர்களோ //கண்ணகி என்ன தன் முலையில் பாஸ்பரஸ் வைத்திருந்தாளா என்று கேட்டார் கள்// புத்திசாலித்தமான கேள்விதான். பதிலற்ற கேள்வியும் கூட ஆனால் எளிய மக்களின் நம்பிக்கைகளை நான் எப்போதுமே என் அறிவால் தகர்க்க முற்படுவதில்லை. கண்ணகி மதுரையை எரித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அநீயான அந்த அமைப்பை அவரது ஆட்கள் எரித்திருக்கிருக்கலாம். அதை பதிவு செய்த எழுத்தாளன் அதை fantasy யாக முன் மொழிகிறான். கிரேக்க இலக்கியங்களில் இதுமாதிரியான பழ மரபுக் கதைகள் ( legend story) வரும் போது அதைக் கொண்டாடுகிறோம். அதுவே தமிழில் இருந்தால் தடி கொண்டு அடிக்கிறோம். தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள பல் வேறு பிற்போக்குவாதங்களை நிராகரிக்கும் அதே நேரம் இம்மாதிரியான நம்பிக்கைகளை நான் வரவேற்கிறேன். அம்மாதிரியான நம்பிக்கையை தன் சிறந்த சித்தரிப்புகளால் விரித்துச் செல்கிறார். இப்போது அந்தக் காடு அழகம்மாவின் கூந்தலாக தொரட்டி மரம் கிணற்று வழியாக நடந்து செல்லும் ஆண்களுக்கெல்லாம் கெட்ட சகுனமாக விழித்துக் கொண்டிருக்கிறது இரவும் பகலும்.<br /><br />தன் மகனை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்வதையும், அவன் ரிமாண்ட் செய்யப்படாமல் காப்பாற்றப் போராடும் ஒரு தகப்பனின் கதையை அதற்கேயுரிய கரிசனத்தோடு பதிவு செய்கிறார் வன்மம் கதையில், அது போல பால்ய கால காதலை, அது இன்னதென்று தீர்மானிக்கப்படாத அந்த உணர்வையும் ஒரு ஈர்ப்பையும் விட்டுச் செல்லும் ஒரு பெண்ணின் மனப்பதிவையும் அழகேசனின் பாடலில் சொல்கிறார். எதற்காகவும் அவள் அழகேசன் மீது ஈர்ப்புக் கொள்ளவில்லை. அவனோ ஏழை டிராக்டர் ஓட்டும் தொழிலாளி. அவன் கசிய விடும் பாடல்களே ஒரு காதலை உருவாக்கி பின்னர் அதுவும் அழகேசனும் நிற்கதியாய் விடப்படுகிற இடத்தில் மனசு என்னமோ கனத்துத்தான் போகிறது.<br /><br /><span style="font-weight:bold;">இந்த தொகுப்பின் முதல் கதை அறைக்குள் புகுந்த தனிமை.</span><br /><br /><br />வாழ்வின் வெவ்வேறு தனிமை மன உணர்வுகளைக் கொண்ட இரண்டு தோழிகள் கடற்கரைக்குச் செல்கிறார்கள். உடன் சென்றவள் அங்கிருந்து இன்னொரு நட்புடன் செல்ல தனிமையில் கைவிடப்பட்டவள் திரும்பிப்பார்க்கிறாள். இந்த திரும்பிப் பார்த்தல் அவ்வளவு எளிமையானதல்ல அது மகா நகரத்தைப் பார்ப்பது, சந்தடியைக் காண்பது, அப்போதுதான் ஒரு பையன் இவளைப் பார்க்க... தன் தனிமையைப் போக்கும் ஒரு இடையீடாக பட்டும் படாமலும் அவனைத் தொடர அனுமதிக்கிறார். எனக்கு பொறிக்குள் சிக்கிக் கொண்ட எலியை இரவு முழுக்க, ஏன் பகம் முழுக்க அடைத்து வைத்து விட்டு திறந்து விட்டால் அது தப்பித்து ஓடுமே அப்படித்தான் அவனும் நினைவுக்கு வருகிறான். ஆமாம் ஏன் இந்த பெண் அவனுடன் இந்த விளையாட்டை நடத்த வேண்டும். சும்மா ஒரு சுவராஸ்யத்திற்கா? அல்லது இன்னமும் வாழ்வின் வண்ணங்கள் மிச்சமிருக்கின்றன என்கிற நினைப்பிலா? அல்லது தனிமையைக் கொலை செய்யவா? அவர் இப்படி எழுதுகிறார் <span style="font-weight:bold;">// எல்லா நினைவுகளையும் ஆயுதமின்றிக் கொலை செய்ய தனிமையால் மட்டும்தான் எப்பொழுதும் இயல்கிறது// </span>என்கிறார் அதெப்படி தனிமை நினைவுகளைக் கொல்லும். தனிமைதான் நினைவுகளை உற்பத்தி செய்யும் அது மட்டுமே வசீகரமான ஒரு உலகைக் கொடுக்கிறது. ஆனால் இவர் தனிமையை நினைத்துத்தான் அவனை அனுமதிக்கிறார். ஆனால் அவனை எங்கே தடுத்து நிறுத்துவது எனத் தெரியவில்லை. கடைசியில் அவனை அறையில் அடைத்து காலையில் பொறியைத் திறந்து ஓட விடுகிறார். அதே தனிமை...அதே தேடல் தொடர்ந்து கொண்டிருக்கிறது...<br /><br /><br />சந்திராவின் கதைகள் ஆழமானவை அதில் வரும் மனிதர்கள் கைவிடப்பட்ட மனிதர்கள், உணர்வுகளைக் கைவிட்டவர்கள், மறுக்கப்பட்டவர்கள், தனித்து நடக்கத் தெரியாதவர்கள், எளிய நம்பிக்கைகளால் சூழப்பட்டு அதன் பேரில் வாழக் கடமைப்பட்டவர்கள். வித விதமான இந்தக் கதைகளில் இசையும், காட்சியும் சந்திராவை ஒரு நல்ல திரைக்கதையாசியராக்கியிருக்கிறது. அவர் தன் பாட்டியின் தோள்களில் ஏறி மனிதர்களைப் பார்த்திருக்கிறார்.<br /><br /> சில எழுத்தாளர்களுக்கு வசீகரமான எழுத்து நடை சாத்தியப்பட்டாலும், சொல்ல கதை இருக்காது. எழுத்தை மட்டுமே வைத்து கதை சொல்லி வசீகரித்து விடுவார்கள். ஆனால் மனிதர்களை அவர்களின் வாழ்வை நுட்பமாக பதிவு செய்வது அவ்வளவு எளிதன்று, அப்படி வாய்க்கப்பெற்றவர்கள் வெகு சிலரே. எனக்கு தமிழில் பூமணி, பாமா, வத்சலா, ஆர்.சூடாமணி , நாஞ்சில் நாடன், ஜெயமோகன், பிரபஞ்சன், பாஸ்கர் சக்தி, எழில் வரதன், யூமா வாசுகி, என நீளும் பட்டியலிலிருந்து சொன்னால் பூமணியின் கதைகளில் ஏராளமான கிளைகள் பரந்து விரிந்திருக்கும் ஆனால் திரைக்கதையை அதிலிருந்து எடுத்து தனியாகச் செய்ய வேண்டும். சந்திராவின் கதைகள் கதை சொல்லும் போக்கிலேயே வேறு பட்டிருக்கிறது. அவர் தமிழில் தவிர்க்க முடியாத சிறுகதையாசிரியர் அல்ல மிகச் சிறந்த சிறுகதையாரிசியர்களுள் ஒருவர். எழுத நினைப்பவர்கள், சிறுகதை எழுத நினைப்பவர்கள், மனித உணர்வுகள் அதன் வண்ணங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் சந்திராவின் கதைகளை அவசியம் வாசிக்க வேண்டும்.<br /><br /><span style="font-weight:bold;">அழகம்மா (சிறுகதைத் தொகுப்பு)<br />ஆசிரியர் - சந்திரா,<br />விலை- ரூபாய் எழுபது.<br />வெளியீடு-<br />உயிர் எழுத்து<br />9, முதல் தளம், தீபம் வணிக வளாகம்,கருமண்டபம், <br />திருச்சி- 620001</span>டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-59123886853708422502012-02-11T19:04:00.003+05:302012-02-11T19:06:54.154+05:30கூடங்குளம் அணு உலை தமிழக அரசு குழு<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilYWtgSolIx30DtyYkdGoDK94iByrTcnQQbbH_UT9K75sSkBo5DyMY1k6WPcdh92nMaNSGfm0dhteahHAOF6EVX1NKL5C5Y4IWrfgo5YWzVYRtbtmomf1ESJ9qFroWw6-ytyXxGkJC_SM/s1600/endosulfan12.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilYWtgSolIx30DtyYkdGoDK94iByrTcnQQbbH_UT9K75sSkBo5DyMY1k6WPcdh92nMaNSGfm0dhteahHAOF6EVX1NKL5C5Y4IWrfgo5YWzVYRtbtmomf1ESJ9qFroWw6-ytyXxGkJC_SM/s400/endosulfan12.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5707871242901010482" /></a><br /><br />கடந்த மூன்று நாட்களாக தமிழகமெங்கிலும் வரலாறு காணாத மின் வெட்டு சுமார் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் மின்வெட்டு. சென்னை வாசிகளுக்கு ஒரு மணி நேரமும் சென்னைக்கு வெளியில் உள்ளவர்களுக்கு எட்டு மணி நேரமுமாக தனது மின் பற்றாக்குறையை கசப்பு மருந்தாக மக்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. மாபெரும் மக்கள் ஆதரவுடன் ஆட்சியமைத்த ஜெயலலிதா கசப்பு மருந்து கொடுப்பதில் கை தேர்ந்தவர். அவர் கொடுத்த , கொடுக்கும் மருந்துகள் கருணாநிதி கொடுக்கும் கசப்பு மருந்துகளை விட விசித்திரமானவை.<br /> <br />கருணா, ஜெயா இருவருமே கொடுக்கும் கசப்பு மருந்துகள் பல நேரங்களில் மக்களால் அருந்த முடியாதவையாக இருந்துள்ளன. இதோ இன்னொரு கசப்பு மருந்து அணு உலையை உடனடியாக திறக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு ஒப்புதல் வழங்கி அதை தமிழக மக்களின் பொதுப் புத்தியாக கட்டமைக்க அவர் கண்டு பிடித்த கசப்பு மருந்துதான் எட்டு முதல் பன்னிரண்டு மணி நேர மின் வெட்டு. இப்போது கோவை தொழில் அதிபர்களின் கூடாரமான கொடிஷியாவிலும், இன்னும் சில இடங்களிலும் கூடங்குளம் அணு உலையை திறப்பதன் மூலம் மின் தேவையை பூர்த்தி செய்யலாம் என்கிற பேச்சுக்கள் துவங்கி விட்டன. செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த மின்வெட்டு கசப்பு மருந்து பொதுப் புத்தியில் வேலை செய்யத் துவங்கி விட்டது.கூடங்குளம் அணு உலை போராட்டம் துவங்கிய இந்த மூன்று மாதங்களில் அவர் போராடும் மக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது போல பட்டும் படாமலும் மக்களின் அச்சம் நீங்கும் வரை அணு உலை வேண்டாம் என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். பலரும் இத்தீர்மானத்தை நம்பினார்கள். மூன்று மாதங்கள் உருண்டோடி விட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்த திமுக பொதுக்குழுவில் கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆரம்பத்தில் எதிர்த்த பல பெரிய கட்சிகள் நாசூக்காக ஒதுங்கிக் கொண்டன. சில தலைவர்கள் வழக்கம் போல சடங்கு அறிக்கைகளை வெளியிட., மத்திய மாநில அரசு அதிகாரிகள் வர்க்கமோ அரசு இயந்திரத்தின் உதவியுடன் தீவீரமாக செயல்பட்டனர்.<br /><br />மீனவ சங்கங்கள், மீனவ மக்கள், கடலோரப் பகுதி மக்கள் என முழுமையாக மீனவ மக்கள் ஆதரிக்க சம வெளிச்சமூகங்களின் ஆதரவு முழுக்க முழுக்க கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இல்லை. கூடங்குளத்தை அண்டிய நாகர்கோவில் போன்ற பகுதியில் பெரும்பலான நாடார் விவசாயிகள் இப்போராட்டத்தை மிஷனரிகளின் போராட்டம் என்றும் கடப்புறத்தார்களின் போராட்டம் என்றுமே கூறுகிறார்கள். இது நான் நேரில் விசாரித்தரிந்த உண்மை. திராவிட இயக்க அரசியலில் அதிகாரம் பெற்றுள்ள சம வெளிச்சமூகங்களின் வாக்கு வங்கியும், சம வெளிச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஓட்டுப் போடும் பிண்டங்களாக மாற்றப்பட்டிருக்கும் எல்லையோர மீனவ, பழங்குடிகள் தொடர்பாக இந்த அரசுக்கோ, அல்லது திராவிட இயக்கங்களுக்கோ சிறிதளவேனும் அக்கறை இல்லை. இந்த உதாசீனமே, வலுவற்ற மக்களாக கடலோரம் எங்கும் துண்டு துண்டாக சிதறிடிக்கப்பட்டுள்ள, தலைமையற்ற, அரசியல் வலுவற்ற அந்த மக்களை உதாசீனப்படுத்தி பெரும்பான்மை சம வெளிச்சமூகத்தை திருப்திப்படுத்த தமிழக அரசு கூடங்குளம் அணு உலையைத் திறக்கும் முடிவை எடுத்திருக்கிறது.<br /><br /><span style="font-weight:bold;">தமிழக அரசுக் குழுவின் நோக்கம்</span><br /><br />சிறிய மக்களை, எளிய மக்களை பற்றிய கவலைகளோ அவர்களின் அடையாள அரசியல் தொடர்பான அக்கறையோ தமிழக பொதுப்பரப்பில் இல்லை. அதுவே கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவான தமிழக அரசின் முடிவு. இப்போது மாநில அரசு அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் நால்வர் ஒருவர் முன்னாள் அணுக் கழக தலைவர் சீனிவாசன் இவர் தொடர்ந்து அணு உலைக்கு ஆதரவாக எழுதி வருகிறவர். இன்னொருவர் அண்ணா பல் கலைக்கழகத்தைச் சார்ந்த அறிவொளி இவர் அணு மின் கழகத்திடமிருந்து நிதி பெற்று வருகிறவர் என்று சொல்லப்படுகிறது. அப்துல் கலாமை வைத்து அண்ணா பல்கலையில் பல கூட்டங்களை நடத்தியவர். அது போல எரிசக்தித்துறை தலைவர் இனியன், முன்னால் ஐ ஏ எஸ் அதிகாரி விஜயராகவன் என அனைவருமே அணு உலைக்கு ஆதரவானவர்கள். ஜெயலலிதா குழுவை அமைத்ததோடு மிகத் தெளிவாக அந்தக் குழுவின் நோக்கங்களையும் தெளிவு படுத்தி விட்டார். இந்தக் குழு யாரோடும் பேச்சு வார்த்தை நடத்தாது. அணு உலையின் பாதுகாப்பு குறித்து ஆராயும். மக்களின் அச்ச உணர்வு குறித்து ஆராயும். அவ்வளவுதான் கூடங்குளம் அணு எதிர்ப்புப் போராட்டத்தையும் அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவையும் அது கண்டு கொள்ளவே இல்லை.<br /> <br /> <br />நாடாளுமன்றத் தேர்தல் வந்தது - ’’என் சொற்படிக் கேட்கும் அரசு அமைந்தால் ஈழம் பெற்றுத் தருவேன் என்றார். சட்டமன்றத் தேர்தல் வந்தது - இனப்படுகொலை குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவேன் என்றார்- உள்ளாட்சித் தேர்தல் வந்தது - தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும். அச்சம் நீங்கும் வரை அணு உலை வேண்டாம் என்றார். நண்பர்களே இப்போது வெகு மக்களின் ஆதரவைப் பெற்று வெல்ல ஜெயலலிதாவுக்கு ஒரு தேர்தல் இல்லை. கருணாநிதிக்கும்தான். ஆளும் கட்சி மட்டுமே வெல்லும் இடைத் தேர்தல் மட்டுமே அதில் மீனவ மக்கள் வழக்கம் போல ஓட்டுப் போடும் பிண்டங்கள் மட்டுமே..... அதனால் அடுத்த தேர்தலில் அம்மா எதிர்ப்பார் கூடங்குளம் அணு உலையை.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-35905198689147961862012-02-11T18:59:00.002+05:302012-02-11T19:03:49.129+05:30நபிகளின் கருணையும் கருத்துரிமையும் - டி.அருள் எழிலன்.மதச்சார்பின்மையின் மகாத்தான வரலாற்றில் இந்தியாவின் வேறெந்த மாநிலங்களை விடவும் தமிழகம் மேம்பட்ட ஒன்று. பாபர் மசூதி இந்து மதவெறியர்களால் இடித்து தரை மட்டமாக்கப்பட்ட போது எல்லா மாநிலங்களிலும் கலவரம் வெடிக்க தமிழகம் அமைதியாக இருந்தது. இதே அமைதியை நீங்கள் கோவை சிறுபான்மை மக்களுக்கு எதிரான கலவரங்களின் போதும், அதற்கு முன்னர் கிறிஸ்தவ மீனவர்கள் மீதான மண்டைக்காடு கலவரங்களின் போதும் கண்டிருக்கலாம். ஆக அமைதி என்பது வளர்ச்சி பெற்ற மௌனமாக விரிவடைந்து சென்றிருக்கிறது. முற்போக்கு என்பது ஒடுக்கப்படும் மக்களுக்காகப் பேசாமல் ஒதுங்கிச் செல்வது, அல்லது ஒதுங்கிக் கொள்வது என்கிற அளவில் மத்யமர் மனோபாவமாக தமிழகத்தில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. கடந்த நாற்பதாண்டுகளாக செல்வாக்குச் செலுத்தும் திராவிட இயக்கங்கள் சாதி விஷயங்களில் கவனம் செலுத்தாதது போல, சிறுபான்மை மக்கள் விஷயத்திலும் கவனம் கொள்ளவில்லை என்னும் நிலையில், இந்து மதவெறி அமைப்புகள் எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் வலுவான மத வெறி அமைப்புகளை கட்டி விட்டார்கள். இன்றைக்கு வரை சாதிரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் நம்பிக்கையளிக்கும் சக்திகளாக இடதுசாரிகளே தமிழகத்தில் ஓரளவு செயல்படுகிறார்கள் என்பதுதான் நம்பிக்கையளிக்கிறது.<br /><br />பெரும்பான்மை மதவாதச் சக்திகளின் பாசிசப் படுகொலைகள், துரத்தல்கள் ஒரு பக்கம் என்றால் சிறுபான்மை மக்கள் மத அடிப்படைவாதத்திற்கோ மூட நம்பிக்கைகளுக்கோ பலியாவது சிறுபான்மை சமூகங்களில் உள்ள சாபக்கேடு. இந்த அடிப்படைவாதிகளில் இருந்துதான் தலிபான்களும், முஜாஹீதீன்களும் உருவாகுகிறார்கள். பாசிசத்தை எதிர்கொள்ள மக்கள் திரளை நம்பாமல் ஆயுதங்களை நம்பி தங்களின் சொந்த சமூகத்திற்கே வாழும் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். சமூகத்தை கண்காணிக்கவும், மக்களை ஒழுக்கமாக வாழவும் இறைவன் தங்களை நியமித்திருப்பதாக நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையிலிருந்தே பதில் பயங்கரவாதம் உருவாகிறது.<br /> <br />ஆனால் தாங்கள் நம்பும் இறைவனை வழிபடவோ, அதை தூய்மையானதென்று சொல்லவோ அந்த மதத்தை பின் பற்றும் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தன் மதம்தான் உயர்ந்தென்றும் ஏனைய மதங்கள் கீழானவை, மற்றவர்களெல்லாம் மிலேச்சர்கள், வந்தேறிகள் என்றும் மூளைக்குள் ஏற்றப்படும் மூட நம்பிக்கை மற்ற மக்களையும் பாதிக்கிறது. கடவுள் உண்டு என்று சொல்கிறவன் பெருவாரியான மக்களுக்கு மறுக்கப்பட்ட வழிபாட்டு உரிமைக்காக போராடியவன் இல்லை. ஆனால் கடவுள் இல்லை என்று எவன் எல்லாம் நம்பினானோ, அதற்காக காலம் முழுக்க பிரச்சாரம் செய்தானோ அவனே சமூகத்தில் எல்லா பிரிவு மக்களின் வழிபாட்டு உரிமைக்காகவும் குரல் கொடுத்தார். இதிலிருந்தே கடவுள் மறுப்பாளர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.<br /><br /><span style="font-weight:bold;">சம்பவம்-1</span><br /><br />ஆகஸ்ட் 15, 2000 குமரி மாவட்டம் தக்கலையில் மைலாஞ்சி (மருதாணி) என்ற கவிதைநூலை வெளியிட்டார் ரசூல் என்ற கவிஞர். கவிதை நூல் இஸ்லாத்தை இழிவு படுத்துகிறது. என்பது ஜமாத்தின் குற்றச்சாட்டு. தமிழகம் முழுக்க கவிஞர் ரசூலுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன. சுமார் 120 பேர் கையெழுத்திட்டு ரசூல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. ரசூல் ஜம்மாத்திடம் கொடுத்த விளக்கங்காள் நிராகரிக்கப்பட்டு பத்வா எனப்படும் தீர்ப்பு அவருக்கு வழங்கப்பட்டு அவர் ஊர் விலக்கம் செய்யப்பட்டார். எஞ்சியிருக்கும் மைலாஞ்சி நூலை ஜமாத்திடம் ஒப்படைத்து விட்டு மன்னிப்புக் கேட்குமாறு ஜமாத் கோர அதற்கு கட்டுப்படாத ரசூல் இன்று வரை மத நீக்கம் செய்யப்பட்டவாரகவே வாழ்கிறார்.<br /><br /><span style="font-weight:bold;">சம்பவம் -2</span><br /><br />ஜோடிகுரூஸ் ஆழி சூழ் உலகு என்னும் தமிழின் மிகச்சிறந்த நாவலை எழுதினார். அது வரை மீனவர் வாழ்வை ஒரு சிலர் பதிவு செய்திருந்தாலும் ஜோடி குரூஸ் அதற்கு முன்னர் மீனவர் வாழ்வியல் தொடர்பாக எழுதப்பட்ட எல்லா பிரதிகளையும் நிராகரிக்கும் படியான ஒரு எழுத்தைக் கொடுத்தார். காரணம் அவர் ஒரு மீனவர். குமரி மாவட்டத்தில் உவரி என்னும் கடலோரக் கிராமத்தைச் சார்ந்தவர். ஆனால் அந்த சிறப்பான நாவலை கொண்டாடியிருக்க வேண்டிய அவரது சமூகம் அவரை நிராகரித்தது. காரணம் கிறிஸ்தவ பாதிரிகள். வெளிப்படையாகவே ஜோடிகுரூஸ் அவர்களுக்கு தடை விதித்தார்கள். ஊரை விட்டு அறிவிக்கப்படாத விலக்கு இன்று வரை அவர் குடும்பத்தின் மீது உள்ளது. கோவில் வழிபாட்டிலேயே ஒரு பாதிரியார் ஜோடிகுரூசின் நூலைக் காட்டி உண்மையான கிறிஸ்தவனாக இருந்தால் இந்த நூலை எரிக்க வேண்டும் என்று பேசினார். அன்றிலிருந்து இன்று வரை ஜோடிகுரூசால் தன் சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லை. திருச்சபை பாதிரிகள் அவர் மீது தடை விதித்திருக்கிறார்கள்.<br /><br /><span style="font-weight:bold;">சம்பவம்-3</span><br /><br />மக்கட்டி துராப்ஷா என்பவர் கடையநல்லூர் ஜமாத்தை சேர்ந்தவர். ஆனால் தன் பெயரை கம்யூனிஸ்ட் கொள்கையின் பால் கொண்ட ஈர்ப்பால் செந்தோழன் ஷா என்று மாற்றியிருக்கிறார். ஊரில் கறிக்கோழிக்கடை ஒன்றையும் இந்த செந்தோழன் நடத்தி வருகிறார். இவரை இன்று கடையநல்லூர் ஜ்மாத்திலிருந்து விலக்கி வைத்திருக்கிறார்கள். பின்னர் போலீஸ் சென்று மீட்டு ஒரு வழியாக அவர் இப்போது தலைமறைவாகியிருக்கிறார். செந்தோழன் நபிகள் நாயகத்தை விமர்சனம் செய்யும் கட்டுரைக்ளை தன் முகநூலில் பகிர்ந்ததாகவும், நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரை இழிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு. உண்மையில் துராப்ஷா தன் கோழிக்கடையில் கோழிகளை வெட்டும் போது ‘’இஸ்லாமிய முறைப்படி யா..அல்லா என்று சொல்லி வெட்ட வேண்டுமாம். ஆனால் அவர் அப்படிச் சொல்லாமல் கோழிகளை வெட்டியிருக்கிறார். சிலர் இதை சுட்டுக்காட்டிய போது நான் என் இஷ்டப்படிதான் வெட்டுவேன். என்றும் சொல்லியிருக்கிறார். இதனால் கோபமடைந்த உள்ளூர் முஸ்லீம் மக்கள் அவருடைய கடையில் கோழிகள் வாங்குவதில்லை என்று சொல்லப்படுகிற நிலையில், நீண்டகாலமாகவே அவர் மீது உள்ளூர் ம்ககளுக்கு கோபம் இருந்துள்ள நிலையில், கடும் போக்குடைய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பைச் சார்ந்த சில இளைஞர்கள் இவரை சில முறை எச்சரித்திருக்கிறார்கள். இந்நிலையில் அவர் வேறு ஒருவர் எழுதிய இஸ்லாம் தொடர்பான கட்டுரை ஒன்றை முக நூலில் பகிர இளைஞர்கள் இவர் மீது புகார் கொடுக்க நேற்று துராப்ஷா ஜமாத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.<br /><br />சுமார் 150 முதல் 200 பேர் வரை ஜமாத்தில் திரண்டிருக்கிறார்கள். தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சார்ந்தவர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்க பயந்து போன துராப்ஷாவின் உறவினர்கள். ஜமாத்திற்கு அழைத்துச் சென்று மன்னிப்புக் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள்.அவரும் மன்னிப்புக் கேட்கச் சென்ற போது அவரைக் கண்டவுடன் கூட்டம் ஆவேசமாகி, அவரது விளக்கம் எல்லாம் தேவையில்லை. நீங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள் . தீர்ப்பைச் சொன்ன பிறகு அவர் ஜமாத்தில் வந்து மன்னிப்புக் கேட்டு எழுதிக் கொடுத்தால் ஜமாத்தில் இணையலாம் என்றிருக்கிறார்கள். ஜாமாத்தாரும் உடனே அவர் நபிகளை இழிவு செய்ததாகக் கூறி ஊர் விலக்கம் செய்திருக்கிறார்கள். சிலர் அவரை அடிக்கப் பாய்ந்ததாகத் தெரிகிறது. உடனே அங்கு வந்த போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இப்போது தலைமறைவாக இருக்கிறார். நான் எழுதிய இந்தத் தகவல்கள் முழுக்க முழுக்க கடையநல்லூர் ஜமாத்தைச் சார்ந்த ஒரு இஸ்லாமியப் பெரியவர் சொன்னது. அவர் பேச்சில் நபிகளை அவர் இழிவு செய்து விட்டார். அவர் மன்னிப்புக் கேட்டால் வந்து ஜமாத்தில் இணையலாம். மற்றபடி அவருக்கு எதிரான எந்த ஒரு வன்முறைச் செயல்களும் நடக்கவில்லை என்றார்.<br /> <br />உலகெங்கும் எப்போதெல்லாம் எதிர்ப்பு வலுத்ததோ அப்போதெல்லாம் இஸ்லாமிய மதம் ஆழமாக மக்களிடம் வேரூன்றியது என்பதுதான் அதன் கடந்த கால வரலாறு. உலகில் கிறிஸ்தவ மதவாதிகளாலும், இந்தியாவில் இந்து மத வாதிகளாலும் இஸ்லாமும் இஸ்லாமிய மக்களும் இழிவு படுத்தப்பட்ட போது அது வலுவாக தன்னை இந்த மண்ணில் அழுத்தமாக காலூன்றிக் கொண்டது. உதிரியாக சிதறிக் கிடந்த இஸ்லாமிய மக்கள் தங்களுக்கான தனி அமைப்புகளை உருவாக்கிக் கொண்டார்கள். தங்கள் மீதான தாக்குதல்கள், படுகொலைகள், இழிவுகள், இவைகளுக்காக பொதுச் சமூகமோ பொது அரசியல் இயக்கங்கங்களோ குரல் கொடுக்கவில்லை என்ற உண்ர்வில் அவர்கள் அமைப்பாக ஒன்று திரண்டார்கள் . இந்த திரட்சியே அவர்களுக்கு இன்று பாதுகாப்பாக உள்ளது. ஆனால் அந்த திரட்டி மத ரீதியானது, ஒரே மக்கள் குலம் என்கிற ரீதியில் இருப்பதால் அது தன்னகத்தே பலவீனத்தையும் கொண்டிருக்கிறது. அந்த பலவீனங்களில் ஒன்றுதான் சொந்த சமூகங்களில் இருந்து வரும் கலகக்குரல்களுக்கு தடை விதிப்பது என்பதும். தனிமைப்படுத்தப்பட்ட ஒரு இனம் தான் நம்பும் கடவுளை பற்றிப் பிடிப்பதன் மூலம் அதை பேணுவதிலிருந்து உருவாகும் சமூக உளவியல் பிரச்சனை.<br /> <br />துராப்ஷாவை பொறுத்தவரையில் அவர் கம்யுனிஸ்டாக இருந்துள்ளார். அவரது தளத்தில் இஸ்லாமிய கோட்பாடுகளை விமர்சித்ததை விட இந்து மத வெறியர்களை விமர்சித்தது அதிகம். சொந்த மதத்திற்கும், சாதிக்கும் துரோகம் செய்வதையே இன்றைய புரட்சிகர அரசியலின் ஒரு நிபந்தனையாக நாம் பார்க்கும் போது துராப்ஷாவின் எண்ணங்களை நாம் புரிந்து கொள்ளலாம். சொந்த மதம் என்று நான் சொல்வது மக்களை அல்ல, நிறுவனமயமாகி விட்ட அதன் அதிகாரத்தை என்பதாக புரிந்து கொள்ளவும். இஸ்லாமிய உலமாக்கள் தங்களின் நம்பிக்கைகளுக்கப்பால் வெளியில் தங்களுக்கான வாழ்வுரிமையை உறுதியாய் ஆதரித்து நிற்கிற ஜன்நாயக வெளி ஒன்று உள்ளதை கண்டு கொள்ள வேண்டும். அது பெரும்பான்மை வாதத்திற்கு எதிரானது என்பதையும், சிறுபான்மை மக்களை ஆதரிக்கும் சக்திகள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் எதிர்ப்பு என்பதும் எல்லையில்லா கருணை உள்ளம் கொண்டவர்களாலேயே முன்னெடுக்கப்படுகிறது. அது உலமாக்களை விட மேலான அன்பொன்றை மனித குலத்திற்கு வழங்குகிறது. எல்லையில்லா அன்பின் அடையாளமாக இருக்கும் நபிகள் நாயகத்தைப் போல.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-29374172210234291352011-06-05T21:16:00.008+05:302011-06-05T21:44:59.955+05:30ஹே....ராம் தேவ்...உனது கோபத்தின் விலை என்ன?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu-Dw1o0wNAoE7RT6OmMDNL_LobIumTDq-VrBIZb44wjcqakSzOuY3NEGpSZ_K05qiFIR0C87FktRB8aGtWlr3vDCPxSkFPccRE-goZG1naZ6A9g5Zl6R1XAuZSdnVc9YD5T1nqIiUUeY/s1600/dev.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhu-Dw1o0wNAoE7RT6OmMDNL_LobIumTDq-VrBIZb44wjcqakSzOuY3NEGpSZ_K05qiFIR0C87FktRB8aGtWlr3vDCPxSkFPccRE-goZG1naZ6A9g5Zl6R1XAuZSdnVc9YD5T1nqIiUUeY/s400/dev.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614768859703655682" /></a><br />மத்யமரின் கைப்புள்ள அன்னா அசாரே ஊழலுக்கு எதிராகப் போராடியதை அடுத்து பாபா ராம்தேவ் கருப்புப்பணத்தை மீட்க சத்தியாகிரகப் போராட்டம் என்று சொல்லப்படுகிற உண்ணாவிரத்தை டில்லி ராமலீலா மைதானத்தில் துவங்கினார். கருப்புப் பணத்தை மீட்க வழக்கம் போல வல்லுநர் குழு அமைக்கப்படும் என்ற உத்திரவாதத்தை எழுத்து மூலமாக பெற்றுக் கொண்டால் உண்ணாவிரத்தை கைவிடுவேன் என்ற ராம்தேவின் கோரிக்கையை ஏற்று அப்படியான ஒரு கடித்தத்தை மத்திய அரசு கொடுத்த பின்னரும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்த ராம்தாவ் கூட்டத்தை அதிகாலை ஒரு மணிக்கு கலைத்து விரட்டியிருக்கிறது. டில்லி போலீஸ் இப்போது டில்லியில் கலவர அபாயம் காரணமாக 144 தடை உத்தரவு. ராம்தேவ் 15 நாட்களுக்கு டில்லிக்குள் நுழையத் தடை. அவரைக் கொண்டு போய் ஹரித்துவாரில் உள்ள அவரது ஆஸ்ரமத்தில் விட அங்கேயே தனது இந்துப் பரிவாரங்களோடு உண்ணாவிரதம் இருக்கிறார் ராம்தேவ். பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் நாடு முழுக்க பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டது போன்று இப்போது இந்து பரிவாரங்கள் டில்லிச் சம்பவங்களை இந்திய வரலாற்றில் கருப்பு நாள் என்றும், அந்நிய பெண்ணான சோனியாவுக்கு இந்தியாவின் மீது அன்பு இல்லை என்றும் அறைகூவல் விடுகிறார்கள்.<br /><br />ஒரு சாராசரியான யோகா ஆசாமியால் கூட சுமார் பதினைந்து நாட்கள் வரை உண்ணாவிரதம் இருக்க முடியும். ராம் தேவால் ஒரு மாதம் கூட இருக்க முடியும் என்னும் நிலையில் அன்னா அசாரே போன்ற காங்கிரசின் கைப்புள்ளைகளை சமாளிக்க பிஜேபி கண்டு பிடித்த யோகா குருதான் இந்த ராம்தேவ். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்த ராம்தேவ் என்பவரை இந்தியச் சமூகங்கள் அறிந்திருக்க வில்லை. இந்த திடீர் சாமியாரை சீனுக்கு கொண்டு வந்து பாப்புலராக்கியது அன்புமணி ராம்தாஸ்தான். அவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போதுதான் ராம்தேவை ஒரு இந்திய சமூகங்களில் ரோல் மாடலாகவும், தனது உடல் தூய்மை குடும்ப பாரம்பரீய கோட்பாட்டு அறிப்புகளுக்கான வடிகாலாகவும் வரித்துக் கொண்டார். அதிலிருந்தே ராம்தேவ் இந்தியா முழுக்க பிரபலமானார். ராம்தேவின் உண்ணாவிரத்தை ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி. பஜ்ரங்தள், பிஜேபி போன்ற இந்துத்துவக் குழுக்களும் தூய்மைவாத பார்ப்பன அமைப்பான பிரம்மகுமாரிகள்,இராமகிருஷ்ணா மடம் போன்ற பார்ப்பன இந்துமத அமைப்புகளும் ஆதரிக்கின்றன, இது போக கரசேவை என்னும் பெயரில் காவி ரௌடிப் படையை அயோத்தி நோக்கித் திரட்டி பாபர் மசூதியை இடிக்க கூட்டம் சேர்த்த சாத்வி ரிதம்பரா என்னும் கிரிமினல் குற்றவாளியான பெண் சாமியார் உள்ளிட்ட சில கரசேவை கிரிமனல்களும் ராம்தேவோடு மேடையைப் பாகிர்ந்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை மேற்படி இந்துத்துவ அமைப்புகளோடு இந்து முன்னணி, ஆதி பராசக்தி சக்தி பீடம், அம்ம பகவான் பக்தி சபை உள்ளிட்ட அமைப்புகள் ஆதரிக்கின்றன என்பதிலிருந்தே இது பிஜேபியின் திட்டமிடப்பட்ட உண்ணாவிரதம் என்பதை ஊகிக்க முடிகிறது. ஊழலை ஒழித்து கருப்புப் பணத்தை மீட்டு தேசிய சொத்தாக அதை அறிவிக்க வேண்டும் என்பதே பொதுவான இவர்களின் கோரிக்கை.<br /><br /><span style="font-weight:bold;"><br />சுவிஸ் வங்கி உண்மை நிலை என்ன?</span><br /><br />சுவிஸ் வங்கியில் மட்டுமேதான் இந்திய பெருமுதலைகளின் கருப்புப் பணம் இருக்கிறதென்றும். அதை மத்திய அரசால் மீட்டு விட முடியும் என்றும் இவர்கள் மக்களை நம்ப வைக்கிறார்கள். சரி அது என்ன சுவிஸ் வங்கி ? நம்மூரில் உள்ள இந்தியன் வங்கி, மெர்க்கண்டைல் வங்கி மாதிரியா என்றால் இல்லை. உலகெங்கிலும் உள்ள பெரும் பண்ணைகள் தேவைக்கதிகமான பணங்களை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்த போது, சுவிட்சர்லாந்து அரசோ ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு மேல் கருப்புப் பணத்தை தங்கள் நாட்டு வங்கிகளில் முதலிடுபவர்கள் எங்களுக்கு வரி செலுத்த வேண்டியதில்லை என்பதோடு அவர்கள் குறித்த ரகசியங்களும் பேணப்படும் என்று அதற்கான சட்ட உத்திரவாதத்தையும் வழங்கி தங்கள் நாட்டு வங்கிகளில் பணம் முதலிட உலகெங்கிலும் உள்ள கருப்புப் பண முதலைகளை அழைத்தது. உலகெங்கிலும் உள்ள கோடீஸ்வரர்கள் தங்களின் கருப்புப் பணங்களைக் கொண்டு போய் சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்கினார்கள். சுவிஸ் நாட்டிலுள்ள வங்கிகளில் மட்டுமல்ல உலெகெங்கிலும் உள்ள குட்டிக் குட்டி தீவுகளில் கூட இம்மாதிரி வங்கிகள் இருக்கிறது. நரசிம்மராவின் ஆட்சிக்காலத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய செயின்ட் கிட்ஸ் வழக்குக் கூட இம்மாதிரியான ஒன்றுதான் செயின்ட் கிட்ஸ் என்பது மத்திய அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவுக் கூட்டங்களில் ஒன்று. செயிண்ட் கிட்ஸ் மாதிரி செயின்ட் நேவீஸ், கிறிஸ்டோபர், லூசியா, டிரினிடாட் என பல பெயர்களால் இத் தீவுகள் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான ரஷ்ய, இந்திய முதலாளிகள் கருப்புப் பணத்துக்கு பாதுகாப்பு கருதி இத்தீவுகளில் உள்ள வங்கிகளில் ரகசிய கணக்கு துவங்குவதைக் காட்டிலும் சுவிட்சர்லாந்து வங்கிகளே கருப்புப் பணத்துக்கு பாதுகாப்பு என நினைத்து அங்கு கொண்டு போய் பத்திரமாகப் பதுக்கி வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. அந்த வகையில் சுவிஸ் நாட்டில் உள்ள முக்கியமான வங்கியான் யூ,பி,எஸ் வங்கியில் மட்டும் சுமார் 72 லட்சம் கோடி அளவிலான தொகை இந்திய விஐபி க்களால் வைக்கப்பட்டுள்ளது என அந்த வங்கியே அமெரிக்காவுக்கு வழங்கிய ஆவணம் ஒன்றில் தெரிவிக்க அதுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியின் ஒரு கோஷமாக மாற்றப்பட்டது.பின்னர் காங்கிரஸ் வென்று நிதியமைச்சராக பிரணாப்முகர்ஜி பொறுப்பேற்ற பின்னர் கண் துடைப்புக்காக சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் வைத்துள்ள கருப்புப் பணம் குறித்த விபரங்களை சுவிட்சர்லாந்து அரசிடம் கேட்ட போது, சுவிஸ் அரசு. ‘‘இந்திய அரசு தனது நாட்டு டெலிபோன் டைரக்டரியை எங்களிடம் தந்து, அதில் உள்ளவர்களின் பெயரில் ரகசிய கணக்கு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. அதை சுவிஸ் நாட்டு சட்டமும் அனுமதிக்காது.எனவே, ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை கேட்டு இந்தியா எங்களை அணுக வேண்டாம்” என்று நெத்தியடியாகக் கூறியது சுவிஸ் அரசு.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ8JbHZskeeDNzKDJDTLU5E7-e2SJOwMrGrRUh_P-wUx9J-TiMlPqf0St06vSIXnRkM6VsK6UTYMCBh_w4kS1Bv8EY29e2Wozohh1bHYdsly5J7ujtl6fzLPw_NlPeti9J2WEijWBMtO8/s1600/naren.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 359px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhZ8JbHZskeeDNzKDJDTLU5E7-e2SJOwMrGrRUh_P-wUx9J-TiMlPqf0St06vSIXnRkM6VsK6UTYMCBh_w4kS1Bv8EY29e2Wozohh1bHYdsly5J7ujtl6fzLPw_NlPeti9J2WEijWBMtO8/s400/naren.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5614769594602952258" /></a><br /><br /><span style="font-weight:bold;"><br />இந்துக்களுக்காக அழுகிறவர்கள் இவர்களா?</span><br /><br />சரி ஏழு கடல் தாண்டி ஏழெட்டு மலைதாண்டி சுவிஸ் நாட்டில் இருக்கும் பணத்தை மீட்பது இருக்கட்டும் உள்ளூரில் ஆஸ்ரமங்கள், மடாலயங்கள், அறக்கட்டளைகள் என்ற பெயரில் சுவிஸ் வங்கியில் முடங்கியிருக்கும் கருப்புப் பணத்திற்கு நிகரான பணத்தை காங்கிரசோ, பிஜேபியோ மீட்டு விடலாமே? அதைச் செய்ய பிளைட் ஏறிப் போக வேண்டிய அவசியமே இல்லையே? சுவிஸ் வங்கியில் உள்ள கருப்புப் பணம் குறித்துப் பேசும் ராம்தேவுக்குச் சொந்தமான அறக்கட்டளையின் சொத்து மதிப்பு சுமார் 20,000 கோடிக்கு மேல் என்கிறார்கள். சாய்பாபாவில் தொடங்கி வேதாந்தி உள்ளிட்ட பெரும்பலான இந்துச் சாமியார்களின் ஆஸ்ரமங்கள் உள்ளூரின் சுவிஸ் வங்கிகளாகவே செயல்படுகின்றன, கருப்புப் பணத்தை முடக்குவதற்காகவே இவர்கள் அறக்கட்டளை என்ற போர்வையில் சாமியார்களாக உலாவருகிறார்கள். பெரும் நிலப்பிரபுக்களாகவும் இந்திய பெரு முதலாளிகளாகவும் இருக்கும் பிஜேபி, காங்கிரஸ் பிரமுகர்களின் பெருமளவு கள்ளப் பணங்கள் இந்த அறக்கட்டைகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. இப்படி பெரும் பண முதலைகளின் கருப்புப் பண முதலைகள்தான் இன்றைய இந்தியாவின் போராட்ட நாயகர்கள். முன்னர் இவர்கள் மிலேச்ச கிறிஸ்தவர்களாலும், வந்தேறி முஸ்லீம்களாலும் இந்தியாவுக்கு ஆபத்து என்று இந்துக்களை ஒன்று திரட்டினார்கள். மசூதியை இடித்தார்கள். குஜராத்தில் இனப்படுகொலை புரிந்தார்கள். இன்று இவர்களே ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.<br /><br />ஆனால் இவர்களின் காதுகளுக்கு கோடிக்கணக்கான பெரும்பான்மை இந்து மக்களின் ஓலங்கள் கேட்பதில்லை. குஜராத்திலும், ஒரிசாவிலும்,மத்திய பிரதேசத்திலும் எரித்துக் கொல்லப்பட்ட முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள்,தலித்துக்களின் பிணங்களை வைத்து பெரும்பான்மை நெருப்பை எரிய விட்ட கும்பலால் அதை ஒரு கட்டத்திற்கு மேல் நீடித்துச் செல்ல முடியவில்லை. தனியார், தாராளமயக் கொள்கையின் விளைவாய் விளை நிலங்களை இழந்த பெரும்பான்மை இந்து ஏழை மக்களின் ஓலமும், பன்னாட்டு நிறுவனங்களுக்காய் பருத்தி விளைவித்து பின்னர் விவசாயம் செய்த போது விளை பொருளுக்கு விலை இல்லாமல் தற்கொலை செய்து கொண்ட ஆயிராமாயிரம் ஏழை இந்துக்களின் ஓலங்கள் இந்த காவிச் சாமியர்களுக்கோ, இந்துப் பாசிசக் கும்பலுக்கோ கேட்பதில்லை. நாடெங்கிலும் துறைமுகங்கள், அணு உலைகள், சுரங்கங்கள், மேலாண்மை பொருளாதார மண்டலங்கள், கனிமக் கொள்ளை என்னும் பெயரில் மக்களிடமிருந்து அக்கிரமான முறையில் பறிக்கப்பட்ட நிலங்கள் பற்றியோ, ஆக்ரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் நடைபாதை இந்து வியாபாரிகள், வீடற்ற இந்து ஏழைகள் கோடிக்கணக்கில் தூக்கி வீசப்பட்டது குறித்தோ ராம்தேவ் உள்ளிட்ட இந்துத்துவக் கும்பலுக்கு அக்கறை இல்லை.சமீபத்தில் அமெரிக்காவில் பிடிபட்ட தீவீரவாதி ஹெட்லியில் வாக்குமூலத்தையும் நாம் நினைவுபடுத்துவது நல்லது. அவர் இந்தியாவில் உள்ள இந்துச் சாமியார்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்துகிறார். அதில் சிவசேனாவைச் சாந்த ஒரு இரண்டாம் மட்டத் தலைவருடன் பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டாக அறிமுகமாகிறார் தீவிரவாதி ஹெட்லி. இந்தியாவில் மக்கள் விளைநிலங்கள் உள்ளிட்ட வளங்களை பன்னாட்டு நிறுவங்களுக்கு தன்னால் விலைபேசித் தர முடியும், முதலீடுகளைப் பெற்றுத்தர முடியும் என்று ஹெட்லிக்கு உறுதியளிக்கிறார் அந்த சிவசேனா பிரமுகர். ஹெட்லியின் நோக்கம் பால்தாக்கரேயைக் கொல்வது அல்லது இங்குள்ள இந்துத் தலைவர்களைக் கொல்வது அதற்காகத்தான் அவர் பன்னாட்டு ஏஜெண்ட் என்று சிவசேனா தலைவருடன் பழகுகிறார். ஆனால் இந்த தேசப்பற்றாளார்களான சிவசேனா கும்பலோ இந்து மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்குப் பேசியும் அடியாள் பலத்தை பயன்படுத்தி பிடுங்கி பன்னாட்டு நிறுவங்களுக்குக் கொடுக்கவும் பேரம் பேசுகிறார். இதுதான் இந்த கும்பலின் தேச பக்தி. இந்து மக்களிடம் இவர்கள் காட்டும் அன்பும் இதுதான்.<br /><br />தனியார் தாராளமயக் கொள்ளைக்காக திறந்து விடப்பட்டுள்ள தாராளச் சந்தையின் ஒரு அங்கமாகவும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு தரகு வேலை பார்க்கும் அரசியல் தரகர்களின் கூட்டுக் கொள்ளையுமே ஊழல். ஒட்டு மொத்த நாடும் பன்னாட்டு நிறுவனங்களின் நவீன மறுகாலனியாக மாற்றப்படும் சூழலில் அதன் ஒரு அங்கமாக மட்டுமே ஊழலை நாம் காண முடியும். அந்த ஊழலில் காங்கிரசும், பிஜேபியும் கூட்டுக்களவாணிகள் என்பதை மறைத்து விட்டு சாமியார்களை வைத்து ஊழல்தான் இந்தியாவின் தனித்த பிரச்சனை, ஊழலை ஒழித்து விட்டால் நாடும் மக்களும் முன்னேறி விடுவார்கள் என்றும் ஊதிப் பெருக்குகிறார்கள். தொண்ணூறுகளில் இந்துக் கும்பல் முன் வைத்த ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மதம் என்ற கோஷத்தை இன்று இந்தியாவில் முன் வைக்க முடியாது.<br /><br />ஏனென்றால் பெரும் கோடீஸ்வர மேல் வர்க்கம், பணக்கார வர்க்கம், மேல் மத்திய தரவர்க்கம், கீழ் மத்தியதரவர்க்கம், மத்தியதரவர்க்கம், என்று மக்கள் பிளவுண்டிருக்கிறார்கள். பட்டினியின் விளிம்பில் பெரும்பலான இந்து மக்கள் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கோடீஸ்வரக் கும்பலோ நாடு தங்களால் முன்னேறுகிறது என்ற மாயையை கட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த முரணை அரசியல் தளத்தில் எதிர்கொள்ள முடியாத இந்து மதக் கும்பல் இப்போது ஒரே நாடு ஒரே மக்கள் ஒரே மதம் என்ற கோஷத்தை முன் வைத்தால் ஆமாடா நானும் இந்து நீயும் இந்து அப்படியென்றால் நான் மட்டும் ஏனப்பா சோத்துக்கில்லாமல் கஷ்டப்படுகிறேன் என்று கேட்கும் நிலையில் விழுந்து விட்ட இந்து ஒற்றுமையை தூக்கி நிறுத்த இவர்கள் கண்டு பிடித்ததுதான் ஊழலுக்கு எதிரான இயக்கம். இதையே மீண்டும் நாட்டைச் சூழும் காவிமேகமாக கட்டி எழுப்பும் வல்லமை பார்ப்பனர்களுக்கும் அதன் ஊடகங்களுக்கும் உண்டு. நாம் ஏமாந்தால் நொடியில் இந்தச் சமியார்கள் ஒரு கெரோசின் பாட்டிலையும், சூலாயுதத்தையும் கையில் கொடுத்து சிறுபான்மை மக்கள்தான் இந்த ஊழலுக்குக் காரணம் அவர்களைக் கொல்லுங்கள் என்று சொல்வார்கள்.<br /><br />டில்லிச் சம்பங்களை இந்திய வரலாற்றின் கருப்பு தினம் என்கிறார் அத்வானி. தன் வாழ்நாளின் மோச்மான நாள் என்கிறார் ராம்தேவ். இந்திய ஜனநாயகத்தின் மோசமான படுகொலை என்கிறார் அன்னா அசாரே.... பாபா ராம்தேவ் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட மென்மையான தடியடியே ஜனநாயகப்படுகொலை என்றால் பாபர் மசூதியை இடித்தது, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் அழித்தொழித்தது, டில்லியில் வீதி வீதியாக சீக்கிய மக்களைக் கொலை செய்தது, ஸ்ரீக்காகுளத்தில் அணுஉலைக்கு எதிராக போராடிய மக்களைச் சுட்டுக் கொன்றது, தண்டகாரண்யாவில் பழங்குடி மக்கள் மீது போர் தொடுப்பது. காடுகளிலும் நிலங்களிலும் கடலோரங்களிருந்தும் மக்களை வெளியேற்றுவது இதெல்லாம் என்ன ராம்? இந்திய ஜனநாயகத்தின் பொன்னெழுத்துக்களால் பதிய வேண்டியவைகளா?<br /><br />டி.அருள் எழிலன்.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-19455032541984155572011-02-21T18:27:00.009+05:302011-02-21T18:40:47.239+05:30பரளிப்புதூர் தலித்துக்கள் மீதான் தாக்குதல்- உண்மையறியும் குழு அறிக்கை.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia6fRm5vJ-EqQjNjUwz_R3h5y9e-2WgAXva8vFkNwYO0He5xvWsP6qm-5oXaAGyLxkUJjGYt_bD7z4AZC3lKFCJCIlYe5IQaDGC-YZlxREawKU0wf2kyaNDkwf71f8IlMoagknrRUpOzk/s1600/1.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEia6fRm5vJ-EqQjNjUwz_R3h5y9e-2WgAXva8vFkNwYO0He5xvWsP6qm-5oXaAGyLxkUJjGYt_bD7z4AZC3lKFCJCIlYe5IQaDGC-YZlxREawKU0wf2kyaNDkwf71f8IlMoagknrRUpOzk/s400/1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5576127660132276018" border="0" /></a><br /><br />திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் பரளிப்புதூர் என்னும் கிராமம் மதுரை மாவட்டம் எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் திண்டுக்கல் மாவட்ட கிராமம். இங்கு தலித் பிரிவினைச் சேர்ந்த பறையர்கள் 84 வீடுகளும் முத்தரையர் சமூகத்தினர் 600 வீடுகளும் உள்ளனர். இங்கு முத்தரையர் சமுதத்தினரே பெரும்பான்மை ஆதிக்க வகுப்பினர். இங்கு சாதி தொடர்பான பெரும்மோதல்களும், வெளிப்படையான பிரச்சனைகளும் இதுவரையிலும் நடந்திராத நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சிறு சிறு புகைச்சல்கள் எழுந்து அடங்கி வந்துள்ளன. இக்கிராமம் மதுரையிலிருந்து நத்தம் செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சாலைவழியாக ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளே அமைந்துள்ளது. அவ்வாறு செல்லும் சாலையில் முதலில் தலித் குடியிருப்பும், அதிலிருந்து பிரிந்து செல்லும் சாலை வழியாக அரைகிலோ மீட்டர் தூரத்தில் முத்தரையர் வசிக்கும் குடியிருப்பும் அடுத்ததாக அமைந்துள்ளது.<br /><br />இங்கு கடந்த 2011 பிப்ரவரி 6ம் நாள் தலித் பகுதியில் நடந்த திருமண நிகழ்சிக்காக தலித் மக்கள் சார்ந்திருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கொடியும், தி மு க கொடியும் அம்மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அமைந்துள்ள காலனி நீர் தேக்கத்தொட்டி மீது அம்மக்களால் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட இக்கொடிகள் நீர்த்தேக்கத் தொட்டி மீதே மூன்று நாட்கள் வரையிலும் இருந்துள்ளது. இந்நிலையில் முத்தரையர் சிங்கச்சின்னம் பொறித்த முத்தரையர் சாதிச்சங்க கொடியினை கொணர்ந்து தலித் மக்கள் பகுதியிலிருக்கும் நீர்த்தேக்க தொட்டி மீது கட்டினர். ஊரின் முகப்பிலேயே தலித் தரப்பு அடையாளம் ஒன்று தான் எல்லோரையும் வரவேற்பது போல் அமைந்திருக்கிறது என்ற சாதிசார்ந்த பொறாமையினால் அது கட்டப்பட்டது என்பதே தலித்மக்களின் குற்றச்சாட்டு. சாதி சமுகத்தின் அத்தகைய உளவியல் புரிந்துக்கொள்ளக்கூடியதே. இச்சிக்கலான நிலையை புரிந்து கொண்ட தலித் பகுதி அடங்கியுள்ள பகுதியின் ஒரேயொரு பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பஞ்சு என்பவர் கிராம பஞ்சாயத்து தலைவரான முத்தரையர் சமூகத்தினை சேர்ந்த நல்லியப்பன் என்பவரிடம் நிலைமையை சொன்னார்.<br /><br /><br /><br />"உங்கள் கொடியை கழற்றிவிடுங்கள், எங்கள் சமூகத்தினரிடம் சொல்லி எங்கள் கொடியை அவிழ்க்க கூறுகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிடுகிறார்.இதற்கு மறுநாள் மாலை பஞ்சு தலித்தரப்பு கொடியை அவிழ்க்க சென்ற போது முத்தரையர் சாதிசங்கக்கொடி மீது செருப்பு ஒன்று கட்டப்பட்டிருந்தது. இதன் விளைவை உணர்ந்த பஞ்சு தலித் தரப்பு கொடியோடு அச்செருப்பையும் அகற்ற முயற்சித்தார். அப்போது அங்கு வந்த முத்தரையர் தரப்பினர் செருப்பை அகற்றக்கூடாது என்று தடுத்தனர். அதற்கு முன்பே பரளிப்புதூரை சுற்றியிருந்த முத்தரையர் கிராமங்களுக்கு சாதிசங்கக்கொடி அவமதிக்கப்பட்டதாக தகவல்களை அனுப்பியிருந்தனர். சுற்றுவட்டாரத்திலிருந்த 15 கிராமங்களிலிருந்த முத்தரையர்கள் 15 க்கும் மேற்ப்பட்ட வாகனங்களில் பரளிப்புதூரை இணைக்கும் நத்தம் நெடுஞ்சாலைகளில் வந்திறங்கினர். அதனாலேயே அந்த செருப்பை அகற்றக் கூடாது என்று முத்தரையர் தரப்பு கூறியிருந்ததாக தெரிகிறது.தலித்துகள் செருப்பைகட்டி அவமதித்தனர் என்று குற்றம் சாட்டி முத்தரையர் மறியலில் ஈடுபட "எங்களின் தனித்துவ அடையாளத்தை முடக்குவதற்ககான தருணத்தை உருவாக்க முத்தரையர்களே செய்து கொண்ட ஏற்பாடு அது" என்று அதனை தலித்தரப்பு மறுக்கிறது. நத்தம் நெடுஞ்சாலையில் இரவு 7 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்ட முத்தரையர்கள் சுமார் 300 பேரோடு 15 வாகனங்களில் பரளிப்புதூர் தலித் குடியிருப்பை நோக்கி 11 மணியளவில் வந்தனர். அப்போது அங்கு பத்துக்கும் குறைந்த காவல்துறை அதிகாரிகளே பாதுகாப்புக்கு இருந்தனர். அது தாங்கள் சற்றும் எதிர்ப்பாராத ஒன்று என்று தலித் மக்கள் கூறுகின்றனர். பெட்ரோல்,கம்பு, கடப்பாரை, ஆகிய ஆயுதங்களோடு குடியிருப்புக்குள் 300 பேர் பெரும் ஆரவாரத்தோடு நுழைந்து வீடுகளை தாக்கினர். ஓட்டு வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டன, ஓட்டு வீடுகளின் முன்புறமாகவும் பின்புறமாகவும் வேயப்படிருந்த கீற்று கொட்டகைகள் கொளுத்தப்பட்டன. வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்பைக்குகளும்,சைக்கிள்களும் கொளுத்தப்பட்டன. வீடுதோறும் பாத்திரங்கள் டிவி பீரோ ஆகியவை உடைக்கப்பட்டன. வைக்கோல் படப்பு கொழுத்தப்பட்டது, கான்கீரிட் வீடுகள் கடப்பாரைகளைக் கொண்டு சேதப்படுத்தப்பட்டன. மெத்தை வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களும் கதவுகளும் உடைக்கப்பட்டன. அங்கிருந்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் கொடிகம்பம் இரண்டாக உடைக்கப்பட்டு சாய்க்கப்பட்டது. திருமாவளவன் படம் வரையைப்பட்டிருந்த முகாம் பலகை கொளுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய அரைமணிநேரம் வரை இத்தாக்குதல் நீடித்தது. ஆண்கள் எல்லோரும் இரவு நேரமென்றும் பாராமல் ஊரைவிட்டு வெளியேறும் நிலை உருவானது. பெண்கள் மட்டுமே இருந்தனர். குழந்தைகளின் ஆடைகளை விலக்கி ஆணா பெண்ணா என்று பார்த்து விட்டு சென்றுள்ளனர். தலித் பெண்களுக்கு முன்பு அக்கும்பலில் இருந்த ஆண்கள் நிர்வாணமாக நடந்து அப்பெண்களை ஏசியுள்ளனர்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrgF2vT4yyA5zkY9s8mmv0K-7ko_uGhUZmtBpwVAmVG0IJe23_mZ2TU_asmKL1B53Z4mrHObvKuMpK1HIzsdi5KiwhNcfgNYMWoSv7DY9xc9iMlv68DhAhc3E0OTML-rvR7aPaYDY1Njs/s1600/15.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjrgF2vT4yyA5zkY9s8mmv0K-7ko_uGhUZmtBpwVAmVG0IJe23_mZ2TU_asmKL1B53Z4mrHObvKuMpK1HIzsdi5KiwhNcfgNYMWoSv7DY9xc9iMlv68DhAhc3E0OTML-rvR7aPaYDY1Njs/s400/15.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5576128023821351218" border="0" /></a><br />தாக்குதல் நடந்து இரண்டு நாளாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை. சேதங்கள் மதிப்பீடு செய்யப்படவில்லை. கலெக்டர் சம்பவ இடத்திற்கு வரவில்லை.காவல்துறையின் நடவடிக்கை திருப்திதரக்கூடியதாக இல்லை. உரிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்படவில்லை. SC/ST (ACT)1989 - ஆம் சட்டத்தின்படி வழக்கு பதியப்படவில்லை.தாக்குதலில் காயம்பட்ட தலித் சமூகத்தினைச் சேர்ந்த நைனார் என்பவரையும் அய்யாவு என்பவரையும் முத்தரையர் கொடியை அவமதித்த வழக்கில் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இச்சம்பவம் இப்போதுவரையிலும் பரளிப்புதூர் தலித்மக்களுக்கு தெரியாது. இது நியாயமற்ற கைது. உண்மை அறியும் குழு நேரடியாக பார்வையிட்டதன் அடிப்படையில் சேதங்களின் அளவானது. தலித் காலனியில் 98 சதவிகித வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடமும்,கோயிலும் மட்டுமே விடப்பட்டுள்ளன. தாக்கப்பட்டுள்ள வீடுகளில் ஓடுகள் சேதம் என்ற அளவில் 25 சதவிகிதமும், பொருட்கள் சேதம் தீவைப்பு எனும்- அளவில் 75 சதவிகித வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 15 க்கும் மேற்பட்ட மோட்டார்பைக்குகள், 10 - க்கும் மேற்பட்ட சைக்கிள்கள், வைக்கோல்படப்பு,பாத்திரங்கள்,டிவிகள் ஆகியவை சேதப்பட்டுள்ளன. குழந்தை பிறந்து 4 நாட்களே ஆகி வீட்டுக்குள் இருந்த அழகுமீனா என்ற பெண்ணும் கூட வீட்டிலிருந்து ஓட முடியாமல் ஓடியிருக்கிறார்.கர்ப்பம் இருந்த மாரிதேவி என்ற பெண்ணுக்கு அபார்ஷன் ஆகியுள்ளது. பெண்கள் அச்சத்தினால் வீடு ஒன்றில் மறைந்த பின்பும் கடப்பாறையை கொண்டு வீட்டை இடித்து மிரட்டியுள்ளனர். பழநி என்பவரின் டீக்கடையோடு கூடிய சிறு மளிகைகடையும் தீவைக்கப்பட்டுள்ளது. இரண்டு கோழிகள், ஒரு டஜன் ஆடுகள் எரிக்கப்பட்டன. காயம் என்றளவில் நைனா என்பவரும் செல்லம்மாள் என்பவரும் சிறுகாயம் அடைந்துள்ளனர். அங்கிருந்த மின்மாற்றியை (ட்ரான்ஸ்பர்ம் ) தாக்கி மின்சாரத்தை நிறுத்திவிட்டே தாக்குதலை தொடங்கியுள்ளனர்.தாக்குதலை முடித்துவிட்டு நத்தம் சென்ற அக்கும்பல் செல்லும் சாலையிலிருந்த தலித் குடியிருப்புகளை எல்லாம் தாக்கிக்கொண்டே சென்றுள்ளனர். குறிப்பாக வத்திப்பட்டி என்றும் கிராமத்திலிருந்த திருமாவளவன் படம் போட்ட பேனரும், மூன்று குடிசைகளும் தாக்கப்பட்டுள்ளன. தாக்குதல் நடந்த பரளிபுதுரை நோக்கி போலீசார் திசை திரும்பியிருந்த நேரத்தில் நேராக நத்தம் சென்ற கும்பல் இரவு 1 மணியளவில் அங்கிருந்த ரவுண்டானாவில் முத்தரையர் பெரும்பிடுகு சிலையை சட்டவிரோதமாக நிறுவ முயற்சித்தது. போலீசார் தடுத்து கும்பலை விரட்டிய காரணத்தால் அம்முயற்சி நின்று போனது.<br />இப்பிரச்சனை தொடர்பாக பரளிபுதூர் தலித் குடியிருப்பினை பார்வையிட்டு ஊரில் இருந்த பெண்கள், ஊரை விட்டு வெளியேறியிருந்த ஆண்களை சந்தித்த நம் உண்மையறியும் குழு முத்தரையர் குடியிருப்பில் யாரும் இல்லாததால் ஊரில் கடைக்கோடியிருந்த சில வீடுகளின் சில பெண்களை மட்டுமே பார்க்க முடிந்தது. ஊராட்சி மன்றத்தலைவரும் இல்லாததால் அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட பொது அதுவும் அணைத்து வைக்கப்பட்டுயிருந்தது. இது தவிர காவல்துறை டி எஸ் பி ராஜராமனை சந்தித்து தகவல் திரட்ட முடிந்தது.<br /><br />மேற்கண்ட யாவரின் வாதங்களாவன.<br /><br /><br /><br />தலித்மக்கள்:-<br /><br />எங்களுக்குள் பெரிய மோதல்கள் இருந்தது இல்லை. எங்களின் இரண்டு பகுதியிலும் தி.மு.க கட்சி சமமாக காலூன்றி இருந்தது. அண்மைக்காலமாக தலித் இளைஞர்கள் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முகாமை தொடங்கி கொடிகட்டுதல், திருமாவளவன் படம் போட்ட சுவரொட்டி ஒட்டுதல், பாடல்களை ஒலிப்பரப்புதல் என்று செயற்பட்டு வருகின்றனர். இது தவிர வெளிப்படையான அரசியில் முரண்கள் இல்லை. ஆனால் கடந்த கிராமபஞ்சயத்து தேர்தலின் பொது தொடர்ந்து பொது பஞ்சயத்தாக இருந்து வரும் பரளிபுதுரை ரீசெர்வ் பஞ்சயத்தாக மாற்றவேண்டுமென்று தலித் தரப்பில் சிறு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மற்றபடி 6 மாதத்திற்கொரு முறை சிறு சிறு மோதல்கள் எழுந்து உடனே சரியாகிவிடும் நிலைமையே இருந்து வந்தது.தாக்குதல் நன்கு திட்டமிடப்பட்டது என்று தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதலுக்கு காரணமான கொடிகட்டுதல் சார்ந்த பிரச்சனையில் ஆரம்பத்திலிருந்தே முத்தரையர்கள் பிரச்னை செய்து வந்தனர். எங்கள் பகுதியிலிருக்கும் தண்ணீர் தொட்டி மீது கொடியை கட்டும் போதே முத்தரையர் பகுதியிலிருந்து முன்னாள் வார்டு உறுப்பினர் ஆர். கருப்பணன், அபர்ணா-வேன் உரிமையாளர் பாலமுருகன், கண்ணன், கணேசன், சின்னழகு, தேங்காய்வெட்டு - முருகன் ஆகியோர் கட்டக்கூடாது என்று தடுத்தனர். நீங்கள் கட்டினால் நாங்களும் கட்டுவோம் என்றனர். ஆதே போல கட்டவும் செய்தனர். எங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான சாக்கு ஒன்றை தேடுவதற்காக செருப்பையும் அவர்களே கட்டியிருக்க வேண்டும்.அவ்வாறு கட்டிவிட்டு மறியல் செய்தனர். மறியல் செய்து விட்டு பரளிபுதூர் காலனிக்கு முன்பாகவே நெடுஞ்சாலையை ஒட்டியிருக்கும் மற்றொரு தலித் குடியிருப்பான அம்பேத்கர் நகரில் 3 வீடுகளை தாக்கினர். அடுத்துதான் பரளிபுதூர் காலனிக்கு ஒரு கும்பல்வந்து பெரும்சத்தம் போட்டு கொண்டிருந்தனர். இது ஒரு வழக்கமான சத்தம் என்றே நாங்கள் நினைத்தோம். ஆனால் அங்கிருந்த மாமரத்தில் நின்றுகொண்டு நெடுஞ்சலையிருந்த மற்றவர்களை போன்போட்டு அழைத்தனர். அப்போது சில போலிஸ்காரர்கள் இருந்தனர். சிறிது நேரத்தில் மின்சாரம் நின்றது. பிறகுதான் பெரும்கும்பல் தாக்குதலில் இறங்கியது.15-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த முத்துரையர்கள் வலசை , வெள்ளியன்குன்றம் புதூர், கடவூர், புதுகோட்டை, விளாம்பட்டி,புதூர், லிங்கவாடி, பெருமாபட்டி, ஆணையூர், ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களாவர்.எங்கள் மீது தாக்குதல் நடத்தி காவல்துறையினரை திசை திருப்பிவிட்டு நத்தம் ரவுண்டானாவில் முத்துரையர் சிலை வைப்பதே அவர்களின் நோக்கம் என்பது தலித் மக்களில் ஒருதரப்பார் குற்றச்சாட்டு.இத்தாக்குதலில் உள்ளூர்மக்கள் மட்டுமல்லாது முத்தரையர் சமூக பிரமுகர்களும் பங்கொண்டு உதவினர் என்பது தலித் மக்களின் கூற்று. வத்திப்பட்டி அம்சா - ஸ்டியோ உரிமையாளர் அம்சராசாவின் சுமோ, வத்திப்பட்டி - அழகு என்ற குட்டையன் தந்த பெட்ரோல், தேமுதிக ஒன்றிய பொறுப்பாளர் பாபு, சரந்தாங்கி ஊராட்சித்தலைவர் முத்தையன், காசம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ரமேஷ் ஆகியோர் பங்கு கொண்டனர்,அரசாங்கத்தின் உதவி இல்லை. எங்கள் உறவினர்களும், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் தந்த அரிசியில் சமைத்து வருகிறோம். அதிகாரிகளில் தவிர கலக்டர் உள்ளிட்ட யாரும் வரவில்லை. அரசியல் அமைப்புகளும் வரவில்லை.<br /><br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMbeetHKL1KbcqA2YZIKsn07Nht_1DNHgBOJ9KyJVfqW9T7YjcY0RaUgQpCJvNOrH2y0K36Uyrb-KS2Pp9U5PG7PZBQTiTZ0f46y-lbRwZ7Ukq4mRMTVET_gdc4ttqRTBmE66easEJk7g/s1600/16.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMbeetHKL1KbcqA2YZIKsn07Nht_1DNHgBOJ9KyJVfqW9T7YjcY0RaUgQpCJvNOrH2y0K36Uyrb-KS2Pp9U5PG7PZBQTiTZ0f46y-lbRwZ7Ukq4mRMTVET_gdc4ttqRTBmE66easEJk7g/s400/16.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5576128373308980226" border="0" /></a><br />முத்தரையர் தரப்பு:-<br /><br /><br />நாங்கள் தாயாய் பிள்ளையாய் தான் பழகினோம். எங்கள் சாதி பெண்கள் இருவரை தலித் தரப்பு திருமணமே கூட செய்திருக்கிறது. இப்போது வெளியூர்காரர்கள் தான் அவர்கள் மீது தாக்குதல் நடத்திருக்கிறார்கள். (ஊரில் ஒரு ஆணை கூட பார்க்க முடியாத நிலையில் இரு பெண்கள் மட்டும் தயக்கத்துடன் பதிவு செய்தது.)<br /><br /><br /><br />காவல்துறை:-<br />டி எஸ் பி அவர்களை குழு சந்தித்து, எடுத்த நடவடிக்கை குறித்து கேட்ட போது. இரு தரப்பும் நடந்துகொண்டது சகிக்க முடியாதது என்றும் இரு தரப்பின் மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார். தாக்குதல் நடந்தது தெள்ள தெளிவாக இருக்கும் போது ஏன் வெறும் சாதியை சொல்லி திட்டிய பிரிவில் வழக்கு தொடுத்துள்ளீர்கள் என கேட்ட போது, அவசரத்தில் நடந்ததாகவும் சார்ஜ் சீட்டில் சரி செய்வதாகவும் சொன்னார். எப் ஐ ஆர் இல் திருத்தலாமே, என சொன்னதற்கு இனி சாத்தியமில்லை என்றார். அவரை பொறுத்தவரை இரு தரப்பும் தவறு என்ற மனநிலையில் மொத்த பிரச்சனையையும் கருதி நடவடிக்கை எடுத்துள்ளார்.<br /><br /><br /><br />உண்மையறியும் குழுவின் பார்வை:-<br /><br /><br /><br />சமூகத்தளத்தில் தனித்தனி சாதிகளின் அடையாள உருவாக்கம் வலுப்பெற்று வரும் சமகாலச் சூழலில் முத்தரையர்களும் அத்தகு முயற்சிகளில் இறங்கி முத்தரையர் பெரும்பிடுகு சிலை போன்றவற்றை சாதித்துள்ளனர். இந்நிலையில் இப்பகுதியில் தீண்டாத சாதியாக அடங்கி வாழ்ந்த சமூகத்தினரின் அரசியல் எழுச்சி முத்தரையர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி அவர்களை அடக்கிவைக்கவும் , தங்கள் சாதி அடையாளத்தை உறுதியாக்கிக்கொள்ளவும் முத்தரையர்களை உந்தியது. இது நாள் வரையில் சிறு சிறு கோபங்களாக இருந்த இப்போக்கு இப்போது இத்தாக்குதல் மூலம் முழுவடிவம் பெற்றுளளது. இத்தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்புதாம் பரளிப்புதூருக்கு அருகிலுள்ள வத்திப்பட்டி என்னும் ஊரில் முத்தரையர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட தலித் ஒருவர் ஊரை விட்டு வெளியேறி உள்ளார். இந்த ஊரைச் சேர்ந்தவர்களும் இத்தாக்குதலில் மும்முரமாய் இருந்துள்ளனர். பரளிப்புதூரில் விடுதலைச்சிறுத்தைகள் கொடிக்கம்பமும், பெயர்பலகையும் தாக்கப்பட்டமை தலித்துகளின் அரசியல் அடையாளம் மீதான கோபத்தையே காட்டுகிறது.தலித்குடியிருப்பு மீதான இத்தாக்குதல் மற்றுமொரு கொடியங்குளம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அமைந்துள்ளது. மேலும் இது போன்ற தாக்குதல் தொடர்ந்து இருந்து வருவதோடு, மிகச் சாதரணமாகி சமூக ஒப்புதலை பெற்றும் விட்டன. தாக்குதல் நடந்த பின்னால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரச்சனையை முன்னெடுத்துள்ளது. அழுத்தம் தரக்கூடிய அளவிற்கு தலித் கட்சிகளும் முன் வரவில்லை. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் , மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் சம்பவம் நடந்து 3 நாள் ஆகியும் வராத நிலையில் எந்த சலுகையும் வாங்க மாட்டோம் என்று தலித் பெண்கள் எதிர்த்த போது விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் , அரசுடன் மோதல் போக்கு வேண்டாம் என்று வலியுருத்திதாக இளைஞர்கள் பதிவு செய்தனர்.பரளிபுதுரில் முத்துரையர்களே பெரும்பான்மை. தலித்துகள் சிறுபான்மையினர். பரளிபுதூரை சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பான்மையும் முத்தரையர் கிராமங்களே. குறிப்பாக பரளிபுதூர் பஞ்சாயத்து என்பதே புதூர், பரளி, எம் ஜி ஆர் நகர், அழகாபுரி ,தேத்தாம்பட்டி, வேம்பரளி,பொடுகம்பட்டி,அம்பேத்கர் நகர், ஆகிய ஏழு கிராமங்களை உள்ளடக்கியதேயாகும். அங்கு ஊராட்சிதலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ஆகியோர் முத்தரையர்களே. மொத்தமுள்ள 9 வார்டுகளில் ஓரயொரு வார்டு மட்டுமே தலித் உறுப்பினரைகொண்டது.இங்கு பெரும் மோதல்கள் நடைபெறவில்லை என்பது உண்மையே.முத்தரையர்கள் மட்டுமே நிலம் உள்ளவர்கள். ஆனால் அவை பெரும் நிலக்கிலாரிய பண்பு கொண்டவை அல்ல. தலித்துகளில் பலரும் அவர்களிடம் வேலை செய்து வருபவர்களே . ஆனால் பல்வேறு மாற்றங்களின் வழியாக தலித்துகள் விவசாயக் கூலி வேலைக்கு செல்வது குறைந்து வருகிறது. தலித்துகளில் படிப்போர் எண்ணிக்கையும் முத்தரையர்களை ஒப்பிடும் போது கூடி வருகிறது.<br />கடந்த சில வருடங்களில் பரளிப்புதூர் தலித்துகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முகாமை தொடங்கியுள்ளனர். அது முதல் பொதுவான விழாக்கள் தொடங்கி குடும்ப விழாக்கள் வரையிலும் அக்கட்சி அடையாளம் தாங்கியே தங்களை வெளிப்படுத்தி வந்துள்ளனர். திருமாவளவனின் படம் தாங்கிய சுவரொட்டியும் பேச்சு அடங்கிய ஒலிநாடா ஆகியனவும் ஒலிபரப்பப்படுவதுண்டு. 20 ஆண்டுகளுக்கு முன் இதே ஊரை சேர்ந்த முத்தரையர் சாதி பெண்ணை தலித் ஒருவர் திருமணம் செய்திருந்தாலும் அவரின் குடும்பத்தோடு உறவு இல்லையே தவிர தாக்குதல் ஏதும் முத்தரையர் தரப்பில் நடத்தப்பட வில்லை. அதே போல மற்றொரு திருமணமும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்கிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தலித்துகளின் தனித்த அரசியல் முயற்சிகள் முத்தரையர்களை தொந்தரவு செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.கடந்த பஞ்சாயத்து தேர்தலின் போதுதான் அக்கிரமத்தை ரிசெர்வ் பஞ்சயதாக மாற்ற வேண்டும் என்ற பேச்சும் தலித்துகள் மத்தியில் எழுந்து அடங்கியிருக்கிறது. இக்கிராமம் மட்டுமல்லாது சுற்று வட்டார கிராமங்கள் தோறும் தலித்துகளிடையே தனித்த அரசியல் முயற்சிகள் எழுந்துள்ளன.<br /><br />பரிந்துரைகள்:<br /><br />திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு:<br /><br />1 . இரண்டு தரப்பும் தவறுகள் செய்துள்ளதாக வழக்கினை பதிவு செய்வது பாதிக்கப்பட்ட தரப்பை மீண்டும் தண்டிப்பதாகவும் ஆதிக்க சாதியினர் மீதான குற்றத்தை காப்பாற்றுவதாகவும் இருக்கும். உண்மையை திசை திருப்பும் அணுகுமுறையாகவும் இருக்கும்.<br /><br />2 . தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் 3(10)(x) என்ற பிரிவின் கீழ் சாதியை சொல்லி திட்டியதாக மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.எனவே பின்வரும் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.<br /><br />sc/st வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்<br /><br />3(1)(ii) - காயம் ஏற்படுத்தல்<br /><br />3(1)(iii ) - ஆடைகளை களைதல்<br /><br />3(1) (ix ) - அரசு அதிகாரிகளுக்கு தவறான தகவலை அளித்தல்<br /><br />3(1) (x) - சாதிபெயரை சொல்லி திட்டுதல்<br /><br />3(1) (xi ) - பெண்களை மானபங்கப்படுத்துதல்<br /><br />3(1)( xiv) - பொது வழிகளை பயன்படுத்த தடை விதித்தல்<br /><br />3(1) ( xv) - குடியிருப்பிலிருந்து அகற்றுதல்<br /><br />3(2) ( iii) - சொத்துக்களை தீயிட்டு அழித்தல்<br /><br />3(2) (iv) - குடியிருப்பில் தீவைத்தல்<br /><br />3(2)( v) - 10 வருடத்திற்கு குறையாத தண்டனை<br /><br />ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் .<br /><br /><br /><br />திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு :<br /><br />1 . பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும். நிவாரண சேதங்களை மதிப்பிட்டு அவர்களுக்கு நீண்ட கால நோக்கில் பயன்தரவல்ல நிவாரணமாக அவை அமைய வேண்டும்.<br /><br />2 . தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம்(1989) இன் கீழ் மாவட்ட ஆட்சியரை சிறப்பு அதிகாரியாக நியமித்து சேதங்களை பார்வையிட்டு நிவாரணத்தை மதிப்பிட வேண்டும்.<br /><br />4 . தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்து மீண்டும் குடியமர்த்துவதொடு அச்சமற்ற முறையில் விசாரணையில் கலந்து கொண்டு சாட்சியம் அளிக்க வகை செய்ய வேண்டும். மேலும் தலித் மக்களை கைது செய்வதற்கு தோதாக வழக்கை பதிவு செய்துவிட்டு காத்திருப்பதையும் காவல் துறை கைவிட வேண்டும்.<br /><br />தமிழக அரசுக்கு :<br /><br />1 . அரசு சார்பாக தலித்துகளுக்கு வழங்கப்பட்ட நிலங்களையும் முத்தரையர் தரப்பு ஆக்கிரமிதுக்கொண்டதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன . தலித்துகளுக்கு நில உரிமை, அரசு சொத்துக்களில் உரிய பங்களித்தல் { குளம், கோவில் , கிராம சொத்து ஏலம் } .<br /><br />2 . தலித்துகள் தாங்கள் விரும்பும் அரசியல் அடையாளத்தை மேற்கொள்வதற்கான சுதந்திர உரிமையை காப்பாற்றுதல்.<br /><br />3 . சேதங்களை மதிப்பிடவும் சிக்கலை ஆராய்ந்து நிவாரணம் வழங்கவும் தனியான கமிஷன் ஒன்றை நிறுவ வேண்டும்.<br /><br />4 . ஊரை விட்டு வெளியேறி அல்லல்படும் தலித் இளைஞர்களை உடனடியாக ஊர் திரும்ப ஏற்பாடு செய்யவும் குற்றம் சாட்டப்பட்ட முத்தரையர்களை தவிர மற்ற முத்தரையர் ஆண்கள் ஊர் திரும்பும் வகையில் காவல் துறை செயல்பட உத்தரவிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கவும், வலியுருத்துகிறோம்.<br /><br /><br />உண்மை அறியும் குழுவினர்<br /><br />1.பகத்சிங் வழக்குரைஞர்<br /><br /> 2 . விஜயபாரதி வழக்குரைஞர்<br /><br /> 3 . ஸ்டாலின் ராஜாங்கம் பேராசிரியர்<br /><br />4 . முரளி ஆய்வாளர்<br /><br />5 . கண்ணம்மா ஆசிரியர்<br /><br />6 . திவ்யா சட்ட மாணவர்<br /><br />7. விஜயலட்சுமி சட்ட மாணவர்<br /><br />8 . விஜயன் சட்ட மாணவர்<br /><br />9. கிருஷ்ணா சட்ட மாணவர்<br /><br />10. பகவன் தாஸ் சட்ட மாணவர்<br /><br />11. பெரியசாமி சட்ட மாணவர்<br /><br />12. பாண்டியன் சமூக ஆர்வலர்<br /><br />13. தங்கப்பாண்டியன் சமூக ஆர்வலர்<br /><br /><br />புகைப்படங்கள் உதவி : திரு.பாரிச்செழியன்டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-35757569041560923562011-02-16T22:44:00.002+05:302011-02-16T23:05:23.913+05:30பௌத்தம் - பெரும்பான்மை வாதம் எங்கும் எப்போதும் பாசிசமே - டி.அருள் எழிலன்.<div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLpAEJQetWlVuC3u5fWcq5wrwwFdy3p5BFcT_ziwvGnz4jALj59QsiN8QjCvyl1UjAA2LELA6wGJBwiZ6rzn820H_ZSX_G-TV1U1oBJEGfg3btIGG7CfYkuhOzMab6bMeFdLQ4sQcb8CM/s1600/Sri_Lanka_Elections_Mahinda_Rajapaksa24012010_610542824012010.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5574337814711005266" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 270px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgLpAEJQetWlVuC3u5fWcq5wrwwFdy3p5BFcT_ziwvGnz4jALj59QsiN8QjCvyl1UjAA2LELA6wGJBwiZ6rzn820H_ZSX_G-TV1U1oBJEGfg3btIGG7CfYkuhOzMab6bMeFdLQ4sQcb8CM/s400/Sri_Lanka_Elections_Mahinda_Rajapaksa24012010_610542824012010.jpg" border="0" /></a><br />சென்னை எழும்பூரில் இருக்கிற பௌத்த மகா போதி சங்கத்திற்குச் சென்றிருந்தேன். மடத்தில் நிலவிய ஒழுக்கமும், தூலமான பேரமைதியும் எங்கோ ஒரு சனாதனக் கோட்டைக்குள் நுழைந்து விட்ட அருவறுப்பைக் கொடுத்தது. மயிலாப்பூரில் இருக்கிற பார்ப்பன மடமான இராமகிருஷ்ணா மடத்திலும் மகா போதி மடத்திலும் உரையும் அமைதியில் எந்த வித்தியாசங்களும் இல்லை. புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், மகாபோதி சங்கம், மயிலாப்பூர் மடம் என்று அவர்களின் தோற்றத்திலும் நடை உடை பாவனையிலும் வித்தியாசங்களில்லை. ஒரே ஒரு வித்தியாசத்தைத் தவிற அவர்களிடம் பூணூல் உண்டு. இவர்களிடம் பூணூல் இல்லை அவளவுதான். மற்றபடி மடத்தில் இருக்கும் பிக்குகள் மிகவும் இளைய வயதுள்ளவர்கள். இலங்கை அரசுக்கும் மகா போதி சங்கத்திற்கும் நேரடி உறவு உண்டு. இலங்கைத் தூதரகத்தின் ஒரு உளவு அமைப்பாக பௌத்த முகமூடியோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆரிய சிங்கள அமைப்புதான் மகா போதி சங்கம்.<br /><br />இடது வலது பக்கங்களில் அலங்கரித்துக் கொண்டிருக்கும் பொருட்களுக்கு மேலே நடு வாசலில் ஒரு மீசை மழித்த ஆசாமி படத்தில் இருக்கிறார். எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நினைத்தால்......ஆஹா அது அனகாரிக தர்மபாலா ஆரிய இனமான சிங்கள இனத்தின் மேன்மைகளைப் பேசி சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களுக்கு எதிராகவும், மலையாளிகளுக்கு எதிராகவும் இலங்கையில் இயக்கம் கட்டியவர். உலகம் எதிர்கொண்ட கிரேட் டிப்பரஷன் பொருளாதார நெருக்கடியும் இலங்கையின் தேயிலை வீழ்ச்சியும் திண்டாடிய தொழிலாளிவர்க்கத்தின் பிரச்சனைகளுக்கும் காரணமாக சிறுபான்மை மக்களினங்களைக் கைசுட்டி சிங்கள மேனையை நிறுவியவர். இந்திய எதிர்ப்பு (இந்து எதிர்ப்பு) என்பது அனகாரிகாவின் அடிப்படையாக இருந்தாலும். அவருக்கு பார்ப்பனர்கள் மீது பாசம் அதிகம் இருந்திருக்க இயல்பான ஒன்றுமையும் இருந்திருக்க வேண்டும். இங்கிருந்து கடல் வழியாக வர்த்தகங்களுக்காக சென்று வரும் இந்திய தொழிலாளர்களை மிலேச்சர்களாகச் சித்தரித்த அனகாரிகா , பௌத்த மறுமலர்ச்சி என்னும் பெயரில் சிங்கள பேரினவாதத்தை கட்டி எழுப்பியதில் பெரும் பங்காற்றியவர். ஒரு நன்றிக்கடனுக்காக அந்த பாசிஸ்ட் கருத்தியலாளரின் படத்தை இங்குள்ள போதி சங்க பிக்குகள் வைத்திருக்கக் கூடும். </div><div><br /><strong>பெரும்பான்மை வாதம்.</strong><br />பாபர் மசூதி இந்து வெறியர்களால் இடித்துத் தரை மட்டம் ஆக்கப்பட்டது. நாடு முழுக்க சிறுபான்மை முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. நூற்றுக்கணக்கான அப்பாவி இந்துக்களும், முஸ்லீம்களும் அந்தக் கலவரங்களில் கொல்லப்பட்டார்கள்.இந்தியா மட்டுமல்லாது பாபர் மசூதி இடிப்பு ஆசிய நாடுகள் முழுக்க சிறுபான்மை பெரும்பான்மை கருத்தியலை கட்டவிழ்த்து விட்டது. வங்கதேசத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் சிறுபான்மையினர். அங்கே சிறுபான்மை இந்துக்கள் துன்புறுத்தப்பட்டனர். அப்படி ஒரு சிறுபான்மை இந்துக் குடும்பத்தின் மன உணர்வை வெளிப்படுத்தி தனது சொந்த சமூகத்திற்குள் ஜனநாயகக் குரலாக ஒலித்தார் தஸ்லிமா நஸ் ரீன் தனது "லஜ்ஜா" நாவல் மூலம். இந்தியாவில் இந்துப்பாசிசம்..... ஏன் இந்து மதம் கூட உழைக்கும் மக்களுக்கு எதிரான மதம்தான். ஏனைய மதங்கள் ஏதோ உழைக்கும் மக்களுக்காகவே உருவாக்கப்பட்டிருப்பதாக நான் சொல்லவில்லை. மனிதனை மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்ளத் தயங்குகிற மதம் இந்து மதம். அது பெரும்பான்மை மதமாக இங்கு இருப்பதால் இங்குள்ள சிறுபான்மை இனங்களை நசுக்கி அழிக்கிறது. கொலை செய்கிறது, தேசப்பற்றை இந்து மதப் பற்றாக்கி, இந்து மதப் பற்றை தேசப்பற்றாக்கி பர்தா அணிந்த பெண்களை எல்லாம் பாலியல் வன்முறை செய்யத் தூண்டுகிறது. பாவம் வங்கதேசத்தில் வாழும் இந்து அங்கே அவன் எதிர்கொள்கிற தேசிய வெறியும் மத வெறியும் வேறு. எது எப்படி என்றாலும் வங்கதேசம்,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இந்தியா மாதிரி பெரும்பான்மை வெறி இல்லை என்று நிச்சயமாகக் கூறலாம். சொந்தச் சகோதரன் அவன் இன்னொரு மதத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் இந்தியாவில் இந்துப் பாசிஸ்டுகள் போல கொலை செய்வதில்லை இஸ்லாமிய மக்கள். ஆனால் இந்த கலாசாரப் பாசிசத்தை முஸ்லீம் அடிப்படைவாத அமைப்புகள் கையெடுத்துக் கொள்கின்றன. தலிபான்கள், முஜாகிதீன்கள், அல்கொய்தா, லக்ஷர் ஈ தொய்பா போன்ற அமைப்புகளோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களோ கலாசாரப் பாசிஸ்டுகளாக திகழ்கிறார்கள்.<br /><br /><br /><strong>இலங்கை பௌத்த பாசிசம்</strong><br /><br />இந்தியாவின் இந்து மாத வெறிக்கு சற்றும் குறையாத அல்லது அதை விட அகோரமான ஒரு பாசிச வெறி கொண்ட அரசு மதமாக பௌத்தம் இலங்கையில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. நிறுவனமயப்பட்ட பௌத்த மதத்தையும், இலங்கை அரசையும், அதன் மேன்மை மிக்க பௌத்த தலதா மாளிகையும், ஏனைய பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கரிய பீடங்களையும் தனித் தனியானவை, அரசுக்கும் இந்த மத நிறுவனங்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை, என்றெல்லாம் வேறுபடுத்தியோ தனித் தனியாகவோ பிரித்துக் காண முடியாது. இந்த மத நிறுவனங்கள் தவிற ஜாதிக ஹெல உருமய வேறு. எப்படி இந்தியாவில் பஜ்ரங்தள், ஆர்.எஸ். எஸ். விஷ்வ ஹிந்து பரிசத் போன்ற அமைப்புகள் வன்முறை அமைப்புகளாக தீர்மானிக்கும் சக்திகளாக செயல்படும் போது பிஜெபி, சிவசேனா போன்றவை வாக்கு வங்கி அரசியல் தளத்தில் வெகு சன அமைப்பாக செயல்படுகிறதோ அப்படித்தான் ஹெல உறுமயவும். பொதுவாக மல்வத்தை, அஸ்கரிய பீடங்கள் ஏதோ ஒரு பிரதான அரசியல் கட்சியின் ஆதரவு அமைப்பாக செயல்பட்டாலும் . போரின் முடிவுக்குப் பின்னர் இவர்கள் அனைவருமே இணைந்து செயல்படுகிற போக்கு காணப்படுகிறது. 2009- ஜனவரியில் கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற இடங்கள் படையினரிடம் விழுந்த போது, ஜாதிக ஜெல உறுமய அமைப்பின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர்.... மல்வத்தை பீட மகாநாயக்கத் தேரரையும் ,திப்பெட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரைசயும், அஸ்கரிய, பீட தேரரையும் சந்தித்து விட்டு உற்சாகப் பெருக்குடன் ஊடகவியளார்களுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனவரி 29- ல் வாழங்கிய நேர்காணல் // , ஜனாதிபதியின் சரியான வழிகாட்டலின் கீழும் முப்படைத்தளபதிகளின் தலைமையிலும் எமது இராணுவத்தினர் வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிட்டு அனைத்துப் பிரதேசங்களையும் மீட்டு வருகின்றனர். அடுத்த மாத இறுதிக்குள் வடக்கின் அனைத்தும் பகுதிகளும் எமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிடும்.பராம்பரிய கலாசார பௌத்த தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கான பல வேலைத் திட்டங்களை நாம் தயாரிக்க வேண்டியுள்ளது. மகாநாயக்க தேரருடனும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்// தொடர்ந்தும் கிளிநொச்சி புரதான பௌத்த நகராக இருந்தது என்றார்.<br /><br />பூம்புகாரும், கொற்கையும், மாமல்லபுரமும், தொண்டியும், மதுரை உள்ளிட்ட தமிழகமே ஒரு காலத்தில் சமணக்காடாக இருந்ததாக வரலாறு சொல்கிறது. சைவமும், வைணவும் சமணர்களைக் கொன்று மாபெரும் இனக்கொலை புரிந்த வரலாறுகள் உண்டு. இங்குள்ளதைப் போல கிளிநொச்சியும் ஒரு சமணக்காடாக இருந்திருக்கலாம். இங்குள்ள பண்டைத் தமிழர்கள் பௌத்தர்களாக இருக்கும் போது ஈழத் தமிழர்களிலும் ஒரு பிரிவினர் பௌத்தர்களாக இருக்கும் நியாயங்களை கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற பகுதிகளில் கிடைக்கும் பௌத்த எச்சங்கள் நமக்கு நிரூபிக்கும். வரலாற்றை மீள கட்டு எழுப்புவதும், தூய்மைப்படுத்தி அதை மேன்மையாக்க நினைப்பதும்தான் பாசிசத்தின் முதல் செயல்பாடு. அது இந்தியாவின் இந்துப்பாசிசத்திற்கும் பொறுந்தும், இலங்கையின் பௌத்த பாசிசத்திற்கும் பொறுந்தும். முஸ்லீம் மன்னர்களால் இடிக்கப்பட்ட இந்து ஆலயங்களை மீண்டும் கட்டு எழுப்பவதினூடாக இந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்த இங்குள்ள இந்துப் பாசிஸ்டுகள் விரும்புபது போல, ஈழத் தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கில் உள்ள இந்து, முஸ்லீம் ஆலயங்களையும் தொழுகைத் தலங்களையும் அகற்றி விட்டு அங்கு சந்திக்கு சந்தி விஹாரைகளை நிறுவுவதினூடாக பௌத்த மறுமலர்ச்சியை ஏற்படுத்த நினைக்கிறது பௌத்த பாசிசம். அய்யா அறிவுஜீவிகளே இந்து மதம் பாசிச மதம்தான். ஆனால் அதை பின் பற்றும் மக்கள்? அவர்களின் மரபில் சிறு தெய்வவழிபாடும் தமிழ் மரபுதானே? இந்துக்கள் என்பதாலேயே அவர்கள் கொல்லப்படுவதையும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் அழிக்கப்படுவதையும் ஆதரிப்பீர்களா?<br /><br /><br />கடவுள் மறுப்பு என்கிற தத்துவத்தின் கட்டப்பட்ட திராவிட இயக்கம் என்னும் சீர்திருத்த இயக்கம் கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் அது வழிபாட்டு உரிமையை ஆதரித்தே வந்திருக்கிறது. சீர்திருத்த வாதியான ஈ.வே.ரா பெரியாரின் தீண்டாமைக் கெதிரான போராட்டம் என்பதே வழிபாட்டு வாழ்வுரிமையின் ஒரு பகுதிதான். அதே வாழ்வுரிமை இந்துக்களான பார்ப்பரல்லாத ஈழத் தமிழர்களுக்கு உண்டா? இல்லையா? ஆனால் இன்று தமிழகத்தின் திராவிட இயக்க அறிவு ஜீவித் தளத்தில் ஒரு விதமான பௌத்த மேன்மை நினைவுறுத்தப்படுகிறது. அதாவது மாபெரும் இனக்கொலை ஒன்று பௌத்த மேலாதிக்க சிங்கள அரசுப் பாசிசத்தால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கிறது. நேரடியாக சிங்கள அரசையோ அதன் ஒடுக்குமுறையையோ ஆதரிக்க முடியாமல் மிக வசதியாக பௌத்த மரபிற்குள் இவர்கள் ஒழிந்து கொள்கிறார்கள். சரி பௌத்த மரபே இலங்கையின் அரசு பயங்கரவாதத்தின் ஒரு அங்கம்தான் என்றால் அதை ஏன் ஆதரிக்கிறீர்கள் என்றால் அமைதி காக்கிறார்கள். பெரியார், திராவிட இயக்கம் போன்றவைகளின் கடவுள் மறுப்புக் கொள்கையையும் இந்து மத எதிர்ப்பையும் தங்களின் சுயலாப பௌத்த முகமூடிக்காக ஒரு பிராண்டாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த இடத்தில்தான் மகா போதி சங்கத்தையும் தாக்கியவர்களும் பெரியார் இயக்கத் தோழர்கள்தான் என்பதை அறியும் போது இன்னமும் மக்களுக்கான அறம் செத்துப் போகவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.<br />ஒரு இடத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்கள் இன்னொரு இடத்தில் சிறுபான்மையாக வாழும் போது நமது ஆதரவு எப்போதும் சிறுபான்மை மக்களுக்கே அவர்கள் பௌத்தர்களா? தமிழர்களா? இந்துக்களா? என்பதல்ல பிரச்சனை. வரலாறுகளை தகர்த்தெறிந்தவர்கள் தங்களுக்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தவுடன் அதை நிறுத்திக் கொண்டதுடன் தோதான ஒன்றையும் போர்த்திக் கொள்கிறார்கள். ஈழப் படுகொலைகளுக்கு பின்னர் எல்லா விதமான வரலாறுகளையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது. சிறுபான்மை மக்கள் ஆதரவு என்பது மனித நேயத்தின்பால் இருக்க வேண்டும். நமக்கு வேண்டாத மதம் என்பதால் அவர்கள் சாகட்டும் என்பதை ஆதரித்து மௌனமாக இருப்பது போல மனித குலத்திற்கு எதிரானது வேறொன்றும் இல்லை. இலங்கையில் பௌத்த பாசிசம். இந்தியாவில் இந்துப் பாசிசம். மதங்கள் மனிதனுக்கு விடிவைத் தராது என்பதற்கு இது இன்னுமொரு சான்று. தந்திரங்களால் இனி அடுத்த தலைமுறையை ஏமாற்ற முடியாது. கனவான்களே.<br /><br /><br /><br /><div></div></div>டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-17220133221007691882011-02-15T23:01:00.000+05:302011-02-15T23:15:15.248+05:30எகிப்தில் நடந்தது புரட்சியா? தெரியலையே?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5IGrp9o6bjdxyA7mQb-AS9qSmBAcY_WuF3KXsSZiYwy-eixWHfdcRiuVlsFMJtGT3aMhJ7Dpl5hCdGQj4ApemBckJDpUNgGhXQODRcpIc4he6iPb9cv0uQEIHoRjXClxPD_5swLaCZtM/s1600/CAI16_EGYPT_0209_11.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5573971143924785474" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 267px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5IGrp9o6bjdxyA7mQb-AS9qSmBAcY_WuF3KXsSZiYwy-eixWHfdcRiuVlsFMJtGT3aMhJ7Dpl5hCdGQj4ApemBckJDpUNgGhXQODRcpIc4he6iPb9cv0uQEIHoRjXClxPD_5swLaCZtM/s400/CAI16_EGYPT_0209_11.JPG" border="0" /></a> எகிப்தில் புரட்சி நடந்ததா? என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அதற்குள் ஒரே வாழ்த்துக்களும், கொண்டாட்டங்களும் நடக்கின்றன. ஓரளவுக்கு ஆங்கிலத்தை எழுத்துக் கூட்டி கூட்டி வாசித்தாலும் தெரிய வருவது பரிதாபகரமான இருள் ஒன்று எகிப்தை சூழந்திருக்கிறது என்பதுதான். துனீஷியாவின் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து எகிப்தில் மக்கள் கிளர்ந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி எகிப்தின் சர்வாதிகார அரசின் நிர்வாகத்தை முடக்கியதோடு முழுமையான கெய்ரோவையும் முற்றுகையிட்டிருந்தார்கள். வழக்கமாக மக்களைக் கொன்றொழிக்க அரசுகளால் பயன்படுத்தப்படும் பீரங்கிகளின் வாய்கள் பிளாஸ்டிக் துணிகளால் கட்டப்பட்டு போராடிய மக்கள் ஓய்வெடுக்கும் ஒரு கனரக வாகனம் போல பயன்பட்ட்டது. இதற்கப்பால் எகிப்தில் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்டதெல்லாம் தனிக் கதை. ஆனாலும் இந்த பீராங்கிகள் ஏன் அமைதியாக இருக்கின்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் இருக்கும் கொடிகள் ஏன் செங்கொடிகளாக இல்லை? துனிஷியாவில் செங்கொடி தூக்கித்தானே போராடினார்கள். என்றெல்லாம் கேள்விகள். தமிழில் கலையரசன் ப்ளாக் படித்தே நான் இந்த மாதிரி விஷயங்களைத் தெரிந்து கொள்கிறேன். ஆனாலும் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவரோ முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியே எகிப்தில் போராட்டங்களை தலைமை தாங்குவதாகவும் பெரும்பாலான எகிப்தியர்களின் ஆதரவு அக்கட்சிக்கு இருப்பதாகவும் எழுதியிருந்தார்.<br />மக்களின் போராட்டங்களின் இறுதி இலக்கு என்ன? போராட்டங்களை எப்படி அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவாகள் என்றெல்லாம் யோசித்த போது ''என்ன ஆனாலும் சரி நான் எகிப்தை விட்டு வெளியேற மாட்டேன். உங்களுக்கு என்னதான் பிரச்சனை சொல்லுங்கள் பேசி சரி செய்யலாம்" என்று பேசினார். ஆனால் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை. வெளியே போ.... என்றார்கள். ஒரு வழியாக அவர் நாட்டிலிருந்து வெளியேறி ஒரு தீவுக்குள் சென்று விட்டாராம். இப்போது ஆட்சி? அது இராணுவ ஜெனரல் கைகளில். அடப்பாவிகளா? இதுக்கா போராடினீங்க?<br /><br />கடைசி வரை போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த ஒரு சர்வாதிகாரி இன்னொரு சர்வாதிகாரியிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சத்தமில்லாமல் நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருக்கிறார். எகிபதிய மக்கள் முபாரக்கிடம் தோற்று விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. என்னைப் பொறுத்தவரை எகிப்தில் மக்கள் ஜனநாயகத்திற்காகப் போராடுகிறார்கள். முஸ்லீம் சகோதரத்துவக் கட்சி அதை முன்னெடுக்கிறது அல்லது பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது. ஆனால் நோக்கம் நிறைவேறாமலேயே மக்கள் கலைந்து சென்று விட்டார்கள். இராணுவக் கவுன்சிலோ ''நடைமுறையில் உள்ள அரசியல் சட்டம் மக்களை திருப்திப்படுத்த வில்லை. ஆகவே அதை செயல்படுத்தாமல் விலக்கி வைக்கும். மெலும் பாராளுமன்ற அதிபர் ஆட்சிமுறையைக் இன்னும் ஆறு மாதங்களில் கொண்டு வருவோம். அதற்கு இப்போது நாட்டில் அமைதி நிலவ வேண்டும்"" என்று உயர் மட்ட கவுன்சில் அறிவித்திருக்கிறது. கவுன்சில் கூட்டத்தில் முபாரக்கில் ஆளுயரப் படத்தை அகற்றிச் செல்வதையும் வீடியோவாக எடுத்து வெளியிட மக்கள் சந்தோசக் கூச்சலிடுகிறார்கள்.<br />எகிப்தில் இனி என்ன நடக்கும் எனத் தெரியவில்லை.<br /><br />இன்றைய நிமிடம் வரை எகிப்தில் எந்த மாற்றமும் நடைபெற வில்லை. ஒரு கொடிய சர்வாதிகாரியிடம் இருந்து ஆட்சி மாறி இராணுவக் கவுன்சிலிடம் ஆட்சி மாறியிருக்கிறது. பெரும்பாலான மக்கள் கலைந்து சென்று விட்டார்கள். ஆனால் இன்னமும் தாஹிர் சதுக்கத்தில் ஒரு குழுவினர் போராடுகிறார்கள். பெரும் மக்கள் வெள்ளம் திரண்டிருந்த சதுக்கத்தில் இப்போது இராணுவத் தலைகள். ஒரு இஸ்லாமியப் புரட்சி என்றாலும் அது அமெரிக்காவுக்கு எதிராக இருந்தால் நல்ல விஷயம்தானே என்ற ஆவலில் இருந்தேன் எல்லாம் சப்பையாக முடிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. இதை எல்லாம் நினைக்கும் போது ஏனோ முத்துக்குமார் நினைவுக்கு வருகிறார். வெகு வேகமாக அவரைக் கொண்டு போய் புதைத்த புண்ணியவான்கள் தமிழீழ ஆதரவாளர்களும், தேர்தல் அரசியல்வாதிகளும். நாம் அன்றைக்கு சில அரசியல்வாதிகளிடம் அடிவாங்கிய மாதிரி எகிப்திலும் எவனோ ஒரு உணர்வாளன் ஒரு அல்லக்கையிடமோ, கைக்கூலியிடமோ அடிவாங்குவான் இல்லையா?டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-70356810270053338422011-02-13T19:01:00.003+05:302011-02-13T19:17:36.575+05:30இரோம் ஷர்மிளா கவிதைகள்.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAW6-FmZaJV0epvwZ8VVK9sHDBAYuzqhdQmW4mz-7NTiuLk7n_2DSJbUatWS-fvb7jTHVlMoEYxcP1IoXOjvRrlFnuFJzCaEcV0tHeLBvYK4cZd824riFMb5EyMPB4NdHCS2vXFZKnWxQ/s1600/irom-sharmila3.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 227px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgAW6-FmZaJV0epvwZ8VVK9sHDBAYuzqhdQmW4mz-7NTiuLk7n_2DSJbUatWS-fvb7jTHVlMoEYxcP1IoXOjvRrlFnuFJzCaEcV0tHeLBvYK4cZd824riFMb5EyMPB4NdHCS2vXFZKnWxQ/s400/irom-sharmila3.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5573166950878685970" border="0" /></a><br />மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தை விலக்கக் கோரி கடந்த பத்து ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் இரோம் ஷர்மிளா. தமிழில் முதன் முதலாக அவரது சில கவிதைகளையும் நேர்காணல்களையும் அம்பையின் மொழியாக்கத்தில் “அமைதியின் நறுமணம் “ என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு பதிப்பகம். போராடும் ஒரு பெண்ணின் தனிமையை, காதலை, துயரைப் பேசுகிறது இந்த நூல்.<br /><br /><span style="font-weight: bold;">காதல்<br /><br /></span>என் அன்பு என்று நான் குறிப்பிடும் நீ<br />தாங்க முடியாத சுமையாய்<br />என் தசைநார்களில் புகுந்துகொண்டிருக்கிறாய்<br />இனிமேல் என்னால்<br />வேறு யார் தரும் அன்பையும்<br />ஏற்க முடியாது<br />கனமில்லாத இந்தப் பாத்திரம்<br />அதன் விளிம்புவரை<br />நிரம்பியாகிவிட்டது.<br /><br />என்னிடமிருந்து வெகுதூரம் போய்விடு<br />என் நலன் பற்றி இனி விசாரிக்க வேண்டாம்<br />எனக்காகக் கவலைப்பட வேண்டாம்<br />காலப் புயல் என்னை அடித்துச் சென்றால்<br />அனலில் இடப்பட்ட வாழ்க்கை என்னுடையது<br />காலமெல்லாம் உடனிருக்கும் நண்பனுக்காக<br />என் மனம் ஏங்குகிறது<br />யார் ஏற்றாலும் சரி<br />ஏற்காவிட்டாலும் சரி<br />அவன்தான் என் வாழ்க்கையின் சாரம்.<br /><br />என் விழிகள் நிரந்தரமாக மூடும்போது<br />என் ஆத்மா வானத்தில் சிறகடிக்கும்போது<br />எனக்காகக் காத்திரு<br />என் அன்பே.<span style="font-weight: bold;"><br /><br />பாக்கியவதி<br /></span><br />இனிமேல் என்றும் எனக்குச் சொந்தமில்லாத<br />என் அன்பு<br />கழிவிரக்கத்துடன் என்முன் வரும்போது<br />காதல் என் உணர்வுகளைச் சீண்டுகிறது<br />என் விழிகளால் அவன் விழிகளைச் சந்திக்கும்<br />ஏக்கம் மூஷீமீகிறது<br />கட்டுப்பாடுகளின் சுவர்களுக்குஷீமீ நான்<br />அதனால்தான் மனமே இல்லாமல்<br />பின்வாங்கல்<br />என்னை மறந்துவிடு என் அன்பே<br />இன்று நான் வேறு ஒருவனுக்கு<br />உரிமையானவளாக இருக்கலாம்<br />அன்று நீ பச்சோந்தியானாளிணி<br />இப்படித்தான்<br />நாம் பிரிந்தோம், அன்புடன்<br />உன்னை நான் ஆராதித்தேன் மனமார<br />ஆனால் இன்று நீ<br />பாக்கியம் செளிணித இன்னொருத்திக்கு<br />உரியவன்.<br /><br /><span style="font-weight: bold;">அமைதியின் நறுமணம்.<br /><br /></span>வாழ்க்கை முடிந்துபோனதும்<br />உயிரற்ற கூடான என் உடலை<br />தயவுசெளிணிது தூக்கிச் சென்று<br />தந்தை கூப்ரூவின் மலை உச்சியில்<br />வைத்துவிடுங்கள்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK4HS_7aw1eZACoYqEq9r2kLxQ6-c2aFqKcfk_7xvH4SGmi59CsOCPiYNEUmGirUmQDYDjePnYL9qct3jyTC4Qc9dX-qFBbR8m0oq8Pstt68RdedT2bql49JSLFywdc929sAQFnRHEbio/s1600/amaithiyin+narumanam-Irom+Sharmila.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 400px; height: 298px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK4HS_7aw1eZACoYqEq9r2kLxQ6-c2aFqKcfk_7xvH4SGmi59CsOCPiYNEUmGirUmQDYDjePnYL9qct3jyTC4Qc9dX-qFBbR8m0oq8Pstt68RdedT2bql49JSLFywdc929sAQFnRHEbio/s400/amaithiyin+narumanam-Irom+Sharmila.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5573169824159215714" border="0" /></a><br />என் செத்த உடல்<br />கோடரியாலும் மண்வெட்டியாலும்<br />சிதைக்கப்பட்டு<br />நெருப்பில் சாம்பலாவதை<br />நினைத்தால்<br />மனத்தில் அசூயை பொங்குகிறது<br />வதங்கப்போகும் சருமம்<br />பூமியினடியே அழுகட்டும்<br />வரும் தலைமுறையினருக்கு அது உபயோகப்படட்டும்<br />உலோகக்கருவாக அது மாறட்டும்<br />இனி வரும் காலங்களில்<br />நான் பிறந்த காங்லேயின் வேர்களிலிருந்து<br />நான் அமைதியின் நறுமணத்தைப் பரப்புவேன்<br />உலகின் ஒவ்வொரு மூலைக்கும்.<br /><br /><span style="font-weight: bold;">வெற்றிபெற்ற புழு<br /><br /></span>கடவுளுக்கும் புழுவுக்கும் இடையே நடந்த போரில்<br />புழு கடவுளைக் கொன்றுவிட்டது<br />நேர்மையான மனிதன்<br />கடவுளாகப் போற்றப்படுவான்<br />கடவுளை எதிர்த்து வெற்றிகண்ட பாவிகளை<br />அசுத்தமான புழுவான நான் வெறுக்கிறேன்<br />அவர்களுக்கு இருளைத் தவிர<br />வேறொரு முடிவில்லை.<br /><br /><span style="font-weight: bold;">சிறை உலகை<br /><br /></span>என்னால் மறக்க முடியவில்லை<br />பறவைகள் சிறகடிக்கும்போது<br />விழிகளில் நீர் பொங்கும்<br />நடக்க முடியாத இந்தக் கால்கள் எதற்கு<br />என்னும் கேள்வி எழும்<br />பார்க்க முடியாத விழிகள் பயனற்றவை<br />எனக் கூவத் தோன்றும்<br />என்னைப் போன்றவர்கள்<br />கண்ணில்படாமல் மறைந்துவிடு ஓ சிறையே!<br />உன் வலிமையான சங்கிலிகளின் கொடுமையில்<br />வாழ்க்கைகள் சிதறுண்டன<br />உன்னால்தான் கடவுளுக்குச் சாபம்<br />உன்னால்தான் அதிகாரத்தை<br />நாங்கள் வெறுக்கிறோம்.<br /><br />சாவை எதிர்கொள்வது பற்றிய கேள்விக்கு சர்மிளா இப்படி பதில் சொல்கிறார். “ நான் இருப்பேனா வாழ்வேனா என்பது பற்றி எனக்கு எந்தப் பயமும் இல்லை. நாம் எல்லோரும் சாகத்தான் பிறந்திருக்கிறோம் என்பது உண்மை. என் ஆத்மா கடவுளின் பாதுகாப்பில் இருக்கிறது. நாம் நினைத்தபடி நாம் வாழ முடியாது... நினைத்தபடி சாகவும் முடியாது. எல்லாம் கடவுளின் கையில் இருக்கிறது. வாழ்வும் சாவும் அவன் கையில் இருக்கிறது. சாவு குறித்து எனக்கு எந்த அச்சமும்<br />இல்லை. இப்போது நான் செளிணிவதெல்லாம் கடவுளின் விருப்பமும் என் மக்களின் விருப்பமும்தான். ஒரு மனித உயிர் வாழும்போது அவனோ அவளோ பல தவறுகளைச் செளிணியலாம். நம் பெற்றோர் நமக்குப் பிறப்பளித்தாலும் அவர்கள் குணங்கள் எல்லாம் நமக்குண்டு என்று சொல்லிக்கொள்ள முடியாது. எனது தாய் தந்தையிடம் வேண்டாத குணங்கள் உண்டு. அவர்கள் என்னை வளர்த்த போது அவர்கள் சரி என்று கருதிய முறையில் வளர்த்தார்கள். ஆனால் நான் வளர்ந்து பெரியவளாகி எது சரி எது தவறு என்பதை உணர்ந்தபோது அவர்கள் செய்ததில் எது சரி எது தவறு என்பது எனக்குத் தெரிந்தது. அவற்றைத் திருத்தும் ஆசை ஏற்பட்டது. அதுபோலவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும் ஆசைப்படுகிறேன்.<br /><br /><span style="font-weight: bold;">நூல் கிடைக்குமிடம்.<br />அமைதியில் நறுமணம்.<br />வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்,<br />669, கே.பி.சாலை,<br />நாகர்கோவில்,<br />629001.<br /><br />நன்றி- குங்குமம்<br /></span><span style="font-weight: bold;"></span><span style="font-weight: bold;"></span><span style="font-weight: bold;"></span>டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-33331095428133474282011-01-29T13:59:00.006+05:302011-01-29T14:08:36.157+05:30தண்டகாரண்யாவில் சல்வார்ஜூடும்- இராமேஸ்வரத்தில் இலங்கை கூலிப்படைகள்.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTk5ufyX5BP77m4ZGM3VXQJr8kwvnnDBsG1t3VNheVMwHJjN4wiSut09C4mnp0po8HRx4vtOLb3OfRVBJ4ojuWxOqzzhiUpFOjggR8Jp92wD7PDuf8l3ZhAfo109BBAQUZv-yXOoZGYFE/s1600/TM_30-03-07_E1_08-05%252520CNI.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTk5ufyX5BP77m4ZGM3VXQJr8kwvnnDBsG1t3VNheVMwHJjN4wiSut09C4mnp0po8HRx4vtOLb3OfRVBJ4ojuWxOqzzhiUpFOjggR8Jp92wD7PDuf8l3ZhAfo109BBAQUZv-yXOoZGYFE/s400/TM_30-03-07_E1_08-05%252520CNI.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5567522975971190642" border="0" /></a>இதுவரை 539 மீனவர்களை இலங்கைக் கடற்படைச் சுட்டுக் கொன்றிருக்கிறது.இந்திய அரசோ தமிழக அரசோ உருப்படியாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. மக்களுக்கு எதிரான ஜெயலலிதாவும், கருணாநியும் நடத்தும் அரசியல் நாடகங்களுக்கு மட்டுமே இந்தப் படுகொலைகள் இதுவரை பயன்பட்டு வந்திருக்கிறது. தமிழகத்தின் பழவேற்காட்டில் தொடங்கி குமரி மாவட்டம் நீரோடி வரை சுமார் ஆயிரத்துச் சொச்சம் கிலோ மீட்டரைக் கொண்ட வங்கக்கடலிலும், அரபிக் கடலிலுமாக மீன் பிடிக்கிறார்கள். இந்திய இலங்கை கடல் எல்லையில் மட்டுமே கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீதான இந்தத் தாக்குதலை இலங்கை மேற்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பின் பின்னர் எல்லா எதிர்ப்பியக்கங்களுக்கும் அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாத முத்திரையை புலிகளுக்கு எதிராக மிகத் தந்திரமாகப் பயன்படுத்திய ராஜபட்சே, இந்தியாவின் தனியார் தாராளமயாக்கலையும் மக்களின் நிலங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் அதன் உள்நாட்டு முதலாளிகளின் நலனையும் புரிந்து கொண்ட ராஜபட்சே இந்திய, இலங்கை நலன்களுக்காக இராமேஸ்வரம் மீனவர்களைக் கொன்று அந்த கடல்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நினைக்கிறார். மிகச் சரியாக தமிழக தலைவர்கள் குறித்தும் அறிந்து வைத்திருக்கும் ராஜபட்சேவுக்கும் அவரது கும்பலுக்கும் தெரியும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் கோமாளிகள் என்று. கோமாளிகளால் முன்னெடுக்கப்படும் தேர்தல் நேர நாடகமென்பதும் ராஜபட்சேவுக்குத் தெரியும். அதனால்தான் வழக்கம் போல இந்தியாவோடு பரஸ்பர புரிதலோடு இந்த மீனவர் படுகொலைகளை வைத்தே கடற்கரை தொடர்பான கட்டுப்பாடுகளைக் கொண்டு வரும் முயற்சியில் இரு நாடுகள் இறங்கியிருக்கிறது. மீனவர்களுக்க்கு லைசென்ஸ் முறை கொண்டு வந்து கடலோரத்தில் மீன் பிடிப்பை ஒழுங்கு செய்வது, பன்னாட்டு நிறுவனங்களின் கடல் கொள்ளைக்கு எதிராக அவர்களின் ஏரியாவுக்குள் ஊடுறுவும் நம்மூர் படகுகளை கைப்பற்றி சட்டவிரோத காவலில் வைத்து, தீர்மானிக்கப்பட்ட தீர்ப்பின் படி ஒன்பது வருடம் வரை சிறையில் தள்ளுவது (கைது செய்யப்படுகிற மீனவர்களை எத்தனை நாள் வேண்டுமென்றாலும் சட்டவிரோத காவலில் வைத்திருக்க அனுமதிக்கிறது இச்சட்டம்) என்கிறது அந்த கருப்புச் சட்டமான கடற்கரை மேலாண்மைச் சட்டத்தின் ஷரத்துக்கள்.<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZNHD7EzI2XijWRffqEpwCA1uQwyoWpyfpPzDwJztI_sfJ9JhYXxVKNLHqY1gVW97hUEWZGV455OD9kGYIMswkuc4naJ12NwWjE7Pmg1zQB1FPNMm4L_xytFEOno918N7maOkUtcLE9aM/s1600/banner.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 133px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjZNHD7EzI2XijWRffqEpwCA1uQwyoWpyfpPzDwJztI_sfJ9JhYXxVKNLHqY1gVW97hUEWZGV455OD9kGYIMswkuc4naJ12NwWjE7Pmg1zQB1FPNMm4L_xytFEOno918N7maOkUtcLE9aM/s400/banner.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5567523398820632162" border="0" /></a><br /><br />வழக்கம் போல மீனவர் படுகொலைகளின் போதும் நாடகமாடும் ஜெயலலிதா, கருணாநிதி யார் இனி ஆட்சிக்கு வந்தாலும் இச்சட்டத்தை அமல்படுத்துவார்கள். நாம் நடத்திக் கொண்டிருக்கும் திராவிட, தமிழ் தேசிய அரசியல் எதுவாக இருந்தாலும் அது எல்லையோர பழங்குடி மக்களை நிராகரிக்கும் ஒரு அரசியலே. புவியியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட பழங்குடிச் சமூகங்கள் அதிராக வர்க்கங்களுக்கு எதிராக எழுச்சி பெறும் இந்தக் காலத்தில் இந்தியாவின் தெற்கு மூலையில் எல்லையோரப் பழங்குடிகளான மீனவ மக்களை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தே வஞ்சிக்கிறது. இரு நாடுகளுக்குமே அந்தப் பகுதியில் மீனவர்கள் வாழக்கூடாது என்பதுதான் எண்ணம். நீண்டகால அரசியல் திட்டங்களும், இராணுவ நோக்கங்களும், வர்த்தக நோக்கங்களுமாக பல காரணிகளின் இந்திய இலங்கை அரசுகளுக்கு இருப்பதால் அவர்கள் இக்கொலைகளை ஊக்குவிக்கிறார்கள். முன்னர் நேரடியாக இராணுவத்தை வைத்து இக்கொலைகளை செய்த இலங்கை அரசு இப்போது சட்டவிரோத ஆயுதக் குழுக்களை இக்கொலைகளுக்கு பயன்படுத்துவதாகத் தெரிகிறது. தண்டகாரண்யாவில் சல்வார்ஜூடும் என்ற சட்டவிரோத ஆயுதக் குழுவை பழங்குடி மக்கள் மீது ஏவும் இந்திய அரசு. இராமேஸ்வரத்தில் இலங்கை அரசின் கூலிப்படைகளை தனது சொந்தக் குடிகளாக மீனவப்பழங்குடி மக்கள் மீது ஏவ அனுமதிக்கிறது. இக்கொலைகளை இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தே நடத்தும் இனப்படுகொலை என்று சொல்வதற்கான முழு உண்மையும் இதில் உள்ளது. இந்தியாவின் கோரமான இந்தப் பச்சைப் படுகொலைகளை கண்டிக்கவோ சுட்டிக்காட்டவோ தயங்கும் நாம் சீனா இந்தியாவைத் தாக்குகிறது, பாகிஸ்தான் இந்தியா மீது பாய்கிறது என்று கரடி விட்டுக் கொண்டிருக்கிறோம். மக்களை குண்டு வைத்துக் கொல்லும் பயங்கரவாத அழிவு சக்திகள் செய்யும் நாசகார வேலையைத்தானே இந்தியா அதன் சொந்தக் குடிகள் மீது செய்கிறது.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEfPbF_yF5_sTPb9EtyXdTSv7y29okhlNnyv5fGInJwqXM4S-yD1B6ttFnUGJNkGxeJU1KY_BJuqNW_C_wEqS5khgaZHQOLP40mcEeyfLPUNCpV2pZqYKqUkUKHq24cFvCnKsLmNXvbNo/s1600/3gattoale_interieur_cp-2-8674a.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 285px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEfPbF_yF5_sTPb9EtyXdTSv7y29okhlNnyv5fGInJwqXM4S-yD1B6ttFnUGJNkGxeJU1KY_BJuqNW_C_wEqS5khgaZHQOLP40mcEeyfLPUNCpV2pZqYKqUkUKHq24cFvCnKsLmNXvbNo/s400/3gattoale_interieur_cp-2-8674a.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5567523830092705106" border="0" /></a><br /><span style="font-weight: bold;">ஒரு இணைய முயர்ச்சி. www.savetnfisherman.org </span><br /><br />மீனவர் படுகொலை தொடர்பாக இருந்த அலுப்பையும் சலிப்பையும் போக்கியது இந்த இணையதளம்தான். யுவகிருஷ்ணா இதை ஆதரியுங்கள் என்று தன் ப்ளாக்கில் போட்டிருந்தார் முதலில் அது என்னவன்று எனக்குப் புரியவில்லை. பின்னர்தான் தெரிந்தது டிவிட்டர் மூலம் குறிப்பிட்ட ஒரு பிரச்சனைக்காக கருத்துப் பரிமாறி உலக அளவில் கவனத்தை ஈர்க்கும் ஒரு இணையதளம் இது என்று. நன்றாக இருந்தது பல முன்னணி பதிவர்களும் டிவிட்டர்களும் வந்து கருத்துச் சொன்னார்கள். பத்ரி, சந்தனமுல்லை, கார்த்திக், அதிஷா, பாலபாரதி, உண்மைத்தமிழன், இன்னும் ஏராளமானோர் கமெண்டுகள் அடிக்கடி வந்தது. நானும் கமெண்ட் போடலாம் என்று போட்டேன் ஒரு கட்டத்தில் என்ன போடுவதென்று தெரியவில்லை. கருணாநிதியைத் திட்டி நான்கைந்து கமெண்டுகளைத் தட்டி விட்டேன். அதாவது கருணாநிதி மீது இருக்கும் அரசியல் விமர்சனம் வேறு. ஆனால் இந்த இணையம் கருணாநிதியைத் திட்ட துவங்கியதல்ல இது நமது மீனவர் பிரச்சனையை, இந்தியாவின், தமிழகத்தின் வஞ்சகத்தை, அதன் கையாலாகத் தனத்தை, அல்லது சொந்தக் குடிகளுக்கு அரசுகள் செய்யும் துரோகத்தை உலக அளவில் பேசி கவனத்தை ஈர்ப்பதே நோக்கம் என்னும் போது குறிப்பிட்ட பிரச்சனை தொடர்பான கருத்துக்களை பரிமாறுவதன் மூலமே நோக்கத்தில் வெற்றி ஈட்ட முடியும். தவிறவும் ரோசா வசந்த் ஒரு கமெண்ட் போட்டிருந்தார் ’’சத்தம் போடாதீங்க ஆங்கிலத்தில் எழுதுங்கள்” என்கிற தொனியில் சொல்லியிருந்தார் எனக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை. தமிழை மட்டுமே வைத்துக் கொண்டு இனி காலத்தை ஒட்ட முடியாது. தமிழில் அதிகமானோர் பங்காற்றும் அதே நேரத்தில் காத்திரமான மொழி பெயர்ப்புகள், கட்டுரைகளை ஆங்கிலத்தில் உருவாக்க வேண்டும். தமிழில் இருக்கும் கட்டுரைகள் எந்த அந்நிய மொழிச் சிந்தனைகளுக்கும் சளைத்ததல்ல அக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் மாற்றி இந்த இணையம் மூலம் கொண்டு செல்ல வேண்டும். வெகுவேகமாக உருமாறிக் கொண்டிருக்கும் தகவல் தொழில் நுட்பமும் உலக அளவில் செய்திகளைக் கொண்டு சேர்க்கவும் ஆங்கிலப் பகிர்தல்கள் அவசியம். ஆங்கிலம் தெரிந்த நபர்கள் உண்மையான அக்கரையோடு இதில் களமிரங்க வேண்டும். என்பது என் கோரிக்கை. மற்றபடி www.savetnfisherman.org இணையத்தை துவங்கியவர்களே இந்த வருடத்தின் மிகச் சிறந்த மனிதர்கள் கருத்துப் பரவலில் சிறந்த முன்னோடிகளாக திகழ்ந்து இந்தியா முழுக்க ஒரு டிவிட்டரில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது ஒரு இணையக் கிளர்ச்சிதானே? அந்த நண்பர்களை பாராட்டுகிறேன். மீனவர் படுகொலை தொடர்பாக உங்கள் கட்டுரைகளை savetnfisherman@gmail.com அனுப்புங்கள்.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-72476668337220492112011-01-24T19:53:00.006+05:302011-01-24T19:57:50.456+05:30ஒரு எழுத்தாளன் நான் இதற்கும் ஆசைப்பட்டிருக்கிறேன் -நாஞ்சில் நாடன் பேட்டி.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtIpCWEjDnMDakKcDuWRzYUhdCZ9sK8NGutrj4vnFOA8iGn4fJEeiunJ5ehMV9Qe81Vk5ueM5lz1zTOTUcyUJvyyOLINm8p6sTUCWs_x7c0mg_QdAPiwAKn3bXYQL0Vg93RceckhG75Wo/s1600/2010122750670101.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5565758142646209682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 350px; CURSOR: hand; HEIGHT: 248px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtIpCWEjDnMDakKcDuWRzYUhdCZ9sK8NGutrj4vnFOA8iGn4fJEeiunJ5ehMV9Qe81Vk5ueM5lz1zTOTUcyUJvyyOLINm8p6sTUCWs_x7c0mg_QdAPiwAKn3bXYQL0Vg93RceckhG75Wo/s400/2010122750670101.jpg" border="0" /></a><br />‘‘ விருப்பு வெறுப்புகளுப்பால் நான் இந்த மக்களோடும் மண்ணோடும் ஊடாடிக் கொண்டிருக்கிறேன். மனதுக்குப் பட்டதைச் சொல்லியிருக்கிறேன். வெட்கம், அவமானம், பெருமிதம், பசி, இரக்கம், காமம், அறச்சீற்றம் என எல்லா உணர்வுகளாலும் எல்லா மனிதர்களைப் போலவே கட்டப்பட்டவன்தான் நானும். 1977 - ல் நான் ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை எழுதிய போது நான் மதிக்கும் விமர்சகர்கள், எழுத்தாளர்கள் என எல்லோரும் அந்த நாவலைப் பற்றி மதிப்பிட்டதிலிருந்து என்னை நான் சாகித்ய அகாடமி விருதுக்கு தகுயானவன் என்று நினைத்திருந்தேன். அந்த நாவல் சுமார் எட்டு பதிப்புகள் கண்டு இருபதாயிரம் பிரதிகள் வரை விற்றுத் தீர்ந்து சுமார் 35 ஆண்டுகளாக நான் எழுதியும் விட்டேன். இப்போது எனக்கு சாகித்ய அகாடமி விருது கொடுத்திருக்கிறார்கள். இப்போது எனக்கு வயது 63’’<br /><br /><br /><br />என்று விருதின் மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் நாஞ்சில் நாடன் தனது இளமையின் வசீகரத்தை இன்னும் வயதில் தொலைத்து விடவில்லை. எழுத்தைப் போலவே எப்போதும் கலகலப்பாக இருக்கிறார் நாஞ்சில் நாடன். ஆறு நாவல்களும், ஒன்பது சிறுகதைத் தொகுப்புகளும், 112 சிறுகதைகளும், கட்டுரை கவிதைகளும் எழுதியிருக்கிறார். தமிழில் வட்டார வாழ்வியலை நவீன இலக்கியத்திற்கு பரிச்சயப்படுத்தியது நாஞ்சில் நாடனின் எழுத்து.<br /><br />‘‘எல்லோருடைய சந்தோசங்களையும், எல்லோருடைய துக்கங்களையும் நான் சுமந்து நடப்பவன் என்கிற முறையில் ஒரே நேரத்தில் இந்த விருது எனக்கு சந்தோசத்தையும் கொடுக்கிறது. கூடவே சில கவலைகளையும் நான் பார்க்க எழுதவந்தவர்கள் எழுதத்துவங்கிய சில ஆண்டுகளுக்குள்ளாகவே சாகித்ய அகாடமி விருது பெற்று விட்டார்கள். ஆனால் தமிழ் எழுத்துப்பரப்பில் என்னை விட மூத்தவர்களும் உண்டு என் சமகால எழுத்தாளர்களும் உண்டு அம்பை, வெங்கட்சாமிநாதன், நா.முத்துசாமி, கோவை ஞானி, ஞானக்கூத்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, ஜெயமோகன், பா.செயப்பிரகாசம், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், கலாப்ரியா, ம.இல.தங்கப்பா என்று நீண்டு செல்லும் இந்த பட்டியலின் பின்னே ஒரு புறக்கணிப்பு அரசியல் உண்டு. இன்று எனக்குக் கிடைத்ததற்காக நான் பெருமைப்படலாம், என் எழுத்தால் மட்டுமே இது சாத்தியமானதென்று மார்தட்டலாம் ஆனால் என் வாழ்வில் என் சிந்தனையில் ஏதோ ஒருவகையில் இவர்கள் எல்லோரும் இணைந்த ஒரு கலவையாகவே நான் இருக்கிறேன். இவர்களின் எல்லா காலடித் தடங்களுள் என்னுடையதும் ஒன்றாக இருக்கும் போது இந்த புறக்கணிப்பை சுட்டிக் காட்டுவதை என் கடமையாக நினைக்கிறேன். இவர்களோ நனோ விருதுகளுக்காக தேடி அலைந்தவர்களில்லை. ஆனால் அது தீவீரமாக இயங்கும் எழுத்தாளர்களுக்கு கிடைக்காமல் போகும் போது அது இந்த மக்களுக்குத்தான் இழப்பே தவிற எழுத்தாளனுக்கில்லை. ’’ என்கிறார் நாஞ்சில் நாடன்.<br /><br /><br />நாஞ்சில் நாடனுக்கு இப்போது சூடிய பூ சூடற்க என்னும் சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவரோ நாஞ்சில் நாட்டு உணவு வகைகள் குறித்து ஒரு நூலை எழுதி முடித்திருக்கிறார். இன்னும் ஐந்து வருடங்களுக்கான எழுத்துத் திட்டங்களோடு இருக்கும் நாஞ்சில் நாடன் தற்போது கோவையில் வசிக்கிறார்.<br /><br /><br />‘‘ ஆண்டாளை ‘சூடிக் கொடுத்த சுடர்க் கொடி’ என்று சொல்வார்கள். திருவில்லிப்புத்தூரில் இருக்கிற பெருமாள் மீது கொண்ட காதலால் தன் கழுத்தில் சூடிய மாலையை பெருமாளுக்குக் கொடுத்தாளாம் ஆண்டாள். பொதுவாக ஒருவர் சூடிய பூவை இன்னொருவருக்குக் கொடுக்கும் மரபு நம்மிடம் இல்லை. ஆனால் ஆண்டாளின் அந்த செயல் பிடித்திருந்ததால் ஒரு சிறுகதைக்கு சூடிய பூ சூடற்க என்று பெயர் வைத்தேன். அந்த நூலுக்குத்தான் விருது கிடைத்திருக்கிறது. இந்தப் பொழுது சந்தோசமாக கழிகிறது. ஒரு எழுத்தாளன் நான் இதற்கும் ஆசைப்பட்டிருக்கிறேன் என்ன செய்ய? ’’ என்கிறா நாஞ்சில் நாடன்.<br /><br />நன்றி- குங்குமம்.<br /><br /><br /><br /><br /><p></p><br /><p></p>டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-86019964760243330302011-01-21T14:25:00.001+05:302011-01-21T14:30:04.629+05:30இலங்கை - கைது கடத்தல் காணாமல் போதல்.<strong>கைது, அல்லது கடத்தல்,</strong><br /><strong></strong><br />இலங்கையில் போர் நிறுத்தம் கோரிய தமிழக போராட்டங்களை முழு அர்ப்பணிப்போடு நடத்தியவர்களில் குறிப்பிடத் தக்கவர் தோழர் அங்கயர்கன்னி. பெருஞ்சித்திரனாரின் பேத்தியான கயல் என்னும் அங்கயர்கன்னி அவரது உறவினரான திருமலை என்பருடன் முறைப்பட<br />சுற்றுலா விசா பெற்று இலங்கை சென்றுள்ளார். அப்படி சென்றவர்களை இலங்கை இராணுவம் கடத்திச் சென்று மறைத்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் குறித்து எவ்வித தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை. தோழர் கயல் விடுதலைச் செய்யப்படா விட்டால் வழக்கறிஞர்களும் பத்திரிகையாளர்களும் போராட்டங்களை முன்னெடுக்கும் முயர்ச்சிகளை நண்பர்கள் துவங்கியுள்ளனர். போர் நிறுத்தம் கோரிய தமிழக போராட்டங்களில் கயலின் பங்கு அளப்பரியது. தோழர் முத்துக்குமாரின் உடல் கிடத்தப்பட்டிருந்த கொளத்தூரில் அந்த மூன்று நாட்களும் அவர் வழக்கறிஞர்களோடு இணைந்து நின்று முத்துக்குமாரின் கனவுகளுக்காக போராடினார். அவரது கைது நாம் அனைவருக்கும் விடப்பட்ட சவால். ஆவன செய்வோம்.<br /><strong>பிரகீத் எகனெலியகொட நீங்களும் கேளுங்கள்.</strong><br /><br />இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் கொலைகள்தான் நின்ற பாடில்லை. கோத்தபய ராஜபட்சேவின் கண்காணிப்பின் இயங்குவதாகச் சொல்லப்படும் சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் இன்னமும் மக்களையும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க விரும்புவோரையும் கொன்றொழித்து வருகிறார்கள். இலங்கை அரசின் போர் முடிவுக்கு வந்த பின்னர் ஊடகங்கள் அமைதியாகிப் போயின. அல்லது அரசுக்கு ஆதரவாக மட்டுமே எழுத வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டு வருகிற நிலையில் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திரம் கோரி நோம் சோம்ஸ்கி, அருந்ததி ராய், கென் லோச், அன்ரனி லொவென்ஸ்ரீன், தாரிக் அலி, ஆகியோர் ஒப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு, இலங்கையில் ஜனநாயகத்திற்கான அமைப்பு, புலம்பெயர் ஊடகவியலாளர்களின் வலையமைப்பு ஆகியன சர்வதேச ரீதியாக கவனத்துக்குட்படுத்தும்படி கோரியுள்ளன.<br /><br />அரசியல் கார்டூனிஸ்டான பிரகீத் எகனெலியகொட காணாமல் போய் ஒரு வருடமாகும் நிலையில் இன்று வரை அவர் குறித்த மௌனத்தை மட்டுமே பதிலாகத் தருகிறார்கள் இலங்கை ஆட்சியாளர்கள். பிரகதீக் கட்டத்தப்பட்டு 2010 ஜனவரி 24ஆம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடையப் போகிறது. இந்நிலையில் சர்வதேச அளவிலான கலைஞர்களை அழைத்து காலி இலக்கிய சர்வதேசத் திருவிழா ஒன்று கொழும்பில் நடத்தப்படும் நிலையில் காணாமல் போன பிரகதீக் குறித்த கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.<br /><br />இதில் நம் மரியாதைக்குரியவர்கள் கையொப்பம் மிட்டிருக்கிறார்கள். நீங்களும் இடுங்கள்... பிரகீத்திற்காக,<br /><br />நோம் சோம்ஸ்கி அருந்ததி ராய் கென் லோச் அன்ரனி லொவன்;ரின் தாரிக் அலி சேரன் டேவ் ரம்ரன் .கையொப்பம் இட - <a onmousedown="'UntrustedLink.bootstrap($(this)," href="http://en.rsf.org/sri-lanka-galle-literary-festival-appeal-19-01-2011,39355.html" target="_blank" rel="nofollow">http://en.rsf.org/sri-lanka-galle-literary-festival-appeal-19-01-2011,39355.html</a>டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-17670785641964697952011-01-14T12:40:00.006+05:302011-01-14T13:35:04.303+05:30மீனவர் படுகொலைகள்- யார் காப்பாற்றுவார்கள்?<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiY-6c8cksohWjyFV1pu6W8cykmlfy6qLLxaqSbJ57c7rY3vrvEi9hIUtjsqxg4cK0YZRZVO_8FBJf6noFJh8-RQDTQUgpfuoK4kc0MjAGPh4xLqhQwHwK208nxsTrGOSoQ3E7Vy5q1uPU/s1600/EKCA6CP776CAB3XISICAV7Q970CAPTOXQ6CA6RGZW0CAUAPOS2CAWOOKJNCA3415VPCA9VA3B0CA8FIVIWCA97IEB8CA5KHBBQCA8MVE45CAGN59ZECAEHVURLCACTNZ80CAV8VZ7BCA1OBESFCAZ8GR22.jpg"></a><br /><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0Xm7vWIfNSMeqJVMhyphenhyphenoC14mUslzwAjdcmV00pUAQkM10WCOsRcBXyUXV9rq8-xnOIXJfdaYN2CH3Y7rjGEGbztrfApEH5Ti4bKNhVMJdsE-kvkB5c8N1o4NcMmOsWtFsUKF6iOzUFbRc/s1600/fishermen_500.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5561938842302879506" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 230px; TEXT-ALIGN: center" alt="" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0Xm7vWIfNSMeqJVMhyphenhyphenoC14mUslzwAjdcmV00pUAQkM10WCOsRcBXyUXV9rq8-xnOIXJfdaYN2CH3Y7rjGEGbztrfApEH5Ti4bKNhVMJdsE-kvkB5c8N1o4NcMmOsWtFsUKF6iOzUFbRc/s400/fishermen_500.jpg" border="0" /></a> சென்ற ஆண்டு செல்லப்பன் கொல்லப்பட்டார் இந்த ஆண்டு பாண்டியன் கொல்லப்பட்டிருக்கிறார். இதற்கு முன் பல நூறு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்திய, இலங்கை கடலோர எல்லையில் மீன் பிடிக்கக் கூடாது என்பதும். இனி மேல் ஈழத்தில் எவ்விதமான அரசியல் முயர்ச்சிகளும் இல்லாமல் போக வேண்டுமென்கிற நீண்டகால நோக்கில் இராமேஸ்வரம் பகுதி இரு நாட்டு அரசுகளின் பிடிக்குள் வருவதும். மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதும்தான் இந்திய, இலங்கை அரசுகளின் திட்டம். கூட்டுக் கொலை செய்வதோ கூட்டம் கூட்டமாய் மக்களை வெளியேற்றுவதோ நகர்புறங்களில் இலகுவாக இருக்கும் போது எல்லைப் புற கிராமங்களில் அரசுகள் இம்மாதிரியான கொலைகளையும் கடற்கரை மேலாண்மைச் சட்டங்களையுமே நம்பியிருக்கிறது. மற்றபடி இனி இராமேஸ்வரம் மீனவர் படுகொலைகளைக் கூட இனப்படுகொலைகள் என்று சொல்வதற்கான எல்லா அர்த்தங்களும் உண்டு. தண்டகாரண்யா படுகொலைகளை பழங்குடி இனப்படுகொலை என்று சமீபகாலத்தில் அறிவுஜீவிகள் குறிப்பிடும் நிலையில் இராமேஸ்வரப் படுகொலைகளையும் இனி நாம் அப்படியே அழைக்கலாம். இந்த இனப்படுகொலைகளுக்கு பொறுப்பாளி இலங்கை மட்டுமல்ல இந்தியாவும்தான்.<br /><br />தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கருணாநிதி மன்மோகனை இப்பிரச்சனையில் தலையிடக் கோரி அவசரத் தந்தியை எல்லோருக்கும் முன்னர் முதல் ஆளாக டில்லிக்கு அனுப்ப, இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்தை நேரில் அழைத்து இந்தியா இது தொடர்பாக அறிவுறுத்த அவரோ ஊடகங்களில் // மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடாது. அவர்களை தாக்கக் கூடாது என்று எங்கள் கடற்படைக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்து வந்தாலும் கூட தாக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளோம். இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து இந்தியா அதிகாரப்பூர்வமாக இலங்கை அரசுக்கு தெரிவித்து இருப்பதால் இதுகுறித்து இலங்கை அரசு விசாரணை நடத்தும் என்று அவர் கூறினார். இலங்கைத் தரப்பிலும் இந்தியத் தரப்பிலும் விசாரணை நடத்தப்படும்போதுதான் உண்மையிலேயே நடந்தது என்ன என்பது தெரிய வரும் என்று அவர் கூறினார். எனக்குக் கிடைத்த தகவல்படி சம்பவம் நடந்த பகுதியில் எங்கள் கப்பல் இல்லை என்று கூறப்படுகிறது // என்று நாங்கள் கொலை செய்ய வில்லை என்று சொல்லியிருக்கிறார்.<br />போரின் போதும் போருக்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வன்னி மக்களை கூட்டுக் கொலை செய்த பௌத்த பாசிச பேரினவாத சிங்கள அரசு. இப்போதும் படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது. தன் சொந்தக் குடிகளான சிங்கள மக்கள் மீதும், வடக்கிக் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மீதும் இப்படுகொலைகள் ஏவப்படுகின்றன. ஒரே ஒரு வித்தியாசம்தான் நேரடியாக இராணுவம் இப்படுகொலைகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை. இலங்கை அரசின் சட்ட விரோத ஆயுதக் குழுக்களைக் கொண்டே இப்படுகொலைகளை இலங்கை செய்கிறது. ஈ.பி.டி.பி, கருணா குழு, முன்னாள் புலி உறுப்பினர்கள் எனப்பலரும் இப்படுகொலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். தமிழக மீனவர்களைக் கொன்றதும் இந்தக் குழுக்களாக இருப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.<br /><br />தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி விட்டதால் இந்தப் பிரச்சனையில் இனி ஒரு மாதத்திற்கு சவுண்ட் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கும். கருணாநிதி அடித்த தந்தியும், ஜெயலலிதா இதை வைத்து ஆடப் போகும் நாடகங்களும், அப்பால் கடந்த ஆண்டு செல்லப்பன் கொல்லப்பட்டதற்கும் இப்போது பாண்டியன் கொல்லப்பட்டதற்கும் இடையில் நடந்தது அந்த முக்கியமான நிகழ்வு. அது இந்திய இலங்கை மீனவர்கள் பேச்சு வார்த்தை.சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் ராமேஸ்வரத்திலும், சென்னை தாமஸ் மலையில் உள்ள தேவாலத்திலுமாக ( இந்தப் பேச்சுவார்த்தையில் சில பாதிரிகளும் உண்டு) இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அந்தப் பேச்சுவார்த்தை தொடர்பாக அப்போது நான் எழுதியிருந்தேன்.<br /><br /><strong>பேச்சுவார்த்தை கொலைக்கு அங்கீகாரம்.</strong><br /><br />சுமார்21 பேர் இலங்கை மீனவர் சங்கத் தலைவர் என்று சொல்லப்படும் சூரியகுமாரன் தலைமையில் இலங்கை அரசின் தூதுவர்களாக இராமேஸ்வரம் வந்தனர் . கேரளாவைச் சார்ந்த தென்னிந்திய மீனவ சங்கங்கங்களின் சம்மேளனம் என்ற தன்னார்வ அமைப்பை நடத்தி வரும் விவேகானந்தன் என்பவர் மூலமாகவும் அதன் சகோதர அமைப்பு என்று சொல்லப்படும் நிரபராதிகள் மீனவர் குழு அமைப்பின் மூலமாகவும் இந்தக் கலந்துரையாடலை அல்லது பேச்சுவார்த்தையை இராமேஸ்வரத்தில் நடத்தியது. அந்தப் பேச்சுவார்த்தைக்கு பாரம்பரீய மீனப் பிரதிநிதிகள் அழைக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் குறியாக இருந்தார்கள். ஈழ விவகாரத்தில் திவீரமாக இருக்கும் சக்திகள் இதில் தலையிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்பதாக இருந்தது.<br />இத் தூதுக்குழு இராமேஸ்வரம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மீனவர் தலைவர்கள் என்று சொல்லப்படும் சிலருடன் பேசியிருக்கிறது<br /><br />. இதில் கடலே வாழ்வாகக் கொண்ட பாரம்பரீய மீனவச் சங்க தலைவர்கள் குறைவு. அதிகம் பேர் தொழில் நிமித்தம் இராமேஸ்வரத்தில் குடியேறியவர்கள் இவர்களுக்கு எப்போதும் மீன் பிடித்தொழிலும் வருமானம் தொடர்பான வருத்தங்களோ கவலைகளோ இருக்குமே தவிற ஒடுக்கப்படும் பாரம்பரீய மீனவ மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்த உண்மையான அக்கரையோ கரிசனமோ இவர்களுக்கு எப்போதும் இருந்ததில்லை என்கிற நிலையில் இப்பேச்சுவார்த்தையில் இவர்கள் பாரம்பரீய மீனவ மக்களின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும் மீனவ மக்களை பிரதிநிதுத்துவப் படுத்தும் அரசியல் தலைமைகளோ பிரதிநிதிகளோக் கூட மீனவ மக்களுக்குக் கிடையாது. உள்ளூர் புறங்களின் ஆதிக்கசாதி அதிகாரத்தை, பெரும்பான்மை சாதி ஓட்டு அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தும் திராவிட இயக்க அல்லது தேசிய இயக்கத் தலைவர்களே இவர்களின் தலைவர்கள்.ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படும் இம்மக்களின் பிரச்சனைகள் குறித்து உண்மையான அக்கறை இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கும் இல்லை.இத்தகைய சூழலில் இருந்துதான் இராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றப்படும் சூழலையும் அதன் பின்னணியையும் புரிந்து கொள்ள வேண்டும்.<br />சென்ற ஆகஸ்டில் இலங்கை அரசின் தூதுவர்களாக வந்தவர்களில் பேசாலை ஆயர் அகஸ்டின் மீன்வளத்துறை அதிகாரி சில்வா, பத்திரிகையாளர் நிரோசா மாலா என்று தெளிவான நிறுவனமயமாக்கப்பட்டக் குழுவாக வந்தனர். வந்தவர்கள் // கடந்த முப்பதாண்டுகளாக எமக்கு போர்ச்சூழல் காரணமாக மீன்பிடித்தொழில் இல்லை. போர் முடிவடைந்துள்ள நிலையில் இப்போதுதான் மீன் பிடிக்கத் துவங்கியிருக்கிறோம். ஆனால் நீண்டகாலமாக தமிழக மீனவர்களான நீங்கள் எங்கள் கடல் பகுதியில் மீன் பிடித்து வருகிறீர்கள். இரட்டை மடியைப்படுத்துவதாலும், ஒப்பீட்டளவில் டோலர் படகுகளைப் பயன்படுத்துவதாலும் எங்களின் மீன் வளம் கெடுகிறது. ஆகவே நீங்கள் உங்களின் மீன் பிடி எல்லையைச் சுருக்கிக் கொள்ளுங்கள், இரட்டை மடி வலையைப் பயன்படுத்தாதீர்கள். அது போல எல்லை தாண்டும் மீனவர்களைத் தாக்குவதோ கொல்வதோ சரியில்லை அது பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை.// என்று இராமேஸ்வரத்தில் சூர்யகுமாரன் தெரிவித்துள்ளார். பின்னர் சென்னைக்கு வந்த குழுவினர் பெயர் குறிப்பிடப்படாமல் சென்னையில் பரங்கிமலை சர்ச்சில் நடந்த பேச்சுவார்த்தைக்கு சென்னையில் பாரம்பரீய மீனவப் பிரதிநிகள் யாரும் அழைக்கப்பட வில்லை. ஏன் அழைக்கவில்லை என்று கேட்டால் இது இராமேஸ்வரத்தை ஒட்டிய மீனவர் பிரச்சனையாம் அதான் அழைப்பில்லை என்று சமாதானம் சொல்லியிருக்கிறார்கள்.<br />சென்னை பிரஸ் கிளப்பில் பேட்டியளித்த மீனவர் குழுவினர் தெரிவித்த கருத்துக்களை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இலங்கை குழுவின் தலைவர் சூரியகுமாரன் கூறியதாவது:<br /><br />.// இலங்கையில் கடல் வளத்தை அழிக்கும் எந்தவிதமான தொழிலையும் நாங்கள் செய்வதில்லை என்று முடிவெடுத்து சில மாற்று முறைகளில் மீன் பிடித்து வருகிறோம். தமிழக மீனவர்களின் விசைப்படகும், அதில் பயன்படுத்தும் வலைகளும் கடல் வளத்தை அழிக்கக் கூடியது. எனவே இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் பகுதியில் தடை செய்யப்பட்ட தொழில்கள் எது? அதை எப்படி தடுப்பது? மேலும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச இருக்கிறோம்.இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இதன் மூலம் எடுக்கப்படவுள்ள பரிந்துரைகளை இரு நாட்டு அரசுக்கும் தெரிவிக்க இருக்கிறோம். இரு நாட்டு அரசுகளும் எடுக்கின்ற முடிவில் தான் எங்கள் முடிவும் சார்ந்திருக்கிறது. அதற்கு முன் எங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது. கடல் எல்லையை இலங்கை அரசு நிர்ணயம் செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதை நாம் தடுக்க முடியாது. அதை தடுப்பது இலங்கை அரசு தான். கடல் தான் எங்களை பிரிக்கிறது, எங்கள் உறவு முறையில் பிரிவு இல்லை. எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவதை நிறுத்துங்கள், அவர்களை சட்டரீதியாக நீதிமன்றம் முன் நிறுத்துங்கள் என்றும் நாங்கள் பரிந்துரைக்க முடிவு செய்துள்ளோம்.கச்சத்தீவு முன்பு இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்பு ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் மூலம் இலங்கைக்குக் கொடுத்திருக்கிறார்கள்.இதனால் தமிழக மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்த முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும், ஓய்வு எடுக்கவும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அதை அரசுகள் தான் முடிவு செய்ய வேண்டும்.இந்திய மீனவர்களை எல்லை தாண்டி வாருங்கள் என்று நாங்கள் அழைக்க முடியாது. மீன் பிடிக்கும் முறை தான், குறிப்பாக விசைப்படகும், அவர்கள் பயன்படுத்தும் வலைகளும் தான் முறையற்றது. அதற்கு இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. " என்று தந்திரமாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போல விஷயத்தை ஏற்றுகிறார் சூர்யகுமாரன். <br />நீங்கள் எங்கள் கடல்பகுதிக்குள் வரக்கூடாது இரட்டை மடியைப் பயன்படுத்தக் கூடாது என்ற இலங்கை அரசின் நோக்கத்தை ஏதோ இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது போல எமது மக்கள் மீது சுமத்துகிறார்கள். ஆனால் எமது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுடாதே, தொழில் உரிமையை அங்கீகரி, கச்சத்தீவில் மீன் பிடி உரிமையை நிலை நாட்டு என்பதெல்லாம் அரசுகளின் விஷயமாம் அதில் தலையிட முடியாதாம். சூர்யகுமாரனின் இந்தக் கருத்து ஈழத் தமிழ் மீனவர்களின் கருத்தா? அல்லது இலங்கை அரசின் கருத்தா? வந்திருப்பவர்கள் உண்மையிலேயே மீன் பிடித்தொழிலில் நேரடியாக ஈடுபடுவர்களாக இருந்திருந்தால் எல்லை தாண்டும் இயர்க்கை இடர்பாடு குறித்து அவர்களே நேர்மையாகப் பேசியிருப்பார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னதெல்லாம் எங்கள் பகுதிக்குள் வராதீர்கள் என்பதுதான். ஆக எஸ்.எம்.கிருஷ்ணா பாராளுமன்றத்தில் என்ன சொன்னாரோ, அதையே ஒரு குழுவை அனுப்பி இலங்கையும் சொல்லியிருக்கிறது. எப்படியாவது பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் இதன் பின்னால் உள்ள சூழ்ச்சி தெரியாமல் இராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் இதில் பொறுப்பாளிகளாக பங்கேற்கிறார்கள்.<br />இந்தக் குழுவினர் இந்தியா வருவதற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்திய மீன்பிடிப்படகுகள் வடமராச்சி பகுதியில் அத்து மீறி மீன் பிடிப்பதாக வடமராட்சி மீனவர் ஒன்றியம் குற்றம் சாட்டியதை இங்கே நாம் சூழலோடு பொறுத்திப் பார்க்க முடியும்<br /><br />. வருவதற்கு முன்னால் இப்படியான குற்றச்சாட்டுகளை தமிழக மீனவர்கள் மீது சுமத்தியவர்கள் யார் ஒரு வேளை அது சூர்யகுமாரன் தானோ? என்ற சந்தேகம் வலுத்துள்ள நிலையில் இந்தியப் படகுகள் இப்படி மீன் பிடிப்பதால் தங்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக வடமராச்சி மீன் பிடிச்சங்கம் குற்றம் சுமத்தியது. அதற்கு முன்னரே இலங்கை அரசின் ஆதரவாளராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தாவும் இப்படியான குற்றச்சாட்டைக் கூறியிருந்ததோடு சென்றவருடம் கச்சத்தீவு அந்தோனியார் கோவில் திருவிழா தலத்தில் இரு நாட்டு மீனவர்களும் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாட்டை செய்திருந்ததாகவும் கடைசியில் தமிழக மீனவர்கள் வரவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார். இந்நிலையில்தான் தன்னார்வக்குழுக்களின் ஏற்பாட்டின் படி இச்சந்திப்பு நடந்துள்ளது. போருக்குப் பின்னர் இலங்கை இராணுவத்தின் கெடுபிடி காரணமாக இந்தப் பிராந்தியத்தில் ஈழத் தமிழ் மீனவர்கள் எப்போதும் மீன் பிடியில் ஈடுபட்டதில்லை. போருக்குப் பின்னர் ஈழத் தமிழர்களின் பாரம்பரீய மீன்பிடி வலையமாக இருந்த மன்னார் பகுதிக்குள் தென்பகுதி சிங்கள மீனவர்கள் வந்து மீன்பிடிப்பதும்.<br />வடபகுதி , கிழக்கு மாகாண தமிழ் மீனவர்களைத் தாக்கி மீன்களை கொள்ளையடித்துச் செல்வதும், மீன்பிடியில் தமிழ் மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளும் சிங்கள மீனவர்களுக்கு கட்டற்ற சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில் யாழ்பாண மீனவர்களின் மீன்பிடித் தொழில் தமிழக மீனவர்களால் பாதிக்கப்படுகிறது என்று இலங்கை அரசு சொல்கிற குற்றச்சாட்டின் நோக்கம்தான் என்ன? உண்மையிலேயே வடக்குக் கிழக்கில் உள்ள மீனவர்களுக்கும் தமிழ் மீனவர்களுக்கும் பிரச்சனைகள் இருந்ததா? என்றால் புலிகளின் போராட்டம் வலுப்பெற்ற காலங்களில் தமிழக மீனவர்களுக்கு புலிகள் எவ்விதமான தொல்லைகளும் கொடுத்ததில்லை. தங்களின் போராட்டத்திற்கு வலுவான பின் தளமாக உள்ள மீனவர்களுடன் அவர்கள் நல்லுறவு பேணினார்கள். (குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை கொன்று விட்டு பழியை புலிகள் மீது போட்டார்கள்) அதற்கு முந்தைய காலங்களில் யாழ்பாண மீனவர்கள் தமிழக மீனவர்களை மேலாதிக்கம் செய்தாலும் காலப்போக்கில் இது இல்லாது போயிருந்தது. புலிகள் அரசியல் நலனை கருத்தில் கொண்டு இந்த முரண்பாடுகளைக் களைவதில் பெரும்பங்காற்றினார்கள்.<br /><br />புலிகள் இல்லாது போன இன்றைய நிலையில் பேச்சு வார்த்தையின் பெயரால் தமிழக மீனவர்களை இராமேஸ்வரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையைத் தந்திரமாக செய்வதோடு, தமிழக மீனவர்களுக்கும் ஈழத் தமிழ் மீனவர்களுக்குமிடையில் ஒரு மோதலை உருவாக்கி அரசியல் ரீதியான பிளவை உருவாக்குவதுமே இலங்கையின் நோக்கம். இப்போது கே,பி- யும் இதற்காக களமிரக்கப்பட்டுள்ளார். இந்தப் பிளவை கவனித்தால் எல்லா துறைகளிலும் இந்தப் பிளவை துல்லியமாக செய்வதை நாம் புரிந்து கொள்ள முடியும். சுட்டுக் கொல்வது நாங்கள் கொல்ல வில்லையே என்று சொல்வது. நெருக்கடி இல்லாத நேரமென்றால் எல்லை தாண்டியதால் சுட்டோம் என்று சொல்லி விட்டுப் போய் விடுகிறார்கள் இலங்கையும் இந்தியாவும்.<br /><br /><strong>என்ன செய்யலாம்</strong>?<br /><br />நீண்டகாலமாக இராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்டு வருகிறார்கள் . இப்போதும் கொல்லப்படுகிறார்கள் . இது நின்றபாடில்லை, இந்தியா ஈழத் தமிழனை மட்டுமல்ல தமிழகத் தமிழனைக் கூட காப்பாற்றாது. இது மீனவ மக்களுக்கும் தெரியும். அரசியல்வாதிகளுக்கும் தெரியும் ஆனால் தங்களின் தேர்தல் கூட்டு அரசியலுக்கு அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசுவார்கள். மீனவ மக்கள் அவர்களை அவர்களே காப்பாற்றிக் கொள்வது ஒன்றுதான் தீர்வு அது எந்த வழியிலேனும் என்றாலும் சரிதான்.</div>டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-74234718503025115862011-01-11T20:59:00.004+05:302011-01-12T17:11:36.303+05:30அம்பைக்கு இரண்டு தயிர் சாதங்களும் அருந்ததிராய்க்கு அரசு ஒடுக்குமுறையும்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyKg-T7jYNIDXNoyVDXOmeA70w1BVheZFgxaUEH4ra9aMsNLCGJ4olUYxVz3eM3UDXC2bDRbjKyGe0ywmJSXXB0urNBAhxs3z7cbdL2PhBkYVeiHWUqTu8fFdHV8eC9xt1WhCYjPgG_PE/s1600/arunthathi.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 334px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyKg-T7jYNIDXNoyVDXOmeA70w1BVheZFgxaUEH4ra9aMsNLCGJ4olUYxVz3eM3UDXC2bDRbjKyGe0ywmJSXXB0urNBAhxs3z7cbdL2PhBkYVeiHWUqTu8fFdHV8eC9xt1WhCYjPgG_PE/s400/arunthathi.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561262707168186018" /></a><br />“இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும்" என்றொரு கட்டுரையை காலச்சுவடு இதழில் எழுதியிருக்கிறார் சி.எஸ்.லஷ்மி என்றழைக்கப்படும் எழுத்தாளர் அம்பை. அருந்திராய் குறித்த பலரின் கட்டுரைகளும் அதே இதழில் வந்திருக்கிறது. மாலதி மைத்ரியும் அருந்ததிராயை மனித உரிமை நோக்கில் அணுகி ஒரு நல்ல கட்டுரையை எழுதியுள்ளார். ஆஷிஷ் நந்தியின் கட்டுரையும் அதே இதழில் வந்திருக்கிறது. ஆளும் வர்க்கங்களுக்குப் பணிந்து நடக்கும் - வெகு வேகமாக காலாவதியாகிக் கொண்டிருக்கும் தமிழ் அறிவுலக சூழலில் - நமக்காகவோ ஒடுக்கப்படும் மக்களுக்காகவோ பேசுவதற்கு இன்றைக்கு விரல் விட்டு எண்ணக் கூடிய அறிவுஜீவிகளே உள்ளனர். ஒட்டுமொத்த இந்திய ஊடக, எழுத்துலக அறிவுத் தளத்தின் வீழ்ச்சியில் இருந்துதான் நமக்காகப் பேசும் அருந்ததிராய்க்காக நாமும் பேச வேண்டும். அந்தவகையில்தான் நாம் அம்பைக்கு மறுப்பு எழுத வேண்டியிருக்கிறது.<br /><br />தமிழ் இலக்கியத்தில் பெண் வாழ்வை அழகியலோடு நவீன இலக்கியமாக பதிவு செய்தவர் அம்பை என்று வெங்கட் சாமிநாதன் எழுதியிருக்கிறார். எழுபதுகளில் அம்பை எழுதியதை விட அவரது நண்பரான ஆர்.சூடாமணி எழுதிய கதைகள் சிறந்தவை என்றாலும், அதே அம்பையின் கதைகளை விட வத்சலாவின் சில சிறுகதைகள் சிறந்தவை என்று சொல்லிவிட முடியும் என்றாலும் இவர்கள் அனைவருக்குமே முன்னோடியாய் அறுபதுகளிலேயே பெண் கல்வியை வலியுறுத்தி எழுதிய இன்னொரு எழுத்தாளர் உண்டு. அவர் ஹெப்சிபா ஜேசுதாசன். அவரது புத்தம் வீடு நாவலையும் சரி ஹெப்சிபாவையும் சரி வெங்கட்சாமிநாதன்களும் பேசியதில்லை, ஒரு பெண் என்ற அளவில் கூட ஹெப்சிபாவின் எழுத்துக்களை அம்பையும் வரவேற்றதில்லை.<br />அம்பை காலச்சுவட்டில் எழுதிய கட்டுரை அருந்ததி ராய் தொடர்பானது. கட்டுரை துவங்குவதே பாபர் மசூதி இடிப்பில் இருந்துதான். 1992-ல் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னர் உருவான இளம் தலைமுறையினர் மதச்சார்பற்றவர்களாக இருப்பதாகவும் மசூதி இடிப்பை மறக்க முடியாத பெரிசுகள்தான் இன்னமும் ஓலமிட்டுக் கொண்டு இருப்பதாகவும் இளம் தலைமுறையினர் அயோத்தியில் மசூதி இருந்த இடத்தில் கழிப்பிடங்கள் கட்டலாம் என்று கூறுவதாகவும் எழுதுகிறார். அதுவும் கட்டணக்கழிப்பிடம் வேண்டும் என்கிறார்களாம். இதுதான் கட்டுரையின் துவக்கத்தில் அம்பை சொல்ல வருவது.<br /><br />தொண்ணூறுகளுக்குப் பிறகே முஸ்லிம் மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி இந்தியாவில் ஏற்படுகிறது. தாங்கள் வஞ்சிக்கப்பட்டதான உணர்விலிருந்து கிளர்ந்தெழுந்த இளம் முஸ்லிம் இளைஞர்கள் இன்றுவரை அயோத்தியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட தங்களின் வழிபாட்டுத் தலத்தை மீண்டும் கட்டித் தரவேண்டும் என்று ஜனநாயக ரீதியில் போராடுகிறார்கள். அதில் வெறுப்பின் உச்சிக்குச் சென்ற சில இளைஞர்கள் தீவிரவாதத்திற்குப் பலியாகிறார்கள் என்பதெல்லாம் வேறு விஷயம் என்றாலும், இந்துக்களின் பெயரால் பாசிஸ்டுகள் இடித்த மசூதியும் அதையொட்டி இந்தியா முழுக்க கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரமும் அதில் நாடு முழுக்க அப்பாவி முஸ்லிம், இந்து மக்கள் கொல்லப்பட்டதும் அம்பையின் மத்யமர் மனநிலையில் மறந்து விட்டது. பழியை இளம் தலைமுறை மீது போடுகிறார்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7yWJSiMK3V-HOJ2UuwElFRC6w3L8v37Lr5heqOV5fmxMcP-uUcNl_VsPsltL5ogUK9hFIvVFnaVFN1twEcyCM63PUEtIKxvIMoC-9MKGBLYxxH9uZKedg-wZCEu3Kii0J-NPVl77J9yE/s1600/kaashmeer.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 286px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi7yWJSiMK3V-HOJ2UuwElFRC6w3L8v37Lr5heqOV5fmxMcP-uUcNl_VsPsltL5ogUK9hFIvVFnaVFN1twEcyCM63PUEtIKxvIMoC-9MKGBLYxxH9uZKedg-wZCEu3Kii0J-NPVl77J9yE/s400/kaashmeer.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561262315821576610" /></a><br /><br />இளைய தலைமுறை என்று அவர் சுட்டும் மத்திய தர இந்து சமூக இளைஞர்களும் மறந்து விட்டார்கள். இந்து, முஸ்லீம் ஒற்றுமையில் சம்மட்டியைக் கொண்டு அடித்து வீழ்த்திய இந்துப் பாசிஸ்டுகள் பெரும்பான்மை இந்துக்களின் பெயரிலேயே மசூதியை இடித்தார்கள் எனும்போது அதை மறந்து விடுகிற பெரும்பான்மைச் சமூகத்திற்கு அதை நாம் நினைவுபடுத்த வேண்டும் - அம்பைக்கும் சேர்த்துதான். சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அக்கிரமங்களுக்காக பெரும்பான்மை மக்களே போராட வேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கை ஒரு பக்கம் இருக்க - நானும் 92-க்குப் பின்னர் வந்த இளம் தலைமுறைதான் - காஞ்சி சங்கரமடத்தை இடித்து விட்டு (அது என்ன வழிபாட்டு தலமா?) அங்கே கட்டணக் கழிப்பிடமல்ல இலவசக் கழிப்பிடமே என் சொந்தச் செலவில் கட்டித் தர நான் ஆசைப்படுகிறேன். இந்தத் தலைமுறை இளைஞனான எனது கோரிக்கைக்கையை அம்பை ஏற்றுக் கொண்டு ஜெயேந்திரரிடம் இது பற்றி பேசுவாரா? மதச்சார்பின்மை என்ற பெயரில் மக்கள் வழிபடும் மசூதியை இடித்து விட்டு அங்கே கட்டணக்கழிப்பிடம் கட்டலாம் என்றால் ஏன் அதை காஞ்சிபுரத்திலும் செய்யலாம்தானே?<br /><br /><strong>காஷ்மீர் மதச்சார்பின்மை மன்னர் மரபா?</strong><br /><br />அடுத்து காஷ்மீருக்கு வரலாற்று ரீதியாகவே மதச்சார்பற்ற வரலாறு ஒன்று இருப்பதாக - லால் தேத் (lal ded) என்னும் காவிக் கவிஞரை எடுத்துக்காட்டுக்கு எடுத்து வருகிறார். இதை விட பெரும்பான்மை முஸ்லீம் மக்களைக் கொண்ட காஷ்மீரை ஓர் இந்து மன்னன் (ஹரிசிங்) ஆண்டதையே அம்பை மதச்சார்பின்மைக்கு உதாரணமாகச் சொல்லியிருக்கலாம். பெருந்தன்மை மன்னர் மரபில் இல்லை அம்பை! அது இந்துக்கள் ஆனாலும் முஸ்லீம்கள் ஆனாலும் மக்களிடமே இருக்கிறது. அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதிக்குப் பதில் கட்டணக்கழிப்பிடம் கட்டுவதை இளைய தலைமுறையின் மதச்சார்பின்மை என்று சொல்லும் அம்பை, காஷ்மீரிகளின் தேசிய இன விடுதலைக் குரலை மறைக்க லால் தேதியின் பாடலை மதச்சார்பின்மையானது என்று சொல்வதன் மூலம் காஷ்மீர் மக்களை பாகிஸ்தான் தூண்டுதலில் போராடுகிறவர்கள் என்று சராசரி இந்து மனதோடு நிறுவ முயல்கிறார். காஷ்மீரில் மிக மோசமான படுகொலைகளை நடத்திக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு எதிராகவும் காஷ்மீர்களின் சுயாட்சிக் கோரிக்கைக்காகவும் நிற்கும் அருந்திராய் மீது அம்பைக்கு எரிச்சல் வருவதும் இதனால்தான். அதனால்தான் தனது இந்திய இந்து மனதிற்குத் தோதான லால்தேதைத் தேர்வு செய்கிறார். நாமோ தத்துவத்திலும் மக்களின் வறுமையைப் பாடிய முகம்மது இக்பால் என்னும் சிறந்த காஷ்மீரக் கவிஞனை அம்பைக்கு மாற்றாக நிறுத்துவோம். காஷ்மீரத்து ஏழைகள் குறித்து இக்பால் தன் கவிதையில் எழுதுகிறார் இப்படி,<br /><br />//பனிக்காலத்தில் உறைய வைக்கும் குளிரில்<br />அவனது அம்மண உடல் நடுங்குகிறது<br />அவனது கைத்திறனோ அரச சால்வைகளால்<br />செல்வந்தர்களைப் போர்த்துகிறது // (நன்றி - ஷோபியான் நூல், எஸ்.வி.ஆர்.)<br /><br />லால் தேத்தை விட நாம் இக்பாலுடன் நெருங்குவதற்கான காரணம் புரிகிறதுதானே?<br />//பிரிவினைக்குப் பின் வந்த இனக்கலவரத்தின்போது முஸ்லீம், இந்து, சீக்கியர் இருந்த காஷ்மீரப்படை ஒன்று இந்தியப் படைகளுடன் இணைந்து பாகிஸ்தான் அனுப்பிய பட்டாணியப் பழங்குடியினரை விரட்டி அடித்து காஷ்மீர் நிலத்தில் சட்டம் ஒழுங்கு முறையைக் கொண்டு வந்தது//<br /><br />என்று தனக்குத் தோதான இந்துத்துவ மதச்சார்பை நிறுவ அடுத்த குண்டை அருந்ததி மீது விசுகிறார். காஷ்மீர் மக்களின் இன்றைய இருண்ட வரலாற்றில் கடந்து போன காலத்தின் 1947-அக்டோபர் 22-24 தேதிகள் முக்கியமானவைகள். விஸ்தரிப்பு நோக்கம் கொண்ட இந்திய, பாகிஸ்தான் (இந்தியாவின் விஸ்தரிப்பு எண்ணங்களை விட பாகிஸ்தானுக்கு அப்படி ஒன்றும் அதிகம் இல்லை) நாடுகளுக்கு மத்தியில் அகப்பட்டுக் கொண்ட சின்னஞ்சிறு அழகிய காஷ்மீர் தன்னை தற்காத்துக் கொள்வதற்காகப் போராடி இறுதியில் இந்தியாவால் அபகரிக்கப்பட்ட வரலாற்றைச் சுமந்த கருப்பு நாட்கள் அவை. 77% முஸ்லீம்களைக் கொண்ட காஷ்மீர், பாகிஸ்தானோடு ஏன் இணையவில்லை என்று - மதவாதக் கண்ணோட்டம் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஜின்னா காஷ்மீர் இந்து மன்னன் ஹரிசிங்கிடம் பேச தூதரை அனுப்பினார். ஆனால் ஹரிசிங் தான் ஒரு சுற்றுலாப் பயணியாகக் கூட பாகிஸ்தான் வர விரும்பவில்லை என்று பதிலனுப்பினார். இது எனது விருப்பம் மட்டுமல்ல காஷ்மீரிகளின் விருப்பமும் கூட என்று அவன் சொன்ன தகவலைக் கொண்டு சென்றவர்கள் ஹரிசிங்கை வழிக்குக் கொண்டுவர யோசித்ததில் கடைசியாகச் செய்ததுதான் பத்தான் பழங்குடிகளை ஏவி காஷ்மீரைக் கைப்பற்றி பாகிஸ்தானோடு இணைப்பது என்கிற திட்டம்.<br />காஷ்மீரில் பெரும்பாலான முஸ்லீம் மக்களின் மன்னனாக இந்து ஒருவர் இருக்கிறார்; அவர் விரைவில் காஷ்மீரைக் கொண்டு போய் இந்தியாவோடு இணைத்து விட்டால் இந்துக்களின் ஆட்சியின் கீழ் பெரும்பாலான முஸ்லீம்கள் அவதியுறுவர் என்று பழங்குடிகளின் மூளையில் படுவேகமாக ஏற்றப்பட்டது மதம் என்னும் விஷம். இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் சைரப் கயத் கான் (sairab khayat khan) தலைமையில் நடத்தப்பட்ட முதல் புனிதப் போர் பத்தான் பழங்குடிகளின் படையெடுப்புதான் என்கிறது வரலாறு. நீண்டகாலமாக சமவெளிச் சமூகங்களால் புறக்கணிக்கப்பட்ட கோபமும், மறுக்கப்பட்ட நீதியுமாக குமுறியிருந்த பத்தான்களின் மனதில் இந்திய வெறுப்பை மூர்க்கமாக ஏற்றி உசுப்பேற்ற - 1947, அக்டோபர் 24 இரவில் காஷ்மீர் பள்ளத்தாக்கை பெரும் ஆயுத பலத்தோடு தாக்கினார்கள் பத்தான் பழங்குடிகள்.<br /><br />சரி பாகிஸ்தானோடு இணைய விரும்பாத ஹரிசிங் இந்தியாவோடு மட்டும் இணைய விரும்பினாரா? காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்ததில்லை என்றார் அருந்ததி. அதற்காக அம்பைக்குக் கோபம் வருகிறது. சரி நீங்கள் அறிந்த இந்தியா எப்போது உருவானது, உருவாக்கப்பட்டது? பல்வேறு சமஸ்தானங்களாக தனித்தனி பிரதேசங்களாகப் பிரிந்து கிடந்த இந்தப் பகுதியை அராபியர்களும் பின்னர் வந்த பிரிட்டீஷாருமே இந்தியா என்று அழைத்தனர். இந்தியா என்று அழைத்தனரே தவிர இந்தியா ஒரு நாடே கிடையாது. அது 1948-க்குப் பின்னர் உருவாக்கப்பட்டதே. பரந்துபட்ட இந்தியாவை உருவாக்க விரும்பிய ஆங்கிலேயர்களும், அவர்களால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் ஆளும் வர்க்கங்களும் சமஸ்தான மன்னர்களின் கருத்தை அறிய 565 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய சமஸ்தான இளவரசர்கள் சபையைக் கூட்டினார்கள். அதில் கலந்து கொண்டு பல மன்னர்களும் அவர்களின் திவான்களும், நவாப்களும் சமஸ்தானம் போனாலும் பரவாயில்லை மான்வேட்டை, சிங்க வேட்டை உரிமை எங்களுக்கு வேண்டும், மாளிகையை மட்டுமாவது விட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தபோது, காஷ்மீர் மன்னன் இதற்கு உடன்பட மறுத்தான்.<br />ஹரிசிங்கிடம் மவுண்ட் பேட்டன் எதிர்கால இந்திய அரசின் சார்பில் தான் ஒரு வாக்குறுதியை வழங்குவதாகவும் இயற்கையாகவே இங்கு (காஷ்மீரில்) முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழ்வதாலும் பூகோள ரீதியாக காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினால் அதை இந்தியா புரிந்து கொள்ளும் என்றும் ஆட்சேபம் தெரிவிக்காது என்றும் மேலும் ஹரிசிங் ஒரு இந்து மன்னராக இருந்தாலும் அவரை வரவேற்பதாகவும் தனது புதிய பாகிஸ்தான் டொமினியனில் அவருக்கு மிக்க கவுரவம் வழங்கப்படும் என்று ஜின்னா தங்களிடம் உறுதி அளித்திருப்பதாகவும் கூறுகிறார்.<br />மவுண்பேட்டனுக்கு பதிலளித்த ஹரிசிங் "எந்தக் காரணத்திற்காகவும் பாகிஸ்தானுடன் இணைய நான் விரும்பவில்லை" என்கிறார்.<br />''நல்லது அது உங்கள் விருப்பம். ஆனால் சனத்தொகையில் 90% பேர் முஸ்லீம்கள். ஆகவே இதை நீங்கள் கவனமுடன் பரிசீலிக்க வேண்டும். பாகிஸ்தானுடன் இணைய விருப்பம் இல்லை என்றால் இந்தியாவோடு இணைந்து கொள்ளலாம். அப்படி இணைந்தால் உங்களின் எல்லைகளைப் பாதுகாக்க ஒரு காலாட்படைப் பிரிவை இங்கே அனுப்பி வைக்கிறேன்" என்கிறார் மவுண்பேட்டன்.<br /><br />''இல்லை இந்தியாவுடன் சேரவும் நான் விரும்பவில்லை, நான் சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன்" என்றான் மன்னன் ஹரிசிங்.<br />பாகிஸ்தானோடு அல்லது இந்தியாவோடு என்ற இரண்டு தேர்வுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு மவுண்ட்பேட்டன் நிர்ப்பந்தித்தபோதும் ஹரிசிங் இந்தியாவிடமிருந்தும் பாகிஸ்தானிடமிருந்தும் சம தூரத்தில் விலகி இருந்தான். இரண்டு கழுகுகளில் ஏதேனும் ஒன்று தன்னைக் கொத்தித் தின்னும் என்பதையறியாத ஹரிசிங்கும் காஷ்மீர் மக்களும் உண்மையான மதச்சார்பற்றவர்களாக இருந்த வரலாறு இதுதான். இந்த மதச்சார்பை லால் தேதிடம் தேட வேண்டிய அவசியமில்லை.<br /><br />தனித்து சுதந்திரமாக வாழ விரும்பிய காஷ்மீரை பத்தான் பழங்குடிப்படை நெருங்கி விட்டது. வருகிற வழியெங்கும் அவர்கள் ஒரு இடம் விடாமல் கொள்ளையடித்து பெண்களையும் பாலியல் வன்முறை செய்து முன்னேறினார்கள். ஜீலம் ஆற்றுப்பாலத்தைக் கைப்பற்றி அவர்கள் சிறிநகரை அண்டியபோது பத்தான் பழங்குடிப்படை காஷ்மீரைத் தாக்குகிறது என்ற செய்தியை புதுடில்லிக்குச் சொன்னவர் பிரிட்டீஷ் அரசின் படைத்தளபதியாக இருந்த டக்ளஸ் கிரேசேதான். ஹரிசிங் தன் படைகளைத் திரட்டி பத்தான்களிடமிருந்து காஷ்மீரைக் காக்க போருக்குத் தயாரானான். அவனது படைத் தளபதிகளில் பலர் பத்தான்களுடன் கடைசி நேரத்தில் இணைந்து நின்று துரோகம் செய்தனர். பலவீனமான ஹரிசிங்கின் படைகள் பாகிஸ்தான் பின்னணியில் இருக்கும் படைகளோடு போரிடும்போது, மவுண்ட்பேட்டனும் நேருவும் இணைந்து செய்த ஆக்ரமிப்புதான் காஷ்மீரை இந்தியாவோடு இணைத்தது.<br />காஷ்மீரில் பிறந்த பண்டிட் இனத்தைச் சார்ந்த பார்ப்பனரான நேருவுக்கு எப்போதுமே காஷ்மீர் மீது அலாதியான விருப்பம் இருந்தது. நேருவின் அகண்ட பாரதத்தின் ஒரு அங்கமாகவும் அழகிய காஷ்மீர் இருந்தது. இந்தியாவை மையப்படுத்தி மேற்காசியா முதல் பசிபிக் பகுதி வரையிலான பரந்துபட்ட பல தேசிய இனங்களைக் கொண்ட ஓர் அரசை உருவாக்க வேண்டும் என்பது நேருவின் கனவு. ஒரு வழியாக சமஸ்தானங்களை அதட்டி மிரட்டி ஒருங்கிணைத்து ஓர் இந்தியாவை உருவாக்கிவிட்ட போதிலும் 1956, மே 10-ஆம் நாள் மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் ''அடிப்படையான உண்மை என்னவெனில் இன்னும் இந்தியா ஓர் ஒன்றுபட்ட தேசமாக மாறவில்லை" என்று எழுதுகிறார்.<br /><br />நேருவின் விஸ்தரிப்பு எண்ணங்கள் எவ்வளவு பெரியது எனபதைப் பாருங்கள் “இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தை அரசியல் பொருளாதார ரீதியில் மேலாதிக்கம் செலுத்தும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளது. இந்தியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பர்மாவை உள்ளடக்கிய தெற்காசிய கூட்டமைப்பை நான் விரும்புகிறேன். இன்றைய உலகில் இரு வல்லரசுகள்தான் உள்ளன. ஒன்று அமெரிக்கா இன்னொன்று ரஷ்யா. நாளைய உலகில் இன்னும் இரு வல்லரசுகள் இருக்கும். ஒன்று சீனா இன்னொன்று இந்தியா. ஐந்தாவதாக ஒரு வல்லரசு இருக்காது" என்று 1945-ஆகஸ்டில் தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார். பெயரளவுக்கு நேபாளம் தனிநாடாக இருந்தாலும் அதுவும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்றும் தனது ஆதிக்கத்தை நிறுவுகிறார் நேரு. இன்றைய இலங்கையையும், பாகிஸ்தானையும் இந்தியாவோடு இணைத்துக் கொள்ளும் விருப்பம் நேருவுக்கும் சரி காங்கிரசாருக்கும் சரி இருந்தது. இந்திய முதலாளிகளின் - நிலப்பிரபுக்களின் நலனை முன்னெடுத்த நேரு சமஸ்தானங்களை உடைத்து இந்தியா என்ற அகண்ட சமஸ்தானத்தை உருவாக்கி எல்லா தேசிய இனங்களையும் அந்த சிறைக்கூடத்தில் அடைத்தார். அதன் அடுத்த பலிதான் காஷ்மீர்.<br /><br /><strong>களவாடப்பட்ட காஷ்மீர்</strong><br /><br />ஜின்னாவுக்கு பாகிஸ்தானை ஆக்ரமித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அகண்ட பாரத்தை உருவாக்க ஆசைப்பட்ட நேருவுக்கும் காஷ்மீரை ஆக்ரமித்துக் கொள்ள ஆசை. மவுண்ட்பேட்டனுக்கோ காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ இருக்கலாம் தனியாக சுதந்திர தேசமாக இருக்கக் கூடாது என்ற எண்ணம். அதிலும் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம்களாக இருப்பதால் அவர்கள் பாகிஸ்தானுடன் இணைவதுதான் உகந்ததாக இருக்கும் என்றே கருதினார். காஷ்மீர் மன்னனின் பிரச்சனையோ வேறு.<br />அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் மூலம் ரூபாய் 75 லட்சத்திற்கு விலைக்கு வாங்கிய காஷ்மீர் பள்ளத்தாக்கை ஜம்மு, லடாக் பகுதிகளுடன் இணைத்து ஜம்மு - காஷ்மீர் சமஸ்தானத்தை உருவாக்கினான் டோக்ரா மன்னன் குலாப்சிங். அவனும் சரி அவனது வழிவந்த காஷ்மீரின் கடைசி மன்னன் ஹரிசிங்கும் சரி எல்லா இந்திய மன்னர்களைப் போலவும் ஆடம்பர வாழ்க்கையையே வாழ்ந்தவர்கள். இந்த டோக்ராக்கள் சிறுபான்மை பண்டிட்களிடம் காட்டிய பாசத்தை, பெரும்பான்மை முஸ்லீம் மக்களிடம் காட்டவில்லை; அவர்களின் நன்மதிப்பைப் பெறவுமில்லை. பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் கோரமான வறுமையிலேயே வாழ்ந்தனர். ஆக அடிமை வணிகத்தில் ஊறிய டோக்ரா மன்னர் மரபுக்கு தன் சொத்தும் அடிமைகளும் தனக்கே சொந்தமாக இருக்க வேண்டும் என்கிற ஆசை.<br />குலாப்சிங் காஷ்மீர் மக்களுக்கும் நிலத்துக்கும் சேர்த்து பிரிட்டீஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு கப்பம் கட்டியது போக ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீர் மலைப்பகுதி வெள்ளாடுகளின் கழுத்தில் வளர்ந்த மென்மையான ரோமத்தால் ஆன ஆறு கம்பளியை வழங்கி வந்தான். அடிமை வணிகத்தில் டோக்ரா மன்னன் ஹரிசிங்கிற்கு விற்கப்பட்ட காஷ்மீர் மக்கள் காலம்தோறும் அடிமைகளாகவே இருந்து வந்தனர். இந்து மன்னனான ஹரிசிங்கை பெரும்பான்மை முஸ்லீம்கள் ஏற்றுக் கொண்டாலும் ஹரிசிங்கோ தனது முஸ்லீம் விரோத நடவடிக்கைகளை செயல்படுத்தியே வந்தான். 1931-ல் சிறிநகரில் மன்னனுக்கு எதிராக முஸ்லீம்கள் நடத்திய போராட்டத்தில் 22 பேர் கொல்லப்பட்ட வரலாறும் டோக்ரா மன்னனுக்கு உண்டு. காஷ்மீரின் மதச்சார்பின்மை வரலாறு இதுதான்.<br />பத்தான் படையினர் காஷ்மீரை முற்றுகையிட்டபோது பிரிட்டீஷ் படையினர் அங்கு நிலைகொண்டிருந்தனர். இந்தியாவில் பிரிட்டீஸ் படையினரின் இராணுவப் பணி முடிந்து விட்ட நிலையில் அவர்களிடம் ஹரிசிங் உதவி கோரியபோது மவுண்ட்பேட்டன் பிரிட்டீஷ் படைகளை அனுப்ப மறுத்து - காஷ்மீர் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பு இந்தியப் படைகளுக்கே உண்டு என்று கைகழுவினார். பத்தான்களிடமிருந்து காஷ்மீரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் காஷ்மீர் மன்னரிடம் இருந்து சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைக் கோர வேண்டும் என்று நேருவிடம் சொல்கிறார் மவுண்ட் பேட்டன். மறுநாள் இந்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்ட முடிவின்படி வி.பி.கிருஷ்ணமேனனையும், இரு விமானப்படை அதிகாரிகளையும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தார் நேரு. பல்வேறு சமஸ்தானங்களாக சிதறிக்கிடந்த நிலப்பரப்புகளை ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்குவதில் வி.பி.கிருஷ்ணமேனனுக்கு முக்கிய பங்குண்டு. இந்தியாவின் விஸ்தரிப்புக் கனவுகளில் துருத்திக் கொண்டிருந்த காஷ்மீரை வழிக்குக் கொண்டுவர இதுதான் சரியான தருணம் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் பத்தான்களின் முற்றுகையை அதற்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்கள்.<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIGXUeSdF5B9JlW620Hhyfp54EFN5dXDgy_sD5x2Xs-NvbBNpGqVtLqdUM6UYf_hL7l4I_47FJt99XicsoX1jkAYhJaDwv_CipmQuqouWtwhyPGo6_fYTp0Ln_HII2Yum1D0cBZbo177Q/s1600/ambai.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 183px; height: 129px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiIGXUeSdF5B9JlW620Hhyfp54EFN5dXDgy_sD5x2Xs-NvbBNpGqVtLqdUM6UYf_hL7l4I_47FJt99XicsoX1jkAYhJaDwv_CipmQuqouWtwhyPGo6_fYTp0Ln_HII2Yum1D0cBZbo177Q/s400/ambai.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5561262462965998210" /></a><br /><br />வி.பி.மேனனும் இந்தியா அனுப்பிய தளபதிகளும் ஹரிசிங்கைச் சந்தித்து உடனடியாக சிறிநகருக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். ‘பத்தான்கள் ஆக்ரமிக்கும்போது பெரும்பான்மை முஸ்லீம்களுக்கு மத்தியில் இந்து மன்னருக்கு பாதுகாப்பு இருக்காது’ என்று இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் சிறிநகருக்கு அவரை இடம்பெயரும்படி அறிவுறுத்தினர். பெரும்பான்மை முஸ்லீம்களை ஓர் இந்து மன்னன் ஆள்வது ஆபத்து என்று பாகிஸ்தான் பத்தான்களை ஏவி படையெடுக்கிறது. இந்தியாவோ பெரும்பான்மை முஸ்லீம் மக்களிடமிருந்து விலகி இந்து மக்கள் வாழும் பகுதிக்குச் செல்லுமாறு ஹரிசிங்கைக் கேட்கிறது. இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுமே எப்படி காஷ்மீரை மதவாத நோக்கில் அடிமைப்படுத்தின என்பதற்கு இதுவே முதல் சான்று.<br />அக்டோபர் 26-ஆம் தேதி நள்ளிரவில் சிறிநகருக்கு தப்பியோடினார் ஹரிசிங். தப்பியோடிய ஹரிசிங் மிக மோசமான அவமானகரமான ஒரு சகதிக்குள் சிக்கிக் கொண்டார். அன்றைய இரவில் விடிவதற்குள் நாம் பிடிபடுவதாக இருந்தால் என்னை முதலில் சுட்டுக் கொன்று விடுங்கள் என்று மன்னர் ஹரிசிங் தன் உதவியாளர்களுக்கு உத்தரவிடுகிறார். ஆனால் டில்லி திரும்பியிருந்த மேனன் மீண்டும் அதிகாலையே சிறிநகருக்கு வந்தார். பத்தான்களிடமிருந்து காஷ்மீரைக் காப்பாற்ற படைகளை அனுப்பிய இந்தியா கூடவே காஷ்மீரை அபகரிக்க வி.பி.மேனனையும் அனுப்பியது.<br /><br />இரு தேசங்களிலும் இணைய மறுத்த ஹரிசிங்கை பாகிஸ்தான் தூண்டுதலில் பத்தான்கள் ஆக்ரமிக்கிறார்கள். ஆக்ரமிப்பாளாளர்களிடமிருந்து காஷ்மீரைக் காப்பாற்றுகிறோம் என்று வந்த இந்தியா அதை இப்போது ஒட்டுமொத்தமாக அபகரித்துக் கொள்ளப் போகிறது. இதுதான் இந்த இரண்டு சண்டியர்களின் ஆக்ரமிப்புக் கதையும்.<br />பத்தான்களைத் துரத்தி விட்டு காஷ்மீரைக் காக்க இந்தியப் படைகள் தயாராக இருகின்றன. மதச்சார்பின்மைக்கு மகுடமாக இருந்த பல்வேறு இந்தியச் சமூகங்களுள் காஷ்மீரிகளுக்கும் சிறந்த பங்குண்டு. பௌத்த பிக்குகளின் தலமாகவும், சூஃபிக்களின் தலமாகவும், சீக்கியர்களின், இந்துத் துறவிகளின், கிறிஸ்தவ மிஷனரிகளின் சேவைத் தலமாகவும் இருந்த காஷ்மீருக்கு மிக நீண்ட மதச்சார்பற்ற வரலாறு உண்டு. பத்தான்கள் மிக மோசமான கொள்ளை, பாலியல் வன்முறை, கொலைகளில் ஈடுபட்டார்கள். இந்துக்கள், கிறிஸ்தவ பெண் துறவிகள், முஸ்லீம்கள் என காஷ்மீரை நேசித்த அனைவரையுமே அவர்கள் வேட்டையாடினார்கள். வி.பி.மேனனோ காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் ஒப்பந்தம் ஒன்றை கையில் வைத்துக் கொண்டு பத்தான்களிடமிருந்து காஷ்மீரையும் உங்களையும் காக்க வேண்டுமென்றால் இந்தியாவோடு நீங்கள் இணைவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஹரிசிங்கின் கழுத்தில் கத்தியை வைத்தபடி நின்றார். என்ன செய்வதென்று தெரியாத ஹரிசிங் வி.பி.மேனன் நீட்டிய இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பல மாதங்கள் நடந்த போருக்குப் பின்னர் பத்தான்கள் விரட்டியடிக்கப்பட்டனர். காஷ்மீர் இந்தியாவால் அடிமை கொள்ளப்பட்டது.<br /><br />அக்கிரமமான முறையில் பறித்தெடுக்கப்பட்ட காஷ்மீரோடு மேனன் டில்லிக்குச் சென்றார். தான் விரும்பிய காஷ்மீர் தனக்குக் கிடைத்தது தொடர்பாக நேருவுக்கும் மகிழ்ச்சி. அவர்கள் மன்னர் ஹரிசிங்கிற்கும் சரி காஷ்மீர் மக்களுக்கும் சரி எந்தவிதமான வாக்குறுதிகளும் அளிக்கவில்லை. அளிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது. காஷ்மீர் பாகிஸ்தானுக்குக் கிடைக்காத கோபத்தின் உச்சிக்குச் சென்ற ஜின்னா காஷ்மீரிகளை இந்தியா அபகரித்துக் கொண்டதாகவும், காஷ்மீரிகளுக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். காஷ்மீர் சர்வதேச அரசியலின் ஒரு அங்கமாக மாறியபோது, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இது தீராப்பகையை உருவாக்கி விடும் என்பதை உணர்ந்த மவுண்ட் பேட்டன் நேருவுக்குக் கொடுத்த நிர்பந்தத்திற்குப் பின் 'காஷ்மீரில் ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்' என்று அப்போது வானொலியில் நாட்டு மக்களுக்கு அறிவித்தார். அரசியல் சட்டத்தில் 370-வது பிரிவு உருவாக்கப்பட்டு இந்தியாவின் பிற பகுதிகளை விட காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டன. காஷ்மீரில் ஏனைய இந்திய மாநிலத்தவர்கள் நிலம் வாங்க முடியாது என்பது அதில் பிரதானமான விஷயமாகக் கருதப்படுகிறது.<br />// 1946 - 1949இல் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தில் காஷ்மீருக்கான அரசியல் உரிமைகளும் ஏட்டளவில் உருவாக்கப்பட்டன, அதில் The Constitution of Jammu and Kashmir Preamble. - We, the people of the State of Jammu and Kashmir, having solemnly resolved, in pursuance of the accession of this State to India which took place on the twenty - sixth day of October, 1947, to further define the existing relationship of the State with the Union of India as an integral part thereof, and to secure to ourselves - <br />… … … … … … … … … … … <br />… … … … … … … … … … … <br />… … … … … … … … … … … <br />… … … … … … … … … … … <br />IN OUR CONSTITUENT ASSEMBLY this seventeenth day of November, 1956, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.<br />மேலே உள்ளது ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரைப் பகுதி.<br />1. இது என்ன கூறுகிறது?<br />ஜம்மு - காஷ்மீர் மக்களாகிய நாங்கள், 1947 அக்டோபர் 26 அன்று இம்மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவும், மேலும் இந்திய ஒன்றியத்தோடு இந்த மாநிலத்துக்கு உள்ள தொடர்பை வரையறை செய்ய வேண்டியும் … … எங்கள் மாநில அரசியல் அமைப்பு அவையில், 1956 நவம்பர் 17 அன்று நாங்கள் நிறைவேற்றியும் ஏற்றும் எங்களுக்கான இந்த அரசமைப்பை அமைத்துக்கொண்டோம்" எனக் கூறுகிறது. இந்தியாவுடன் இணைக்கப்பட்டதை ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான உறவு - தொடர்பு பற்றிய ஒரு விளக்கத்தையும் அல்லது வரையறையையும் தங்களுக்குத் தாங்களே செய்துகொண்டனர்.<br />சுதந்தர இந்தியாவுக்கு என்று எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? அதன் முகவுரையில் "இந்திய மக்களாகிய நாங்கள், 1949 நவம்பர் 26இல் நிறைவேற்றிக் கொண்ட அரசமைப்புச் சட்டம்" என்றே கூறுகிறது. அதாவது இந்தியாவிலுள்ள எல்லா மக்களும் "இந்திய மக்கள்". ஆனால், காஷ்மீரில் உள்ள மக்கள் முதலில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் அடுத்து இந்திய மக்கள். சட்டப்படி அவர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள்.<br />2. 1956இல் நிறைவேற்றப்பட்ட ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்ட விதி 26இன்படி - ஜம்மு - காஷ்மீருக்கு ஒரு குடியரசுத் தலைவர். அதாவது சர்தார்-இ-ரியாசத் உண்டு. ஆனால் 1959 முதல் 1965 வரையில் இந்திய அரசு மேற்கொண்ட அரசமைப்புத் திருத்தத்தின்படி, ‘குடியரசுத் தலைவர்' - (ஒரு தன்னாட்சிப் பகுதியின் தலைவர்) என்பது ஒழிக்கப்பட்டு, ஆளுநர் - ஒரு மாநில கவர்னர் என்கிற பதவியாக அதை மாற்றி, அதிகாரப் பறிப்பை இந்திய அரசு மேற்கொண்டது.<br /><br />தேசியக் கொடி<br /><br />ஜம்மு - காஷ்மீர் அரசமைப்புச் சட்டத்தின் விதி 144 அந் நாட்டுக்கு உரிய தேசியக் கொடியின் அமைப்பை விவரிக்கிறது.<br />144. Flag of the State: - The Flag of the State shall be rectangular in shape and red in colour with theree equidistant white vertical stripes of equal width next to the staff and a white plough in the middle with the handle facing the stripes. The ratio of the length of the flag to its width shall be 3 : 2.<br />ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான கொடி நீண்ட சதுர வடிவத்தில் சிவப்பு வண்ணத்தில் இருக்கும். அக்கொடியின் கம்பை ஒட்டி சமமான இடைவெளிகளைக் கொண்ட சமமான அகலம்கொண்ட செங்குத்தான வடிவில் - வெள்ளை நிறத்தில் மூன்று கோடுகள் இருக்கும். கொடியின் நடுவில் வெள்ளை வண்ணத்தில் ஏர் வரையப்பட்டிருக்கும். ஏரின் மேழி வெள்ளைக் கோடுகளை நோக்கி இருக்கும். ( நன்றி வே.ஆனைமுத்து) //<br /><br />அளவில் பெரியதும் மக்கள் தொகையில் சிறியதுமான காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, திபெத், ஆப்கான் ஆகிய நாடுகளின் எல்லையில் இருக்கிறது. இப்போது காஷ்மீரை இந்தியா, பாகிஸ்தான், சீனா என மூன்று நாடுகள் ஆக்ரமித்திருக்கின்றன. காஷ்மீரின் வடபகுதியான சில்ஜிட்டைச் சுற்றியுள்ள பகுதிகளை பாகிஸ்தானும், சீன எல்லையை ஒட்டிய பகுதியை சீனாவும் ஆக்ரமித்திருக்கிறது இந்தப் பகுதியை அக்சாய் சின் (aksai shin) என்று அழைக்கிறார்கள். இது போக பெரும்பகுதி ஜம்மு காஷ்மீரை இந்தியா ஆக்ரமித்துள்ளது. சீன இராணுவத்தின் நேரடித் தலையீடு காஷ்மீரில் இல்லை என்றாலும் சமீபகாலமாக சீனாவும் காஷ்மீர் விவாகரங்களில் ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கிறது.<br /><br /><strong>ஆயுதப் போராட்டத்திலிருந்து மக்கள் வன்முறைக்கு</strong><br /><br />காஷ்மீரிகளின் தனி நாட்டுக் கோரிக்கை எண்பதுகளுக்குப் பின்னர் ஆயுதப் போராட்டமாக வடிவெடுத்தது. இந்தப் போராளிக்குழுக்களில் அடிப்படைவாதக் குழுக்களும் உண்டு, பாகிஸ்தானிடம் உதவி பெற்று இயங்கிய குழுக்களும் உண்டு, இந்தியா உருவாக்கிய குழுக்களும் உண்டு. இந்தியா மற்றும் பாகிஸ்தானை எதிர்த்து சுதந்திர காஷ்மீர் கொள்கைக்காக நின்றவர்களும் உண்டு. இந்தியாவில் இருக்கிற இந்து வெறியர்களும், பாகிஸ்தானில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களும் காஷ்மீரில் தலையிட ஆயுதப் போராட்டத்தின் நோக்கம் சிதைக்கப்பட்டது. காஷ்மீர் குழுக்களின் ஆயுதப் போராட்டமும், அடிப்படைவாத முஸ்லீம் அரசியலும் இந்தியாவுக்குத் தோதாக அமைய எண்பதுகளில் இராணுவ சிறப்பதிகாரச் சட்டத்தை காஷ்மீரில் அமல்படுத்தியது.<br /><br />1958-ல் ஒன்றுபட்ட இந்தியா உருவாகத் தடையாக இருந்த தேசிய இனங்களின் உரிமைக் குரலை நசுக்கி அப்பகுதிகளை பதட்டப்பகுதிகளாக அறிவித்து மிரட்டி இந்தியாவோடு இணைப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சிறப்பதிகாரச் சட்டம். 1972-ம் ஆண்டு இச்சட்டம் திருத்தப்பட்டு சித்திரவதை, கடத்தல், பாலியல் வன்முறை, சுட்டுக் கொல்லுதல் போன்ற உரிமைகளை - இராணுவ வீரர்களுக்கு கட்டற்ற முறையில் வழங்கி வடகிழக்கு மாநிலங்களில் அமல்படுத்தியது இந்தியா. எண்பதுகளில் இச்சட்டம் காஷ்மீருக்கு விரிவுபடுத்தப்பட்டபோது இந்தியப் படைகள் ஒரு நரவேட்டையை நடத்தி ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள் அல்லது அதை பலவீனப்படுத்தினார்கள்.<br />இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலான பதற்றப்பகுதி என்று மத்திய அரசு உணரும் பட்சத்தில் இந்திய ஜனாதிபதியால் நியமிக்கப்படும் கவர்னர் மூலமாக அந்தப் பதட்டப்பகுதியை தன் கட்டுக்குள் கொண்டு வரும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு. இதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில அரசு தலையிட முடியாது. சட்டமன்றம் கூட இதில் தலையிட முடியாது. ஆனால் சமீபத்தில் காஷ்மீர் பிரச்சனைக்கான எட்டு அம்சத் திட்டத்தை வெளியிட்ட ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் அவர்கள் மீதான வழக்குகளை கைவிடவும் மாநில அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளோம் என்றவர் சிறப்பதிகாரச்சட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசிடமே விடப்படுகிறது என்று வடிகட்டிய பொய் ஒன்றைச் சொன்னார். தங்களுடைய படைகள் காஷ்மீரில் நடத்தும் கொலைகளுக்கான பழியை மாநில அரசு மீதே சுமத்தினார் சிதம்பரம். உண்மையில் இந்திய வரலாற்றில் இன்றுவரை அச்சுறுத்தலாக இருக்கும் இச்சட்டம் - ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதையோ, பிரச்சனையின் மீது கருத்துத் தெரிவிப்பதையோ, பிரச்சனையாகப் பேசும் உரிமையையோ தடை செய்கிறது.<br />அச்சுறுத்தல் என்று இராணுவம் கருதும் பட்சத்தில் சந்தேக நபரை வாரண்ட் இல்லாமல் கைது செய்வதோடு தேவைப்பட்டால் துப்பாக்கிப் பிரயோகமும் செய்யலாம். காஷ்மீரில் பல்லாயிரம் தாய்மார்கள் தங்களின் குழந்தைகளை இச்சட்டத்திற்கு பலியாக்கியிருக்கிறார்கள். காணாமல் போனவர்கள், கடத்தி பாலியல் வன்முறைக்குள்ளாகி கொல்லப்பட்டவர்கள் என்று விரியும் இந்த பயங்கரங்களை நடத்த அரசே பல சட்டவிரோதமான முகாம்களையும் நடத்தி வந்தது. ஆயுதப் படை சிறப்பதிகாரச் சட்டத்தோடு மேலும் பல கொடிய சட்டங்களும் காஷ்மீரில் பிரயோகிக்கப்பட்டதுண்டு. இன்று வரை இந்த நிலை மாறவில்லை. ஆள் தூக்கிச் சட்டங்களில் இருந்து தங்களின் சந்ததியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அவர்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டனர். சையது அலிஷா கிலானி, யாசின் மாலிக், மிர்வேஸ் உமர் ஃபரூக் போன்ற தனிநாடு கோரும் தலைவர்கள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்குத் திரும்பினர்.<br /><br />காஷ்மீரில் இந்திய இராணுவத்தின் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும், இனப்படுகொலைகளையும் சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை – ‘புதைக்கப்பட்ட உண்மைகள் (buried evidence)’ என்னும் தலைப்பில் நூலாக வெளிக்கொண்டு வந்துள்ளது. நவம்பர் 2006க்கும் 2009 -க்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட நேரடி ஆய்வில் காஷ்மீரின் பண்டிபுறா, பாராமுல்லா மற்றும் குப்வாரா மாவட்டங்களைச் சேர்ந்த 52 கிராமங்களில் உள்ள 2,700 விவரம் அறியப்படாத, அடையாளம் காணப்படாத 2,943க்கும் மேலான சடலங்களைக் கொண்ட புதைகுழிகளை ஆவணப்படுத்தியுள்ளது. கலிபோர்னியா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டகரல் ஸ்டயில் தொல்லியல் பிரிவு பேராசிரியரான முனைவர் அங்கனா சட்டர்ஜி, காஷ்மீர் பிரச்னை மீதான சர்வதேச மக்கள் தீர்ப்பாயத்தின் ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் பர்வேசு இம்ரோசு, இ.பி.டபிள்யூ என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த கௌதம் நவ்லாகா, காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணி என்ற அமைப்பின் துணைத்தலைவரான சாஹிர் உத்தின், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலைசிறந்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய், ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகத்தின் கூட்டணியின் திட்ட ஒருங்கிணைப்பாளரான குர்றம்பர்வேசு ஆகியோர் அடங்கிய குழுவினரால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை இந்திய இராணுவத்தின் கூட்டுப் படுகொலைகளை அம்பலப்படுத்துகிறது. படுகொலைகள் தொடர்பாக அந்த அறிக்கையில்,<br /><br />// 2,373 புதைகுழிகளில் (87.9 விழுக்காடு) பெயர் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 154 புதைகுழிகளில் இரண்டுக்கு மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. 23 புதைகுழிகளில் இரண்டுக்கும் மேற்பட்ட, மூன்றில் இருந்து 17 வரையிலான சடலங்கள் புதைக்கப்பட்டிருந்தன. //<br /><br />// இப்புதை குழிகள், வயல்வெளிகள், பள்ளிகள், வீடுகள், பொதுவான சமூக நிலங்களில் அமைந்துள்ளன என்பதால், உள்ளூர் சமூகத்தினர் மீது இதன் தாக்கம் பயங்கரமானதாகக் காணப்படுகிறது. இந்திய ராணுவமும், கூட்டு காஷ்மீர் காவல் துறையினரும் புதைகுழியில், சவக்குழியில் புதைக்கப்பட்ட முகம் தெரியாத அடையாளம் காணப்படாத சடலங்கள் யாவும் அயல் நாட்டு தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகளின் சடலங்கள் என்று வழக்கமாக கூறி வருகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எல்லைப் பகுதிகளின் வழியாக காஷ்மீரத்திற்குள் ஊடுருவும்போது அல்லது காஷ்மீரில் இருந்து ஆயுதப் பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தானிற்குள் புக முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிகாரப்பூர்வ அரசு சொல்லாடல்களில், தற்போதைய உள்ளூர் காஷ்மீர் குழுக்களின் வன்முறையற்ற அரசியல் மற்றும் பிரதேச சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை, உள்ளூர் எதிர்ப்பு நடவடிக்கை போராட்டங்களை, பயங்கரவாத நடவடிக்கைகள் என்று சித்தரித்து எல்லை தாண்டிய தீவிரவாதத்துடன் இணைத்து ஊதிப் பெருக்கி குறிப்பிடுகின்றனர். // என்று காஷ்மீரின் பயங்கரநிலையைப் பட்டியலிடுகிறது சர்வதேச தீர்ப்பாயத்தின் அறிக்கை.<br /><br />காஷ்மீர் குறித்து பல மனித உரிமை ஆர்வலர்கள் காட்டும் சித்திரம் இந்திய அரசின் உண்மையான முகத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது. இந்திய துணை இராணுவப் படையினருடன் மோதல் என்ற பெயரில் காஷ்மீரில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 70,000. பல நேரங்களில் இந்திய இராணுவம் கொலைகளைச் செய்து விட்டு அந்தப் பழியை காஷ்மீர் போராளிக் குழுக்கள் மீதும் போட்டுள்ளது. பத்ரபால் படுகொலை, சட்டீஸ்புறா சீக்கியர் படுகொலைகளைச் செய்தது இந்தியப் படைகள். பழியோ காஷ்மீர் போராளிக் குழுக்கள் மீது. உச்சக்கட்டமாக 1996-ல் காஷ்மீரின் மனித உரிமைப் போராளியான அன்டிராபியைக் கொன்றதிலிருந்து 2009ல் சோபியான் மாவட்டத்தில் நிலோபர் ஜாண், அசியா ஜாண் படுகொலை வரை இந்திய ராணுவத்தின் கொடுமை விரிந்து செல்கிறது.<br /><br /><strong>பனிலிங்கமும், பார்ப்பன இந்து மத வெறியும்</strong><br /><br />காஷ்மீரின் நீண்டகால காஷ்மீர் வரலாற்றில் பௌத்தர்களும், சீக்கியர்களும், இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக வாழ்ந்து வழிபட்ட வரலாறு உண்டு. பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தபோதிலும் அவர்கள் டோக்ரா வம்சத்தைச் சார்ந்த ஒரு இந்து மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்ததே காஷ்மீர் மக்களின் மதச்சார்பின்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இன்று இந்துக்களின் புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாக மாறி இந்திய நிறுவனங்களின் ஸ்பான்சர் பயணங்களுள் ஒன்றாக மாறிவிட்ட அமர்நாத் பனிலிங்கக் கோவிலை 1860களில் கண்டுபிடித்ததே முஸ்லீம் இன ஆட்டிடையவர்களான மாலிக்குகளே. அவர்கள் 150 ஆண்டுகளாக அதை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்து அந்த பனிலிங்கத்தை இந்து மக்களின் வழிபாட்டிற்காகக் கொடுத்ததோடு காலம் காலமாக பனிலிங்கத்தை வழிபட வரும் இந்து யாத்ரீகர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வந்தார்கள். எந்தவிதமான மத வேற்றுமைகளும் இல்லாமல் இந்துக்களும், முஸ்லீம்களும் வாழ்ந்து வந்த நிலையில்தான் அமர்நாத் கோவிலை வைத்து ஓர் இந்து அரசியலை நுழைத்தது இந்தியா. 2000-ஆம் ஆண்டில் அந்தக் கோவிலுக்கான அறங்காவல் கமிட்டியை உருவாக்க, இதுவரை அந்த கோவிலை பேணிப்பாதுகாத்து வந்த அந்த ஏழை முஸ்லீம் மாலிக்குகள் கோவில் மீதான் உரிமையை இழந்தார்கள். அமர்நாத் கோவிலுக்கு நிலம் வழங்கும் முடிவை காஷ்மீர் மாநில அரசு எடுக்க, காஷ்மீர் மக்கள் அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்க, இந்து மத வெறியர்கள் அதைச் சாட்டாக வைத்து இந்தியா முழுக்க சிறுபான்மை வெறுப்பரசியலை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றனர்.<br />இந்திய அரசால் காஷ்மீருக்குள் நேரடியாக எவ்விதமான குடியேற்றங்களையும் செய்ய முடியாது. அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு அதைத் தடுப்பதால் காஷ்மீரிகளின் நிலங்களை அபகரிக்க இந்தியா பயன்படுத்தும் ஒரு தந்திரம்தான் இப்போது பனிலிங்க வழிபாடு. துவக்கத்தில் 20,000 பேர் மட்டுமே வந்துபோன லிங்க வழிபாட்டுக்கு இந்தியாவின் வேறு எந்த புனித தலங்களுக்கும் செய்யாத ஏற்பாடுகளை இந்தியா செய்துள்ளது. தங்கும் கூடாரங்கள், ஹெலிஹாப்டர் வசதி போன்றவைகளைச் செய்துள்ள இந்தியா, அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) ஒன்றை உருவாக்கி அமர்நாத் வழிபாட்டை நாற்பது நாள் திருவிழாவாகக் கொண்டாடுகிறது. இஸ்லாமியர்களுக்கு ஹஜ் பயணம் எப்படி புனிதக் கடமையோ அப்படியே இந்துக்களுக்கு அமர்நாத் லிங்க யாத்திரை என்று இந்துப் பாசிஸ்டுகள் பிரச்சாரம் செய்கிறார்கள். பெரும்பான்மை இந்துச் சமூகத்திடம் சமீப ஆண்டுகளாக இந்தக் கோவிலுக்கு பெரும் வரவேற்பு. ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுதப் போராட்டத்தை கைவிட்டிருந்த காஷ்மீரிகள், பெருந்திரள் மக்கள் போராட்டத்தில் ஒன்றிணைந்தது இந்த பனிலிங்க கோவில் பிரச்சனையால் ஏற்பட்ட சோபியான் (2009 மே) படுகொலைகளில் இருந்துதான்.<br /><br /><strong>பண்டிட்கள்</strong><br /><br />கடந்த இருபதாண்டுகளில் இருபது லட்சம் பண்டிட்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து பதட்டச் சூழலால் வெளியேறியிருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர் குடிமைச் சமுதாய கூட்டமைப்பு 21-10-2010 அன்று டில்லியில் நடத்திய கருத்தரங்கில் பேசிய அருந்ததிராயின் கருத்தில் இருந்தே அம்பைக்கும் இங்குள்ள இந்திய தேசியவாதிகளுக்கும் மூளை சூடேறுகிறது. ஆனால் ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் ஜீலானி அதே கூட்டத்தில் இந்துக்கள், சீக்கியர்கள், பண்டிட்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் விடுத்த அழைப்பையோ அனைத்து மக்களையும் சமத்துவமாக மதித்து காஷ்மீர் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அறிவித்ததையோ தந்திரமாக இந்திய ஊடகங்கள் மறைத்து விட்டன. இது தொடர்பாக பேராசியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள ‘காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே?’ நூலிலும், பெரியவர் எஸ்.வி. ராஜதுரை எழுதியுள்ள ஷோபியான் நூலிலும் அண்மைத் தரவுகளோடு ஏராளமான ஆதாரப்பூர்வத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.<br /><br />ஆனால் காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை இந்து, முஸ்லீம் பிரச்சனை என்றும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமான பிரச்சனை என்றும், பாகிஸ்தான் தூண்டுதலின் பேரில் நடைபெறும் பிரிவினைவாதிகளின் கிளர்ச்சி என்றும், ஜிகாதிகளின் பயங்கரவாதம் என்றும் தொடர்ந்து நச்சுக் கருத்துக்களை பரப்பும் ஊடகங்கள், அறிவுஜீவிகள் பொதுவாகவே தங்களின் முஸ்லீம் வெறுப்பு அரசியலை முன்னெடுக்க அதற்கு உறுதுணையாக காஷ்மீரில் இருந்து வெளியேறி இப்போது டில்லியில் வசித்து வரும் பண்டிட்டுகளை கையில் எடுத்துக் கொள்வார்கள். காஷ்மீர் பண்டிட்கள் மூஸ்லீம்களால் வெளியேற்றப்பட்டனர் என்று கதை கட்டி தங்களின் வழமையான முஸ்லீம் வெறுப்பை இந்து மனதில் நின்று நிறுவுகின்றனர். காஷ்மீர் பண்டிட்கள் மட்டுமல்ல முஸ்லீம்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட எல்லா மக்களுமே இந்திய, பாகிஸ்தான் படைகளாலும் போராளிக் குழுக்களாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்மீரில் எந்த சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்காத கவனிப்பும் அக்கறையும் பண்டிட்களுக்கு மட்டும் கிடைக்கும் ரகசியம் நேருவின் காலத்தில் இருந்தே துவங்கி விட்டது.<br /><br />தொண்ணூறுகளில் காஷ்மீரில் ஆளுநராக ஜக்மோகன் இருந்தபோது அவருடைய தூண்டுதலின் பேரிலேயே பள்ளத்தாக்கில் இருந்து பண்டிட்கள் வெளியேற்றப்பட்டு டில்லிக்கு அனுப்பப்பட்டனர். அப்படி அனுப்பபட்ட பண்டிட்களுக்கு இந்திய அரசாங்கம் டில்லியில் கடைகளையும், குடியிருப்புகளையும் ஒதுக்கிக் கொடுத்திருப்பதோடு, அரசு வேலைகளையும் வழங்கியிருக்கிறது. காஷ்மீரில் அவர்கள் அரசு ஊழியர்களாக பணி செய்திருந்தால் அதை ஓய்வூதியமாகவும் கொடுக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சனை காரணமாக தமிழகம் வந்த ஈழ அகதிகளை இந்தியா திறந்தவெளிக் கழிப்பிடங்களில் கொட்டி வைத்திருப்பது போல்தான் பர்மா, ஆப்கான், வங்க அகதிகளையும் வைத்திருக்கிறது. திபெத் அகதிகள், காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட்கள் இந்த இரண்டு அகதிகளுக்கும்தான் இந்தியா ஒப்பீட்டளவில் வசதியான ஒரு வாழ்வை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது.<br /><br />சீனாவுடனான தனது எல்லைப் பிரச்சனையில் திபெத்தை ஒரு துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் இந்தியா திபெத் அகதிகளை ராஜமரியாதையோடு கவனித்துக் கொள்கிறது. காஷ்மீரில் தன் ஆக்ரமிப்பு இராணுவத்திற்கு எதிராக காஷ்மீரிகள் போராடுவதால் பண்டிட்டுகளை இந்துத்துவப் பாதைக்கு திருப்புவதன் மூலம் காஷ்மீரிகளுக்குள் இந்து முஸ்லீம் பிரிவினையைத் தூண்டுகிறது இந்தியா. அந்தத் தந்திரத்தின் விருந்தோம்பலும் உயர்குடி அங்கீகாரமும் இணைந்துதான் பண்டிட்களுக்கு டில்லியில் வசதியான வாழ்வை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது. ஆனால் எப்போதும் பெரும்பான்மை முஸ்லீம் மக்கள் பண்டிட்களை தாக்கியதோ அவர்களுக்கு எதிரான வன்முறையிலோ இறங்கியதில்லை. ஆயுதக் குழுக்கள் போராடிய காலத்தில் எப்படி சில அப்பாவி முஸ்லீம் குடும்பங்கள் உளவாளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்டார்களோ அப்படியே சில பண்டிட்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்று வெளியேறிய பண்டிட்களின் வீடுகள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டிருக்கும் நிலையில் டில்லியில் வாழும் அவர்களோ டில்லியில் இந்தியாவின் தேசியக் கொடிகளைப் பிடித்தபடி காஷ்மீர்களுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்து முஸ்லீம் என்று இந்துப் பாசிசம் விதைத்த நச்சுக் கருத்துக்கு அவர்கள் ஆட்பட்டிருக்கிறார்கள்.<br /><br /><strong>காஷ்மீர் மக்கள் வன்முறை</strong><br /><br />ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை இறந்து போன ஒன்றாகவே கருதினார்கள் பலரும். மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக மக்கள் எதிர்ப்பியக்கங்கள் சாத்தியமற்றுப் போய் விட்டது என்கிற எண்ண ஓட்டங்களுக்கும் அதில் மறைந்திருக்கும் சில உண்மைகளுக்கப்பால் - 2009 மே மாதம் ஷோபியான் பகுதியைச் சேர்ந்த நீலோபர் ஜான் மற்றும் அவரது மைத்துனி அசியா ஜான் என்கிற இரண்டு பெண்கள் இந்திய இராணுவத்திரால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு ஆப்பிள் தோட்டத்தில் வீசப்பட்டிருப்பதாக செய்திகள் பரவ இந்தியாவுக்கு எதிரான போராட்டங்கள் சோபியான் மாவட்டத்தில் வெடித்தது. அதற்கு முன்னர் பனி லிங்கக் கோவில் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்ட இந்துத்துவ சக்திகள் காஷ்மீர் மக்களுக்கு எதிராக விஷத்தைக் கக்கியபோதும் அந்த மக்கள் ஒற்றுமையாகவே நின்றார்கள். சுமார் 47 நாட்களாக நடந்த மாபெரும் மக்கள் கிளர்ச்சி ஒட்டுமொத்த பள்ளத்தாக்கையும் பற்றிக் கொண்டது. ஒட்டு மொத்த காஷ்மீரிகளும் இன்று இந்தியாவுக்கு எதிராக திரண்டு நிற்கும் இன்றைய போராட்டம் உருவாகி சுமார் இரண்டாடுகாலம் ஆகப் போகிறது.<br /><br />இந்தப் பிரச்சனை துவங்கியபோது இது குறித்து கருத்துத் தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் "காஷ்மீரில் இராணுவ நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளுக்கு எதிரானதுதானே தவிர பொது மக்களுக்கு எதிரானது அல்ல" என்றார். இரு நாடுகளின் ஆக்ரமிப்புக் காலம் தொட்டு இன்றுவரை சுமார் ஒரு இலட்சம் காஷ்மீரிகள் இந்திய, பாகிஸ்தான் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 2008-ம் ஆண்டு காஷ்மீரில் மேற்கொண்ட ஆய்வின்படி, காஷ்மீரில் 37,400 விதவைகளும், 97,200 அநாதைகளும் இருப்பதாக ஓர் அறிக்கை கூறுகிறது. சோபியான் கொலைக்குப் பின்னர் மட்டும் நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆக நடவடிக்கை எல்லாம் தீவிரவாதிகளுக்கு எதிரானது என்றால் கொல்லப்பட்ட காஷ்மீரிகள் எல்லாம் திவீரவாதிகள் என்றுதானே சிதம்பரம் சொல்ல வருகிறார். கடந்த ஓராண்டிற்கும் மேலாக காஷ்மீர் எரிந்து கொண்டிருக்கிறது. நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இராணுவப் படைகளை காஷ்மீருக்குள் இறக்கி வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று நினைத்த இந்திய அரசின் அணுகுமுறைகளில் மண் விழுந்திருக்கிறது. சற்றும் எதிர்பாராத வகையில் முழுக் காஷ்மீரும் இந்திய இராணுவ ஆக்ரமிப்புக்கு எதிராக கிளர்ந்து நிற்கிறது.<br />ஆயுதக் குழுக்கள் இயங்கிய எண்பதுகள் காலத்தில் இந்தியாவின் எல்லா அடக்குமுறைகளுக்கும் நியாயம் கற்பிக்க போதுமான காரணங்கள் இருந்தன. 2009-க்குப் பின்னர் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை ஒடுக்க - பெருந்தொகையான இராணுவத்தினர் மீது கல்லெரியும் காஷ்மீரிகளை - ஒடுக்க இந்தியாவிடம் காரணங்கள் இல்லை. கடந்த காலங்களைக் காட்டிலும் முழுமையான பெருந்திரள் மக்கள் போராட்டமாக காஷ்மீர் போராட்டம் உருவாகி நிற்கிற இந்த நிலையில், ஆயுதக் குழுக்களை கையாண்ட அளவுக்கு இந்தியாவால் மக்கள் வன்முறையை கையாள முடியவில்லை. ஆயுதக் குழுக்களை அமைதியாக்கியதுபோல அவ்வளவு எளிதான விஷயம் இதுவல்ல என்பதைப் புரிந்து கொண்ட இந்தியா சுமார் ஆறு லட்சம் துருப்புகளை காஷ்மீருக்கு அனுப்பியுள்ளது. நேரடியாக மக்களை, பெண்களை, சிறுவர்களை சுட்டுக் கொல்லும் அரசு இப்போது வேறு விதமான வழிமுறைகளைக் கையாள்கிறது. ஒன்று காஷ்மீருக்கென்று இருக்கக் கூடிய 370- பிரிவை ரத்து செய்து காஷ்மீரை இந்தியப் பெருமுதலாளிகளின் கட்டுக்குள் கொண்டு வருவது. இன்னொன்று தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற செல்வாக்கிழந்த கட்சிகளின் துணையோடு காஷ்மீரிகளின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து நிலைகுலைய வைப்பது. இதுதான் இந்தியாவின் திட்டங்கள்.<br /><br />கடந்து போன சுதந்திர தின விழாவில் டில்லியில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் "காஷ்மீர் வன்முறைகள் கவலையளிக்கிறது. காஷ்மீர் இந்தியாவின் ஒன்றுபட்ட பகுதி என்பதை ஏற்றுக் கொண்டு வன்முறையைக் கைவிட்டு வருகிறவர்களிடம் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும்" என்று பேசினார். இந்தப் பேச்சில் எங்காவது காஷ்மீரிகளின் நீண்டகால கோரிக்கையான சுதந்திர காஷ்மீர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறதா? ஆனால் அதே நாளில் காங்கிரசோடு கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பரூக் அப்துல்லாவின் மகனும் வாரிசு அரசியலில் வந்து இன்று காஷ்மீரின் முதல்வராக இருக்கும் உமர் அப்துல்லா பேசும்போது //காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து அளிக்கத் தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போது ரம்ஜான் புனித மாதம் நடக்கிறது. இதுபோன்ற புனிதமான காலத்தில், பிரிவினைவாதிகள் வன்முறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தையில் பங்கேற்க வேண்டும். அதே நேரத்தில் மத்திய அரசுக்கும், காஷ்மீர் மக்களுக்கும் இடையேயான நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே மாநிலத்தில் வன்முறை அதிகரித்து வருகிறது.// என்று பேசுகிறார். மன்மோகன் சொல்லாத ஒன்றைச் சொன்னதாக உமர் காஷ்மீரில் பேசுவதும், காஷ்மீரில் ஆயுதக் குழுக்களின் வன்முறை எதுவும் இல்லாத நிலையில் பிரிவினைவாதிகள் என்று சிதம்பரமும், மன்மோகனும், உமர் அப்துல்லாவும் சொல்வது யாரை?<br /><br />காஷ்மீரில் இந்தியா முன்னெடுக்கும் பல்வேறு நாடகங்களில் சமீபமாக இந்தியா அறிவித்ததுதான் காஷ்மீருக்கான எட்டு அம்சத் திட்டங்கள். அதன் ஒரு பாத்திரத்தில் நடிக்கும் உரிமை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டோரின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் நிதி உதவியை இந்தியா வழங்கியிருந்தது. ஆனால் அந்த உதவிகளை காஷ்மீர் மக்கள் நிராகரித்து விட்டார்கள். நூற்றுக்கணக்கான மக்களை, சிறுவர்களைக் கொன்று நரவேட்டை ஒன்றை நடத்தி முடித்து விட்டு இந்தியா வழங்குவதாகச் சொன்ன பணத்தை காஷ்மீர் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் சி,பி.எம், சி.பி.ஐ உறுப்பினர்களோடு நம்மூர் திருமாவளவனும் சென்று வந்தார். இந்தியாவின் சுதந்திர காலத்தை ஒத்த நீண்ட வரலாற்றைக் கொண்ட காஷ்மீரிகளின் தனி நாட்டுக் கோரிக்கையை ஏதோ புதிதாய் உருவான ஒன்று என்பதுபோல் காட்ட முயல்கிறது இந்தியா.<br />இக்குழுவை வழக்கம் போல காஷ்மீர் மக்கள் நிராகரித்தபோதும் தேசிய மாநாட்டுக் கட்சியினர் ஒரு பக்கம் குழுவை வரவேற்று விட்டு இன்னொரு பக்கம் மக்களை இக்குழுவினர் சந்திக்க விடாமல் செய்தனர். ஹூரியத் மாநாட்டுத் தலைவர்கள் கூட முதலில் இக்குழுவினரைச் சந்திக்க மறுத்து விட்டனர். இந்த நாடகம் முற்றிலும் அம்பலமாகிவிடாதபடி காப்பதற்காக சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட சில கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த மிர்வாயிஸ் உமர் பாரூக், கீலானி மற்றும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின்மாலிக் ஆகியோரைச் சந்தித்தனர்.<br /><br />இச்சந்திப்பின்பொழுது, யாசின் மாலிக்கும் மிர்வாயிஸ் உமர் பாரூக்கும் இணைந்து, "காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியா மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்" எனக் கோரினர். பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு அடிப்படையாக, "காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக இந்தியா ஏற்றுக் கொள்ள வேண்டும்; மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைக்கிறார் கீலானி. இக்குழுவினர் எந்தவிதமான அறிக்கையை இந்தியாவிடம் அளிப்பார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. ஒரு வேளை ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று இக்குழு அறிக்கை அளிக்கும் பட்சத்தில் இந்தியா அச்சட்டத்தை வாபஸ் வாங்கி விடுமா? எட்டு அம்சத் திட்டத்தை அறிவித்த சிதம்பரமே சொல்லி விட்டார் சிறப்பதிகாரச் சட்டம் தொடர்பாக மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று. எவ்வளவு பொய்கள், பித்தலாட்டங்கள்!!<br />இதுபோன்ற ஒரு அனைத்துக் கட்சிக் குழுவை இலங்கைக்கு அனுப்பக் கோரியபோது இறையாண்மையுள்ள இன்னொரு தேசத்திற்குள் இந்தியா தலையிடாது என்று தமிழகத்தின் கோரிக்கையை தட்டிக் கழித்த இந்தியா, இனப்படுகொலை போர் முடிவுக்கு வந்த பின்னர் திமுக, காங்கிரஸ் கூட்டணி எம்பிக்களை சுற்றுலாப் பயணம் போல இலங்கைக்கு அனுப்பியதை இங்கே பொருத்திப் பார்க்கலாம். அவர்கள் கொடுத்த அறிக்கை என்னவென்றாவது நமக்குத் தெரியுமா? அந்த அறிக்கையின் அடிப்படையில் இந்தியாவை நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம் என்று சொன்ன கருணாநிதியின் வார்த்தைகள் என்னவானது?<br /><br /><strong>காஷ்மீர் தீர்வுக்கு தொழிலதிபர்கள் குழு</strong><br /><br />நீண்டகால அரசியல் பிரச்சனையான காஷ்மீர் பிரச்சனைக்கு எட்டு அம்சத் திட்டத்தின்படி தீர்வு என்று அறிவித்த இந்தியா இறுதியாக காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவரும் முன்னாள் ஆந்திர மாநில ஆளுநருமான சி.ரங்கராஜன் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கிறது. இக்குழுவில் இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, சிஐஐ அமைப்பின் முன்னாள் தலைவர் தருண் தாஸ், காஷ்மீர் பிரிவு தொழில் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் ஷகீல் கலாந்தர் நந்தகுமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநில அரசு சார்பில் ஒரு பிரதிநிதியும் குழுவில் இடம் பெறுவார்.<br />சிஐஐ (Confederation of Indian Industry) என்னும் அமைப்பு இந்திய தொழிலதிபர்களாலும் ஐப்பான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன் போன்ற நாடுகளில் உள்ள பன்னாட்டு தொழிலதிபர்களாலும் நிர்வகிக்கப்படுகிற இந்திய தொழில் முனைவோருக்கான கூட்டமைப்பு. தாதுக்களை தோண்டி எடுப்பது, சுரங்கம் அமைப்பது, தகவல் தொழில் நுட்பத்துறை முதலீடு போன்ற தொழில்களில் முதலீடு செய்யும் தொழிலதிபர்களின் கைகளில் இப்போது காஷ்மீருக்கான தீர்வு. இந்த தொழில் முதலைகளுக்கும் காஷ்மீருக்கும் என்ன சம்பந்தம்? காஷ்மீர் பிரச்சனையின் தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் உரிமையை இந்தத் தொழிலதிபர்களிடம் வழங்கியதன் மூலம் ஒட்டுமொத்த காஷ்மீரையும் இன்னொரு தண்டகாரண்யாவாக மாற்ற இந்தியா முயல்கிறது என்றே தெரிகிறது.<br />காஷ்மீரில் இந்தியாவைச் சார்ந்த எவரும் நிலம் வாங்க முடியாதபடி அரசியல் சட்டத்தின் 370 பிரிவு காஷ்மீர் மக்களுக்கான நில உத்திரவாதத்தை வழங்கி வரும் நிலையில் காஷ்மீர் இளைஞர்களின் பொருளாதார முன்னேற்றம், உருவாக்கப்பட வேண்டிய வேலை வாய்ப்புகள், தொழிற்சாலைகள் குறித்து இக்குழு ஆராயுமாம். எந்த மாதிரியான தொழில்களை காஷ்மீரில் தொடங்கலாம் என்று முடிவு செய்து இவர்கள் கொடுக்கிற அறிக்கையை வைத்து இந்தியா காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்குமாம். இந்தியப் பெருமுதலைகள் காஷ்மீரில் ஆப்பிள் தோட்டங்களை வாங்கிக் குவிக்கவும், மிஞ்சியிருக்கும் காஷ்மீர்களின் நிலங்களை அபகரிக்கவும் தடையாக இருக்கிற 370-வது பிரிவை நீக்கும் நோக்கிலேயே இப்போது தொழிலதிபர்களை காஷ்மீர் பிரச்சனைக்குள் இறக்கியிருக்கிறார்கள்.<br /><br />நிலங்களை அபகரித்து, வளங்களை கொள்ளையடித்துச் செல்லும் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து தங்களையும் தங்களின் நிலங்களையும் காத்துக் கொள்ள தண்டகாரண்யா மக்கள் போராடும் இதே நாட்களில்தான் மக்கள் நிலங்களை அபகரித்து அவர்களை நிலமற்றவர்களாக்கும் ஒரு யுத்த தந்திரத்தை காஷ்மீருக்கும் விரிவுபடுத்துகிறது இந்தியா. தண்டகாரண்யா, ஈழம் இந்த இரண்டிலுமே மக்கள் நிலங்களுக்காகப் போராடும் ஒரு சூழலை நாம் காண்கிறோம். மக்களின் உழைப்பின் மீதான் உரிமையும் நிலத்தின் மீதான உரிமையும் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் கைகளில் காஷ்மீர் தீர்வு செல்வது மிகப் பெரிய அழிவுக்கே இட்டுச் செல்லும்.<br /><br /><strong>அருந்ததிராயும் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளும்.</strong><br /><br />மறுகாலனியாதிக்கச் சூழலில் சிக்கி வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்பட்டிருக்கும் பெரும்பாலான இந்திய மக்கள் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பன்னாட்டு நிறுவனங்களின் தொழில் குவிப்பால் பலன் பெற்று புதிதாக உருவாகிவிட்ட மத்யமர் இன்னொரு பக்கம் - என வெகுவேகமான அடிமை மனோபாவத்திற்குள் கூட்டு மனச்சாட்சி தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய ஏழைகளின் நம்பிக்கைகளை ஓரளவுக்கு காத்து வந்த நீதிமன்றங்களும் இந்த சமூக அமைப்பின் ஒரு அங்கமாக மாறி மக்கள் மீது பாயும் நிலைகளை நாம் காண்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக பழங்குடிகள், விவசாயிகள், மீனவ மக்கள் மீது அறிவித்தும் அறிவிக்காமலும் ஒரு பெரும்போரை இந்திய அரசு நடத்திக் கொண்டிருக்கிறது. கடற்கரை மேலாண்மைச் சட்டங்கள் அமலுக்கு வரும்போது இந்தப் போரின் கொடூரங்களை எல்லையோர மக்கள் அனைவருமே அனுபவிக்க நேரலாம். இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய அறிவுலகமோ அரசின் கொடூர அடக்குமுறைகளைக் கண்டு மௌனம் சாதிக்கிறது அல்லது ஆதரித்து நிற்கிறது, அம்பையைப் போல. ஆனால் அருந்ததிராயோ இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தும் போர் குறித்து இப்படிச் சொல்கிறார் ''உலகிலேயே மிக மோசமான ஏழைகளை குண்டு வீசிக் கொல்கிறது இந்தியா". இதில் என்ன தவறு? அதுபோல காஷ்மீர் தொடர்பாக அவர் ‘’காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதுமே இருந்ததில்லை” என்றும் சொன்னார்.<br />அம்பை அவர்களே!! காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது என்றால் எப்போது இருந்தது என்பதைச் சொல்ல வேண்டியது உங்களின் பொறுப்பு. அல்லாமல் அரசு இயந்திரத்திற்கு ஆதரவாக இந்திய இறையாண்மையின் இதயத்தில் நின்று நீங்கள் இந்து மனதோடு அருந்ததிராய் மீது பாய்வதால் உங்களுக்கு இரண்டு தயிர்சாதங்களையும் தொட்டுக் கொள்ள மாவடுவையும் இந்தியா பரிசளிக்கும்; அருந்ததிக்கு துப்பாக்கிகளை மட்டுமே பரிசளிக்கும். அருந்ததிக்கு மட்டுமல்ல ஜனநாயகத்திற்காய்ப் போராடும் எவர் ஒருவருக்கும் அப்படித்தான்.<br /><br />மற்றபடி காலச்சுவடு கட்டுரையில் மாலதி மைத்ரி ஈழப் போராட்டத்தின்போது அறிவுஜீவிகளின் அணுகுமுறை குறித்து மிகச் சரியாகவே கணித்துள்ளார். ஈழ மக்களின் தேசிய இன விடுதலைக் கோரிக்கை புலிகளோடு துவங்கியதும் இல்லை புலிகளோடு முடிந்து போவதும் இல்லை. காஷ்மீரில், பாலஸ்தீனத்தில், ஏன் அமெரிக்க ஆக்ரமிப்பு ஆப்கானில் என உலக விஷயங்களை அணுகும்போது - அங்கெல்லாம் அடிப்படைவாதக் குழுக்களின் ஆயுத வன்முறையும் ஒரு அங்கமாக இருந்தாலும் - அதை தமிழக அறிவுஜீவிகள் எந்த முன்நிபந்தனையும் இன்றி ஆதரிக்கிறார்கள். ஆனால் ஈழம் என்று வரும்போது மட்டும் இவர்கள் ஆயிரம் தத்துவ அளவீடுகளைக் கொண்டு, குழப்பியடிக்கிறார்கள். வாயைத் திறந்தால் விடுதலைப் புலிகளைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள்; இலங்கை அரசு குறித்து மௌனம சாதிக்கிறார்கள். தண்டகாரண்யாவில் போராடும் மாவோயிஸ்டுகள் மட்டுமல்ல, மேற்குவங்கம் தொடங்கி கேரளாவின் முத்தங்கா வரையிலுமான பழங்குடி மக்களின் போராட்டமும் கூட ஈழப் போராட்டத்தைப் போன்றதல்ல. கால ஓட்டத்தில் ஈழப் போராட்டம் இன்று நிலத்திற்கான போராட்டமாக உருமாற்றம் அடைந்திருந்தாலும் கூட அது ஈழ மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டமே. அந்த வகையில் மாலதியின் கருத்தை நாம் ஆதரிக்கிறோம். காஷ்மீருக்கு எப்படியோ அதே நீதிதான் ஈழத்திற்கும்.<br /><br /><strong>உதவிய நூல்களும் கட்டுரைகளும்</strong><br /> <br />1. இந்தியாவில் தேசிய இனச் சிக்கலும் ஆளும் வர்க்கங்களும்- சுனித் குமார் கோஷ். <br />2.ஜவஹர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள் - அர்ஜூன் தேவ். <br />3. நள்ளிரவில் சுதந்திரம் - டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ், <br />4. காஷ்மீரின் தொடரும் துயரம் -உண்மை அறியும் குழுவின் ஆய்வறிக்கை, விடியல் பதிப்பகம். <br />5. காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே? அ.மார்க்ஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு. <br />6. http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810Iamapracifist.asp <br />7. சாம்பல் மூடிய நெருப்பு -டி.அருள் எழிலன். <br />8. ஷோபியான் - காஷ்மீரின் கண்ணீர் கதை- எஸ்.வி. ராஜதுரை.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-89398278949031554962011-01-04T14:16:00.006+05:302011-01-04T14:21:24.593+05:30வேறு நாடொன்றில் அரசியல் தஞ்சம் கோரப் போகிறேன் - இலினா பிநாயக்சென்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRDqrJqPxlhDiJzyZ1AnQN4G6KUNAUHkdilNkh7tUktme6NqpLl7_m8ftxfwYbBcpl9cOWhVKAAIysTqol_gBoINbOfdArJ-qDHU_eybHXvvVU1epn5Ngi2_tPlZw8_7RqFP12g1dFzNI/s1600/ilina-2.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 370px; height: 284px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRDqrJqPxlhDiJzyZ1AnQN4G6KUNAUHkdilNkh7tUktme6NqpLl7_m8ftxfwYbBcpl9cOWhVKAAIysTqol_gBoINbOfdArJ-qDHU_eybHXvvVU1epn5Ngi2_tPlZw8_7RqFP12g1dFzNI/s400/ilina-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5558250068420083410" /></a><br />முதியவர் நாராயணன் சன்யாலை மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர் என்று குறிப்பிட்டிருந்தேன். அது தவறு அவர் ஒரு மனித உரிமைப் போராளி மட்டுமல்ல பழங்குடி மக்கள் இயக்கத் தலைவர் அவளவுதான். என்கிற அளவில் டாக்டர் பிநாயக்சென்னின் மனைவி இலினா சென் அரசியல் தஞ்சம் தரும் ஜனநாயக நாடொன்றில் தஞ்சமடைவதைத் தவிற தனக்கு வேறு வழியில்லை என்று சொல்லியிருக்கிறார். பிநாயகச் சென்தான் பாரத தேசத்தின் கற்புக்கு களங்கம் விளைவித்து விட்டார். செலீனாவையும் அவரது மகள், மகன்களையும் கூட ஏன் துரத்துகிறார்கள். <br /><br />// என் கணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த விதமான அடிப்படை ஆதாரமும் இல்லை. ஆனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு நியாயமற்றது.விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு மனு செய்யுமாறு எங்களுக்கு பலர் அறிவுறுத்தினர். ஆனால் விசாரணை நியாயமாக நடைபெறும் என்ற நம்பிக்கையில் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. குற்றச்சாட்டுகள் அனைத்தும் திட்டமிட்ட சதிச் செயல்கள். நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பதன் மூலம் என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக்கூடும். என்னை பாதுகாத்துக் கொள்ள ஏதேனும் ஜனநாயக நாட்டின் தூதரகத்தில் அரசியல் அடைக்கலம் கேட்பதே இப்போது எனக்கு தெரிந்த ஒரே வழியாக உள்ளது. சொந்த நாட்டிலேயே எனக்கு பாதுகாப்பில்லை. எனக்கு 20, 25 வயதுகளில் 2 மகள்கள் உள்ளனர். என் கவலை எல்லாம் அவர்களைப் பற்றிதான் உள்ளது. எங்கள் குடும்பத்திற்கு நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அதனால் நான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஏஜெண்ட் என்று அவதூறு பிரசாரத்தை சிலர் மேற்கொண்டுள்ளனர். முஸ்லிம் நண்பர்கள் அதிகம் இருந்தால் அதை சட்ட விரோதமாக பார்க்கும் நிலை நாட்டில் நிலவுகிறது. என் கணவருக்கு பிறகு இப்போது நானும் அவதூறு குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளேன்'' என்றார் இலினா சென். // (நன்றி தினமணி).<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyjUnBXS7JWyKh1W2JeebrDBQk2dI2nctwld3y_69lPzL5RcwjA_14JsK6P5z-0fAaYH9ayZR2ey44AuCZ7Nwd-YufXb9CWs_dCEbofxh14Oixyz3-Qhhzn5Bja8pEpKkUSnJT-Yw2KKY/s1600/ilina-1.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 236px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyjUnBXS7JWyKh1W2JeebrDBQk2dI2nctwld3y_69lPzL5RcwjA_14JsK6P5z-0fAaYH9ayZR2ey44AuCZ7Nwd-YufXb9CWs_dCEbofxh14Oixyz3-Qhhzn5Bja8pEpKkUSnJT-Yw2KKY/s400/ilina-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5558249875389179474" /></a><br /><br />இலினாவுக்கும் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கும் தொடபு என்று சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்தியாவுக்கு எதிரான உளவுச் சதியில் சிக்கவைத்து ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் கைது செய்ய திட்டமிட்டமிட்டிருக்கலாம் என்று செய்திகள் வரும் நிலையில் அதிகமான முஸ்லீம் நண்பர்களைக் கொண்டிருப்பது இந்தியாவில் ஒருவருக்கு எத்தகைய அச்சுறுத்தலைக் கொண்டிருக்கும் என்பதை இலினாவின் வாக்குமூலத்திருந்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் மாவோயிஸ்டா? டெரரிஸ்ட்டா? நக்சலிஸ்டா? பண்டமெண்டலிஸ்டா? புலியிஸ்டா? என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியாது அதை முடிவு செய்வது அரசின் உரிமை என்பதை பிநாயக்சென் கைதும் தொடர்ந்து துரத்தப்படும் இலினாவின் சூழலும் நமக்கு உணர்த்துகிறது.<br /><br />இலினாவை குறிவைக்க இவர்கள் இரண்டு மெயில்களைக் காரணம் காட்டுகின்றனர். ஒரு மெயிலில் அமெரிக்க ஜனாதிபதியை "We have a chimpanzee in the White House," என்று இலினா கிண்டலாக குறிப்பிடுகிறார்.இதை சட்டீஸ்கர் போலீஸ் இது மாவோயிஸ்டுகளின் சங்கேத வார்த்தைகள். ஓபாமாவைக் கொல்ல சதி நடக்கிறது என்றும் சொல்கிற காவல்துறை அதற்கு தொடுப்பாக இலினா பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI - Inter-Services Intelligence) அமைப்போடு தொடர்பு வைத்திருந்தார் என்று இன்னொரு கதையையும் சொல்கிறது. உண்மையில் இலினா புது டில்லியில் இருக்கிற Indian Social Institute என்ற ஐ.எஸ்.ஐ நிறுவனத்தில் இருக்கிற வால்டர் பெர்னாண்டஸ் என்பருக்கு ஒரு மெயிலும் வாரணாசியில் இருக்கிற காந்தி இன்ஸ்டியூட்டிற்கு இன்னொரு மெயிலும் அனுப்பியிருக்கிறார். அதைத்தான் இந்த துப்பரியும் சாம்புகள் பாகிஸ்தான் என்றும் சங்கேத வார்த்தைகள் என்றும் கதை கட்டுகிறார்கள்.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-14594489503494110772010-12-31T13:57:00.010+05:302010-12-31T17:52:06.917+05:30பிநாயக்சென் நீதிமன்ற அச்சுறுத்தல்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgkSgvaT4MOEjVCOFaCEFKI30WlOkB-QJQYjAP3I2qIsjzsqyDnCzPr3-cNGgkFrgFi4nOrEaLfqSCcI8x-Dmv_982LHhDp3WSKtGLkyfLlkNIjIyArwst13WdBq8pJd_l-iHmu0b8TvQ/s1600/dr-3.JPG"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 267px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhgkSgvaT4MOEjVCOFaCEFKI30WlOkB-QJQYjAP3I2qIsjzsqyDnCzPr3-cNGgkFrgFi4nOrEaLfqSCcI8x-Dmv_982LHhDp3WSKtGLkyfLlkNIjIyArwst13WdBq8pJd_l-iHmu0b8TvQ/s400/dr-3.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556820515733316290" /></a><br /><br />மௌனமாக இருப்பவர்கள் புத்திசாலிகள். ஏனென்றால் அடக்குமுறைகளுக்கு எதிராக நீங்களும் நானும் எப்போது பேசத் துவங்குகிறோமோ அப்போது உங்களை நானும் என்னை நீங்களும் தோழர் என்று அழைத்துக் கொள்கிறோம். தோழர் என்றால் அவர்களைப் பொறுத்தவரை கம்யூனிஸ்ட். அதுவும் ஆயுதம் தாங்கிய மாவோயிஸ்ட் , புண்ணிய பாரத்தின் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் தோழர்கள். சேவின் மரணத்தின் பின்னர் மிகவும் கவர்ச்சிகரமான வார்த்தையாகிப் போன தோழர் என்ற சொல்லை அதற்குரிய உண்மையான அர்ப்பணிப்போடு பெற்றுக் கொள்ளும் எவருக்கும் எந்த வயதிலும் விதிக்கப்படலாம் ஆயுள் சிறை. அதைத்தான் மக்கள் மருத்துவர் பிநாயக்சென் உள்ளிட்ட தோழர்களுக்கு வழங்கி செய்தி சொல்லியிருக்கிறது ராயப்பூர் நீதிமன்றம். உள்நாட்டு அச்சுறுத்தலை எதிர்கொள்ள நீதிமன்றங்களும் விசாலமான சிறைகளும் நாடெங்கிலும் உள்ள போது இன்னொரு அமைச்சகம் தனியாகத் தேவையில்லை. இந்த உள்நாட்டு அச்சுறுத்தல்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்று உள்துறை அமைச்சகத்திற்கும் சிதம்பரத்திற்கும் சொல்லியிருக்கிறது ராயப்பூர் நீதிமன்றம்.<br /><br />2007- ல் ஆந்திராவில் வைத்து மாவோயிஸ்ட் தலைவர் நாராயணன் சன்யால் கைது செய்யப்பட்டார். பின்னர் விடுவிக்கப்பட்டு மூன்றாவது நாள் ராயப்பூரில் கைது செய்யப்பட்டார். அடுத்து பழங்குடி மக்களை ஆதரிக்கிற பியூஸ் குஷா கைது செய்யப்பட்டார்.பியூஸ் குஹாவிடமிருந்து கைப்பற்றியதாகச் சொன்ன கடிதத்தின் அடிப்படையில் டாக்டர் பிநாயக்சென் கைது செய்யப்பட்டார். இந்த மூவருமே மாவோயிஸ்சுகளோடு தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறவர்கள் மட்டுமே , குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் அல்ல என்னும் நிலையில் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் டாக்டர் சென்னுக்கு ஜாமீன் மறுத்தது. இரண்டாவது முறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த பின்னர்தான் பிநாயக்சென்னுக்கு ஜாமீன் கிடைத்தது. இதில் 71 வயது முதியவரான நாராயணன் சன்யாலுக்கு கடைசிவரை ஜாமீன் கிடைக்கவே இல்லை. இப்போது ஆயுள் தண்டனை வேறு. நக்சல்பாரி கிளர்ச்சியின் நாயகன் சாருமஜூம்தார் அழைப்பை ஏற்று வசதியாக தான் பார்த்து வந்த அரசு வேலையான வங்கி வேலையை உதறிவிட்டு அமைப்பிற்கு வந்தவர் சன்யால். முதுமையான இந்த வயதில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.<br /><br /><br />பிநாயக் சென் மீதான குற்றச்சாட்டுகளோ வேடிக்கையானவை 33 முறை சிறைக்குள் நாராயணன் சன்யாலைச் சந்தித்தார். நாராயணன் சன்யால் பியூஸ் குஹாவுக்கு எழுதிய கடிதத்தில் பிநாயக்சென்னை தோழர் என்று அழைக்கிறார். மாவோயிஸ்டுகளோடு தொடர்பில் இருந்தார், தேசப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார் இதெல்லாம்தான் சென் மீதான குற்றச்சாட்டு. ஒரு மருத்துவர் வயது முதிர்ந்த ஒரு மனிதரை சிகிச்சை தொடர்பாக சிறைக்குள் சந்திப்பதையும், இந்திய பி.யூ,சி. எல் அமைப்பின் ஒரு தலைவர் என்ற முறையில் சன்யாலைச் சந்திப்பதையும் கூட இந்திய நீதிமன்றம் தண்டனைக் குரிய குற்றமாகப் பார்த்திருக்கிறது. சிறைக்குள் பரிமாறிக் கொண்ட கடிதம் தொடர்பான குற்றச்சாட்டை சிறையதிகாரிகளே நீதிமன்றத்தில் மறுத்திருக்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் அவர்களின் வாக்குமூலத்தை ஏற்க மறுத்து ஏற்கனவே எழுதப்பட்ட தீர்ப்பை வாசித்திருக்கிறது. இந்த வழக்கில் மாறிப்போன பிறழ் சாட்சிகளைக் கூட கணக்கில் எடுக்காமல் உலகம் முழுக்க அறியப்பட்ட ஒரு மனித உரிமை செயற்பாட்டாளரை ராயப்பூர் கீழ் நீதிமன்றமே ஏன் தண்டிக்க வேண்டும்?<br /><br /><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI77G2aiM9EcYKz4k3wJi7nw_D1H6ZDTcEH3kAATvyzUsZ5oj4UCbAarfjMmNaE-d-Ai6-ETwaS1hCVaREvMZVymlcUo-zX3GUB2FPLfjWiopvLkzgDJCt1S9stW9Ik7G9QxVrErFmMBE/s1600/binayak-2.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI77G2aiM9EcYKz4k3wJi7nw_D1H6ZDTcEH3kAATvyzUsZ5oj4UCbAarfjMmNaE-d-Ai6-ETwaS1hCVaREvMZVymlcUo-zX3GUB2FPLfjWiopvLkzgDJCt1S9stW9Ik7G9QxVrErFmMBE/s400/binayak-2.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556819640633890226" /></a><br />மக்களிடம் நிலம் இருப்பதை அரசுகள் விரும்பவில்லை. கனிம வளங்கள் நிரம்பிய நிலம் மட்டுமல்ல விவசாய நிலங்கள் மக்களிடமிருப்பதைக் கூட அரசுகள் விரும்பவில்லை. அவைகள் பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகக் கொள்ளைக்குத் தேவைப்படுகின்றன. தேவைப்படும் நிலத்தை சொந்தக் குடிகளிமிருந்து அபகரித்துக் கொடுக்கும் ஒரு தரகு வேலையை அரசு இயந்திரங்கள் செய்கின்றன. நிலம் பறிபோகிற பொது மக்களின் எதிர்ப்பென்பது இயல்பான ஒன்றுதான். அப்படியான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறவர்கள் மாவோயிஸ்டுகளாக இருந்தாலும் மக்களாக இருந்தாலும் அவர்களை அழிக்க அரசு இயந்திரம் களமிரக்கப்படும் சல்வார்ஜூடும் மாதிரியான சட்ட விரோதப்படைகளும் களமிரக்கப்படும். நீங்கள் அரசி இயந்திரத்தை மட்டுமல்ல சட்டவிரோத ஆயுதக் குழுக்களையும் எதிர்க்க முடியாது. அப்படி எதிர்ப்பவர்கள் யார் என்றாலும் அவர்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் தண்டிக்கப்படுவார்கள். அதற்கு சாட்சியங்கள் அவசியமில்லை.<br /><br />டாக்டர் சென் துவக்கத்தில் சட்டீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் இணைந்தும் சுரங்கத் தொழிலாளர்களுக்காக பணி செய்திருக்கிறார். எப்போது அவர் அரசு இயந்திரத்திற்கு எதிராகப் பேசத் துவங்கினாரோ அப்போதே குறி வைக்கப்பட்டு விட்டார். காந்தீயக் கொள்கையின் படி பழங்குடி மக்கள் மத்தியில் வாழ்ந்த ஹிமான்சு குமாருக்கு என்ன நடந்தது? அவர் சட்ட விரோத சல்வார் ஜூடும் படைகளின் படுகொலைகளுக்கு எதிராகப் பேசினார். அவரது ஆஸ்ரமம் நொறுக்கப்பட்டு டில்லிக்குத் துரத்தப்பட்டார். இப்போது அவர் சட்டீஸ்கரில் இல்லை. பிநாயக்சென்னும் சல்வாய்ஜூடும் படைகளின் கொலைகளுக்கு எதிராகப் பேசினார் அப்போதே அவருக்கு எதிரான தீர்ப்பை எழுதி முடித்து விட்டார்கள்.இடையில் நடந்ததெல்லாம் வெறும் கண் துடைப்பு நாடகங்கள். இப்போது சல்வார்ஜூடும் போலவே பத்திரிகையாளர்களையும் மனித உரிமை ஆர்வலர்களையும் அச்சுறுத்த இன்னொரு படையை உருவாக்கியிருக்கிறார்களாம் சட்டீஸ்கரில்.<br /><br />எழுபதுகளில் தொடங்கி இன்றுவரை அஸ்ஸாமில், ஆந்திராவில், கேரளாவில், சட்டீஸ்கரில், பஞ்சாபில், காஷ்மீரில் என்று பல் வேறு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இராணுவப் படைகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கொல்லப்பட்ட இந்த மனித உரிமையாளர்கள் எவரும் அருந்ததிராய், பிநாயக்சென் போன்று உலகெங்கும் அறியப்பட்டவர்கள் அல்ல அதனால் எளிதாகக் கொன்று விட முடிகிறது. ஆனால் அதை விட மோசமான அடக்குமுறையாக இந்த ஆயுள் தண்டனை அச்சுறுத்தல் உள்ளது. இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரு மனித உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது அருந்ததிராய்க்கு மட்டுமல்ல அறிவுலகில் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக பேசவோ எழுதவோ துணியும் எல்லோருக்கும் எதிரான அச்சுறுத்தல். எழுதி முடிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பட்டு விட்ட நம் மக்கள் மருத்துவர் பிநாயக்சென்னை விடுவிப்பது என்பது நாம் உலகெங்கிலும் முன்னெடுக்கும் போராட்டங்களில் மட்டுமே தங்கியிருக்கிறது.<br /><br />இந்திய அரசே!<br /><br />டாக்டர் பிநாயக்சென்னை விடுதலை செய்!<br /><br />எழுபது வயது முதியவர் நாராயணன் சன்யாலை விடுதலை செய்!<br /><br />பழங்குடி மக்கள் மீதான வழக்குகளை திருமப்பெறு!டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-76256052051377315402010-12-29T13:43:00.004+05:302010-12-29T13:45:56.762+05:30Dr Binayak Sen’s Statement to the Court<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNQhoiSWtdnxhQvJLR8_sdNkPxTuouK_bzDxd3D_nCU4cy50tozyS6nhut9-1GjMjAvXjzz-NYeL1bWJIluvPj3fxzkUJOvT5PecYN9YcCh0V0jvgBdiWcneh2AuVE8uomGItQDStQskU/s1600/binayak-1.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 302px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNQhoiSWtdnxhQvJLR8_sdNkPxTuouK_bzDxd3D_nCU4cy50tozyS6nhut9-1GjMjAvXjzz-NYeL1bWJIluvPj3fxzkUJOvT5PecYN9YcCh0V0jvgBdiWcneh2AuVE8uomGItQDStQskU/s400/binayak-1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5556014499778526274" /></a><br /> I am a trained medical doctor with a specialization in child health. I completed my MBBS from the Christian Medical College, Vellore in 1972, and completed studies leading to the award of the degree of MD (Paediatrics) of the Madras University, from the same institution in 1976. After this, I joined the faculty of the Centre for Social Medicine and Community Health at the Jawaharlal Nehru University in New Delhi and worked there for two years, before leaving to join a field based health programme at the Friends Rural Centre, Rasulia in Hoshangabad, MP. During the two years I worked there, I worked intensively in the diagnosis and treatment of Tuberculosis and understood many of the social and economic causes of disease. I was also strongly influenced by the work of Marjorie Sykes, the biographer of Mahatma Gandhi, who lived at the Rasulia centre at that time.<br /><br />I came to Chhattisgarh in 1981 and worked upto 1987 at Dalli Rajhara (district Durg), where, along with the late Shri Shankar Guha Niyogi and the workers of the Chhattisgarh Mines Shramik Sangh, I helped to establish the Shaheed Hospital, that continues to practice low cost and rational medicine for the adivasis and working people of the surrounding areas upto the present. After leaving Dalli Rajhara, I worked to develop a health programme among the Adivasi population in and around village Bagrumnala, which today is in Dhamtari district.<br /><br />This work depended on a large group of village based health workers who were trained and guided by me. When the new state of Chhattisgarh was formed, I was appointed a member of the advisory group on Health Care Sector reforms, and helped to develop the Mitanin programme, which in turn, became the role model for the ASHA of the National Rural Health Mission. A copy of the Order of the Department of Health and Family Welfare of the Govt. of Chhattisgarh regarding my nomination to the advisory group mentioned above is attached. (Annexure 1.)<br /><br />My work in the area of community health, as well as my work on Human Rights which is detailed below, has been nationally and internationally recognized. I have been awarded the Paul Harrison Award by the CMC Vellore in 2004; the RR Keithan Gold medal by the Indian Academy of Social Sciences in 2007; and have received the Jonathan Mann award for Health and Human rights from the Global Health Council in 2008. I am attaching notarized copies of the citations of these awards with this statement, and am carrying the originals for the perusal of the court. (Annexures 2, 3, 4 and 5)<br /><br />I have been a member of the Peoples’ Union for Civil Liberties (PUCL) since 1981. The PUCL is an organization devoted to the preservation of constitutional civil liberties and human rights that was founded by the late Shri Jayprakash Narayan during the years of the Emergency. In Chhattisgarh, as well as in many other parts of the country, the PUCL led the campaign for the preservation of the freedom of speech, prevention of custodial violence, and for the public accountability of the police. I became General Secretary of the Chhattisgarh unit of the PUCL in 2004, and am currently the President of the State unit, and Vice President of its National body.<br /><br />In Chhattisgarh, the PUCL has been in the forefront of exposing the atrocities of the police. Atrocities by men in uniform against vulnerable sections continue to be a serious problem in the state, as the front page news item in the “Sunday Times” dated 12th September 2010, annexed hereto as Annexure 6 shows. In this situation PUCL’s efforts were always directed towards the establishment of good governance and constitutional values. PUCL findings and investigations were always made available in the public domain through press releases and its own publications. One such Press Release reporting investigation into police atrocities in Village Jiramtarai, Thana Koylibeda is annexed hereto as Annexure 7. The report of one such investigation pertaining to police atrocities in Katgaon (Kanker district) was published in the “Navbharat” and “Deshbandhu” newspapers which are annexed hereto as Annexure 8and 9 respectively. A PUCL publication on the State of Human Rights in Chhattisgarh is appended to this statement. (Annexure 10). In this connection PUCL regularly corresponded with the National and State Human Rights Commissions. Copies of some of the letters sent to the PUCL by the National Human Rights Commission (collectively) and the State Human Rights Commission are attached to this statement. (Annexure 11 and 12)<br /><br />Apart from investigating and documenting many cases of Human Rights abuse involving the police, the PUCL has acted as a whistleblower in the matter of exposing the true nature of the Salwa Judum. The Salwa Judum, which began in the Dantewada district in 2005, has been represented by the state government as a spontaneous peoples’ movement against the Maoists active in the area. However, an investigation led by the PUCL and involving several other Human Rights organizations revealed that it was in reality a state sponsored and state funded as well as completely unaccountable vigilante force, to which arms were provided by the government. The activities of the Salwa Judum have led to the emptying of more than 600 villages, and the forced displacement of over 60,000 people. Concerns regarding the activities of the Salwa Judum have been expressed by several independent organizations including the National Human Rights Commission. International organizations like the UNICEF have also voiced serious concern and have invited me to dialogue with them about the restoration of normalcy in the region affected by Salwa Judum. The Hon’ble Supreme Court has also, on several occasions, expressed its grave concern over the activities of the Salwa Judum and the deployment of armed vigilantes for the promotion of state policy. This has been widely reported in the press. A Table with an indicative list of agencies that have made critical observations on the Salwa Judum is attached (Annexure 13). A copy of the report on the Salwa Judum by the Chhattisgarh PUCL and other organizations (Annexure 14), and copies of the investigation reports on the Salwa Judum brought out by the Independent Citizens Initiative and Asian Centre for Human Rights are being filed along with this statement (Annexure 15 and 16 respectively). An invitation from the UNICEF, Chhattisgarh Regional Office to participate in a dialogue to seek a resolution to the crisis in Dantewada as a fallout of the Salwa Judum is similarly attached to my statement (Annexure 17).Press reports in the Hitavada, dated 23.10.2010 pertaining to the Hon. Supreme Court’s critical observations are attached (Annexure no 29), as are Certified copies of Supreme Court orders that make critical observations on the Salwa Judum are also being attached (Annexure 18)<br /><br />The PUCL has also, during 2006, organized two major conventions, opposing the proposal to enact the Chhattisgarh Special Public Security Act, because it has been, and continues to be, our view that this Act contravenes the civil liberties assured to us in the constitution. I have expressed these views in the Press as well, and am attaching with this submission a copy of newspaper carrying a press report of such a convention (Annexure 19), as well as a copy of the newspaper “Chhattisgarh” dated 30th March 2006 in which my interview appears in this regard. (Annexure 20) A Civil Writ Petition (Writ Petition No 2163/2009) challenging the vires of the Chhattisgarh Special Public Security Act has been filed by the PUCL in the Chhattisgarh High Court. Certified copies of the Court orders admitting this petition and issuing notice are being filed along with this statement (Annexure 21).<br /><br />For all the reasons mentioned above, the Chhattisgarh police and the state government have harboured a grudge against me, and the then DGP of Chhattisgarh, Mr OP Rathore, has gone on record threatening to take action against the PUCL and its office bearers. Copies of a newspaper of 3rd January 2006 carrying a report to this effect are attached to my statement. (Annexure 22)<br /><br />I have been concerned with the rights of prisoners in my capacity as a Human Rights worker and was approached by the family of Mr Narayan Sanyal to look after his health and well being after he was brought to Raipur jail in 2006. My first visit to him in jail was in the company of his family and lawyer. Subsequently, I obtained permission from the police authorities for visiting him in jail, and visited him several times, each time applying to do so in my capacity as a PUCL office bearer. After my visits, I informed his family members about his condition over the telephone. During the course of these visits, it was brought to my notice that the surgery on his hands that was necessary for medical purposes, was being delayed due to communication problems between the jail and the doctors in the Raipur Medical College. I played a role in facilitating his surgery and kept his family informed about the process. During this period there was considerable correspondence between the prisoner’s family, jail administration and medical authorities, of which copies were marked to me. I attach along with this statement copies of the letter written by Mr Radha Madhav Sanyal (brother of Narayan Sanyal) to the Jail Superintendent with a copy to me (Annexure 23); copies of my applications to visit Mr Narayan Sanyal in jail which were obtained through an application under the RTI (Annexure 24); copy of the written permission given to me by Shri BS Maravi, Senior Superintendent of Police, Raipur (Annexure 25) and copies of the correspondence from the Jail authorities to the medical doctors mentioned above with copies marked to me (Annexure 26).<br /><br />It was with similar concern for the situation of prisoners that I acted upon the letter received in the post from one Madanlal Barkhade about prison conditions in the Raipur Central Jail. I released his letter to the press in Raipur and attach the newspaper in which the aforesaid letter was published. (Annexure 27)<br /><br />The documents seized from my house during the house search on 19.5.2007 were those of concern to me in the ordinary and transparent conduct of my work. Human rights organizations from all over the country used to send me books, pamphlets and documents, and there were thousands of these lying in my residence, which I also used as my office. None of the seized documents had been secretly or clandestinely obtained. Document No. A 19 was sent to me by post by Shri Govindan Kutty, Editor, Peoples’ March. Document no A 20, purported to be written by Madanlal Barkhade was similarly received by me in the regular post. The document A 21 was sent to me by Dr Kalpana Kannabiran, one of the authors of the article, then Professor at the National Law School Hyderabad, by e-mail. Article A 22, photocopy of a hand written document, and Articles A 23 and A 36 were available for distribution at a seminar on the Salwa Judum organized by the Nelson Mandela Centre for Peace and Conflict Resolution, Jamia Milia Islamia, New Delhi in January, 2007, to which I was invited , and were picked up by me there. Article A 24 was received by me in the post. Newspaper clippings A 25 to A 35 are newspaper clippings that I had maintained in furtherance of my interest in the emerging situation in Chhattisgarh.<br /><br />Several policemen in the search party were involved in the process of the search at my house. Having found a document, the person finding it would hand it over to Mr Rajput. Mr Rajput would first read it, and then hand it over to me for my signature. He would also sign it himself. After we had both put our signatures on the document, he would dictate to TI Jagrit what was to be written in the seizure memo. Mr Jagrit would then make the entry, following which Mr Rajput would then hand over the document to Mr Jagrit. In this manner, each document was seized, signed, and entered in the seizure memo. None of the documents were signed by the public witnesses in my presence. Nor were the documents sealed in my presence. At the end of the search process the documents were carried away in a paper bag in an unsealed condition. Document A37 was never received by me to sign. It was not in my office, and was not seized during the search. It was fabricated after the search by the police to implicate me falsely.<br /><br />When the challan in my case was filed, my advocate, Mr Amit Banerjee was present in court and received the chargesheet on my behalf. A copy of the chargesheet is annexed hereto as Annexure 28. Upon going through the charegesheet, we noticed that in the copies of articles A 19 to A 24, the signatures of the panch witnesses were not present in the documents. Copies of articles A 25 to A 37 were not supplied to us at the time. Despite a court order, the contents of the computer were copied onto DVDs without the presence of my advocate, and only DVDs of selected material from the computer were supplied later during the course of the trial. Out of the DVDs supplied, three relate to investigation of police atrocities / fake encounters in Golapally, Jiramtarai and Katgaon. My images on these tapes are in conversation with the villagers who are affected by these atrocities.<br /><br />I have never seen Deepak Chaubey (PW7) until the time he testified in the court. I did not introduce Narayan Sanyal to him and his story that Narayan Sanyal was arrested from his house is patently untrue as, in fact, Sanyal was arrested in Bhadrachalam.<br /><br />I submit that my prosecution is malafide; in fact it is a persecution. I am being made an example of by the state government of Chhattisgarh as a warning to others not to expose the patent trampling of human rights taking place in the state. Documents have been fabricated by the police and false witnesses introduced in order to falsely implicate me.<br /><br />Binayak Sen.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-15640322924288448122010-12-08T20:12:00.002+05:302010-12-09T09:12:59.624+05:30அம்பேத்கர் சினிமா.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdowaCRHs5iEcSfZEjNdrrjjIXwOkR03en0SemMql7onmCuwEPfeEI-ppjV6qrc1u3T7z4AWDq7bFSCnS6xnuAzg_tWEV9gmO7tABWLptkPaM4gxDY5H2Kr62Dzo0ttaEULOs80ry2kJE/s1600/ambedkar.jpg"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdowaCRHs5iEcSfZEjNdrrjjIXwOkR03en0SemMql7onmCuwEPfeEI-ppjV6qrc1u3T7z4AWDq7bFSCnS6xnuAzg_tWEV9gmO7tABWLptkPaM4gxDY5H2Kr62Dzo0ttaEULOs80ry2kJE/s400/ambedkar.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5548522400129765490" /></a><br /><br />அம்பேத்கர் படம் வெளிவந்திருக்கிறது. நான் அம்பேத்கரை வாசித்ததில்லை. தலித் முரசு, நிறப்பிரிகை இதழ்களில் வந்த சில கட்டுரைகளையும் அம்பேத்கரின் சிறு வெளியீடுகளை தமிழில் வாசித்திருப்பதோடு சரி, பெரியாரை மட்டும் நீ வாசித்திருக்கிறாயா? என்று கேட்காதீர்கள் ஓரளவுக்கு வாசித்திருக்கிறேன். அந்த அளவுக்கு அம்பேத்கர் பற்றி வாசித்ததில்லை. அகன்ற நெற்றியோடும் வசீகர அழகுடைய கண்களோடும் அந்த மனிதரை கோட், சூட்டில் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது இதுதான். தலித்துக்கள் என்றால் அழுக்கானவர்கள் என்ற எண்ணத்தை துடைத்தெரியவே அம்பேத்கர் அப்படி தோற்றமளிக்கிறார். தோற்றத்தில் மட்டுமல்ல தன் வாழ்வையே இந்திய ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக அர்ப்பணித்துக் கொண்ட மகான் அவர். இவளவுதான் அம்பேத்கரைப் பற்றி எனக்குத் தெரியும் என்கிற நிலையில் இருந்துதான் நான் அம்பேத்கர் படம் பார்க்க பாலா அழைத்த போது சென்றேன். சமீபத்தில் நான் பார்த்த படங்களிலேயே மிகச் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று. <br /><br />ஒரு தலித் பிறந்தது முதல் சாகும் வரை இந்து மதம் தன் மீது திணித்த இழிவை தூக்கிச் சுமக்கிறான். கடல்கடந்து கல்வி கற்றாலும், கோட் சூட் போட்டாலும், ஆங்கிலம் பேசினாலும், உயரதிகாரி ஆனாலும் அந்த இழிவு அவனை விட்டு அகலுவதில்லை. இந்து மதத்திலிருந்து மட்டுமல்ல அதை உள்வாங்கி வளர்ந்து நிற்கும் கிறிஸ்தவ மத்திற்கு மாறினால் கூட அந்த இழிவை தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கிறது. இந்து மதத்தில் இருந்து விலகி தன்னை இந்த சகதியில் இருந்து அறுத்துக் கொள்கிற போதே ஒரு தலித் உண்மையான விடுதலை அடைகிறான். இதைப் புரிந்து கொள்ள நாம் அண்ணலைப் படிக்க வேண்டியதில்லை பெரியாரைப் படித்தாலே போதும். ஆனால் அண்ணலின் இந்தப் படத்தைப் பார்க்கும் போது முழுமையாக இதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. கதை சொல்லும் விதம், திரைக்கதை, நடிப்பு என்று அம்பேத்கர் என்னும் ஒரு சமூக போராளியின் வாழ்வைச் சொல்லும் இந்த சினிமா இலகுவாக ரசிகனிடம் அவரை புரிய வைத்து விடுகிறது. குடும்ப வாழ்வு, லண்டன் கல்வி, வறுமை, பலவீனம் என அம்பேத்கரின் வாழ்வை மிகத் துல்லியமாக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ஜப்பார் பட்டேல். <br />இந்தப் படத்தை மொழி மாற்றம் செய்தவர்களின் அரசியல் கோளாறுகள், வழக்கம் போல சிறுபத்திரிகையாளர்கள் மொழிபெயர்க்கும் அந்நியத்தன்மை, அம்பேத்கராக நடித்திருக்கும் மம்முட்டியில் நடிப்பை உள்வாங்கி டப்பிங் பேச முடியாமை என தமிழுக்கு வந்திருக்கும் இந்தப் படத்தில் மொழி எளிமையாக கையாளப்படவில்லை. மௌனமான சிறு விசும்பல் கண்ணீரைக் கூட மூக்கைச் சீந்தி காலி செய்திருக்கிறார்கள். அழுகைக்கும் விசும்பலுக்குமான வித்தியாசம் தெரியாமல் சீரியல் தனமான டப்பிங் எரிச்சலையும் மீறி நம்மை வசீகரிப்பது அம்பேத்கர் ஆமாம் அம்பேத்கர் மட்டுமே.<br /> <br />தலித்துக்களுக்கு இந்துச் சமூகங்கள் இழைக்கும் கொடுமைகள் அம்பேத்கரை உருவாக்கும் விதமும், ஓரளவுக்கு ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களை விட வசதியான வாழ்வும் வாய்த்ததால் மட்டுமே இந்தியாவுக்கு அம்பேத்கர் கிடைத்தார். ''ஆடுகளைத் தான் பலிகொடுக்க முடியும் சிங்கங்களை அல்ல" என்று அம்பேத்கரின் தகப்பனார் மகனிடம் சொல்வதிலிருந்து இந்துச் சமூகங்களுக்கு எதிரான போராட்டம் துவங்குகிறது. கண்ணீரை அவமானமாக கருதிய அந்த மனிதர் தன் தலை மீது சுமத்தப்பட்டிருக்கும் பெரும் பொறுப்புகளை உணர்ந்து வாழ்ந்தார். லண்டனில் அவரது கல்விக்காகவும் பொருளாதார ஆய்வுகளுக்காகவும் அவர் படுகிற அவமானங்களை கூசாமல் எதிர்கொள்கிறார். தன் மக்களுக்காக கொண்ட கொள்கையில் அவர் உறுதியாக நிற்கிறார். வெள்ளை இன மாணவர்கள் அம்பேட்கரை இந்தியர் என்று இழிவு செய்யும் போது அதை அவர் எதிர்கொள்ளும் விதமும் அம்பேட்கரை தேசத் துரோகி என்று காங்கிரசாரும் காந்தியின் கைத்தடிகளும் தூற்றும் போது அதை எதிர்கொள்ளும் போதும் தொடரும் தனிமையில் அந்த மனிதர் கரைந்து போகாமல் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார். படம் முழுக்க அம்பேட்கரின் இந்த தனிமையை நாம் உணர முடியும். மனைவி நோயோடு போராடும் போது ''எனது தனிமைத் துயர் உனக்குப் புரியாது" என்கிறார். <br />சேரிமக்களின் நீர் உரிமைக்காக பொதுக் குளத்தை பயன்படுத்தும் போராட்டம் அறிவிக்கும் போதும், தேர் இழுக்கும் போராட்டம் அறிவிக்கும் போதும் அரசு நிர்வாகமும், சாதி இந்துக்களும் தலித் மக்களை மட்டுமல்ல மேதை அம்பேத்கரையும் ஏமாற்றுகிறார்கள். வன்முறைக்கு பதில் வன்முறை என்று கூட அம்பேத்கர் இறங்கவில்லை. அவர் தொடர்ந்து மக்களைத் திரட்டி ஜனநாயக ரீதியான போராட்டங்களையே நடத்துகிறார். அவரும் அவரைப் பற்றிய சனக்கூட்டமும் அரசி சாதி இந்துக்களாலும் அவர்களின் அரசு நிர்வாகத்தாலும் ஏமாற்றப்படுகிறார்கள். பாகிஸ்தான் பிரிவினையை ஆதரிக்காத அம்பேத்கர் ஜின்னாவிடம் உள்ளுக்குள் இருந்து கொண்டுதான் சிறுபான்மையினர் தங்கள் உரிமைக்காக போராட வேண்டும் என்கிறார். இந்து மதத்தில் இருந்து கொண்டுதான் இந்து மதத்தை விமர்சிக்க முடியும் என்கிற தார்மீக உரிமை அளவு கோலில் சிறுபான்மை பிரச்சனையையும் அவர் அணுகியிருக்கலாம். இந்து மதத்தில் இருந்து கொண்டே தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடுகிறார். தனித் தொகுதி, விகிதாசார பிரதிநிதித்துவம், வழிபாட்டு உரிமை போன்ற விஷயங்களில் தான் நினைத்த மாதிரி எதையும் அம்பேத்கரால் இந்து மதத்தையும் காந்தியையும் மீறி செய்ய முடியவில்லை. காந்தி ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதத்தை ஒரு ஆயுதமாக்கி நியாயமான அரசியல் கோரிக்கைகளை மிரட்டி நிராகரிக்கிறார். காந்தி உண்ணாவிரதம் இருக்கிறார் நீங்கள் பணிந்து செல்லுங்கள் என்று வந்து வற்புறுத்துகிறவர்களிடம் " காந்திக்கு உணவு ஒரு பிரச்சனையாக இல்லாமல் இருக்கலாம் " என்று சொல்கிறார். கடைசியில் பலவீனமான மனதோடு விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்கிறார். மனைவி கோவிலுக்குச் செல்ல விரும்பும் போது நம்மை ஏற்றுக் கொள்ளாத கடவுள் ஒரு கடவுளா? என்று கேட்கிறார். '' நீங்க அங்க போய் பின்ன ஏன் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்துறீங்க? " என்று கேட்கும் போது "அது உரிமையை நிலை நாட்ட ? " என்கிறார். தொடர்ந்து போராடுகிறார் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டுகிறார். ஆனால் ஒடுக்கப்பட்ட அந்த மக்களின் கோரிக்கைகள் எல்லாம் அவருக்கு முழுமையாக நிறைவேறாத கனவாகவே இருக்கின்றன. அரசியல் ரீதியாக தொடர்ந்து தானும் தனது மக்கள் கூட்டமும் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருப்பதுதான் அம்பேட்கரின் தனிமையே தவிற கவலைகள் தனது சுய உணர்வுகள் பற்றியதாகவோ, சொந்தக் குடும்பம் பற்றிதாகவோ இல்லை. அரசியல் சாசனம் எழுதப்பட்ட பின்னர், இந்துச் சட்டம் நேருவால் நிராகரிக்கப்படுதலோடு அவர் விலகிக் கொள்கிறார். ஒட்டு மொத்த நிராகரிப்பிற்கான எதிர்ப்பாக அவர் பௌத்த மதத்தை தழுவிக் கொள்கிறார். தன் மீது சுமத்தப்பட்ட இழிவை போக்கிக் கொண்டதாக கூறுகிறார். மக்களையும் இழிவைப் போக்க புத்த மதத்தை தழுவுமாறு செயல்படுத்தியும் காட்டுகிறார். காந்தியின் கபட நாடகங்களில் எவ்வித சமரசமும் செய்யாமல் படம் வெளிவந்திருப்பதால் காந்தியை தலித் அரசியல் நோக்கிலும் புரிந்து கொள்ள படம் உதவும்.<br /><br /> இந்தியில் இன்னும் இயல்போடு இந்தப் படம் வெளிவந்திருக்கிறது. குஜராத்தி நாட்டுப்புறப்பாடலான "டோலு" ( இந்தியா டுடே வெளியிட்ட இந்திய நாட்டுப்புற பாடல் தொகுப்பில் இது உள்ளது) பாடலை மிகவும் அற்புதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்தமான பாடல். தனிமையை நெருக்கமாக அந்த பாடலில் உணர முடியும். மிகவும் முக்கியமாக அம்பேட்கராக நடித்திருக்கும் மமுட்டியின் நடிப்பு. முகங்களில் ஏற்பட்ட வீக்கம், சோர்வு, கோபம், காதல் என அம்பேட்கரோடு நெருக்கமான ஒரு உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறார். <br /><br />அம்பேத்கர் இறந்து ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகி விட்டது. வாழ்க்கை முழுக்க கசப்புகளை மட்டுமே பார்த்த ஒரு மனிதன் சிந்தித்த, எழுதிய, பெற்றுக் கொடுத்த அரசியல் உரிமைகள் தலித் மக்களை ஓரளவுக்கு முன்னேற்றியிருக்கிறது. ஒரு பார்ப்பனீயம் புதிய வடிவம் பெற்று நாளுக்கு நாள் பெரும்பான்மைவாதமாக தன்னை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் அதே வேளை. நவீன பார்ப்பனர்களாக உருவாகிவிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளால் தலித் மக்களின் அந்த ஓரளவு முன்னேற்றங்களைக் கூட சகித்துக் கொள்ள முடியவில்லை. அம்பேத்கரை அவர்கள் தலித் தலைவராக முத்திரை குத்தி முடக்கப்பார்க்கிறார்கள். அல்லது கள்ள மவுனம் சாதிக்கிறார்கள். அம்பேத்கரின் பெயரைச் சொல்லி பிழைத்துக் கொண்டவர்கள் கூட இப்போது அவரைப் பற்றி பேசுவதற்கு கூசுகிறார்கள். இந்த இடத்தில்தான் இந்தப் படம் வெளிவர நீண்டகாலமாக தொடர்ந்து எழுதி வந்த திரு. வே.மதிமாறன். வழக்கறிஞர் சத்திய சந்திரன் உள்ளிட்ட பெரியார் திராவிடர் கழகத் தோழர்களின் பணியை நாம் பாராட்ட வேண்டும். படத்தை இப்போது வாங்கியிருக்கும் எடிட்டர் லெனின், அதை மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கும் தமுஎச அமைப்புற்கும் நன்றி. இந்தப் படத்தை சேரிகளிலும் தலித் குடியிருப்புகளிலும் திரையிட வேண்டும். அதை விட முக்கியமாக சாதி இந்துக்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்தத் திரைப்படத்தை திரையிட வேண்டும். பொருளாதார ரீதியாகவும், இந்துத்துவ சக்திகளின் எதிர்ப்பு காரணமாகவும் இது சாத்தியமாகுமா? என்கிற கேள்வி எழலாம். ஆனால் நிச்சயமாக அதன் சாத்தியங்களை ஆராய வேண்டும்.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-60704766566069352502010-12-02T13:50:00.002+05:302010-12-02T14:16:45.504+05:30ராஜபட்சே பிரிட்டன் தோல்வி தற்காலிகமானதே.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyPvysDaYhDGDWmY0OJfeKR_NAZ8ffufHGR804gPw-VxzjVcq3ew0rWtH2pZCxEmEGrSkxZ2grMbt0zq-wC6g5gkdWQrtPikqri_V-y7ea1Mx9le0T0cEH5oe6aFhMPvO03d_LUf8pAgs/s1600/299033-01-02.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 282px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyPvysDaYhDGDWmY0OJfeKR_NAZ8ffufHGR804gPw-VxzjVcq3ew0rWtH2pZCxEmEGrSkxZ2grMbt0zq-wC6g5gkdWQrtPikqri_V-y7ea1Mx9le0T0cEH5oe6aFhMPvO03d_LUf8pAgs/s400/299033-01-02.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5545997540068648146" /></a><br />அம்சாவைப் பற்றி அடிக்கடி எழுதுவதால் கோபமடையும் நண்பர்களை இது மேலும் கோபமூட்டும் என்பதாலும் ஈழ விடுதலையை ஆதரிக்கும் சக்திகளை மேலும் இது உற்சாகத்திலாழ்த்தும் என்பதாலும் இதை எழுத நினைக்கிறேன். ஒரு வழியாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பின் அழைப்பின் பெயரில் பிரித்தானியாவுக்கு வந்து இனக்கொலை குற்றவாளி ராஜபட்சே நிகழ்த்த விருந்த உரை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ரத்து செய்வதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் கூறியிருந்தாலும் (http://www.oxford-union.org/?a=129) இந்த முழு வெற்றிக்கும் உரியவர்கள் புகலிடத் தமிழர்களே, அதிலும் குறிப்பாக பிரிட்டன் வாழ் தமிழர்களுக்கும், பிரித்தானிய தமிழ் பாரம் அமைப்பிற்கும் , இதில் பங்குபெற்ற பொது மக்களுக்கும், பத்திரிகயாளர்களுக்கும், போருக்கு எதிரான முற்போக்கு சக்திகளுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும். இது ராஜபட்சே உள்ளிட்ட பௌத்த பேரினவாத இலங்கை அரசுக்கு மட்டும் கிடைத்த தோல்வியல்ல, பதவி உயர்வு பெற்று லண்டனுக்குச் சென்று சென்னையில் நடத்தியமாதிரியே ஒரு சதுரங்க விளையாட்டை நடத்தலாம் என்று நினைத்திருந்த அம்சாவுக்கும் கிடைத்த தோல்வியாகும். எனது இந்த உற்சாகத்திற்கு காரணம் இதுவேயாகும். எல்லோரும் விலைபோய் விட வில்லை என்பதையும் எல்லோரையும் விலைக்கு வாங்கி விட முடியாது என்பதையும் பிரிட்டன் வாழ் தமிழ் மக்கள் இனவெறிச் சக்திகளுக்கு உரைத்திருக்கிற அதே நேரம். இது ஒரு தற்காலிக வெற்றி மட்டுமே என்பதனை நினைத்து எதிரி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பை விரிவு படுத்தி அவரையும் அவரது குடும்பத்தினரையும் போருக்கு துணைபோனவர்களயும் தண்டிக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம்.<br /><br />ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை அவர்களின் பாரம்பரீய நிலங்களிலேயே கூட்டுக்கொலை செய்து நாடற்றவர்களாக்கி இருக்கிறது. தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை பௌத்த விஹாரைகளாக மாற்றுகிறது பேரினவாத இலங்கை அரசு<br />. பௌத்த பேரினவாத சிங்கள அரசு தமிழ் மக்களை நிம்மதியாக வாழவும் அனுமதிக்காத நிலையில் இந்தியாவின் ஆதரவோடு சர்வதேச ரீதியில் தனக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைக் கழுவ லண்டனுக்குப் பயணமாகியிருக்கிறார் இனக்கொலை குற்றவாளி ராஜபஷ்சே.. ஒவ்வொரு முறை தமிழ் மக்கள் இனப்படுகொலை, அரசு பயங்கரவாதம் என்றும் பேசும் போதெல்லாம், இந்தப் படுகொலைகளுக்கு புலிகளே காரணம் என்று குற்றம் சுமத்தி சிங்கள இனவெறி அரசின் படுகொலையை சமன் படுத்தி, பயங்கரவாத இலங்கை அரசை காப்பாற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிற சீர்குலைவு சக்திகள் இப்போது இந்தப் போராட்டங்கள் யாவும் புலிகளின் தூண்டுதலின் பெயரில் நடந்ததாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஈழ விடுதலை எதிர்ப்பாளர்கள் சொல்லும் இதே வார்த்தைகளைத்தான் லலித் வீரதுங்கவும் சொல்லியிருக்கிறார். (http://www.priu.gov.lk/news_update/Current_Affairs/ca201012/20101202oxford_union_camcels_presidents_address.htm) சேனல் 4 தனது இரண்டாவது இனக்கொலை வீடியோவை வெளியிட்டுள்ளது. பாலியல் ரீதியான வசவுகளும், காட்சிகளுமான இந்த வீடியோவை இதற்கு மேல் ஒளிபரப்ப முடியாத அளவில் கோரமானதாகவும், கொடூரமான சொற்பிரயோகம் உள்ளதாகவும் உள்ளதாக ஒளிபரப்பை இடை நிறுத்திய சேனல்-4 அதை போர்க்குற்ற விசாரணைக்குழுவுக்கு அனுப்பி தன் கடமையைச் செய்துள்ளது.<br /><br /><span style="font-weight:bold;">இந்தியா</span><br /><br />.பயங்கரவாத இலங்கை அரசை அதன் போர்க்குற்றங்களில் இருந்து பேணிப்பாதுகாப்பது இந்திய அரசுதான். இந்திய பெருமுதலாளிகளுக்கான சந்தையாக ஒட்டு மொத்த இலங்கையும் மாற்றப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இலங்கை சென்று வந்த எஸ்.எம்.கிருஷ்ணா தமிழ் அரசியல் கட்சிகளைச் சார்ந்த எவரையும் சந்திக்க மறுத்து விட்ட நிலையில், டக்ளஸ் தேவானந்தாவுக்கு இந்தியா வரும் படி அழைப்பு விடுத்துள்ளது. பூட்டான், நேபாளத்தில், தனது கைப்பொம்மைகளை ஆட்சியில் இருத்தி அல்லது இருத்த துடிப்பது போல தமிழர்களின் பிரதிநிதியாக டக்ளஸ் என்னும் பொம்மையை உருவாக்கிவைத்துள்ளது. இத்தனைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் தாழ்ந்து ராஜபட்சேவுடன் அனுசரணையாகச் செல்லத் தயார் என்று அறிவித்த பின்னரும் இந்தியாவோ, இலங்கையோ அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஈழத் தமிழ்ர்களுக்காக ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டுவதாக அறிவித்துள்ளது இந்திய அரசு. கார்கில் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்காக ஆதர்ஷ் வீட்டு வசதித் திட்டத்தில் நடந்த ஊழல்தான் நினைவுக்கு வருகிறது. தட்டிக்கேட்க ஆளில்லாத ஈழ மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தில் எவளவு கொள்ளையடித்தாலும் கேட்க நாதியற்ற சூழலை இந்திய கட்டுமான நிறுவனங்களும் அரசியல் வாதிகளும் பயன்படுத்திக் கொள்ளப் போவதன் முன் அறிவிப்பே இந்த வீடு கட்டும் திட்டம். இந்தியாவின் இந்த சொந்த நலனைப் புரிந்து கொள்ளாமல் இன்னமும் அநேக ஈழத் தமிழர்களும், தமிழக ஈழ விடுதலை ஆதரவாளர்களும் இந்தியாவை நம்பி ஈழப் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என நினைக்கின்றனர். இந்தியாவை மட்டுமல்ல உலகின் எந்த ஒரு அரசையும் நம்பி ஒரு இனவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பது எஞ்சியிருக்கும் மக்களின் அழிவுக்கே இட்டுச்செல்லும் ஆனால் அதே நேரம் அரசுகளுக்கிடையிலான முரணை ஒரு போராளிக் குழு பயன்படுத்துவதென்பது வேறு. அரசுகளை அண்டி போராடுவதென்பது வேறு, மாவோயிஸ்டுகள் ஆளும் வர்க்க முரண்களை மிகவும் துல்லியமாக கையாள்கிறார்கள். இந்தியாவை இன்னமும் புரிந்து கொள்ளாத மக்கள் இனியாவது இந்தியாவின் விஸ்தரிப்பு நோக்கத்தை அதன் எல்லை கடந்த வணிக யுத்தத்தை , மக்களிடம் இருந்து நிலங்களை பறித்தெடுக்கும் அதன் முதலாளித்துவ நலனை புரிந்து கொள்ள முன்வரவேண்டும்.<br /><br /><span style="font-weight:bold;">தமிழ் மக்களால் முடியும்.</span><br /><br />ஈழ மக்கள் முடமாக்கப்பட்டு முடங்கியிருக்கும் நிலையில் இலங்கைக்கு வெளியே வாழும் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் மீது ஈழப் போராட்டத்தின் பொறுப்பும் கடமையும் தங்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதாக நினைக்கிறார்கள். அது உண்மையும் கூட முன்னரைப் போலல்ல பெரும் இனப்படுகொலையின் பின் கிடைத்துள்ள அனுபவம் புகலிடத் தமிழர்களின் பார்வையை விரிவு படுத்தியிருக்கிறது. பல் வேறு சிங்கள முற்போக்கு சக்திகளுடன் அவர்கள் தங்களின் உரையாடலை இப்போது தொடங்கியிருக்கிறார்கள். இப்போது ராஜபட்சேவுக்கு நடந்த எதிர்ப்பிலும் சிங்களத் தோழர்களின் பங்கு இருக்கிறது. கருணாரட்ண விக்கிரமாகு போன்றவர்களின் மாவீரர் தின உரை மிகவும் நம்பிக்கையளிப்பதாய் உள்ளது. நான் லண்டன் சென்றிருந்த போதும் சில சிங்கள நண்பர்களைச் சந்தித்தேன் தமிழ் மக்களின் நிலை குறித்து ஆழ்ந்த கவலைகளை வெளிப்படுத்திய அவர்கள் தமிழ் மக்களோடு இணைந்து இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள். இப்போது இந்த இனக்கொலை குற்றவாளிகளை தண்டிப்பது யார் என்பதே தமிழ் மக்களிடம் உள்ள கேள்வி. இன்னர் சிட்டி பிரஸ், லே மாண்டே, சேனல் 4, கார்டியன், என தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சர்வதேச அளவில் கொண்டு சென்ற ஊடகங்களுக்குப் பின்னால் இப்போது ஈழப் படுகொலைகள் தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையமும் குறைந்த அளவிலான குறிப்புகளை வெளியிட்டுள்ளது. விரைவில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான போர்க்குற்ற ஆவணங்களோடு அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளுக்குமான தொடர்பு குறித்தும் அது விரைவில் வெளியிட இருக்கிறது .( http://cablegate.wikileaks.org/articles/2010/Sri-Lankan-President-s-alleged-war.html) ஆக ஈழப் படுகொலைகளை சாட்சியமற்ற படுகொலைகள் என்று சொல்ல முடியாது. எண்ணற்ற சாட்சியங்கள் இரைந்து கிடைக்க குற்றவாளிகளை தண்டிப்பது யார் என்றுதான் தெரியவில்லை. உலக நாடுகளின் இந்த மௌனத்தை பயன்படுத்திக் கொண்ட இலங்கையும் கண் துடைப்பிற்காக ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. கொலை செய்தவர்கள் தங்களைத் தாங்களே விசாரித்துக் கொள்ளும் ஒரு புதிய நடைமுறையை உலகிற்கு பகடியாக வைக்கிறது இலங்கை அரசு. விசாரணை நடந்து வந்த நிலையிலேயே காணாமல் போனோரின் உறவினர்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை நிராகரித்திருக்கிறார் இராணுவத் தளபதி. இந்த கற்றுக் கொண்ட பாடங்கள் குழுவின் அறிக்கை என்னவாக வெளிவரப் போகிறது. என்பதை இப்போதே நாம் புரிந்து கொள்ள முடிகிறது என்னும் நிலையில் , சர்வதேச அளவில் விசாரணைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே விசாரிப்பார்களா? அல்லது விசாரிப்பது போல நடிக்கிறார்களா? என்பது தெரியவில்லை. இலங்கை இனப்படுகொலை என்பது இந்தப் பிராந்திய அரசுகளின் கொலைகளை ஊக்குவிக்கும் ஒரு முன்னுதாரணமாக மாறி விட்டது. வன்னியில் மேற்கொண்ட யுத்த வடிவத்தை இந்தியா தனது சொந்தக் குடிகள் மீது ஆனால் மெல்ல மெல்ல பயன்படுத்தத் துவங்கி விட்டது. நவீன மயப்படுத்தப்பட்டு விட்ட போர் முறையில் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்திய இலங்கையை தண்டிக்க வேண்டும். அவர்களை தண்டிக்கும் உரிமை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கே உண்டு. ராஜபட்சேவுக்கு லண்டனில் தமிழ் மக்களின் போராட்டத்தால் சாத்தியமானதை விரிவு படுத்த வேண்டும். இந்தப் போராட்டமும் மகிந்தாவுக்கு கிடைத்துள்ள தோல்வியும் தற்காலிகமானதே, போர்க்குற்றவாளி தண்டனைக்குள்ளாகும் வரை தமிழ் மக்கள் போராட வேண்டும். மனித குலத்திற்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ராஜபட்சே குழுவினர் தண்டிக்கப்படும் வரை தமிழ் மக்களின் மங்களில் ஏற்பட்டுள்ள ரணங்கள் ஆறாது.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-18114499834123707002010-11-25T13:50:00.002+05:302010-11-25T13:55:11.326+05:30பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும்.<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMhDnhXgz5ltbgR8iKO9HB0Hskq3sqty1ktVQhLCUQeSrBtRQzGa2y-paCae9ilCfYl02UcSEoqBCoLWBZIayAOgbaYEUPfGCQAL8UsJgSQy9Cv4JA-LZNrtrnLG1ZBQ788cZUAs6bk3w/s1600/poo.JPG"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 281px; height: 400px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMhDnhXgz5ltbgR8iKO9HB0Hskq3sqty1ktVQhLCUQeSrBtRQzGa2y-paCae9ilCfYl02UcSEoqBCoLWBZIayAOgbaYEUPfGCQAL8UsJgSQy9Cv4JA-LZNrtrnLG1ZBQ788cZUAs6bk3w/s400/poo.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5543400059126794930" /></a><br /><br />பூவரசி வழக்கில் குறுக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. பூவரசி குழந்தையைக் கடத்திக் கொலை செய்யும் செயலுக்கு தூண்டுதலாக இருந்த ஜெயக்குமார் தன்னை ஒரு உலக மகா யோக்கியனாக நீதிமன்றத்தில் நிறுவுகிறான். ஆணாதிக்க பொது ஒழுக்கத்தை பாதுகாக்கும் நீதியும் அதை ஏற்றுக் கொள்கிற போக்கிலேயே வழக்கு செல்கிறது. நான் அநேகமாக இன்னும் நான்கு மாதங்களுக்குள் நீதிமன்றம் பூவரசிக்கு தூக்குத் தண்டனையை வழங்கி தன்னை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும். ஜெயக்குமாரின் ஏமாளி மனைவியோ தூக்குத்தண்டனை விதிப்பதோடு மட்டுமல்ல உடனடியாக பூவரசியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு தூக்கில் போட வேண்டும் என்று பேட்டி கொடுப்பார். சொல்ல முடியாது விருகம்பாக்க வாசிகள் வெடி கொளுத்தி இனிப்பு வழங்கி பூவரசியின் தீர்ப்பை வரவேற்றாலும் வரவேற்பார்கள். <br /><br />கொடூர குற்றவாளிகளுக்கு நீங்கள் வக்காலத்து வாங்குவதன் மூலம் கொடூர குற்றங்களையும் ஆதரிக்கிறீர்கள் என்று சில நண்பர்கள் என் மீது குறைபடுகிறார்கள். கொடூர குற்றங்கள் நடைபெறக் கூடாது என்பதுதான் நமது கவலையே தவிற கொடூர குற்றங்களுக்கு தண்டனையே தேவை இல்லை என்பதல்ல என் வாதம். ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை அவர் குற்றம் சுமத்தப்பட்டவர்தான் அவருக்கான உரிமைகள் உண்டு. அவரை குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம் சுமத்தியவர்களுக்கு உண்டு அதை சட்டத்தின் வழி நின்று நிரூபிக்க வேண்டுமே தவிற பொதுப்புத்தி, பொது மனச்சாட்சி, மக்கள் விருப்பங்களுக்கெல்லாம் இங்கே இடம் கொடுக்கக் கூடாது. ஆனால் இந்தியாவில் பெரும்பலான தீர்ப்புகளில் சட்டத்தின் அளவுகோல்களை விட பொதுப்புத்தியும், நம்பிக்கையும், பெரும்பான்மனை மக்கள் விருப்பமுமே நீதியின் முடிவாய் இருக்கிறது. கோவை மோகன்ராஜ் என்கவுண்டரிலும், பூவரசி விஷயத்திலும் இதுதான் நடக்கிறது. நான் பூவரசி செய்த குழந்தைக் கொலையை எதை வைத்தும் நியாயப்படுத்த வில்லை. பூவரசியை மிக மோசமான முறையில் ஜெயக்குமார் மீண்டும் மீண்டும் ஏமாற்றி பாலியல் வன்முறை செய்திருக்கிறார். பூவரசி எல்லா இந்திய பெண்களையும் போல தன்னை திருமணம் செய்யும் படி ஜெயக்குமாரை வற்புறுத்த அவரோ ஒரு கட்டத்தில் பூவரசியை உதாசீனப்படுத்தியிருக்கிறார்.ஆண்களின் விஷக் கொடுக்குகளுக்கு தன்னை பலியாக்கிக் கொண்ட ஒரு பெண்ணின் மனப்போராட்டம் ஒரு பக்கம். இதை எதையும் கண்டு கொள்ளாத ஜெயக்குமார் மனைவி குழந்தைகளோடு சந்தோசமாக வாழ்ந்தது இன்னொரு பக்கம் என பூவரசி மன ரீதியான துன்பங்களுக்கு ஆளான நிலையில் ஜெயக்குமாரை பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு அவரது குழந்தையைக் கடத்திக் கொன்று விட்டார். இப்போது ஜெயக்குமார் கதையை இப்படித் திரிக்கிறார். பூவரசி மீது தான் இரக்கப்பட்டு வேலை கொடுத்ததாகவும் அவர் விரும்பியே தான் அவருடன் பழகியதாகவும் கடைசியில் தன் குழந்தையைக் கொன்று விட்டதாகவும் சொல்கிறார். ஊடகங்களும் ஜெயக்குமாரின் வாதங்களை மட்டுமே ஒரு தலைப்பட்சமாக வெளியிடுகின்றன. பூவரசிகள் மீது ஊடகங்கள் கட்டும் வன்மத்தைப் பார்க்கும் போது அநேகமாக அந்தத் தீர்ப்பை ஆண்கள் எழுதி முடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.ஜெயக்குமாரின் மனைவிக்குமே தன் கணவன் இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்வில் விளையாடிய விளையாட்டால்தான் இக்கொலை நடந்தது என்ற எண்ணம் இருப்பது போலத் தெரியவில்லை. இந்த இடத்தில் ஜெயக்குமாரின் மனைவிக்கு இம்மாதிரியான தொடர்பு இருந்தால் அதை ஜெயக்குமார் மன்னித்து ஏற்றுக் கொள்வாரா என்கிற கேள்வியும் உண்டு. ஆக சொத்துடமை சமூகத்தின் இறுகிய கட்டமைப்பான ஆண் தலைமை தன் சகல அதிகாரங்களையும் பெண் மீது செலுத்துகிறது. ஜெயக்குமார் பூவரசியை ஏமாற்றியது ஆண் என்ற இயல்பில் என்பதை ஒரு பெண்ணின் தலை மீது சுமத்துகிறது. <br /><br /><strong>ஊடகங்கள் நிகழ்த்தும் பாலியல் வன்முறை</strong><br /><br />பூவரசியை ஜெயக்குமார் பல முறை ஏமாற்றி பாலியல் வன்முறை செய்தார். ஊடகங்களோ அவர் விசாரணைக்கு வரும் போதெல்லாம் அந்த பெண்ணை அம்மணமாக்கி பாலியல் வன்முறை செய்கின்றது. ஓவ்வொரு முறை அவர் நீதிமன்றம் அழைத்து வரப்படும் போதும் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்படும் போது வெளியில் ஒரு கூட்டம் பெண்கள் துடைப்பங்களோடு திரண்டு வந்து அவரை அடிக்கிறோம் பேர்வழி என்று நிற்கிறார்கள். கையில் துடைப்பங்களோடு நிற்கும் அவர்களும் ஒவ்வொரு பூவரசிகள்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தாத வரை அது இந்த சமூக அமைப்பிற்கு சாதகம் என்பதால் போலீசே சில நேரங்களில் குற்றம் சுமத்தப்பட்டவரை அடிக்க ஆள் திரட்டுகிறார்கள். பெண் போலீசின் பிடியில் அழைத்து வரப்படும் பூவரசியை இரண்டு நிமிடங்கள் பெண் போலீசே மீடியா முன்னால் நிறுத்துகிறார்கள். இது ஏதோ தற்செயலாக நடக்கிற நிகழ்வல்ல, அன்றைக்கு ஒரு புது பூவரசி கிளிப்பிங்ஸ் கிடைத்தால் செய்திக்கு முக்கியத்துவம் என்பதால் இவர்களின் போலீஸ் கூட்டு என்னும் அடிப்படையிலேயே பாளாஷ்களை அந்தப் பெண்ணின் மீது இறக்குகிறார்கள். ஆக அவர் தினம் தோறும் ஊடகங்களாலும் தொந்தரவு செய்யப்படுகிறார். <br /><br /><strong>எடிகா அன்னம்மாவும், பூவரசியும்</strong><br /><br />இரண்டு இளம் பெண்கள் ஒரு ஆணை காதலித்தார்கள். அதில் எடிகாவும் ஒருத்தி. தன்னைவிட மற்றவளிடம் அவன் நெருக்கமாக இருப்பதாக எடிகா பொறாமைகொண்டாள். எடிகா சமயம் பார்த்து அந்த இன்னொருத்தியையும் அவளது குழந்தையையும் கொன்று போட்டாள். எடிகாவுக்கு அப்போது வயது 21 அல்லது 22 தான் இருக்கும். அவளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. நமது மரியாதைக்குரிய பெரியவர் கிருஷ்ணய்யரிடம் வந்த வழக்கில் அவர் எடிகாவை கருணை காட்டி விடுதலை செய்தார் ( நான் கிருஷ்ணய்யரைக் கண்ட நேர்காணலை கீழே இணைத்துள்ளேன்) வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தத் தீர்ப்பில் கிருஷ்ணய்யர் "கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்று காந்தி சொன்னதை அந்த தீர்ப்பில் குறிப்பிட்டார்.இங்கு எடிகாவோடு பூவரசியையும் பொறுத்திப் பார்க்கலாம் தன்னை காதலித்தவன் ஏமாற்றியதால் அவன் மீது வரவேண்டிய கோபம் அந்த பெண்ணுக்கு அவனது குழந்தை மீது வந்து கொலையும் செய்து விடுகிறாள். இங்கே கொடூரமான குற்றங்களையோ பாலியல் சார்ந்த கொலைகளையோ பூவரசி மீதான குற்றச்சாட்டுகளோடு ஒப்பிடவே முடியாது. <br />பூவரசி கொலை செய்த சூழல், அவர் ஏமாற்றப்பட்ட நிகழ்வு, அவரது சமூகப் பின்னணி, தனிமை, ஏற்கனவே அவர் உளவியல் ரீதியாகவும், சிறை ரீதியாகவும் அனுபவித்து விட்ட தண்டனை உள்ளிட்ட சகல விஷயங்களையும் கணக்கில் கொண்டு பூவரசி விடுதலை செய்யப்பட வேண்டும். அவருக்காக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுக்க வேண்டும்.டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-8882480524268545448.post-1226545207317275742010-11-25T13:47:00.000+05:302010-11-25T13:49:53.805+05:30ஒரு கொலைக்கு தண்டனை இன்னொரு கொலையா? - நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் நேர்காணல்.ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 13&ம் தேதி இந்திய பாராளுமன்றம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. அந்தக் கொடூர நிகழ்வின் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முகம்மது அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன. அந்தத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களோ, தூக்கில் தொங்க விட்டு தண்டிப்பதே சரி என்று ஆவேசம் பொங்க கூறுகின்றன.ஜனாதிபதியின் கைகளில் இருக்கும் கருணை மனுவில், அப்சலின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்க... இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமை போராளியும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான வி.ஆர்.கிருஷ் ணய்யரை கேரளத்தின் எர்ணாகுளத் தில் இருக்கிற அவரது இல்லத்தில் சந்தித்தோம். <br /><br />முதுமையின் சுருக்கங்கள் உடம்பில் தெரிந்தாலும் மனதில் தளர்வு துளியும் இல்லை. இரண்டு பேரை கைத்துணையாக அழைத்துக்கொண்டு இப்பவும்கூட மனித உரிமை கூட்டங்களுக்கு போகி றார் கிருஷ்ணய்யர். ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு என்று நான் வழங்கிய சில தீர்ப்புகளில் குறிப்பிட்டிருக்கிறேன். இதைத்தான் இந்த தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன் என்றபடி நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் கிருஷ்ணய்யர். நானும் நீதிபதியாக இருந்தவன். சுதந்திர இந்தியாவில் மக்களால் ஓட்டுச்சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கேரள அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவன் என்கிற முறையில் சொல்கிறேன். நாமெல்லாம் சாதாரண மனிதர்கள். எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தவறிழைக்கவும் பாரபட்சமான தண்டனை வழங்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு கொலைக்கு தண்டனையாக அரசு இன்னொரு கொலையை நிகழ்த்துவது மகா பாவம். <br /><br />1957 - ல் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட இந்தியாவின் முதல் கேரள அர சாங்கத்தில் ஈ.எம்.எஸ்&ன் தலைமையிலான அரசாங்கத்தில் நான் உள்துறை அமைச்சராக இருந்தபோது என்னிடம் சி.ஏ.பாலன் போட்ட மனு என்னிடம் வந்தது. அவருக்கு உச்சநீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய் திருந்தது. ஜனாதிபதி அவருடைய கருணை மனுவை நிராகரித்திருந்தார். உயிர் வாழ்வதற்கான அவரது கோரிக்கை என்னிடம் வந்தபோது நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவருக்கு மரண தண்டனையில் இருந்து விடுதலை வாங்கி கொடுக்க முடிந்தது. அதே மாதிரி உச்சநீதிமன்றத்தில் என்னிடம் வந்த எடிகா அன்னம்மா வின்வழக்கையும் நினைவுபடுத்த விரும்புகிறேன். இரண்டு இளம் பெண்கள் ஒரு ஆணை காதலித்தார்கள். அதில் எடிகாவும் ஒருத்தி. தன்னைவிட மற்றவளிடம் அவன் நெருக்கமாக இருப்பதாக எடிகா பொறாமைகொண்டாள். எடிகா சமயம் பார்த்து அந்த இன்னொ ருத்தியையும் அவளது குழந்தையையும் கொன்று போட்டாள். <br /><br />எடிகாவுக்கு அப்போது வயது 21 அல்லது 22 தான் இருக்கும். அவளுக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்ய, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பாயத்தில் என்னோடு நீதிபதி சர்க்காரியாவும் இருந்தார். நான் அவரிடம், இந்த இளம் பெண்னை நாம் தூக்கிலிடகூடாது என்றேன். கடவுள் தந்த உயிரைப் பறிக்க மனிதனுக்கு உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது என்று காந்தி சொன்னதை அந்த தீர்ப்பில் குறிப்பிட்டேன். மரண தண்டனையில் இருந்து தப்பிய பாலனும் சரி, எடிகாவும் சரி... அதன் பின்னர் பயம் தொலைந்து கொலை வெறியோடு அலையவில்லையே! <br /><br />உலகின் நூற்றுக் கணக்கான நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. ராஜீவ் காந்தியைவிட வஞ்சகமான முறையில் மவுண்ட் பேட்டன் பிரபு கொல்லப்பட்டார். ஆனால், அவரைக் கொன்ற வருக்கு பிரிட்டன் மரண தண்டனை வழங்கவில்லை. கொலை என்பது ஒருவன் ஆத்திரத்தில் தன்னை இழக்கிற கணத்தில், அவன் அறவே வேறு மனிதனாகி விடுகிற சூழ்நிலையில் நடப்பது. அப்போது எந்தத் தண்டனையைப் பற்றியும் யோசித்துவிட்டு அந்தக் கொடுமையை அவன் செய்வதில்லை. மூளைச் சலவை செய்யப்பட்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் இளைஞர் களுக்கும் இது பொருந்தும். நான் மரண தண்டனைதான் வேண்டாம் என்று சொல்கிறேனே தவிர, குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளே வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஏனென்றால் நானும் இந்த நாட்டின் சட்டத்தின் ஆட்சியை ஏற்று வாழும் குடிமகன்தான். மரண தண்ட னையோ, கண்ணுக்கு கண். பல்லுக்கு பல் என்ற பிற்போக் குத்தனம் கொண்டது! <br /><br />அப்சலின் மரண தண்ட னைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று ஒரு சாரார் கூறுகிறார்களே? <br /><br />நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது என்று ஒரு தீர்ப்பில் எழுதி னேன். அதைத்தான் இப்போதும் கூறுகிறேன். காந்தியடிகள் இன்று உயிரோடு இருந்திருந்தால் அப்சல் மட்டுமல்ல யாரையுமே தூக்கிலிட அனுமதித்திருக்க மாட்டார். அவர் மீது அப்சலுக்கோ, தீவிரவாதிகளுக்கோ ஆதரவானவர் என்று முத்திரை குத்த முடியுமா? <br /><br />நீங்களெல்லாம் சொல்கிற அளவுக்கு, மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் மக்களிடமிருந்து எழவில்லையே? மக்களின் மனநிலை வேறாக அல்லவா இருக்கிறது? <br /><br />மக்களிடம் மரண தண்டனைக்கு ஆதரவான சிந்தனைப் போக்கு இருக்கிறது என்பதற்காக நானும் அதை ஆதரிக்க முடியாது. எல்லா நேரமும் மக்கள் மிக நியாயமாக யோசிப்பார்கள் என்றோ நல்ல தீர்ப்பையே கொடுப் பார்கள் என்றோ எப்படிச் சொல்ல முடியும்? மக்களை மந்தைகளாக நினைத்து ஏமாற்றப் பார்க்கிற அரசியல் தலைவர்கள் வேண்டுமென்றால் மக்களின் இந்தக் குறிப்பிட்ட கருத்துடன் பின் செல்லட்டும். நான் மக்களுக்கு நல்ல மேய்ப்பனாக இருக்க விரும்புகிறேன். நான் சொல்வதெல்லாம் இதுதான்... அன்பை பளிங்கில் பதித்திடுங்கள்... காயங்களை தூசியைப்போல துடைத்திடுங்கள் என்கிற பாரசீக பழமொழியை நினைவில்கொள்வோம். ஏனென்றால் அன்பு எல்லாவற்றையும் பெற்றுத் தரும். சமாதானத்தையும் நிம்மதியையும் தரும் என்றார் உருக்கமாக! <br /><br /><br />நன்றி- ஆனந்தவிகடன், <br />25- 10- 2006டி.அருள் எழிலன்http://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com0